செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

விஸ்வநாதன் ஆனந்தின் இந்தியக் குடியுரிமை குறித்து சர்ச்சை


ஹைதராபாத், ஆக.24: உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் இந்தியக் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.விஸ்வநாதன் ஆனந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஹைதராபாத் பல்கலைக்கழகம், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. அமைச்சகம்  அதற்கு அனுமதி வழங்காமல், விஸ்வநாதன் ஆனந்த் இந்தியக் குடியுரிமை பெற்றவரா என்ற கேள்வியை எழுப்பியது.தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் சில ஆண்டுகள் ஸ்பெயினில் இருந்தார். இருப்பினும் இந்திய பாஸ்போர்ட்டையும் அவர் வைத்துள்ளார்.ஆனந்தின் பாஸ்போர்ட் நகலை ஒப்படைத்து, ஏராளமான விளக்கங்களை அளித்த பின்னரும், மனிதவள அமைச்சகம், டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான கோப்பை நிறுத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவையும் ஒத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்தது.பல்கலைக்கழகத்தின் கணிதப் பேரவை சார்பில் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் பட்டத்தைப் பெற, முன்னதாக விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவுடன் ஹைதராபாத் சென்றிருந்தார். ஆனால், பல்கலையின் இந்த அறிவிப்பால் வருத்தம் அடைந்து, இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று ஆனந்த் தெரிவித்தார். செய்தியைக் கேள்விப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்,  நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்காக விளையாடி கௌரவம் தேடித்தந்த ஆனந்த் அவசியம் இந்தப் பட்டத்தைப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கருத்துக்கள்

இந்தியக் குடியுரிமையை உதறித் தள்ளிய கல்பான சாவ்லாவைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் தருகின்றனர்.தமிழ் நாட்டில் பிறந்து சதுரங்க ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்த ஆனந்தனுக்கு மதிப்புறு பட்டம் தந்து மதிப்பு பெற நினைக்கும் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு இசைவு மறுப்பு. என்ன அளவுகோல் என்றே தெரியவில்லையே! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 5:36:00 PM
திரு விஸ்வ‌நாத‌ன் ஆன‌ந்த் முழுக்க‌ முழுக்க‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்துக்கு த‌குதியான‌வ‌ர் என்ப‌து என் க‌ருத்து என்றாலும் விசாரித்து கொடுப்ப‌தில் த‌வ‌றொன்ருமில்லையே. க‌ல்ப‌னா சாவ்லா இந்திய‌ரே அல்ல‌ ஆனால் அவ‌ர் பெய‌ரில் விருதே இருகின்ற்து. அவ‌ர் உயிருட‌ன் இருக்கும்போது த‌ன்னை இந்திய‌ர் என்று எப்பொழுதும் சொன்ன‌தில்லை. இது போன்று விசாரிப்ப‌தால் இந்திய‌ க‌வுர‌வ‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்தின் ம‌திப்பு உய‌ரும் சில் நாடுக‌ளில் சில் நூரு டால‌ர்க‌ள் கொடுத்தாலே டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைத்துவிடும். கோட‌ம்பாக்க‌ம் சினிமா கும்ப‌ளிட‌ம் போய் கேளுங்க‌ள் எந்த‌ எந்த‌ நாட்டில் எவ்வ‌ள்வு கொடுத்தால் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைக்கும் என்று அவ‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள். ஆன‌ந் நீங‌க‌ள் அதை வாங்கி விருதுக்கு பெருமை சேருங்க‌ள் வாழ்த்துக்க‌ள். எம்.ஜே.அஜ்மீர் அலி
By M.J.AJMEERALI
8/24/2010 5:33:00 PM
There are thousands of honorary doctors in India who don't deserve it. They got it through political influence. Anand should not worry for missing it. Never come back to India where your talents are not respected.
By Siva
8/24/2010 5:31:00 PM
edhu vendumendra seidha sadhi ,enninil avar indiar endra andhusthavathu koduparkala enra iyam ezundhullathu.this is why our indian goverment should be responsible for the incident.The world is looking at this issues.This ia a shame for EMERGING INDIA in the world congress.
By nirmal kumar
8/24/2010 4:21:00 PM
Tamilan enraalae konjam ilappam than vadakkae ullavarkallukku
By sar
8/24/2010 4:18:00 PM
காங்கிரஸ்காரர்கள் இப்படி தான் கேள்வி கேட்பார். இத்தாலி இருந்து அங்கு பாரில் பணி புரிந்த சோனியாவை தலையில் வைத்துகொண்டு ஆடுவார்கள் வெட்கம் கெட்டவர்கள். நமது நாட்டிலேயே பிறந்து நமது நாட்டிலேயே வளர்ந்து போபோர்ஸ் போன்ற ஊழல் எதுவும் செய்யாத நமது நாட்டுக்கு பெருமை வங்கி கொடுத்த ஆனந்த் இப்படி தான் கேட்பார்கள். மானங்கெட்ட காங்கிரஸ். இதற்க்கு வேறு எதையாவது திங்கலாம் சோனியா சொன்னபின் தான் இதற்க்கு கூட ஒத்துபர்களோ
By Observer
8/24/2010 4:17:00 PM
Really an insult to the great Chess master and a Tamilian. Why dont our Tamil Nadu Universities not giving him Doctorate? Hope Our CM will read this article and do the necessary things qith out fail....
By Krishnan
8/24/2010 3:34:00 PM
It is really ridiculous.When Anand happens to be a world Champion,what prevents the Govt.from giving the honorary Degree to Anand?What is the necessity to consider his citizenship?He is an Indian holding only Indian Pass port.He resided in Spain only for some time.The Ministry people are creating unnecessarily a storm over the tea cup.
By K.Thirumalairajan
8/24/2010 3:26:00 PM
விஸ்வநாதன் ஆனந்த் என்ன எம். எஃப். ஹூசைனா, வெளிநாடுதான் என் நாடு என்று அறிவித்த பின்னாலும் டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு?
By bliss
8/24/2010 2:45:00 PM
9 ஆம் கிளாஸ் பாஸ் பண்ணாதவனெல்லாம் பல்கலைக் கழக மாணவனைக் கொலை பண்ணியாவது பட்டம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக டாக்டர் 'கொலை'ஞர் எனப் பட்டம் போட்டுக்கொள்கிறான்! அசந்து மறந்து அந்த ஓட்டைப் பட்டத்தை விட்டுவிட்டு நேரடியாக விளித்தால் என்னையா உண்மைப் பெயர் சொல்லி அழைப்பது என சீறுகிறார்கள். இவன்கள் மத்தியில் 'பட்டமே வேண்டாம்' என சொல்லும் இவர்போன்ற பிழைக்கத் தெரியாதவர்களும் இருக்காங்க!
By MANI
8/24/2010 2:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
 
மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை: கருணாநிதி வரவேற்பு


சென்னை, ஆக.24: திமுகவுடனான உறவு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.தமிழகத்தில் திமுக அரசை காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இது திமுக-காங்கிரஸ் இடையிலான உறவை பாதிக்கும் என முதல்வர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், திமுக அரசை விமர்சிக்க மாநில காங்கிரசார் யாருக்கும் அதிகாரம் தரப்படவில்லை என்றும் தில்லியில் நேற்று தெரிவித்தார். அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.இதுகுறித்து இன்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, ஆஸாத்தின் கருத்துக்கள் கூட்டணி தர்மத்தை வலுப்படுத்துகிறது என்றும் அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துக்கள்

1.)நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்.அல்லது மேலிடப் பொறுப்பாளரையே மாற்றினாலும் மாற்றலாம். ஆனால், உண்மையிலேயே கூட்டணி நிலைக்க வேண்டும் என்றால் கோவனை இடைநீக்கம் செய்து விளக்கம் கேட்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. கார்த்தி 1/3இடம்தான் கேட்பதால் கோவனுக்கு எதிர்ப்பாட்டுதான் பாடுகிறார். எனவே, தானாக அடங்கி விடுவார். 2.) மாநிலக் காங்கிரசாருக்கு அதிகாரம் தரவில்லை என்றால் மத்தியக் காங்கிரசாருக்கு அதிகாரம் தரப்படுமோ? 3.)தான்தோன்றித்தனமாகப் பேசுபவர்களை அடக்காவிட்டால் கட்சி அடக்கமாகிவிடும் என்பதை உணர வேண்டும். எனவே, சொன்னதைச் செய்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 5:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காலமானார் தமிழறிஞர் இரா.சாரங்கபாணி


சிதம்பரம், ஆக. 23: முதுபெரும் தமிழறிஞர் முனைவர் இரா.சாரங்கபாணி (85) (படம்) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானார். இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.சிதம்பரத்தை அடுத்த தேவன்குடி கிராமத்தில் 21-3-1925 அன்று பிறந்தவர் இவர். அண்ணாருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், அந்துவன் என்ற மகனும் உள்ளனர். இரா.சாரங்கபாணி 1949-82 வரை 32 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1982-86 வரை 4 ஆண்டுகள் துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1988-94 வரை சிறப்பு நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு தமிழகஅரசின் திருவள்ளுவர் விருது 1998-ல் முதல்வர் மு.கருணாநிதியால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு உரை வேற்றுமை 3 தொகுதிகளாக வெளியிட்டவர். சங்கப் பாடல்களுக்கும், திருக்குறள் ஆய்வுக்கும் உலகளவில் பேரறிஞராக மதிக்கப்பட்டவர். நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும், என்எல்சி நிறுவனமும் இணைந்து சிறந்த எழுத்தாளர் விருது அளித்து பாராட்டியுள்ளன. சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளிக்குழுத் தலைவராகவும் இருந்து வந்தார்.
கருத்துக்கள்

பரிபாடல் திறன் நூலைப்படிக்க நேர்ந்த பொழுதுதான் அறிஞர் சாரங்கபாணியாரின் புலமையை உணர்ந்தேன். பின்னர் பரிபாடல் பாடல்ககளை இசையுடன் பாடச் செய்யவும் பரிபாடல் முத்தமிழ் விழா என இயல் இசை நாடக நாட்டுப்புறப் பாடல் நாட்டுப்புற நாட்டிய வடிவில் சிறப்பாக நடத்தவும் பரிபாடலை எளிமையாக வெளிப்படுத்தவும் இவரது நூலே உதவியது. தமிழ் நலம் நாடும் சிறந்த அறிஞருக்கு முனைவர மு.இளங்கோவன் தன் வலைப்பூவில் புகழஞ்சலி செலுத்தி வரலாற்றுக் குறிப்பும் அளித்துள்ளார்.தினமணி இணைய நேயர்கள் சார்பில் சாரங்கபாணியார் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்போம். சங்க இலக்கியச் சானறோர் சாரங்கபாணியார் வழியில் சங்கத்தமிழ வளர்ப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
திமுக ஆட்சியை மாற்ற வேண்டியது எங்கள் கடமை: தா.பாண்டியன் பேட்டி


வேலூர், ஆக. 23: திமுக ஆட்சியை மாற்றியமைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.வேலூரை அடுத்த காட்பாடியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு அனுமதித்ததால், மீண்டும் இவற்றின் விலை இன்னும் சில நாள்களில் உயர உள்ளது.2006-ம் ஆண்டு தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழக சட்டப் பேரவையில் அறிவித்து விட்டு, இதுவரை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.1.5 கோடி பேர் குடியிருப்பு மனை இல்லாமல் குடிசையில் வாழ்வதாக தமிழக அரசு  ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி மனை வழங்க 7 ஆண்டுகள் ஆகும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது குடிசையில் வசிப்பவர்களுக்கு, அவரவர் வாழும் இடங்களுக்கான பட்டாவை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும்.தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. தமிழ்நாடு அரசு கனிம வள நிறுவனம் இப்போது செயலற்று கிடக்கிறது.மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி தற்போதும் நீடிக்கிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து வருகின்றன என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழினப் படுகொலையில் காங்.உடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து ஒன்றும் கூறவில்லையே! மாற்று அணியின் தூய்மை, இனப்பற்று குறித்து ஒன்றும் சொல்ல இயலவில்லையே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காந்தி மியூசியத்தை புதுப்பிக்க 2.50 கோடி நிதி


மதுரை, ஆக. 23:   மதுரை காந்தி மியூசியத்தைப் புதுப்பிக்க முதல்கட்டமாக மத்திய அரசு  2.50 கோடி நிதி அளித்துள்ளது.  இதனையடுத்து, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தி முதல் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ராணிமங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடத்தில், 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.  இதில், காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், காந்தியடிகள் பயன்படுத்திய கண் கண்ணாடி, காலணி மற்றும் அவர் சுடப்பட்டபோது அணிந்திருந்த ஆடைகள் (ரத்தம் படிந்த நிலையில்) உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே காந்தியடிகளின் நினைவாக, முதன்முதலில் மதுரையில்தான் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகே புதுதில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் மியூசியங்கள் ஆரம்பிக்கப்பட்டன. முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டதால், மதுரை காந்தி மியூசியத்துக்கு இந்திய அளவில் ஏராளமானோர் தினமும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், மியூசியத்தை புதுப்பொலிவுடன் ஆக்க, அதன் நிர்வாகக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 2009-ல் தமிழக அரசின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் கலை, பண்பாட்டுத்துறையிடம்  5 கோடி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. மியூசியத் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமையிலான குழுவினர், கோரிக்கையை விடுத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டனர். இந்த நிலையில், மியூசியத்தை மேம்படுத்தும் பணியில் பொதுமக்கள் பங்களிப்பாக  62 லட்சம் திரட்டவும், மதுரை என்எம்ஆர் சுப்புராமன் அறக்கட்டளை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது 30 லட்சம் திரட்டப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் மியூசியத்தை புதுப்பிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முதல்கட்டமாக  2.50 கோடி அளித்துள்ளது.  இந்த நிதி மூலம், மியூசியத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கை மழை, வெயிலுக்கு பார்வையாளர் அமரும் வகையில் மாற்றி அமைக்கவும், மியூசிய வளாகத்தில் புல்வெளிகளை அமைத்து அழகூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும், மியூசிய வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையைப் புதுப்பிக்கவும், புத்தகக் கடை, நூலகத்தை நவீனமயமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காந்தி மியூசியம் வெள்ளை நிறத்தில் உள்ள நிலையில் இதை பழைய வண்ணமான பொன்நிறத்துக்கு மாற்றவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதையும் மியூசிய நிர்வாகிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இச்சீரமைப்பு பணிகள் குறித்து மியூசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் மு. மாரியப்பனிடம் கேட்டபோது, காந்தி ஜயந்தி அன்று சீரமைப்புப் பணிகளைத்  தொடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியாளர் மூலம் மியூசிய வளாகத்தை நவீனப்படுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது என்றார்.
கருத்துக்கள்

பொள்ளாச்சியார் தலைமை ஏற்கும் முன் பல்வேறு ஊழல்கள் நடைபெற்ற இடமாகக் காந்தி அருங்காட்சியகம் விளங்கியது. காந்தியின் பெயரில் உள்ள அமைப்பு என்ற போர்வை ஊழலுக்குத் துணை நின்றது. பணியாளர்கள் பலருக்கு முறையான ஊதியம் அளிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. தேசியச் சிறுவர் மன்றத்திடம் இருந்து அறிவியல் பூங்கா அமைத்ததிலும் ஊழல். எனவே, தற்போதைய பொறுப்பாளர்கள் ஊழல்களைக் களைந்தும் ஊழல் புரிந்தோருக்குத் தண்டனை வழங்கியும் காந்தி அருங்காட்சியகத்தைத் தூய்மையான அமைப்பாக மாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
விஜயகாந்திடம் கறுப்புப் பணம்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 23: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களுக்காகப் பெறும் சம்பளப் பணத்தில் பெரும் பகுதி, வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, கேள்வி-பதில் வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என்றும், அவர்களோடு கூட்டணி கிடையாது எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார். திமுக தலைவராக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதன் மூலம் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கி விடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்வரின் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.  கடந்த 2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்' திரைப்படத்துக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதினேன். அதன்மூலம் கிடைத்த ஊதியம் மற்றும் "கண்ணம்மா' படத்துக்கு கிடைத்த சம்பளம் ஆகியவற்றை சுனாமி நிவாரணத்துக்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேரில் அளித்தார்.   அதுபோலவே, "உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் வருமான வரி போக மீதியுள்ள தொகையை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கினேன்.   கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலமாகவும் இதுவரை 2 ஆயிரத்து 49 பேருக்கு  ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களுக்கு "கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை' மூலமாக  பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.   மேலும், | ஒரு கோடியை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்துக்கு வழங்கி, அதன்மூலம் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை வழியாக கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  "பெண் சிங்கம்', "இளைஞன்' போன்ற படங்களுக்கு கதை, வசனம் உள்ளிட்டவை எழுதியமைக்காகக் கிடைத்த தொகையில் வருமான வரி போக மீதியுள்ள தொகை அருந்ததியர் மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.   இதற்கெல்லாம் மேலாக, சென்னை கோபாலபுரத்தில் இப்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டை ஏழைகளுக்குப் பயன்படும் மருத்துவமனையாக மாற்றிட முடிவு செய்து அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன. கறுப்புப் பணம்: இப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார். மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற விஜயகாந்த், ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்.  அந்தப் பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக இருக்கிறது.கிரீன் பீல்டு விமான நிலையம்: ஸ்ரீபெரும்புதூர் "கிரீன் பீல்டு' விமான நிலையம் குறித்து தெளிவான விளக்கத்தை ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழகத்துக்கு வரக்கூடிய நல்ல திட்டங்களையெல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு ஒருசில கட்சிகள் எதிர்ப்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் தானே இழப்பு.  தங்களின் ஆதரவோடு இந்தத் திட்டம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை என செய்தித்தாள்களில் பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மிகு ஊதியம் பெறும் எல்லாக் கலைஞர்களுமே இரு கணக்கிலும் பணம் வாங்குகின்றனர். எனவே, கருப்புப் பணமோ வெள்ளைப்பணமோ அது உழைப்பிற்குத் த்ரப்படும் ஊதியம். ஊழல் பணமல்ல. ஆனால் பத்து விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு தானே தமிழகம் என்று சொல்லக்கூடாது. ஊழலின் மொத்த உருவமான காங்கிரசுடன் கூட்டணி வைக்க முயன்று கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லக்கூடாது. 2. பசுமைவெளி வானூர்தி நிலையம் தொடர்பான முதல்வரின் கருத்தை ஏற்று நாட்டு வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு வரவேற்பதே முறை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 2:52:00 AM
அடடே தமிழினதலைவரின் விளக்கம் பாத்து மெய்சிலிர்கிறது.மஞசள் பையுடன் கிராம்த்திலிருந்து வந்த ஏழை கருணாநிதியும் மகன்கள் ஸ்டாலின்,அழ‌கிரி,க‌னிமொழி எல்லாரும் சில ஆயிரம் சம்பளம் பெரும் மந்திரிகள்.அவ‌ர்க‌ள‌து ம‌க‌ன்க‌ள் எடுத்த் எடுப்பில் பல கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பது எப்படி? கலானிதி மாற‌னாவ‌து டிவி ஆர்ப்பித்து ப‌டிபடியாக‌ முன்னேறினார் என்ற சொல்லாம்.
By kalanithimaran
8/24/2010 2:03:00 AM
rajasji, what is your brahmin tradition? Cleaned the butt's of white people when they ruled this country. Now you cleaning the butt's of the lesbian ladies. You are talking the tradition of other people.
By ahamed
8/24/2010 1:53:00 AM
சினிமாவில் கூட அவன் கதையை மக்கள் ஏற்றுக் கொள்வதும் பொருட்படுத்துவதும் இல்லை ! இது புரியாமல் எதார்த்த வாழ்க்கையில் உண்மைக்கு புறம்பாக கதை விடுவதையே தொழிலாகக் கொண்டு தன சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தான் ! ஆக இன்று கதைவிடுவது இவனது குலத் தொழில் ! இதனை இன்று அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்து தெளிந்து விட்டார்கள் ! இனி இவனது அரசியல் வியாபாரம் தமிழ் நாட்டில் போணியாகாது !!! @ rajasji
By rajasji bengalore.
8/24/2010 1:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கி.பி. 2-ம் நூற்றாண்டிலேயே தாய்லாந்துக்கும் தமிழகத்துக்கும் வணிகத் தொடர்பு


திருச்சி, ஆக.23- தாய்லாந்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டுபிடித்த கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச முத்திரைகள் உள்ளிட்ட சில பொருட்கள் தமிழகம் மற்றும் ஆந்திரத்துடன் அக்காலத்தில் தாய்லாந்துக்கு வணிகத் தொடர்பு இருந்ததை உறுதிபடுத்தியுள்ளது.
இத்தகவலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கோயில் ஆராய்ச்சி திட்டப் பிரிவின் கண்காணிப்பாளர் டி. தயாளன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாகவும், அங்கு கிடைத்த அரச முத்திரைகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்களுக்கும் ஒற்றுமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தாய்லாந்தில் கிடைத்த ஒரு தங்கத் தகட்டில் காணப்படும் எழுத்து, தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதியில் கிடைத்த பழங்காலப் பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது என்றும் தயாளன் கூறினார்.
அந்த தங்கத் தகடு பிரகஸ்பதி சர்மா என்னும் கப்பல் மாலுமிக்குச் சொந்தமானது. இந்த பெயர் தென்னிந்தியாவில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இந்த தகடு தாய்லாந்தின் வெல்லஸ்லி மாகாணத்தில் உள்ள வடக்கு மாவட்டத்தில் புத்தர் கோயில் ஒன்றின் இடிபாடுகளில் கிடைத்தது.
கருத்துக்கள்

தமிழ்நாட்டிற்கும் தாய்லாந்திற்கும் இடையே கலை, பண்பாட்டு உறவுகள் மிகுதியாக உள்ளன. தாய்லாந்து மொழியில் தமிழ்ச் சொற்கள் உள்ளன. தாய்லாந்து நாட்டில் ஏறத்தாழ 1000 ஆண்டுகள் தமிழக மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். எனவே, தமிழகத்தின் பங்களிப்பு தாய்லாந்து நாட்டின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மிகுதியாக உள்ளது. ஆனால், தமிழர்கள் இந்தியார்களாக மாற்றப்பட்டதால், தமிழகம் தொடர்பான வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 6:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *