புதன், 16 ஜூன், 2010

thirukkural in tower clock

குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!



விட்டில் பூச்சிகள் பொட்டுப் பொட்டென்று விழுந்து சாவதைப்போல், மனிதப் பூச்சிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து மடிவதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அதற்கு என்ன காரணம் என்று அறியப் போனவனும் செத்து மடிந்தான். சில மணி நேரத்துக்குள் அந்த ஊரே பிணக்காடாகிவிட்டது. யாரையும் அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லை. குடும்பங்குடும்பமாக அழிவு நேர்ந்த காரணத்தால், துக்கம் கொண்டாடக்கூட யாரும் எஞ்சி இருக்கவில்லை. பிணங்களை மலைபோல் அடுக்கி, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் ஒரே "மூச்சில்' கொளுத்திவிட்டார். மூத்தோர், இளையோர், சிறார் என்னும் வேறுபாடு சாவுக்கு இல்லைதான்; வயிற்றிலிருக்கும் பிள்ளையைக் கூடத் தாயை அலற அலற வைத்துப் பிதுக்கிக் கொண்டு போய்விடும் கொடியவன்தான் கூற்றுவன். ஆனால், கூற்றுவன்கூட இப்படிக் கொத்துக் கொத்தாகக் கூட்டம் கூட்டமாக அழிப்பதில்லை. ஓரிருவர் அல்லர்; இருபத்திஐயாயிரம் பேர் சாகடிக்கப்பட்டவர்கள். கண் இழந்தவர்கள்; நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஊனமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எழுபத்திநான்காயிரம்! அது நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் குழந்தைகள் குறைபாடோடுதான் பிறக்கின்றனர்! போபாலில் எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் கட்டப்பட்டு, நம்முடைய அரசால் அனுமதிக்கப்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுவாயுதான் ஊரே பிணக்காடாக மாறக் காரணம்! அந்த நிறுவனத்தின் முதலாளி ஆன்டர்சன் என்னும் அமெரிக்கன்! இந்தக் கயவன் தன்னுடைய நாட்டை விட்டு விட்டு, தொழில் தொடங்க இந்தியாவுக்கு வந்த காரணம், இங்கேதான் மனித உயிர்களுக்கு விலை இல்லை என்பதால்தான். பிழைகள் நேராதவாறும், ஒருவேளை நேர்ந்தால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும் இங்கேதான் எந்தக் கேள்வி கேட்பாடுகளும் இல்லை.ஆட்சியாளர்கள் மேற்சட்டை, உள்சட்டை, காற்சட்டை என்று எல்லாச் சட்டைகளிலும் பெரிய பெரிய பையாகத் தைத்து வைத்திருப்பார்கள்; அவற்றை நிரப்பினால் போதும் என்பது ஒன்றுதான் இங்கு எழுதப்படாத அரசியல் சட்டம் என்பதை அறிந்துதான் இந்தியாவுக்கு வந்தான் ஆன்டர்சன். இங்கே தொழிலாளிகளுக்குக் கூலியும் குறைவு என்பது அவனுக்கு ஏற்பட்ட இன்னொரு கவர்ச்சி. அமெரிக்காவில் பாதுகாப்புத் தொடர்பான கொள்கைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதால், ஏனோதானோவென்று கட்டப்படுகிற, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலான தொழிற்சாலைகளெல்லாம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் குறிப்பாக இந்தியாவுக்குத் தள்ளிவிடப்படுகின்றன. இளிச்சவாய் நாடு இந்தியாதானே! இத்தனை உயிர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அமெரிக்க முதலாளி கொடுத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர்; ஒவ்வொரு தலைக்கும் 200 டாலர்; இந்தியனின் உயிருக்கும் ஊனத்துக்கும் விலை பத்தாயிரம் ரூபாய்; காங்கேயம் மாட்டின் விலையும், இந்தியனின் விலையும் ஒன்றுதான்! இந்த வழக்கு சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் 26 ஆண்டுகள் நடந்திருக்கிறது. இதற்குள் பல அரசுகள் மாறிவிட்டன; பல மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்; வழக்கை விசாரித்த நீதிபதிகளில் பலர் செத்தே போய்விட்டார்கள். கடைசியில் நீதியும் செத்துப் போய்விட்டது! முதலில் இந்த வழக்கு 304(2) என்னும் குற்றப்பிரிவின் கீழ்தான் நடந்தது. அந்தச் சட்டப்படி குற்றவாளிகளை 10 ஆண்டுகள் தண்டிக்கலாம். அகமதி என்னும் உச்ச நீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு விசாரித்து, அதை 2 ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய 304 ஏ என்னும் எளிய பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். கேவலம் மோட்டார் ஓட்டி யாரோ ஒருவரின் மீது ஏற்றி விடுகிற பொறுப்பின்மையும், 25,000 பேர் சாவதற்கும், 5 லட்சம் பேர் ஊனமுறுவதற்கும் காரணமான பொறுப்பின்மையும் ஒன்றுதான் என்று அரசமரத்தடியில் கட்டைப் பஞ்சாயத்துச் செய்கிறவன் கூடத் தீர்ப்புச் சொல்ல மாட்டானே! இதைச் சொல்வதற்கு ஓர் உச்ச நீதிமன்றம்! அதைவிடக் கொடுமை அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி இதைச் சாதாரணப் பிரிவுக்கு மாற்று என்று உத்தரவிட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தாங்கிப் பிடிப்பது! ""குற்றம் செய்யும் நோக்கம் தொழிற்சாலை அதிபர்களுக்குக் கிடையாது. ஆகவே அந்தச் செயல் காரணமாக ஒருவர் இறந்தாலும் ஒன்றுதான்; ஆயிரக்கணக்கில் இறந்தாலும் ஒன்றுதான்'' என்று பதற்றமே இல்லாமல் எப்படி கே.ஜி. பாலகிருஷ்ணனால் இதை நியாயப்படுத்த முடிகிறது? இதுதான் சட்டம் என்றால் சட்டத்தை எவன் மதிப்பான்? இந்தத் தீர்ப்பை நீதிப் பேரழிவு என்றும் நீதிப் பயங்கரவாதம் என்றும் சொல்வது நியாயம்தானே! இப்படி ஓர் இழிந்த தீர்ப்பைக் கீழ்நீதிமன்றம் வழங்குவதற்கேற்ப அதற்குச் சாலை அமைத்துக் கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி மக்களின் வயிற்றெரிச்சலில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்! இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேந்திரா உள்பட ஏழு பேருக்கு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையை வழங்கிய கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு மனமில்லை! அவசரம் அவசரமாகப் பிணையில் விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தக் கொடிய குற்றவாளிகளைத் தண்டித்த பிறகும் ஒருநாள் ஒருபொழுதுகூட அவர்கள் சிறையில் இருக்கவில்லை. அடுத்த நீதிமன்றத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். இந்த 7 பேரும் அந்த 2 ஆண்டுத் தண்டனையையும் அனுபவிக்கப் போவதில்லை. முன்பெல்லாம் சந்தேகக் கேஸ் என்று ஒன்று போடுவார்கள். வீதியில் சும்மா போகிறவனை ஒரு கடையின் பூட்டை இழுத்து ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஐயப்பட்டுப் பிடித்ததாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவனை உள்ளே வைத்து விடுவார்கள். சிறைச்சாலைகள் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கட்டப்பட்டவைதானே! அமெரிக்க ஆன்டர்சனுக்காகவா கட்டப்பட்டது? நச்சுவாயுக் கசிவுக்கு ஆன்டர்சன் முதலில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய வைத்து மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தை அளித்து, தில்லிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தவர் அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங். தன்னுடைய சொந்த ஊர் சுடுகாடாகிவிட்டது; சாகடித்தவனைக் காப்பாற்றுவதில் அவ்வளவு அவசரம்! அர்ஜுன் சிங்கை மகனாகப் பெற்றதைவிட, அவருடைய தாய் மலடியாகவே இருந்திருக்கலாம்! அமெரிக்க நெருக்கடி இல்லாமல், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் தூண்டுதல் இல்லாமல், ஒரு கொடிய குற்றவாளியை மாநில அரசே முன்னின்று விடுவித்துப் பாதுகாப்பாகத் தனி விமானத்தில் அனுப்பி வைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? ஒரு தனி மனிதன், மத்திய அரசின் துணை இல்லாமல் தில்லி விமான நிலையத்தை விட்டு ஒரு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றுவிட முடியுமா? முடியும் என்றால், நமக்கு ஓர் அரசுதான் எதற்கு? விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் எதற்கு? பேருந்து நிலையங்கள்போல் ஆக்கிவிட வேண்டியதுதானே! ராஜீவ் காந்தியின் யோக்கியதையே இதுதான் என்றால் அவருடைய மனைவி என்ற பேரில் இந்தியாவில் அதிகாரம் செலுத்த முடியுமா? இதுதான் சோனியாவின் அச்சம்! ஆகவே, எல்லாவற்றையும் மூடி மறைக்கும் வேலைகள் மும்முரமாகி இருக்கின்றன! மத்திய புலனாய்வுத் துறை செயல்பட விடாமல் வெளிவிவகாரத்துறை குறுக்கிட்டது என்று புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் லால் வெளிப்படையாகச் சொன்னபிறகும், முதல்வர் அர்ஜுன் சிங் உத்தரவின் பேரில் தனி விமானத்தில் குற்றவாளியை போபாலை விட்டு அவசரமாகக் கடத்தியதாக அந்த விமானி சொன்ன பிறகும் தானே சாக்குக்குள் இருந்த பூனைக்குட்டி வெளிவந்திருக்கிறது! நடந்த உண்மையை வெற்றிகரமாக 28 ஆண்டுகள் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்த காங்கிரஸ் மத்திய அரசு, இப்போது அதை ஒத்துக்கொண்டு நியாயப்படுத்த முயல்கிறது. மத்திய அரசின் இசைவில்லாமல் தில்லியிலிருந்து தனி விமானத்தில் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு குற்றவாளி தப்பிச் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கு விடை சொல்வதைத் தவிர்த்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி, ஆன்டர்சனைத் தனி விமானத்தில் முதல்வர் அர்ஜுன் சிங் போபாலுக்கு வெளியே கொண்டு போயிருக்காவிட்டால், அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் என்று கூறியிருக்கிறார். அதனுடைய பொருள் என்ன? ஆன்டர்சனை போபால் சிறையில் அடைத்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சியின்போது மக்கள் கொதித்தெழுந்து பாஸ்டில் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கியதுபோல, மக்கள் போபால் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கி, ஆன்டர்சனை இழுத்து வந்து உயிரோடு புதைத்திருப்பார்கள் என்பதுதானே! சட்டம்-ஒழுங்கு என்பது தண்டிக்க வேண்டிய ஒரு குற்றவாளியைப் பாதுகாத்துத் தப்ப வைக்கும்போது குலையுமா? அல்லது சட்டம் சண்டித்தனம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு குற்றவாளிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும்போது குலையுமா? யோசித்துப் பேச வேண்டாமா மூத்த அரசியல்வாதி! ஒரு கொடிய குற்றத்தை நியாயப்படுத்திவிட்டால், பிரணாப்பை பிரதமராக்கி விடுவாரா சோனியா காந்தி? ஆன்டர்சன் மீதுள்ள வழக்குத் திறந்தே இருக்கிறதாம். சொல்லுகிறார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. பிடித்த குற்றவாளியைக் காப்பாற்றிப் பூச்செண்டு கொடுத்துத் தனி விமானத்தில் அனுப்பி விட்டு, வழக்கு உயிரோடுதான் இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இருக்காதா, வீரப்ப மொய்லிக்கு? போபால் நச்சுக்கசிவு வழக்கில்தான் என்றில்லை; பொதுவாகக் கொடுங் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் "மனப் பிறழ்ச்சி' மன்மோகன் அரசிடம் காணப்படுகிறது. பாகிஸ்தானின் துணையோடு நாடாளுமன்றத்தின்மீது குண்டு வீசினான் அப்சல்; அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்சலின் கருணை மனுக் கோப்பு தில்லி முதலமைச்சரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, உள்துறை அமைச்சகம் அதன்மீது முடிவெடுக்கும். அந்தக் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போடுமாறு ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த பாட்டீல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதை அண்மையில் ஷீலா தீட்சித்தே மிகவும் வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பூனைக்குட்டியாகச் சாக்குக்குள் இருந்து வெளிவருகிறது. ஏன் அப்சலின் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போட வேண்டும்? ஷீலா தீட்சித் காலத்தாழ்வின்றி அதை அனுப்பிவிட்டால், மத்திய அரசு உடனடியாக அதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாகும். அப்சலைத் தூக்கிலே போடுவதை உறுதிப்படுத்தினால், ஒருவேளை இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம். ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்த ஆ. ராசாவிடம் அமைச்சர் பதவியைப் பிடுங்கிவிட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்! அப்படிக் கருணாநிதி வேறு பயமுறுத்தி வைத்திருக்கிறார். ஓர் இஸ்லாமியன் வைக்கிற குண்டில் பல்லாயிரம் இஸ்லாமியர்களும் இறந்து போகிறார்கள்; ஒரு தாழ்த்தப்பட்டவன் அடிக்கிற கொள்ளையால், பல கோடித் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கான நிதி ஆதாரம் தடுக்கப்பட்டு விடுகிறது என்று மக்களுக்குப் புரியும்படியாக நெஞ்சுரத்தோடு எடுத்துச் சொல்லிவிட்டு நீதியின்படி நடக்க வேண்டியதுதானே! அது முதுகெலும்புள்ள அரசால்தான் முடியும்! மன்மோகன் அரசால் முடியாது! இன்னொரு கொடுமை அண்மையில் சிங்கள மந்திரிசபையில் அங்கம் வகிக்கிற டக்ளஸ் தேவானந்தா, கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவோடு தில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கையைப் பிடித்துக் குலுக்கியிருப்பது! அச்சுறுத்திப் பணம் பறித்தது; ஆளைக் கடத்தியது; ஒருவரைக் கொலை செய்தது என்று மூன்று கொடிய வழக்குகளில் சென்னை காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா, மன்மோகன் சிங் கையைப் பற்றியபோது, அப்படியே தில்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டாமா? கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை என்பதால், கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு, சிங்கள அரசுக்கு உதவி, ஈழத்தையே சுடுகாடாக்கியதே காங்கிரஸ் மத்திய அரசு! இன்னொரு கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா மன்மோகன் சிங்கின் கைகளில் வந்து சிக்கிய பிறகும் கோட்டைவிட்டது ஏன்? போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், வெடிகுண்டுப் பயங்கரவாதி அப்சல், கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்! குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!
கருத்துக்கள்

உண்மை!உண்மை!உண்மை!

உண்மையை எழுதிய பழ.கருப்பையாவிற்கும் வெளியிட்ட தினமணிக்கும்

பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இந்தியா எந்தவித நெருக்குதலும் தரவில்லை: இலங்கை அமைச்சர்



கொழும்பு, ஜூன் 13: ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எவ்வித நெருக்குதலையும் தரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் (படம்) தெரிவித்துள்ளார். ÷இலங்கை தனக்கென்று சுதந்திரமான கொள்கையை கடைபிடிக்கிறது. வேறு எந்த நாடு அதற்கு நெருக்குதலைத் தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ÷இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஈழத் தமிழர் மறுவாழ்வு விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும் ராஜபட்சவை சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ÷இந்நிலையில் ராஜபட்சவின் இந்தியப் பயணம் குறித்து அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ÷இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. ராஜபட்சவின் 4 நாள் இந்தியப் பயணம் வெற்றிகரமாகவும், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தது என்றார். ÷தமிழக எம்.பி.க்கள், ராஜபட்சவிடம் பேசியது குறித்த கேள்விக்கு, ""ஈழத்தமிழர்கள் பிரச்னையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தீர்வு காணும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் குறித்து அப்போது பேசப்பட்டது'' என்றார். இலங்கையில் ரயில்வே பணிகள், அனல் மின்நிலையம் அமைப்பது உள்பட பல்வேறு மறுநிர்மாணப் பணிகளுக்காக ரூ.4,700 கோடி வரை கடன் தர இந்தியா சம்மதித்துள்ளது. விமானநிலையம், துறைமுக கட்டுமானப் பணிகளில் உதவவும் இந்தியா முன்வந்துள்ளது என்று பெரிஸ் மேலும் கூறினார்.
கருத்துக்கள்

திரு அப்துல் இரகுமானுக்கு; இன்றைய பதிவு உங்களுடையதுதானா என்று தெரியவில்லை. போகட்டும். இதற்கு முன்பு தமிழில் கணியச்சிடுவது தொடர்பாகக் கேட்டிருந்தீர்கள். இவ்வாறு சிலர் கேட்பதை நான் காலங்கடந்தே காண்பதால் நான் விடையளிப்பதை அவர்களால் அறிய முடியவில்லை. எனவே,thiru2050.blogspot.com என்னும் வலைப்பூவில் இது குறித்த விவரங்களை என் மகன் செல்வன் தி.ஈழக்கதிர் பதிவு செய்துள்ளான். படித்துப் பயன் ப‌ெறுக.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:42:00 AM

இந்தியா நெருக்கடி ஏன் தரபோகிறது. அதான் இந்திய காங்கிரஸும் சிங்களவனும் ஒன்னா கூத்து அடிக்கிறீங்களே....ஆடுங்கடா எத்தனை நாளைக்குனு பார்போம்...காலம் மாறும் காட்சியும் மாறும்...மறவன்

By மறவன்
6/14/2010 9:39:00 PM

இந்தியா நெருக்கடி ஏன் தரபோகிறது. அதான் இந்திய காங்கிரஸும் சிங்களவனும் ஒன்னா கூத்து அடிக்கிறீங்களே....ஆடுங்கடா எத்தனை நாளைக்குனு பார்போம்...காலம் மாறும் காட்சியும் மாறும்...மறவன்

By மறவன்
6/14/2010 9:38:00 PM

குடிக்க கஞ்சி இல்ல .......... கொப்புளிக்கறது பன்னீராம் ஊர்ல இருக்கிற கரண்ட் பிரச்சனைய சமாளிக்க துப்பு இல்லை இதுல இலங்கைக்கு 4700 கோடி ருபாய் நிதி கொடுக்குறாங்களாம். நீங்க திருந்தவே மாட்டீங்களா

By சாம்ராட்
6/14/2010 2:49:00 PM

திரு. KOOPU அவர்களே! ஏதாவது புதிய கருத்துக்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். உங்களின் ஒரே மாதிரியான கருத்துக்கள், படிக்கும் எங்களுக்கு சலிப்பாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் நம் வாசக நண்பர் MR. ANNYIAN உங்களை சொன்னதுபோல், இந்தியாவை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது திட்டாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராதா???

By Abdul Rahman - Dubai
6/14/2010 2:42:00 PM

HE..HE..HE POVERTY INDIA AND HER MALAYALI POLICY MAKERS CLEARLY KNOWS...THAT IF THERE IS AN INTERNATIONAL INVESTIGATION POVERTY INDIA WILL BE EXPOSED HER PART IN THE TAMILS MASSCARE...TRUTH IS GREAT CHINA HAS SET HER FOOT FIRMLY AND POVERTY INDIA HAS LOST HER LEVERAGE IN SRI LANKA....SOON POVERTY INDIAN LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT...

By KOOPU
6/14/2010 2:34:00 PM

HE..HE..HE POVERTY INDIA AND HER MALAYALI POLICY MAKERS CLEARLY KNOWS...THAT IF THERE IS AN INTERNATIONAL INVESTIGATION POVERTY INDIA WILL BE EXPOSED HER PART IN THE TAMILS MASSCARE...TRUTH IS GREAT CHINA HAS SET HER FOOT FIRMLY AND POVERTY INDIA HAS LOST HER LEVERAGE IN SRI LANKA....SOON POVERTY INDIAN LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT...

By KOOPU
6/14/2010 2:34:00 PM

DMK Karuna and Congress Manmohan singh told India is pressing Sri lanka to sort out tamil issues but sri lanka minister statement against both of them. its clearly shows that Karuanithi and Manmohan are lier.

By philip
6/14/2010 1:40:00 PM

இந்தியா எந்த நெருக்கடியையும் தரவில்லையென்றால் அதன் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உங்களின் குற்றங்களிற்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அமெரிக்காவை திருப்த்திப் படுத்தலாம். திருமதி பில்களிண்டனுடன் சேர்ந்து அறிக்கை விடலாம். இந்தியா எந்த நெருக்கடியையும் தரவில்லை என்று உங்களையே திருப்த்திப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்ற பாவத்திற்கு இயற்கை உங்களிற்கு அளிக்கப் போகும் தண்டனைனையை எதிர்பார்த்துக் காத்திருங்கள்.

By Ravi
6/14/2010 12:32:00 PM

srilanga miga periya nadu, india miga siriya nadu athalal than ducklassai arrest cheyya mudiyavillai karanam tamil uyir enbathu irandu arsukalukkum agathu enbathu than meendum unmaiyagirathu.vazhga indiya iraiyanmai.

By c.mayalagu
6/14/2010 12:13:00 PM

EU on collision course; backs war crimes probe By Our Diplomatic Editor European Union members have called for an investigation on war crimes in Sri Lanka and expressed their support for the appointment of an expert panel to advise the United Nations Secretary General on the issue. A EU delegation attending the UN Human Rights Council sessions in Geneva read out statements critical of Sri Lanka. They were from Spain, France, Switzerland and the Czech Republic. Ravinatha Ariyasinha: Ambassador in Brussels Attorney General Mohan Peiris led the delegation for talks with the EU Spain, representing the EU as its chair, and France were severest with both calling for investigations against war crimes and fully supporting the appointment of an expert panel by the UN Secretary General. Questions are now being asked whether Sri Lanka’s diplomatic mission in Brussels mishandled the Government’s renewed efforts to canvass the restoration of the EU’s GSP Plus trade concessions to

By Swamikal
6/14/2010 7:02:00 AM

EU on collision course; backs war crimes probe By Our Diplomatic Editor European Union members have called for an investigation on war crimes in Sri Lanka and expressed their support for the appointment of an expert panel to advise the United Nations Secretary General on the issue. A EU delegation attending the UN Human Rights Council sessions in Geneva read out statements critical of Sri Lanka. They were from Spain, France, Switzerland and the Czech Republic. Ravinatha Ariyasinha: Ambassador in Brussels Attorney General Mohan Peiris led the delegation for talks with the EU Spain, representing the EU as its chair, and France were severest with both calling for investigations against war crimes and fully supporting the appointment of an expert panel by the UN Secretary General. Questions are now being asked whether Sri Lanka’s diplomatic mission in Brussels mishandled the Government’s renewed efforts to canvass the restoration of the EU’s GSP Plus trade concessions to

By Swamikal
6/14/2010 7:02:00 AM

INDIA AUTHORISED TO RAPE TAMIL WOMEN IN SRILNKA> IT IS INDINAN HEHAVOURS: RESEMBLE JAPANESE RAPED CHINESE WOMEN DURING THE WAR. THANK YOU INDIA TO HELP SRILANKA> 6 SLA soldiers rape young mother in Visuvamadu [ Sunday, 13 June 2010, 06:07.09 PM GMT +05:30 ] A 25-year old mother of two children was raped by six Sri Lanka Army (SLA) soldiers last Sunday night in the resettlement village of Redbarna located at the border of Mullaitheevu district, Jaffna daily Uthayan reported. The incident occurred when the soldiers entered the house when the mother was alone. The family relocated to the village two weeks earlier as part of the resettlement program. Following a complaint by the mother registered with Sri Lanka police six soldiers alleged to have committed the crime were arrested and produced before the Kilinochchi magistrate, P. Sivakumar Tuesday morning. The Magistrate remanded in custody the six soldiers, and directed the Police to produce the accused in courts Monday morning

By Umma
6/14/2010 6:59:00 AM

INDIA AUTHORISED TO RAPE TAMIL WOMEN IN SRILNKA> IT IS INDINAN HEHAVOURS: RESEMBLE JAPANESE RAPED CHINESE WOMEN DURING THE WAR. THANK YOU INDIA TO HELP SRILANKA> 6 SLA soldiers rape young mother in Visuvamadu [ Sunday, 13 June 2010, 06:07.09 PM GMT +05:30 ] A 25-year old mother of two children was raped by six Sri Lanka Army (SLA) soldiers last Sunday night in the resettlement village of Redbarna located at the border of Mullaitheevu district, Jaffna daily Uthayan reported. The incident occurred when the soldiers entered the house when the mother was alone. The family relocated to the village two weeks earlier as part of the resettlement program. Following a complaint by the mother registered with Sri Lanka police six soldiers alleged to have committed the crime were arrested and produced before the Kilinochchi magistrate, P. Sivakumar Tuesday morning. The Magistrate remanded in custody the six soldiers, and directed the Police to produce the accused in courts Monday morning

By Umma
6/14/2010 6:59:00 AM

இலங்கை தனக்கென்று சுதந்திரமான கொள்கையை (கொல்-கை) கடைபிடிக்கிறது...

By tamilkudimagan
6/14/2010 6:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தீவிரவாத ஒழிப்பு: இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு



கொழும்பு, ஜூன்15: தீவிரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை உடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஓபாமாவின் பன்முனைச் செயலர் சமாந்த பவர் மற்றும் போர் குற்றங்களின் இயக்குனர் டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது, கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதை அமெரிக்க அதிபர் பாராட்டியதாக கூறினர். அமெரிக்காவும் தீவிரவாதத்தால் பாதிப்புக்குள்ளான நாடு என்று தெரிவித்தனர். இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையேயான உறவுகள் மேம்படவேண்டும் என்றும் இருநாடுகளும் விருப்பம் தெரிவித்தன.
கருத்துக்கள்


மிகப் பேரளவிலான மனிதப் பேரழிவுகளை நிகழ்த்தியதைத் தீவிரவாதிகள் ஒழிப்பு என்று அமெரிக்காவும் கூறுகிறது என்றால் அதன் பங்கும் அழிப்பு வேலைகளில் இருந்தது என்பது உண்மையாகிறது. உண்மையின் பக்கம் யாரும் இல்லாததால் தமிழர்களின் பக்கம் யாரும் இல்லை. மனித நேயமும் மக்களாட்சி உரிமைகளில் நம்பிக்கையும் உடைய அமெரிக்க மக்களிடம் உண்மையை எடுத்துரைத்து ஆதரவைப் பெற்று அரசுவன்முறை ஆதரவு ஆட்சியைத் தூக்கி எறிய ஆவன செய்க! வெல்க தமிழ் ஈழம்! வளர்க அமெரிக்க ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:34:00 AM

UTTERR STUPIDITY! The aspiration for and expression by the Eezahmite tamils for as eparate and soeveregn country of their own, "THAMIZH EEZHAM" and the struggle by the trained force of LIBERATION TIGERS OF TAMIL EEZHAM has been dubbed "extremism" Why WAS the USA in the Vietnam amd caused events My lai massacre? If The USA had the cause of containing communism in Asia, so did the LTTE to win back freedom to the enslaved eezhamite tamils and liberate their territory lost to the majority Sinhales due to the colonioal rule in the island. If Tamils had had one single sovereign country of their own, they will decry the statement like that of Samantha Power referred to above who is a special adviser to President Barack Obama and Director of Multilateral Affairs for the National Security Council. She is of Irish origin and she cna not be without knowing the liberation of Ireland from Brisitish rule. It is all game fo diplomacy and NOT adhereing to the values or principles of human digintiy

By P
6/16/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழை வழக்கு மொழியாக்க ரூ.32 கோடி ஒதுக்காதது ஏன்? ஜெயலலிதா கேள்வி



சென்னை, ஜூன் 15: தமிழை வழக்கு மொழியாக்க உயர் நீதிமன்றம் கேட்ட ரூ.32 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்காதது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில் தன்னல மாநாடு நடத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து கருணாநிதி வாய் திறக்கவில்லை.இதிலிருந்து, கருணாநிதிக்கு தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள் என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.32 கோடியை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் தகவல் வருகிறது.கருணாநிதிக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே தெரியாதது போல் உள்ளாரா? செம்மொழி மாநாட்டுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யும்போது, நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு ரூ.32 கோடி நிதியை கருணாநிதி ஏன் ஒதுக்கக் கூடாது?போராடும் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கருணாநிதியால் முடியவில்லை. இது அவரது அலட்சியப் போக்கை எடுத்துக் காட்டுகிறது. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறேன். வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும். 2011-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உயர்நீதி மன்றம் நிதி கேட்டது உண்மை யென்றால உடனே தமிழக அரசு வழங்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசே நிதியையும் வழங்கி உயர் நீதி மன்றங்களில் தமிழே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும். நீதி தேவதையிடமே தமிழுக்கு நீதி இல்லை யெனில் வேறு எங்குதான் நீதி கிடைக்கும். தமிழரல்லாதவர்களையும் தமிழ் அறியாதவர்களையும் தலைமைபபதவிகளில் இருந்து தூக்கி எறிக. எங்கும் எதிலும் தமிழே வீற்றிருக்க வகை செய்க!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:19:00 AM

கருணாக நிதியின் 2011ம் ஆண்டின் நகச்சுவை பகுதி ;; கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் தலைகீழ் திருப்பமாக, "குண்டு வெடித்த பிறகே சேலம் - சென்னை ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது' எனக் கூறப்படுகிறது. இதுதான் ரயில்வே பாதுகாப்பு மற்றும் ஆபரேஷன் பிரிவு அதிகாரிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், "மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றதாலும், மறுபக்க தண்டவாளம் நன்றாக இருந்ததாலும் பெட்டிகள் பத்திரமாக கடந்து சென்றுவிட்டன. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் நடந்தது' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

By நந்திக்கரை
6/16/2010 2:25:00 AM

கருணாக நிதியின் 2011ம் ஆண்டின் நகச்சுவை . ரயில்வே தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: குண்டு வெடிப்புக்குப் பின், 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு (மூன்றே கால் அடி) தண்டவாளம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஒரு ரயில் இன்ஜின் சக்கரத்தின் விட்டம் 109.2 சென்ட்டி மீட்டர். அடுத்து வரும் பெட்டிகளின் சக்கர விட்டம் 91.5 சென்ட்டி மீட்டர். ஒரு ரயில் இன்ஜினின் சராசரி எடை 100 டன்.சேலம் - சென்னை ரயிலில் மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஒரு பக்க தண்டவாளமே இல்லாத தடத்தை, 100 டன் எடை கொண்ட இன்ஜினும், 20 பெட்டிகளும் பத்திரமாக கடந்து சென்றன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது."குண்டு வெடிப்பால் தண்டவாளம் சிதறவில்லை; மூன்றாக விரிசல் விட்ட பிறகும், ஒட்டிக்கொண்டிருந்தது; அதனால், ரயில் சென்றுவிட்டது' என்பது போலீசாரின் வாதமானால், ரயில் கடந்த பிறகு, அந்தத் துண்டுகள் அங்கேயே தான் கீழே விழுந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று துண்டுகளும் 40 அடி தூரம் தள்ளி கிடந்தது எப்படி?

By நந்திக்கரை
6/16/2010 2:24:00 AM

செல்வி ஜெயலலிதவாம்லே, ஓஹோ, கல்யாணம் பண்ணாதான் திருமதியோ. வப்பாட்டியா இருந்தவ எல்லாம் காலத்துக்கும் செல்வி தானோ. என்னங்கடா நியாயம் இது? உங்க செல்வி ஜெயலலிதாவுக்கு எதுக்கு மாமு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க, எம்.ஜி.ஆருக்கு நல்ல வப்பாட்டியா இருந்து 'உழச்சதுக்கா'? போங்கடா போக்கத்த நாய்களா. போய் வீட்டுலே ஒழுங்கா வேலைய பாருடா. இல்லாட்டி எம்.ஜி.ஆர் மாதிரி ஒருத்தன் வந்து உன் பொண்டாட்டிய ஓட்டிகிட்டு பொய் வப்பாட்டி ஆக்கிடப்போறான்.

By sundar selvaraj
6/16/2010 2:17:00 AM

அய்யா உதய சூரியன் அவர்களே, அம்மாவுக்காக இப்படி பம்முரீங்களே, போன ஆட்சியிலே எல்லோருக்கும் ரிவெட் அடிச்சது மறந்து போச்சா என்ன? இல்ல அவ ஆட்சியிலே கொள்ளை அடிச்சு தின்ன பொருக்கி நாய்கள்லே நீயும் ஒரு நாயா? நாராயணா, தாங்க முடியலடா இந்த எம்.ஜி.ஆர். வப்பாட்டி தொல்லை. விஷம் வச்சி கொல்லுங்கடா அவளை. அப்படியே கொஞ்சம் விஷத்தே இங்க கருத்து மழை பொழிஞ்சிருக்கிற திரு உதய சூரியனுக்கும் வை. அதிலேர்ந்து தப்பிச்சிட்டா ஓட ஓட விரட்டி தெருநாய போல சுட்டு கொல்லு. இந்த மாதிரி நாய்க இருக்கறத விட சாவறதே மேல்.

By sundar selvaraj
6/16/2010 2:11:00 AM

மன்னுச்சுக்கிங்க அம்மா ! ....கையெழுத்துப் போடவே அந்தாளுகிட்ட சக்திகிடையாது ! இந்த லட்சணத்துல ஒரு கோப்பு ( file ) எடுத்து படுச்சு அதன் மீது முடிவெடுக்க முடியும் என்று கருதுகிறீர்களா ? என்னமோ நடக்குது நாட்டுல..கருணாநிதி பேரச்சொல்லிக்கிட்டு எவன் அங்க விளையாடுறானோ யார் கண்டது ! அடா சீக்கிரம் வாங்கம்மா ! வந்து இந்தக் கூட்டம் கும்மாளம் போட்டு வாங்கி வரண்டித் தின்னுப்புட்டு ..ஊதாரித்தனமா மக்கள் காச செலவு பண்ணி... கஜானாவ காலி பண்ணுனதும் இல்லாம..எவ்வளவு கடன் வாங்கி பள்ளம் நோண்டி வைச்சிருக்குரான்களோ தெரியால ...வந்து பாத்து எல்லாத்தையும் சரி பண்ணி ஒரு முதலமைச்சர் என்றால் அது புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெயலலிதா மாதிரி இருக்கணும் என்று மக்கள் புகழும் அளவு ஒரு ஒப்பற்ற நல்லாட்சிய கொடுங்கம்மா !!! இறை அருளால் மக்களின் பேராதரவுடன் அதனைத் தாங்கள் கொடுக்க விருக்கிறீர்கள் என்பதுவும் திண்ணம் !!!

By UTHAYA SOORIYAN
6/16/2010 12:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்