வெள்ளி, 11 ஜூன், 2010

புது​வை​யில் 13.3 அடி உயர திரு​வள்​ளு​வர்​ சிலை



புதுச் ​சேரி,​​ ஜூன் 10:​ புதுச்​சே​ரி​யில் ரூ.15 லட்​சம் செல​வில் திரு​வள்​ளு​வ​ரின் 13.3 அடி உயர வெண்​க​லச் சிலை நிறு​வப்​ப​டு​கி​றது.​ இது 2 டன் எடை​யுள்​ளது.​ ​÷பு​துச்​சேரி சுற்​றுலா மைய​மாக விளங்கி வரு​கி​றது.​ இங்கு சுற்​றிப் பார்க்க பல்​வேறு இடங்​கள் இருக்​கின்​றன.​ இப்​போது சுண்​ணாம்​பாறு படகு குழாம் அருகே புதி​ய​தாக திரு​வள்​ளு​வர் சிலை இன்​னும் ஒரு மாதத்​தில் நிறு​வப்​பட உள்​ளது.​ அங்கு ஒரு சிறிய பூங்​கா​வும் நிர்​மா​ணிக்​கப்​ப​டு​கி​றது.​ ​÷ஆந்​திர மாநி​லம் விஜ​ய​வா​டா​வைச் சேர்ந்த புகழ்​பெற்ற சிற்பி பிர ​சாத் ​(44) இந்​தச் சிலை​யின் மாதி​ரியை வடி​வ​மைத்​துள்​ளார்.​ இதை முதல்​வர் வைத்தி​லிங்​கம்,​​ சுற்​று​லாத்​துறை அமைச்​சர் மல்​லாடி கிருஷ்​ணா​ராவ்,​​ பொதுப்​ப​ணித்​துறை ​ அமைச்​சர் ஷாஜ​கான் ஆகி​யோர் பார்​வைக்​கா​க​வும்,​​ அவர்​க​ளின் ஒப்​பு​த​லுக்​கா​க​வும் இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலை​யு​டன் விஜ​ய​வா​டா​வில் இருந்து புதுச்​சே​ரிக்கு வந்​துள்​ளார்.​ ​÷இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலைக்கு ஒப்​பு​தல் கிடைத்​த​வு​டன் இதே வடி​வத்​தில் திரு​வள்​ளு​வர் வெண்​க​லச் சிலையை அவர் வடி​வ​மைக்க உள்​ளார்.​ ​÷அப்​துல்​க​லாம் குடி​ய​ர​சுத் தலை​வ​ராக இருந்​த​போது அவர் கையால் கதர் ஆணை​யத்​தின் தேசிய விரு​தைப் பெற்​ற​வர் இந்​தச் சிலையை வடி​வ​மைக்​கும் பிர​சாத்.​ ​÷தி​ரு​வள்​ளு​வர் சிலை வடி​வ​மைப்பு குறித்து சிற்பி பிர​சாத் கூறு​கை​யில்,​​ ​ திரு ​வள்​ளு​வர் சிலை எப்​படி இருக்க வேண்​டும் என்று புதுச்​சேரி அரசு சார்​பில் புகைப்​ப​டம் கொடுத்​த​னர்.​ மேலும் இன்​டர்​நெட்​டி​லும் திரு​வள்​ளு​வர் படத்தை எடுத்து ஒப்​பிட்டு இந்​தச் சிலையை உரு​வாக்​கி​யுள்​ளேன்.​ ​÷இந்​தச் சிலை​யில் திரு​வள்​ளு​வர் முகம் சிறப்​பாக இருக்​கும்.​ மிகப்​பெ​ரிய புல​வ​ரின் சிலையை என் கை வடி​வ​மைத்​துள்​ளது குறித்து பெரு​மைப்​ப​டு​கி​றேன்.​ அது எனக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக இருக்​கி​றது.​ பாரம்​ப​ரி​ய​மாக கலைக் குடும்​பத்​தைச் சேர்ந்​த​வன் நான்.​ 24 வய​தில் இருந்து இது போன்று சிலை​கள் வடி​வ​மைப்​ப​தில் ஈடு​பட்டு வரு​கி​றேன்.​ ​÷ம​காத்மா காந்தி,​​ ஜவ​ஹர்​லால் நேரு உள்​ளிட்ட தலை​வர்​க​ளின் சிலை​களை வடி​வ​மைத்​துள்​ளேன்.​ ஆந்​திர மாநில முதல்​வர் ராஜ​சே​க​ர​ரெட்டி ஹெலி​காப்​டர் விபத்​தில் இறந்​தார்.​ அந்த இடத்​தில் 20 அடி உயர ராஜ​சே​கர ரெட்​டி​யின் வெண்​க​லச் சிலை நிறு​வப்​பட உள்​ளது.​ அந்​தச் சிலை​யை​யும் தயா​ரித்து வரு​கி​றேன் என்​றார்.​ ​ ​ ​÷பு​துச்​சேரி யூனி​யன் பிர​தே​சம் யேனம் பிராந்​தி​யத்​தில் நாட்​டி​லேயே உய​ர​மான 24 அடி உயர பார​த​மாதா சிலையை வடி​வ​மைத்​த​வர் இந்​தச் சிற்​பி​தான்.​ இதைத் தவிர புதுச்​சேரி அர​சுக்​காக மேலும் சில சிலை​களை இவர் வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ ​÷கா ​ரைக்​கால் பகு​திக்​காக காம​ரா​ஜர் வெண்​க​லச் சிலை 10 அடி உய​ரத்​தில் தயா​ரித்து வரு​கி​றார்.​ காம​ரா​ஜ​ரின் இரண்டு கைக​ளி​லும் சிறு​வன்,​​ சிறுமி ஆகிய 2 பேர் இருப்​பர்.​ இது ரூ.13 லட்​சம் செல​வி​லான வெண்​க​லச் சிலை.​ மேலும் காரைக்​கால் பகு​திக்கு 7 அடி உய​ரத்​தில் உட்​கார்ந்த நிலை​யில் வெண்​கல காந்தி சிலை​யை​யும் இவர் தயா​ரித்து வரு​கி​றார்.​ இதற்கு செலவு ரூ.15 லட்​சம்.​ ​÷இப்​போது புதுச்​சேரி அரசு மக​ளிர் மற்​றும் குழந்​தை​கள் மருத்​து​வ​மனை கட்​டப்​பட்டு முடி​யும் நிலை​யில் இருக்​கி​றது.​ இந்த மருத்​து​வ​ம​னை​யின் முன்பு நான்​கரை அடி உய​ரத்​தில் தாய் குழந்​தைக்கு பாலூட்​டு​வது போன்ற வெண்​க​லச் சிலை​யை​யும் இந்​தச் சிற்பி வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ இதன் மதிப்பு ரூ.6.3 லட்​ச​மா​கும்.​

கருத்துக்கள்

குமரியில் பெண்மையின் சாயலில் திருவள்ளுவரை வடித்து விட்டு நொண்டிச் சாக்கு சொல்லி அதையே புதுமை எனக் கதையளந்ததுபோல் இல்லாமல் நன்கு வடிவமைத்துள்ள சிற்பி பிராசத்திற்குப் பாராட்டுகள். குமரியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு உரியவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ராஜ​பட்ச -​ தமி​ழக எம்.பி.க்கள் ​சந்​திப்பு வெறும் நாட​கம்: ​பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன்



சென்னை, ​​ ஜூன் 10: இலங்கை அதி​பர் ராஜ​பட்​சவை,​​ தமி​ழக எம்.பி.க்கள் சந்​தித்​துப் பேசி​யது வெறும் நாட​கம் என்று பா.ஜ.க.​ மாநி​லத் தலை​வர் பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​ ​​ இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​ ​​ பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​பட்ச புது​தில்லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது.​ ​​ ஏற்​கெ​னவே இலங்கை சென்று ராஜ​பட்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் தில்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​ இது வெறும் சம்​பி​ர​தாய சந்​திப்​பாக நடை​பெற்​றுள்​ளது.​ ​​ தமி​ழர்​கள் தங்​கள் சொந்த இடங்​க​ளில் இன்​னும் 3 மாதங்​க​ளில் குடி​ம​யர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எப்​போ​தும் சொல்​வ​தையே இப்​போ​தும் ராஜ​பட்ச சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அத​னைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்​ட​தைப் போல தமி​ழக எம்.பி.க்கள் திரும்பி வந்​துள்​ள​னர்.​​ இலங்​கை​யில் நடை​பெ​றும் கொடு​மை​யை​விட,​​ ஆளும் காங்​கி​ரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்​றும் ராஜ​பட்ச நடத்​தும் நாட​கம் பெரும் கொடு​மை​யாக உள்​ளது.​ ​ ​​ இந்​தியா -​ இலங்கை இடையே இப்​போது 7 ஒப்​பந்​தங்​கள் கையெ​ழுத்​தா​கி​யுள்​ளன.​ ஆனால்,​​ இலங்​கைத் தமி​ழர் பிரச்னை பற்றி மேம்​போக்​கான,​​ கண்​து​டைப்​பான ஒரு ஒப்​பந்​தம் தவிர,​​ திட்​ட​வட்​ட​மான நட​வ​டிக்​கை​கள் எது​வும் இல்லை.​ இதி​லி​ருந்தே,​​ தமி​ழர்​களை ஒழிப்​ப​தில் இந்​தி​யா​வும்,​​ இலங்​கை​யும் கூட்​டாக செயல்​ப​டு​வது வெட்ட வெளிச்​ச​மா​கி​றது.​ ​​ இந்​தி​யா​வில் தேடப்​ப​டும் குற்​ற​வா​ளி​யான இலங்கை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்​தா​வை​யும் ராஜ​பட்ச தன்​னு​டன் அழைத்து வந்​தி​ருக்​கி​றார்.​ ​​ இந்​திய நாட்​டின் சட்​டம்,​​ ஒழுங்கு எவ​ரை​யும் விட்டு வைக்​காது என்​பதை புரிய வைக்க வேண்​டும்.​ எனவே,​​ டக்​ளஸ் தேவா​னந்​தாவை உட​ன​டி​யாக கைது செய்ய வேண்​டும்.​ ​​ இலங்​கை​யில் நடக்​கும் மறு சீர​மைப்​புப் பணி​க​ளில் சீனர்​க​ளைப் பயன்​ப​டுத்​தக் கூடாது.​ அந்​தப் பணி​களை தமி​ழர்​க​ளுக்கு வழங்க ராஜ​பட்​ச​வி​டம் இந்​திய அரசு வலி​யு​றுத்த வேண்​டும் என்று பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.
கருத்துக்கள்

நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 10 ஜூன், 2010

விரிவான செய்தி
 
ஜெகத் கஸ்பர் MEGA PROJECT மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்ட திட்டம் ?

09 June, 2010 by admin

ஜெகத் கஸ்பர் அடிகளாரின் புதிய திட்டம் அம்பலம். கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்ட புதிதாக போட்ட திட்டத்தை மன்மோகன் சிங் ஊடாக ராஜபக்ஷவிடம் கையளிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக அறியப்படுகிறது. இது குறித்து தமிழகத்தில் உள்ள முற்போக்கு இடதுசாரி இணையமான "வினவு" இணையத்தளம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இக் கட்டுரை அமைகிறது.

இறுதிப் போரில் சுமார் 40,000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷ அரசுடன், மீள் கட்டுமான புராஜெக்டைப் போட தயாராகியுள்ளார் ஜெகத் கஸ்பர். இவரைப் போன்ற உளவாளிகள் தமது சுயரூபத்தை அவ்வளவு எளிதில் காண்பிக்க மாட்டார்கள். இருப்பினும் மே 18ம் தேதிக்குப் பின்னர் இவர் தனது போக்கை வெகுவாக மாற்றிக்கொண்டவர். தற்போது வெளிப்படையாகவே இலங்கை அரசுடன் இணைந்து வேலைத் திட்டங்களைப் போட ஆரம்பித்திருப்பது, அவர் போட்டிருந்த முகத்திரை தற்போது கிழித்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

கடந்த ஆண்டில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஜெகத் கஸ்பரால் தொடங்கப்பட்ட இயக்கமே "நாம்" என்னும் அமைப்பாகும். இது ஒரு இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு என்றுகூறிக்கொண்டு, அதனை ஒரு தன்னார்வ நிறுவனமாக பதிவும் செய்தார் கஸ்பர். இவர்கள் தற்போது இந்தியா, மற்றும் இலங்கை அரசுகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அக் கோரிக்கை என்ன என்று அறியவேண்டுமா?

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாவதால், அங்கே தமிழ் மக்களின் புனர்வாழ்வு, அரசியல் தீர்வு, பொருண்மிய மேம்பாடு, மற்றும் நீதியில் அமைந்த இணக்கப்பாடு என்பனவற்றை "நாம்" அமைப்பு வலியுறுத்துகிறது என்பதாகும். அதில் உடனடித் தேவை புனர்வாழ்வு. ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவிபுரிய ஒரு கட்டமைப்பு இல்லை. குறிப்பாக தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு இல்லை. எனவே இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய-இலங்கை கூட்டமைப்பு என்னும் ஒரு கட்டமைப்பை எழுப்ப பரிந்துரைசெய்கிறோம் என்று குறிப்பிடுகிறது “நாம்” அமைப்பு.

இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில்-வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். மேலும் ராஜபக்ஷ இந்தியா வரும்போது இந்த வேலைத்திட்டத்தை பரிந்துரைசெய்து, அதற்கு செயல்திறனை கொடுக்க கஸ்பர் அடிகளார் பெரிதும் முயன்றுவருகிரார். இந்தக் கட்டமைப்பை (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) இவ்வாறு அழைக்கின்றனர்.

ஃபாதர் போட்டிருக்கும் இந்த பாரிய வேலைத் திட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என்று பெரிய மனிதர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அறியப்படுகிறது. இவர்கள் யார் இவர்களின் பின்னணி என்ன என்பதை நாம் இனி நோக்குவோம்!

இந்த மெகா புராஜெக்ட் தொடக்க நிகழ்வில், புலிகள் ஆதரவாளர் போல நடித்தவரும், இந்நாள் கருணாநிதி ஆதரவாளரும், பிழைப்புக்காக அரசியல் நடத்தும் சுப வீரபாண்டியன் அவர்கள் பேசும் போது இந்த வேலைத் திட்டம் வெற்றியடையவேண்டும், ஆனால் கருணாநிதியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று பேசியுள்ளார்.

யார் இந்த ஜெகத் கஸ்பர் ராஜ்?

தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் நோக்கில் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். இவர் பங்குத் தந்தையாக இருந்த காலத்தில் இந்து கிறிஸ்தவர் கலகம் மூண்டதால், சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார். பின்னர் அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ(CIA) கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம் புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். இறுதி யுத்தத்தின் போது, நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி, அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

ஆனாலும் விடவில்லை, மாவீரர் தினமான நவம்பர் 27ம் நாள், “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி, மாவீரர் நாளையே அவமதித்தார். பல இடங்களில் அதிர்வு இணையம், மற்றும் வினவு போன்ற முற்போக்கு இணையத்தளங்கள் இவரை கட்டம்போட்டு காட்டியது. இவர் முகத்திரை கிழிந்ததன் பலனாக வெளிநாடுகளில் இருந்து உதவிசெய்த பல தமிழர்கள் இவருக்கு உதவ மறுத்தனர். இதுவரை காலமும் தனது கல்லாப் பெட்டி நிரம்பிவழிந்ததும், தற்போது அது வற்ற ஆரம்பித்ததும், இவர் வேறு பாணியில், நேரடியாகவே ராஜபக்ஷவிடம் புராஜெக்ட் என்று சொல்லி பணம் புரட்ட முயல்கிறார். இது போல இன்னும் அதிர்ச்சித் தகவல்கள் காத்திருக்கின்றது இவரைப்பற்றி.

இவ் அமைப்பில் உள்ள சசிகுமார் என்பவர் யார் ?

தென் இந்தியாவில் சன் டீவி(SUN TV) குழுமத்திற்கு எவ்வளவு சொத்தும் செல்வாக்கும் இருக்கிறதோ அதை ஒத்த, மலையாள சேனலான் ஏஷியா நெட்(ASIA NET) தொலைக்காட்சியை ஆரம்பித்ததில் ஒருவர் இந்த சசிகுமார். தென் இந்தியாவில் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் நெட்வேர்க்கை இவர் தனது கைகளில் வைத்துள்ளார். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இவர் இருக்கிறார். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள். ஏன் தெரியுமா?

அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபக்ஷ கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. சசிகுமார் இந்து ராமின் பங்காளி. இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கான புராஜெக்டை போட்டிருக்கிறார்.

யார் இந்த பகவான் சிங்? இவர் ஒரு "தெலுங்கர்"

தமிழகத்தில் புலிகள் ஆதரவாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு, புலத்தில் உள்ள மக்களிடம் பணத்தைப் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்பவர். புலத்து மக்களால் பல தடவை அழைக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 ல் தமிழ் ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங், ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்ற தொனியில் பேசியதை யாரும் மறந்துவிடவில்லை. பின்னர் 2009ம் ஆண்டு கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தபோது சென்னையில் கடமையாற்றிய இலங்கைத் தூதர் அம்சாவுடம் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டு, ஒரு முறை இலங்கையும் சென்றுவந்தார் .

அப்போது கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர் சிலகாலம் தங்கியிருந்தது, இலங்கை அரசு இவரை நன்கு கவனித்து அனுப்பியதன் விளைவாக இவர் நடாத்தும், சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசை பாராட்டி எழுதினார். புலிகளின் அரசியல் தலைவர் ப.நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதனை போடாமல், கருணாவின் பேட்டியை பிரசுரித்தார். அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தவிர்க்கமுடியாத காரணத்தால் பிரசுரித்தன. இதன் காரணமாக சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். கருணாவின் பேட்டியை எவ்வாறு பிரசுரிக்கலாம் எனப் போராடினர், அப்போது அவர்களை ஒன்று சேர்த்து தானும் நல்ல பிள்ளைபோல நடித்து அம்சாவிடம் கூட்டிச்சென்று, மனு ஒன்றைக் கொடுக்கச் செய்தார் இந்த பகவான் சிங். இப்போது உளவாளி ஜெகத் கஸ்பரோடு சேர்ந்து ராஜபக்ஷவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

யார் இந்த ரவிக்குமார்: இவரும் ஒரு பச்சைத் தமிழன் தான்!

இவர் ஒடுக்கப்பட தலித்தின மக்களின் தத்துவாசிரியன் என்ற ரேஞ்சுக்கு புகழப்பட்டவர். ஆனால் இப்போது ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறக்கிறார் ரவிக்குமார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ . அத்தோடு இந்தியா வரும் ராஜபக்ஷவிடம் இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பை நடைமுறைப்படுத்த பரிந்துரைசெய்ய இவர் இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ராஜபக்ஷ வருகைக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நிற்கிறது. எங்கு போய் தலையை முட்டிக்கொள்வது? எம்.எல்.ஏ ரவிக்குமார், ராஜபக்ஷவிடம் பரிந்துரைப்பாராம், ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அவர் வரவை எதிர்த்து உறுமுமாம்.

யார் இந்த ஏ.எஸ் பன்னீர் செல்வம்?

கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க பிரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவகாரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் பானோஸ் சவுத் ஏசியா என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான். இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும், மெகா புராஜெக்டிலும் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். சென்னை மயிலை பேராயர் சின்னப்பா என்பவர், “மௌனத்தின் வலி” என்ற நூல் வெளியீட்டுவிழாவில் ராஜபக்ஷவை கண்டபடி திட்டித் தீர்த்தார். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இலங்கை தூதரகம் சென்னையில் வெளியிடும் நூலான "நீரிணை" என்னும் இதழில், மயிலை பேராயர் சின்னப்பா இலங்கைத் தூதரை சந்தித்ததாகவும், அவர்கள் சந்திப்பின் விவரணத்தை தொடர்கதையாக எழுதிவருகிறது. மேடையில் ஒரு பேச்சு, மேடையை விட்டு இறங்கியதும் மறுபேச்சு, மயிலை பேராயர் சின்னப்பாவின் சீடன் தான் ஜெகத் கஸ்பர்.

இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபக்ஷவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இது ஒரு புறம் இருக்கட்டும், இந்திய திரைப்பட விழாவுக்கு இலங்கை சென்றுவந்த இந்தி நடிகர்களை தமிழகம் புறக்கணிக்கிறதே, ராஜபக்ஷவுடன் கைகோர்த்து நிற்கும் இவர்களை ஏன் தமிழகம் தண்டிக்க மறுக்கிறது????

ராமை நேர்காணல் கண்ட பாண்டியன் என்பவர் யார்?

இலங்கை சென்று ராமை காடுகளில் தான் சந்தித்து ஒரு நேர்காணலை கண்டதாக சமீபத்தில் ஒருவர் பெயர் அடிபட்டதே, அவர் தான் பாண்டியன். திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா. தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். இவருடன் கூட்டாக தற்போது பாண்டியன், அர்ஜூன் சம்பத், பாலகுரு என சிலர் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பர் ராஜ்.

இவர்கள் அனைவரும் தற்போது கூட்டாகச் சேர்ந்து பணம் புரட்டும் ஒரு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மிக விரைவில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும்.





வாசகர் பின்னூட்டங்கள்

comments by: இளங்கோ சிவராமன்

மொத்தத்தில் தமில்லீலபோரட்டம் இப்போது ஒருசிலரின் காசு சேர்க்கும் ஒரு வலியாகமார்ரிவிட்டது. இதில் வெடிக்கைஎநவெந்ரால் கருனநிதிகுடும்பம் இப்படி ஒரு அமோக வழியிருப்பது தெரியவரும்போது இவர்களை வீழ்த்திவிட்டு தங்கள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொல்வார்கள். இவர்களுக்கு இது உலக்கும் விடயமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் இதை ஒழித்துக்கட்டவேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் திசைமாறி சிதைந்து போய்விடும். முன்னொருகாலத்தில் துரையப்பா எனும் துரோகி தமிலர்போராட்டத்தை தடைக்கல்லாக நின்று தடுத்துக்கொண்டிருந்தப்போது தலைவர் தீர்கதரிசனத்தொடும் துணிவோடும் அதை நீக்கி போராட்டம் புத்துயிருடன் வீருகொண்டோடத்தொடன்கியது. இப்போது கஸ்பர், கருணாநிதி, பகவான் கல் எல்லோரையும் ஓரங்கட்டி தமிலர்போராட்டதை முன்னகர்த்த ஒரு சாமர்த்தியமான வேலைத்திட்டம் உர்வாக்கப்பட வேண்டும். வெறுமனே செய்திகளை மட்டும் வெளியிடாது தகுந்த ஆலோசனைகளையும் பலதரப்புகளிடமிருந்தும் வெளிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
---------------------------------------------
comments by: Siva

yaaraitaan nanpuvato tamilan nenjam ???? NAMPIYE EMAANTAN TAMILAN PORUPPOM KALAM PATIL SOLLUM!!
---------------------------------------------


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 14676







விளம்பரங்கள்











© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback

மழையில் மயில்

தமிழால் எல்லாம் முடியும்; தமிழக அரசால் முடியுமா? ராமதாஸ் கேள்வி



சென்னை, ஜூன் 9: "தமிழால் எல்லாம் முடியும். ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்கவோ, பயிற்சி மொழியாக்கவோ தமிழக அரசால் முடியுமா?' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது: ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாமும் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா? இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் உயர்வுக்காக பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ் என பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் இதுவரை 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசாணை வந்து 27 ஆண்டுகளாகியும், அவை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த அரசாணைகளை அமல்படுத்த முடியும். தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில், தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் உயர்வுக்காகப் பாமக மட்டும்தான போராடியது என்பது தவிர பிறவற்றை மிகச் சரியாகத் தெரிவித்துள்ளார்.பின் ஏன் இத்தகைய கட்சியிடம் கூட்டணிக்காகத் தொங்குகிறார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இடம்பெயர்ந்த தமிழர்கள் 3 மாதங்களில் குடியமர்த்தப்படுவர்: ராஜபட்ச உறுதி



புது தில்லி, ஜூன் 9: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 3 மாதங்களுக்குள் அவரவர் வசிப்பிடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்தார்.÷3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் ராஜபட்சவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதன்கிழமை காலை சந்தித்தது. அப்போது அவர்களிடம் ராஜபட்ச மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.÷திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் உள்பட மொத்தம் 14 எம்.பி.க்கள் ராஜபட்சவை சந்தித்து மனு அளித்தனர்.÷இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் டி.ஆர். பாலு கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் முகாமில் அடைபட்டுள்ளனர். அவர்களை உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி - ஜயவர்த்தனே இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.÷அதற்கு பதிலளித்த ராஜபட்ச, அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது முகாமில் 54 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் அவர் உறுதி அளித்தார் என்றார்.÷தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பான கோரிக்கையில் ராஜபட்ச நம்பிக்கை தரும் வகையில் உறுதியான பதிலை அளிக்காததால் எம்.பி.க்கள் குழுவினர் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.÷இதனிடையே குழுவில் இடம்பெற்றிருந்த திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தமிழர்களுக்கு சுய அதிகாரம் வழங்குவது தொடர்பான 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து யோசனை செய்துவருவதாகவும் ராஜபட்ச தெரிவித்ததாக அவர் கூறினார்.÷இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.500 கோடி நிதியை இலங்கை அரசு முறையாக பயன்படுத்தாமல் உள்ளது. அந்த நிதியை உடனடியாக வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முன்வர வேண்டும் என்று ராஜபட்சவிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜபட்ச சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே நீண்ட நல்லுறவு ஏற்படவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தியதாக சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.÷இரு நாடுகளின் மீனவர்களிடையே அடிக்கடி மோதல்களை தடுத்து, நல்லுறவை ஏற்படுத்துவது மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேச்சு நடத்த கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.
கருத்துக்கள்

தமிழர்களுக்கு எதிரான பேரின அழிப்புகளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக் குறிப்பிடுவதில் இருந்தே அடிமைகள் தங்கள் முதலாளியின் முதலாளியைச் சந்திக்கும் நிகழ்ச்சி என நன்கு புரிகிறது.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இந்தியா-இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின



குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.
புது தில்லி, ஜூன் 9: இலங்கைத் தமிழர்கள் மறுகுடியமர்வு பணியை விரைவுபடுத்துங்கள் என்று தில்லி வந்துள்ள அந் நாட்டு அதிபர் ராஜபட்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இரு தலைவர்கள் சந்திப்புக்குப் பின், பாதுகாப்பு, எரிசக்தி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியா, இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.செவ்வாய்க்கிழமை தில்லி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்தும் பணியைத் விரைவுபடுத்த வேண்டும் என்று ராஜபட்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பின், இரு நாடுகளிடையே பாதுகாப்பு, மின்சாரம், ரயில்வே, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இலங்கைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அளிப்பது, தலைமன்னார்- மடு இடையே ரயில் பாதை அமைப்பது, பெண்கள் தொழில் முன்னேற்ற மையம் அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ராஜபட்சவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன்பின்னர் முதன்முறையாக அவர் தில்லி வந்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கருத்துக்கள்

இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பு. தமிழர் நலனுக்கு எதிரான கொலைவெறி அணி சந்திப்பு.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 4:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இலங்கைத் தமிழர் பிரச்னை: வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை- ராஜபட்சவிடம் திமுக அணி எம்.பி.க்கள் கவலை



தில்லியில் இலங்கை அதிபர் ராஜபட்சவை புதன்கிழமை சந்தித்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆதிசங்கர்.
புதுதில்லி / சென்னை, ஜூன் 9: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவிடம் திமுக அணி எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.ராஜபட்சவை தில்லியில் புதன்கிழமை சந்தித்த எம்.பி.க்கள் தங்களது ஆழ்ந்த கவலையை எடுத்துக் கூறினர்.இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக ராஜபட்ச வந்துள்ளார். அவரை, திமுக அணி எம்.பி.க்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பின் போது எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவையும் ராஜபட்சவிடம் அளித்தனர். அதன் விவரம்:இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வு, நலம் குறித்த பிரச்னைகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பல்வேறு சமயங்களில் இலங்கை அரசிடம் தனது கவலையை உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், இலங்கையில் போர் முடிந்து ஓராண்டு முடிந்துள்ளது.அங்கு பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்குப் பிறகும், இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறையாமல் மேலும் தொடர்வது மனவருத்தம் அளிக்கிறது. உள்நாட்டில் குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் முகாம்களிலே தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.உள்நாட்டில் குடிபெயர்ந்த 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இலங்கை அரசு தாற்காலிகமாக அமைத்துள்ள முகாம்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களை மறுகுடியமர்வு செய்ய இறுதி இலக்கு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.எனவே, மறுகுடியமர்வு பணிகளுக்கு காலம் கடத்தும் போக்கை கைவிட்டு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் உடனடியாக திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும். கவலை அளிக்கிறது: தாற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு எங்களது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை, மறுகுடியமர்வு செய்வதில் உள்ள தாமதத்துக்கு கண்ணி வெடிகளை அகற்றும் பணியே காரணம் என இலங்கை அரசு கூறிவருகிறது. எனவே, கண்ணி வெடிகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தி இலங்கைத் தமிழர்கள் விரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.காலம் தாழ்த்தக் கூடாது: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு பிரச்னைக்கு முறையான வாழ்வாதார திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி மையம் ஆகியவற்றை அளிக்க தீவிர முனைப்புக் காட்ட வேண்டும்.இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு ரூ.500 கோடி அளித்தது. இதைப் பயன்படுத்தி பயனளிக்கும் பணியை இலங்கை அரசு இன்னமும் தொடங்கவில்லை. எனவே, இது தொடர்பாக இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஒன்றுபட்ட இலங்கை: ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மைத் தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற 1987-ம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் ஒரு விரிவான ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பதோடு, இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினரின் நலனையும் மேம்படுத்தலாம். எனவே, 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை உளப்பூர்வமாகவும், விரைவாகவும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களை விரைவில் மறுகுடியமர்த்தல், அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு சாதகமான செயல் துடிப்புள்ள நிலையை வகிக்க வேண்டும் என்று திமுக அணி எம்.பி.க்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க வக்கற்றவர்கள். ஒன்று பட்ட இலங்கை என்கிறார்கள். அந்த நாட்டு இறையாண்மையில் தலையிட இவர்கள் யார்? இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பிற்காக வந்துள்ள கொலைவெறியனிடம் கஞ்சுகிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் மொழி , தமிழ்இன அழிப்பு பற்றிக்கூட ஒரு வரி தெரிவிக்கவில்லை. போகட்டும்! தங்களுக்கும் அக்கரை இருக்கிறது எனக் காட்டுவதற்கான நாடகம்தானே! நமக்கென்ன? அவர்களே நடித்து மகிழ்ந்து கொள்ளட்டும்!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *