சனி, 5 செப்டம்பர், 2009




முகாமில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி சிட்னியில் கவனயீர்ப்பு போராட்டம்
பிரசுரித்த திகதி : 05 Sep 2009

சிட்னியில் டவுண்கோல் சதுக்கத்தில் நேற்று 4ம் திகதி எமது உறவுகளை வதை முகாம்களிலிருந்து விடுவிக்க கோரும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மாலை 4 மணி முதல் 7 மணி வரை டவுண்கோல் சதுக்கத்தில் 300க்கும் அதிகமான மக்கள் கூடி, கையில் பதாகைகள் தாங்கிய வண்ணம் விழிப்பபுணர்வை எற்படுத்தினர்.

சதுக்கத்தை சுற்றி தமிழர்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை சித்தரிக்கும் படங்கள் உள்ளடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

300 ஆயிரம் உறவுகள் இன்னும் அந்த வதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மனிதாபிமான அமைப்புக்களை முகாம்களுக்குள் அனுமதிக்காமல் தமிழர்களை தினம் தினம் சித்திரவதை செய்து படுகொலை செய்து வெளி உலகுக்கு போலியான ஒரு தோற்றத்தை காட்டி வருகிறது சிங்கள பேரினவாதம்.

சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சிகள் சிங்கள பயங்கரவாத அரசின் உண்மையாண முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. சிங்கள அரசு தற்போதும் கூட பொய் பிரசாரங்களை செய்து தமது குற்றங்களை மறுத்து வருகிறது.

சிங்கள அரசின் போர் குற்றங்களை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களான எமது கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிங்கள காடையர்களின் கொடுர முகத்தை நாம் எம்மை சுற்றியுள்ள அந்நிய சமுதாயத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.

அந்நோக்கத்துடனேயே நேற்றைய கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டவுண்கோல் சதுக்கத்தை சுற்றி இளைஞர்களும் சிறுவர்களும் அங்கு உலாவும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.
எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்
பிரசுரித்த திகதி : 05 Sep 2009

சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது.

அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க் குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்களை ஏமாற்றியிருக்கிறார்.

இவ்வாறு இலங்கை அரசுடன் இவர் சேர்ந்து நாடகமாடுவது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இவர் முகத்திரை கிழிந்துள்ளது. இவரா சமாதான காலகட்டத்தில் இதய சுத்தியுடன் நடு நிலை வகித்திருப்பார்? அல்லது இதய சுத்தியுடன் சமாதானம் மலரவேன்டும் எனப் பாடுபட்டிருப்பார்? தமிழர்கள் இவரை நம்பியதற்கு, இவர் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகம். இன்று சிங்கள நாளிதழ்களில் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் படுகொலை வீடியோ பொய்யானவை என்று கூறியதாகச் செய்திவெளியிட்டு கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சவும் இதனை எரிக் சொல்ஹெய்ம் கூறியதாகச் சிங்கள செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது நாம் இவரைக் கேட்டோமா இந்த வீடியோ பற்றிக் கருத்துக் கூறும்படி? தானாகவே வந்து கருத்துரைத்துப் பின்னர் அக்கருத்தை மறுத்து, உண்மையான சம்பவங்களைப் பொய்யாக்க நினைக்கிறார் எரிக் சொல்ஹெய்ம். இவரை அனைத்துத் தமிழர்களும் ஓரம்கட்டவேன்டும். இவ்வாறான களைகள் முதலில் களையப்பட்டாலே, தமிழர்கள் சுயநிர்ணயம் கிட்டும்.

இன்று சிங்கள நாழிதள்கள் வெளியிட்டுள்ள செய்திகளைத் தாம் கூறவில்லை என்றால், எரிக் சொல்ஹெய்ம் உடனடியாக மறுப்பறிவித்தல் ஒன்றை விடவேன்டும் என்பதே மக்கள் கோரிக்கை. இச் செய்தியை வெளியிட்ட சிங்கள நாழிதழ் ஒன்று இங்கு ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்.3-

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று அகில இந்தியாவையே துயரத்தில் ஆழ்த்தி விட்டு, விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளையதினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை அறிவிப்பினை ஒட்டி வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் நாளை விடுமுறை அளித்து, இந்த துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Saturday, September 05,2009 01:19 PM, ravi said:
கலைஞர் அவர்களே !! இப்படி எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஐஸ் வைப்பதால் காங்கிரஸ்காரன் ஒன்றும் ஏமாற மாட்டான். உங்களை பற்றி காங்கிரஸ் காரர்களுக்கு நன்றாகத் தெரியும்
Friday, September 04,2009 03:33 PM, முத்து said:
நம் பக்கத்துக்கு வீட்டில் ஒருவர் இறந்தால், அவர் நமக்கு நெருங்கியவர் இல்லை என்றாலும் .... நாம் அலுவலகம்/கல்லூரி லீவ் எடுத்து அங்கு செல்வது இல்லையா?? லீடர் என்பது ஒரு குரூப் இன் அடையாளம். ராஜசேகர் ரெட்டி ஆந்திராவின் அடையாளம். அதற்காக தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை மிக தப்பாக எனக்கு தெரியவில்லை. ஒரு மாநில மக்களின் அதிகபட்ச துக்க அனுசரிப்பு வெளிப்படுத்த இதற்கு மேல் வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
Friday, September 04,2009 01:54 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
ஆந்திர முதல்வரும் அவர் குழுவினரும் மோதல் நேர்ச்சியால்- விபத்தால்- அகால மரணம் உற்றது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கின்றது. ஆனால் இதற்காகத் தமிழ் நாட்டில் விடுமுறை அளிப்பதும் தனியார்நிறுவனங்களையும் விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்துவதும்முறையன்று. தமிழ் நாட்டு நலனுக்காகவோ தமிழ் மக்களுக்காகவோஆந்திராவில் வசிக்கும் தமிழர் நலனுக்காகவோ குறிப்பிடும்படியானஉருப்படியான செயல் செய்தவரன்று. அணுவியல் அறிஞர் பாபா தான்மறைந்தாலும் பாபாஅணுமின் நிலையம் இயங்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் வானூர்தி மோதலால் அகாலமரணமுற்றபோது அணுவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. மத்தியஅரசு சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் தலைவர்களின் மறைவிற்குவிடுமுறைகள் விடப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.தமிழ் நாட்டில் பிறமாநிலம் தொடர்பான விடுமுறைகள் இருக்க, பிற மாநிலங்களில் பூர்வீகக்குடியினராகத் தமிழர்கள் இருப்பினும் தமிழ் மக்கள் தொடர்பானவிடுமுறைகள் விடப்படுவதில்லை. அரசு 1 வாரத் துக்கம்கடைப்பிடிக்கலாம். அரசு அலுவலகங்கள் காலையில் அமைதிகடைப்பிடித்துத் தம் பணியைத் தொடங்க அல்லது மாலை அமைதியைக்கடைப்பிடித்துக் கலைந்து போக வழி வகுத்திருக்கலாம். காங்.கினஜால்ராவாக கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என விடுமுறைவிடுவது மிகவும் தவறு. . எனவே விடுமுறை விடும் முறையற்றபோக்கைக் கண்டிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன். (உடன்மறைந்த திரு சுப்பிரமணியம் தமிழரோ?) எதிர்பாராமல் இறப்பைத்தழுவியவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்நத இரங்கல்கள். விடுமுறைவிடும் தமிழக அரசின் போக்கிற்குக் கண்டனங்கள். -- இலக்குவனார்திருவள்ளுவன்
Friday, September 04,2009 12:16 PM, தமிழீழநாதன் said:
ரெட்டியார் ? ரெட்டி யார் ? சமீபத்தில் விபத்தில் இறந்துபோனவர் .... இளமைகாலத்தில் மருத்துவராக இருந்து அரசியலில் கால்வைத்தவர் ... ஆந்திரத்தில் காங்கிரஸ் மறுபடியும் கால் ஊன்ற காரணமாக இருந்தவர் .... ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ....மனிதநேயம் உள்ளவர்.. இவரின் இறப்பு வருத்தமளிப்பது உண்மைதான் ... அதற்காக தமிழ்நாடு அரசு விடுமுறை விடவேண்டிய காரணம் என்ன ? முத்துகுமார் உள்பட பதினைந்து தியாக தீபங்கள் தான் உடலை இனவிடுதலை வரலாற்றிற்காக தீவைத்துக்கொண்டு உலகையே திரும்பிப்பார்க்க செய்தார்களே அப்போது இந்த தமிழக அரசு மாணவர்களிடம் கலவரம் வரக்கூடாது என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கும் மட்டும் விடுமுறை அளித்தது .. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டது ..... ரெட்டியின் உயிர் மட்டும் உயிர் முத்துகுமாரின் உயிர் என்ன ........ ? அதை விடுங்கள் .... இந்த பதினைந்து பேருக்காக விடுமுறை கூட வேண்டாம் ஒருவரி இரங்கல் கவிதை கூட எழுதாத ஐயா கருணாநிதி இன்று ரெட்டிக்காக மூன்று நாள் திமுகவில் அனைத்து விழாக்களும் ரத்துசெய்துள்ளர் ... அப்படி என்றால் இந்த ரெட்டி யா

Economist: EU report places Sri Lanka's GSP+ concession in jeopardy

[TamilNet, Friday, 04 September 2009, 02:06 GMT]
"Its [Sri Lanka's] alleged wartime and other abuses make a grim catalogue: thousands of Tamil civilians allegedly killed by army shelling during the rebels’ last stand; scores of Tamils disappeared; nearly 300,000 Tamil war-displaced callously interned; murder and intimidation of journalists—including J.S. Tissainayagam, sentenced to 20 years hard labour on August 31st for criticising the army’s tactics," says an editorial in The Economist in its 3rd September edition, and points to a damning 130-page report by the European Union which concludes that "Sri Lanka has failed to honour important human-rights commitments, and is ineligible for GSP Plus."

Widespread police torture, abductions of journalists, politicised courts and uninvestigated disappearances have all played a part in creating a state of “complete or virtually complete impunity in Sri Lanka”. The internment of the Tamil displaced, which the government claims is necessary to weed out the last Tamil Tiger rebels and to protect them from munitions left in their fields, is “a novel form of unacknowledged detention," the report allegedly states, according to The Economist.

A spokesperson for a US-based Tamil activist group told TamilNet that expatriate Tamils should be cautious not to be misled by statements in a report. "EU's real intentions will be known only after the final decision on GSP+ is made in October," the spokesperson said.

Full text of the Economist article follows:

Losing touch with old friends

RARELY has a government soiled its reputation as dramatically as Sri Lanka’s. In recent months President Mahinda Rajapaksa’s regime has won a war and lost the love of many allies.

Its alleged wartime and other abuses make a grim catalogue: thousands of Tamil civilians allegedly killed by army shelling during the rebels’ last stand; scores of Tamils disappeared; nearly 300,000 Tamil war-displaced callously interned; murder and intimidation of journalists—including J.S. Tissainayagam, sentenced to 20 years hard labour on August 31st for criticising the army’s tactics (see article).

There is not much high-minded western countries—to whom Sri Lanka once looked for aid money—can do about this. Mr Rajapaksa has found alternative friends, in China, Libya, Pakistan—and others, who recently scotched a European effort to launch a war-crimes investigation into Sri Lanka. But the Europeans do have one wrench on Mr Rajapaksa’s government: a trade concession known as “GSP Plus”. This boon, which has helped make exports to the EU the country’s biggest source of foreign exchange, worth $3.3 billion last year, is up for review. Judging by an EU-commissioned report on Sri Lanka’s compliance with its terms, which include stipulations on human rights, it can kiss the concession goodbye.

The confidential 130-page report, which has been obtained by The Economist, concludes that Sri Lanka has failed to honour important human-rights commitments, and is ineligible for GSP Plus. Widespread police torture, abductions of journalists, politicised courts and uninvestigated disappearances have all played a part in creating a state of “complete or virtually complete impunity in Sri Lanka”. The internment of the Tamil displaced, which the government claims is necessary to weed out the last Tamil Tiger rebels and to protect them from munitions left in their fields, is “a novel form of unacknowledged detention”.

A final decision on GSP Plus is not due until October. The government, which barred the report’s authors from visiting Sri Lanka, called the study “outrageous” but seems resigned to losing the trade preference: a senior official in the trade ministry, S. Ranugge, admitted: “GSP Plus is very unlikely.”

Perhaps this does not bother Mr Rajapaksa: defying the West is part of his appeal. Anyway, his minions recently secured a $2.6 billion loan from the IMF. But as an indicator of where one of Asia’s oldest democracies may be headed, it should worry Sri Lankans, and all who wish their country well.

External Links:
Economist:
The price of truth
Economist:
Losing touch with old friends
EU:
GSP - Generalized System of Preferenc
தமிழீழம் அமைப்பதற்கு

சாத்வீகப் போராட்டம் தேவை1069
ஆயுதப் போராட்டம் தேவை3685
இரண்டும் கலந்த போராட்டம் 8850


வாக்களித்தமைக்கு நன்றி !
athirvu.com
ஜீனியர் விகடன் ஆசிரியர் விகேஷ் பணிநீக்கம் வெளிவராத உண்மைகள்
பிரசுரித்த திகதி : 04 Sep 2009

தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.


சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.


அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.


தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.


இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.


இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.


தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.


ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.


எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.


ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.


எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.


நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.


இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.


-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-97:
ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு!



விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஈடுபடுத்தியும், அவர் விடுதலைப்புலிகள் பக்கம் சார்ந்து கருத்து தெரிவித்ததும், பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாக முயற்சி செய்வது என்று முடிவெடுத்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முந்தின நாள், அதாவது ஜூலை 28-ஆம் தேதி, நள்ளிரவு அசோகா ஹோட்டலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் இந்தியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் எழுப்பினர்.

அவர்களிடம், "பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே புறப்படுங்கள்' என்று கூறினர்.


இதன் நோக்கம் அறிய பல கேள்விகளை எழுப்பியும், "பிரதமர் உங்களிடம் ஒப்பந்தம் குறித்தக் கருத்துகளை விவாதிக்க விரும்புகிறார்' என்பதைத்தவிர வேறு எந்த விவரத்தையும் அவர்கள் சொல்ல விரும்பவில்லை.


கருப்புப்பூனை அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் பிரபாகரனும் பாலசிங்கமும் பிரதமர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இல்லத்தின் வாயிலருகே நின்று, பிரதமரும் புலனாய்வுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணனும் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பிரபாகரனைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாகவும், நேரில் சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறி, அவரது கைகளைப் பற்றி குலுக்கிய ராஜீவ் காந்தி, ஒப்பந்தம் குறித்து அவர்களுக்கு இருந்த மாற்றுக்கருத்துகளை விவரிக்கும்படி கேட்டார்.
பிரபாகரன், பாலசிங்கத்திடம் அவருக்கு ஆங்கிலத்தில் எடுத்துக்கூறும்படி சொன்னதும் அவர் சுருக்கமாகவும் கூறவேண்டியவற்றை விட்டுவிடாமலும் விவரித்தார்.

""வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் ஆதிபத்திய உரிமை கொண்ட பூமி. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்.
இந்தப் பகுதியின் ஒருமைப்பாட்டை வாக்கெடுப்பு மூலம் அறிவது ஏற்கத்தக்கதல்ல.

மாகாணசபைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இறுதி அதிகாரம் ஜெயவர்த்தனாவிடமே இருக்கும். அவரை நம்பமுடியாது. காரணம் அவர் சிங்கள வெறியர். தமிழர் நலன் பெறும் எந்தத் திட்டத்துக்கும் அவர் உடன்பட மாட்டார்.

ஆயுதக் கையளிப்பு என்பது 72 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்கமுடியாது. இந்த ஆயுதங்கள் பல ஆண்டுகள் ரத்தம் சிந்தி பெற்ற ஆயுதங்கள். தமிழர்களின் பிரச்னைக்குரிய இறுதித்தீர்வு எட்டப்படாத நிலையில் ஆயுதங்களை ஒப்படைக்க வற்புறுத்துவது நியாயமாகாது'' என்று ஒவ்வொரு பிரச்னையாக ராஜீவிடம் விளக்கியதாகவும், ராஜீவ் அனைத்து அம்சங்கள் குறித்தும், தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டதாக, பாலசிங்கம் "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றைக் குறித்துக்கொண்ட ராஜீவ் காந்தி, அவர்களிடம் தொடர்ந்து பேசும்போது, ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும், ஒரு நீதியான தீர்வு காணவேண்டும் என்பதிலும், குறைபாடுகளைப் பின்னர் ஜெயவர்த்தனாவிடம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்திவைத்து விடலாமென்றும் தெரிவித்ததுடன், இதனை ஜெயவர்த்தனாவிடம் சொல்லுவேன் என்றும் இந்திய அரசை நம்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர்களின் பாதுகாப்பை ஒப்பந்தம் உறுதிப்படுத்தும் என்றும் எடுத்துச் சொன்னார்.

ராஜீவ் காந்தி சொன்னதை பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழில் விளக்கினார். ஆனாலும் பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ராஜீவ் காந்தி, அவர்களிடம் மேலும் பேசுகையில், விடுதலைப் புலிகளின் எந்த முடிவுகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை என்றும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உடனிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், "பிரதமரே உங்களது வழிக்கு வந்துவிட்டார். இந்தச் சிறிய ஒத்துழைப்பையாவது இந்திய அரசுக்குச் செய்யக்கூடாதா?' என்று வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்.

இது குறித்து "விடுதலை' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
"ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை நாம் எதிர்ப்பதாகத்தானே அர்த்தம்' என்று எனது காதோடு கிசுகிசுத்தார் பிரபாகரன்'

தொடர்ந்து ராஜீவ், "உங்களது இயக்கத்துக்கும் பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவின் பேரில் நம்பிக்கையில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட அவர்மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர்மீது கடும் அழுத்தம் கொடுத்து, இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறோம். மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. அதற்குக் காலம் பிடிக்கும். அதற்கு முன்னதாக, வடகிழக்கில் ஓர் இடைக்கால அரசை நிறுவி, அதில் உங்களது அமைப்புக்குப் பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்' என்றார்.

"தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு ரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்கவேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாம். அதற்கு முன்னதாக ராஜீவ்-பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. ரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்' என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல எனக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வமும் காட்டவில்லை. ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் மிகவும் ஆர்வத்துடன், ராஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்'.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள பாலசிங்கம், சந்திப்பு விடியற்காலை மூணரை மணியளவில் முடிவுற்றதாகவும் நூலில் தெரிவித்திருக்கிறார்.

நாளை: ஒப்பந்தம் கையெழுத்தானது!

கருத்துக்கள்

அப்பொழுதிருந்தே ஈழத் தமிழர் நலனைக் கெடுத்திருக்கின்றான் நாராயணன். அன்றைக்கு இராசீவைத் தவறாக வழிநடத்தியது போல் இன்றைக்குச் சோனியாவை வழிநடத்திக் கொண்டிருக்கின்றான். தமிழரின் தலையெழுத்து! அவர்கள் நலன் தொடர்பாக முடிவெடுப்பது அவர்களது எதிரிகளே! மத்திய அரசு என்றைக்குத திருந்துமோ!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆசிரியப் பணி என்னும் அறப்பணி



இதுவரை உலகில் இவ்வளவு உயர்ந்த இடத்தை யாருக்கும் அளித்தது இல்லை; அன்று முதல் இன்றுவரை இதில் மாற்றமும் இல்லை; இதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன வெறும் மொழிகள் இல்லை; பொன்மொழிகள்! மனித வரலாற்றில் வழிவழி வந்த மாறாத மணிமொழிகள்.
மக்கள் மட்டுமல்ல, மாமன்னர்களே மண்டியிடும் இடம் குருவின் பாதங்கள். அவர் பேச்சே வேதம்; அவர் மூச்சே அரசியல்; அவர் அன்றி நாட்டில் ஓர் அணுவும் அசையாது; அவர் காட்டும் வழியில்தான் அரசாங்கமே நடந்தது.
முடியுடை மூவேந்தர்களாக இருந்தாலும் புலவர்களைப் போற்றியதற்குக் காரணம் இதுதான்; சாணக்கியனின் வழியில் சந்திரகுப்தன் போனதற்குக் காரணமும் இதுதான்; அர்த்தசாஸ்திரம் ஆக்கப்பட்டதற்கும் அதுவே காரணம்.
மாபெரும் இதிகாசமாகப் போற்றப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், பகைவர்களான கௌரவர்களுக்கும் ஒரே குரு துரோணாச்சாரியார். அவர் கட்டை விரலைக் கேட்டபோதும் கவலைப்படாமல் எடுத்துத் தந்த மாணவன் கதை, காலம் காலமாகக் கவலையோடும், கண்ணீரோடும் கேட்கப்படுகிறது.
கிரேக்க வரலாற்றில் இடம்பெற்ற ஆசிரியர் சாக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டாட்டில் இவர்களை உலகம் இன்னும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறது. அறிஞர் அரிஸ்டாட்டில் மாவீரன் அலெக்சாண்டருக்கு மட்டுமா ஆசிரியராக இருந்தார்? அறிவுலகம் அனைத்துக்குமே ஆசிரியராகப் போற்றப்படுகிறார்.
""நான் வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார் அந்த அலெக்சாண்டர்.
கல்வியா? செல்வமா? வீரமா? இவ்வாறு எத்தனை கேள்விகள் கேட்டாலும் அவற்றில் முதலில் வைத்துக் கேட்கப்படுவது கல்வியேயாகும். அதனை அளிப்பவர்கள் மதிக்கப்படுவதும், துதிக்கப்படுவதும் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பதை எடுத்துக்கூற வேண்டுமோ?
இவ்வாறு மரியாதை அளித்துவரும் மக்கள் சமுதாயத்துக்கு ஆசிரியர் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்குப் பங்கம் ஏற்படாதவண்ணம் நடந்து காட்ட வேண்டுமல்லவா? தேசத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் இளைய சமுதாயத்துக்குக் கல்வியும், ஒழுக்கமும் அளித்து அவர்களைப் பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய நன்றிக்கடனை நமது ஆசிரியர்கள் மறந்துவிடலாமா?
ஆனால் ஆசிரியர்கள் இதற்கெல்லாம் தகுதியுடையவர்களாக நடந்து கொள்கிறார்களா? அன்றைய கால ஆசிரியர்களைப்போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்றைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்களா? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தியாகம், தொண்டு இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதில் தவறில்லையே!
""மாணவர்கள் நாட்டை நிர்மாணிக்கும் சிற்பிகள். அவர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களுடைய செயல் நாட்டிற்குத் தலைகுனிவும், ஏமாற்றமும் உண்டுபண்ணும். ஐம்பது ஆண்டுகள் உலகின் பல பகுதிகளில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டவன் என்ற முறையில் ஒன்று கூறுவேன். ஆசிரியர் செய்வதை மாணவர் பின்பற்றுவர். ஆகவே முந்தியவர், சரியான வழிகாட்டுவது அவசியம். மேலும் மூளைத்திறனைவிட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...'' என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆசிரியப் பணி என்பது ஊதியத்துக்காக மட்டுமே செய்யப்படும் தொழில் அல்ல; தொண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த நாட்டின் இளைய தலைமுறை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியும் சேர வேண்டும்; கல்வியும், அறிவும் அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்; இந்த நாட்டைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை என்று இவர்கள் கூற முடியாது; கூறவும் கூடாது.
"ஆசிரியர் அடித்ததால் கிணற்றில் விழுந்து தற்கொலை' என்றும், "மாணவி மீது பாலியல் வன்முறை - பேராசிரியர் கைது' என்றும், "மாணவரைச் சாதியைச் சொல்லித் திட்டியதால் தலைமையாசிரியரை எதிர்த்துப் போராட்டம்' என்றும் வரும் செய்திகள் நாட்டின் நலனை நாடுவோருக்குக் கவலை தருகிறது.
பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியதால் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாற்காலிகப் பணிநீக்கம்; அவர் மீதான ஊழல் புகார்கள் பற்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் முடக்கம்; இதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகளும், ஆசிரியர்களும் துணை என்னும் செய்திகள் ஆசிரியர் சமுதாயத்தை மாசுபடுத்துகின்றன.
ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்தால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது; சில மாணவர்கள் அவசரப்பட்டு தன்னையே மாய்த்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தவறுகளைத் திருத்திக் கொள்வதால் பயன் என்ன?
இவையெல்லாம் எங்கேயோ நடப்பவை, யாரோ சிலரால் செய்யப்படுபவை என்றாலும் அந்தச் செய்திகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆசிரியர் சமுதாயத்துக்குத் தீராத பழியாகவே நின்று நிலவும். மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு ஒழிந்துபோகும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும்.
கறுப்புத் துணியில் கறைபட்டால் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளைத் துணியில் கறைபடக் கூடாது என்பதில் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் இந்தப் பண்பு நலன்களை வளர்த்தெடுத்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது.
""தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளி - கல்லூரிகளில் நியமிக்கப்படுகின்றனர்'' என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்; வரவேற்க வேண்டியதுதான்.
இதுதவிர, முறையான பயிற்சியில்லாத புதிய ஆசிரியர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறாத போலி பயிற்சிப் பள்ளிகள் புற்றீசல்கள் போல் புறப்பட்டதுதான். இதற்கு யார் காரணம்?
படிக்காமலேயே, பயிற்சி பெறாமலேயே பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் போதும், தேர்வில் அமர்ந்து விடலாம். அதன்பிறகு கல்வித்துறையை எதிர்த்து நீதிமன்றம் போய் வெற்றி பெற்று விடலாம் என்ற கல்வி வணிகர்களின் கணக்குத்தானே அரசியல்வாதிகளின் துணையோடு தொடர்கிறது.
நீதிமன்றமும் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் நடத்திய கல்வி வணிகர்களுக்குத் தண்டனை தராமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் துணை செய்வதாகக் கூறிக்கொண்டு தீர்ப்பு என்ற பெயரால் துணைபோனது.
போலிப் பல்கலைக்கழகங்கள், போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், போலி மருத்துவர்கள் போலவே போலி ஆசிரியர்களும் புகுந்துவிட்டனர். இதற்கு யார் காரணம்? அரசும், கல்வித்துறையும்தான். போலிக் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்மேல் நடவடிக்கை எடுக்காமல், "அந்தக் கல்விக்கூடங்களில் சேர வேண்டாம்' என்று மக்களை எச்சரித்தால் போதுமா? இந்த எச்சரிக்கை எத்தனை பேருக்குத் தெரியும்?
கடுமையான வெயிலில் பாறைமேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணெய் உருகி ஓடுவதை, கையில்லாத ஊமையன் கண்ணால் பார்த்துக் கலங்கி நிற்கும் நிலையில்தான் உண்மையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தங்கள் காலத்திலேயே, தங்களுக்கு எதிரிலேயே கல்வி சீரழிவதைப் பார்த்து வேதனைப்படுகின்றனர்; மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
உலகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கமே உயர் தனிச் செம்மொழி என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகும் தமிழ்வழிக் கல்வி எதிர்க்கப்படுகிறது. எல்லோரும் வரவேற்கும் "சமச்சீர் கல்வி'யை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், "அதனை எதிர்த்து நீதிமன்றம் போவோம்' என்று மெட்ரிக்குலேஷன் நிர்வாகங்கள் அரசாங்கத்தையே மிரட்டுகின்றன.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்குப் பொறுப்புகள் அதிகம். ஆசிரியர் சங்கங்கள் இனியும் ஊதிய உயர்வு கேட்கும் சங்கங்களாக மட்டும் இல்லாமல், எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களுக்குத் தங்கள் உரிமைகளோடு கடமைகளையும் செய்யும்படி எடுத்துக்கூறத் தயங்கக்கூடாது.
ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் - குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவரும் ஓர் ஆசிரியரிடம் பயின்றவர்தாம். ஆசிரியர்கள் அந்த உயர்ந்த இடத்தை இழந்துவிடலாமா?

(இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்)

கருத்துக்கள்

விடுதலைப் போராளி, இந்திய விடுதலைக்காகத் தன் உடைமைகளயும் வாழ்வையும் இழந்த தமிழறிஞர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளும்கூட. தமிழ்நாட்டவரை முதலில் நினைவுகூர்ந்து பிறரைப் பின்னர் நினைவு கூர்வோம். எனினும் ஆசிரியர் நாள் கட்டுரை அருமை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்



திருவாரூர், செப். 4: இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன்.
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் என். வரதராஜன் பேசியது:
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல மாதங்களாகியும், இன்றும் தமிழ் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இந்த மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் ஆளும் அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழியை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்காமலேயே பல நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கோரியும் இதுவரை அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த பிரச்னையில் திமுகவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் மௌனம் சாதிக்கிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. சட்டம்- ஒழுங்கு நிலையும் மிகவும் மோசமடைந்துவிட்டது.
கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையையும் உருவாக்கிவிட்டனர். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க சட்டம் இயற்றிய தமிழக அரசு, அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிடச் சாதாரண மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. இதை மக்கள் நீண்ட காலத்துக்கு அனுமதிக்கமாட்டார்கள் என்றார் என். வரதராஜன்.

கருத்துக்கள்

இனப் பேரழிவுகளைத் திட்டமிட்டு நடத்தப்பட்டதை உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்துவிட்டது என்ற அளவில் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி எண்ணுகிறது என்றால் அக்கட்சி அமைதி காப்பதே மேல். மார்க்சியக் கருத்தில் உண்மையிலேயே ஈடுபாடு இருப்பதாக இருந்தால் ஆரியச் சார்புச் சிந்தனைகளைத் தூர எறிந்து விட்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராட வேண்டும். அவர்களின் அழிவிற்குக் காரணமான உலகப் பொதுவுடைமை நாடுகளின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். மக்களை ஏய்ப்பதற்காக மனித நேயர்களாக நடிக்க வேண்டா. வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நாடுகள் உறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:22:00 AM

ANOTHER DAY, ANOTHER PROTEST, ANOTHER NEWS, ANOTHER CHANCE FOR EELAM TAMILS AND ITS SUPPORTERS TO CENSURE/BERATE INDIA, SONIA, KARUNA & CO.

By Jeeva Sridhar
9/4/2009 11:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காங்கிரசில் சேருகிறாரா விஜய்?



சென்னை, செப். 4: தமிழ்த் திரையுலகில் இளைய தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் (35), இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது; இருப்பினும் கட்சியில் அவர் ஏதாவது முக்கிய பதவியை ஏற்பாரா என்பதுதான் இதுவரை தெரியவில்லை.

தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும், அதை அரசியல் வாயிலாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் விஜய், ஏற்கெனவே மக்களின் ஆதரவைப் பெற்ற தேசியக் கட்சியில் இணைந்து அதில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார்.

லயோலா கல்லூரியில் படித்த பட்டதாரியான விஜய், உலக நடப்புகளிலும் நாட்டு நடப்புகளிலும் அக்கறை உள்ளவராக இருக்கிறார்.

எனவே, அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில், அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், "விஜய் அரசியலில் ஈடுபடுவதில் மாற்றுக்கருத்து இல்லை' எனத் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் புதுகோட்டையில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழா ஒன்றில் தன் அமைப்புக்கு ""மக்கள் இயக்கம்'' என்ற பெயரையும் சூட்டினார் நடிகர் விஜய். இந்த இயக்கம் சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் அவர் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளார் என அவரது தரப்பு செய்திகள் தெரிவித்தன.

அதே சமயம், தேசியக் கட்சியாக விளங்கும் காங்கிரஸில் தமிழ் மாநிலப் பிரிவில் பெயர் சொல்லக் கூடிய சினிமா நட்சத்திரங்கள் யாரும் இப்போது இல்லை என்பது காங்கிரஸ் வட்டாரத்தில், அதுவும் குறிப்பாக இளைஞர் பிரிவினரிடம் நீண்ட காலக் குறையாக இருக்கிறது. அதைப் போக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜயின் சந்திப்பு தில்லியில் சமீபத்தில் நடந்தது.

அரசியல் பாதையில் தடம் பதிக்க நினைத்த விஜயும், நட்சத்திரத்தை இழுக்க நினைத்த காங்கிரஸ் தலைவரும் சந்தித்துக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட விஜய், தான் யார், தனது ரசிகர்களின் பலம் என்ன, மன்றங்களின் எண்ணிக்கை என்ன என்பன போன்ற தகவல்களை அவரது இணையதளத்துக்கு அனுப்பி வைத்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன.

இதை அறிந்த ராகுலும் விஜயைச் சந்திக்க ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய், ராகுலின் சந்திப்பு தில்லியில் அரங்கேறியுள்ளது. அப்போது, தமிழகத்தில் கட்சியின் நிலை மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் 45 நிமிஷங்கள் பேசி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவதை ராகுல் காந்தியிடம் நடிகர் விஜய் அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் அறிவிப்பு? இதையடுத்து, நடைபெற்ற மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸில் சேருவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று ஒரு தரப்பினரும், தனிக் கட்சியாகச் செயல்படலாம் என மற்றொரு பிரிவினரும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இதனால், காங்கிரஸில் இணைந்து பொறுப்புகளை ஏற்க நடிகர் விஜய் தயங்குவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதாக இருந்தால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அவரே இந்த வாரத்தில் வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்கள்

(தொடர்ச்சி) கட்சி அரசியல்தான் அரசியல் என்று எண்ணாமல் மக்கள் இயக்கப் பணிகளையும் அரசியல் எனக் கருதி காங்.கிற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தால் அவருக்கு நல்லது. இல்லையேல் கண்களைத் திறந்து கொண்டே பாழுங்கிணற்றில் விழுவேன் என்பவரைத் திருத்த வழியில்லை. கலையுலக வாழ்விற்கு முடிவுரையை இப்பொழுதே எழுதி விட்டார் என்பதை உணர்ந்து அவரைப் புறக்கணிக்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:09:00 AM

நடிகராக இருந்தாலும் தாம் விரும்பும் கட்சியில் சேர ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால், தான் வெளிப்படுத்திய உணர்விற்கேற்றதாக அக்கட்சி அமைந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணந்தவர் விசய் என்கிறார்கள். ஈழத் தமிழர்களின் படுகொலைக்காகப் போராட்டமும் நடத்தியுள்ளார். இவையெல்லாம் உண்மை என்றால் ஈழத்தமிழர்களின் பேரழிவிற்குக் காரணமான தமிழினப் பகையாளிக் கட்சியுடன் சேருவது அவரது எதிர்கால வாழ்ககையை மட்டுமல்ல, நிகழ்கால வாழ்க்கையையே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும். தமிழன், குரு, இரததினம், திலகர், வானதி முதலான இன உணர்வாளர்கள் கருத்தும் அன்புமணி போன்றவர்களின் கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. படவாய்ப்புகள் இருக்கும பொழுது ஏன் இந்தத் தற்கொலை முயற்சி. அவரைக் கலையுலகில் உருவாக்கிய தந்தைதான் இதற்குக் காரணம் என்றால் அவரது கருத்தைத் துணிந்து புறக்கணிக்க வேண்டும். அத்தகைய துணிவு இல்லை யெனில், அரசியலுக்கே தகுதியற்றவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.( தொடர்ச்சி காண்க.)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:08:00 AM

Dear Vijay Sir, Be careful abot gay ragul

By ra
9/5/2009 3:35:00 AM

VIJAYYYYYYYYYY YOU DONT HAVE GUTZ TO THINK YOURSELF...YOU LISTEN TO YOUR DAD...SORRRY FOR EVERYBODY...VIJAY IS NO MORE TAMILAN...BE A MAN...DONT BE COWARD! COWARD'S DIE EVERYDAY...SOLDIER DIE ONCE...WE WONT LET OUR PEOPLE DOWN NO MATTER WHATTT...EELA'TAMILAN!!!

By EELA'TAMILAN
9/5/2009 3:30:00 AM

This guy does not have any principles in life. Would not know anything but going after the actresses. He seeks a political affiliation just to avoid IT raids. That's it. Nothing else.

By T. Gene
9/5/2009 3:30:00 AM

It should be WELCOME. Vijay is a Young hero.... He has Many youth Fans. Now a days, youths are avoiding politics. So many youths will involve in politics. But he must work in the service motive NOT for money. Why peolple always discourage the people who newly involve in politics. We think positively... Second he need not to take too much efforts as he has decide to join a national party istead of create a new party. Surely His appearance make a storm among youths but whether it is positive or negative depend upon his activities later. ALL THE BEST

By Farook,KSA
9/5/2009 3:28:00 AM

Are u paying your taxes on time?

By Raja
9/5/2009 2:44:00 AM

நடிகர்கள் அரசியலில் செல்லாக்காசு என்பது எப்போதோ நிதர்சனமாகிவிட்டது,இருக்கும் பணத்தையும் புகழையும் வைத்து தன் மார்கெட்டை தக்கவைத்து கொண்டால் அதுவே நல்லது, இந்நிலையில் பெரிய நடிகர்களையே படுபாதாளத்தில் தள்ளிய அரசியலில் நானும் விழுவேன் என்றால் அவரை விட்டுவிடுவதுதான் நல்லது,ஹீரோவாய் போன அவர் திரும்பி ஜீரோவாக வரும் நாளையில் உணர்ந்து பிரயோஜனமில்லை என்று யாராவது சந்திரசேகருக்கு சொன்னால் நன்று

By அன்புமணி
9/5/2009 2:28:00 AM

vijay unaku kaalam sariillay pool erukirathu thamilanay tinndapannijudan serathee

By bala
9/5/2009 2:24:00 AM

It is going to be a suicide for Vijay. Tamil youths are very angry with congress that they are killing our innocent Tamilians in Eelam. Remember Muthukumaran and others who sacrificed their life. Vijay fans are also youths. They will not accept it!

By Vaanathi
9/5/2009 2:14:00 AM

Hello Vijay! We tamil around the world should boycott your picture definitely See in the future.Our people are very angry over your decision.

By thilaga
9/5/2009 2:07:00 AM

இளைய தளபதியே நம்பி வந்த ரசிகர்களுக்கு துரோகமா, பல்லாயிரம் ரசிகர்களை திரட்டி ஈழத் தமிழர்களுக்காக போரடிய நடிகர் விஜய் அவர்களே தமிழன படுகொலைக்கு துணை போன கங்கிரஸ் கட்சியுடன் நட்புக்கரமா மனசாட்சியுடன் சிந்திப்பீர்

By Ratnam
9/5/2009 1:58:00 AM

விஜய் தன் தகப்பனின் தயவாலும் அதிர்ஷ்டதத்ினாலும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக முன்னேறியவர், அவருக்கு தனி பாணி ஒன்றும் கிடாயாது,பிரபுதேவா,லாரெந்ஸ் போன்ற திறமையான நடன ஆசிரியர்களை வைதது தன் இருப்பை நிலைநாட்டி கொன்டுருக்கிறார் அவர் படங்கள் எல்லாம் படத்தின் பெயரில் தான் மாற்றமே தவிர நடிப்பு என்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது, இதாயெல்லாம் மக்கள் எத்தனை நாளுக்குத்தான் ரசிபபர்கள், மக்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு முன் தானே விலகி காங்கிரஸில் இணைவதுதான் அவரின் எதிர்காலத்துக்கு நல்லது,

By siva
9/5/2009 1:32:00 AM

I will totally boycott Vijay's films here after. I will tell my children also that Vijay is a coward.

By Krips
9/5/2009 1:32:00 AM

Vijay No doubt you will be Zero

By Saravanan
9/5/2009 1:09:00 AM

VIJA ARE YOU LOYAL TO SONIA OR TAMIL PEOPLE AROUND THE WORLD MAKE YOUR DECISION SOON What about your step son is saying? You want tigers flag?:

By guru
9/5/2009 12:54:00 AM

Vijay should not join congress. He will become zero instead of hero, if he chooses to do so. Elections are long way to go. Don't fool your fans.

By Vijay Fan s
9/5/2009 12:09:00 AM

IF VIJAY JOINS CONGRESS, THAT IS THE END OF HIS HIGH CAREER. HIS REMAINING IMAGE WILL BE SPOILED. NOBODY GOING TO CHEER HIM ANYMORE AND NOBODY IN FILM INDUSTRY GOING TO SUPPORT HIM. IT IS AS IF HE IS DIGGING A BIG PIT FOR HIMSELF. DON'T ENTER INTO THIS OPPORTUNIST PARTY LIKE SIVAJI DID. YOU MAY JOIN DMDK/BJP/DMK INSTEAD.

By Thamizhan
9/4/2009 11:59:00 PM

விஜய் அரசியலுக்கு வரவேண்டும். தன்னலம் இன்றி தொண்டாற்ற வேண்டும். விஜயால் காங்கிரசில் மாற்றம் ஏற்படும். DMK மற்றும் AFMK பிடியினில் இருந்து தமிழகம் தப்ப வழி கிடைக்கும்.

By நவீன் சென்னை
9/4/2009 11:44:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *