சனி, 4 டிசம்பர், 2010

இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்குப் பிரிட்டன் வலியுறுத்தல்

குற்றங்கள் வேறு யாராலும் நிகழ்ந்திருந்தால் அரசிடம் உசாவுதலுக்கு வலியுறுத்தலாம். ஆனால் சிங்கள அரசே வன்கொடும் பேரழிவுகளையும் இன அழிப்புகளையும் செய்திருக்ககையில் அதனிடம் பன்னாட்டு உசாவல் குறித்து வலியுறுத்தி என்ன பயன்? தன் நண்பன் இந்தியா மூலம் தன் தடைகளை உடைத்தெறியும் வல்லமை மிக்கதாக அது விளங்குகிறது. மனித நேயம் மிக்க ஆன்றோர்களும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அரசுகளும் தாமே ஒரு குழுவை நியமித்து இன அழிப்பு பற்றிய உசாவுதல்களை
மேற் கொள்ள வேண்டும். அதற்கும் தண்டிக்கும் அதிகாரம் இல்லாவிட்டாலும் அக் குழு அறியும் உண்மைகள் தண்டிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பிடம் அதனை அளித்துத் தண்டனை வாங்கித் தர இயலும். ஆனால், எல்லா  வல்லரசுகளும் ஏதோ ஒரு வகையில்  அதற்கு உதவியதால்  அவை முட்டுக்கட்டை போடும். அத்தகைய அரசுகளையும் தூக்கி எறியும் வல்லமை அந்தந்த நாட்டு மக்களுக்கு வேண்டும். எனினும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

First Published : 03 Dec 2010 03:22:28 PM IST

Last Updated : 03 Dec 2010 05:05:21 PM IST

கொழும்பு, டிச.3- இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கெனவே நேரில் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்சவும் அவரது சகோதரர்களும் போர்க்குற்றவாளிகள் என்று "விக்கிலீக்ஸ்" இணையதளம் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு பிரிட்டன் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள்

What Pranab Mugargee says about war crime inquary? Is India support the human disater or support the inquary?
By Singam
12/3/2010 9:23:00 PM
தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ் நாட்டை ஏமாற்றும் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையில் தமிழனுக்கு பாதுகாப்பு, மரியாதை இந்திய அரசிடமிருந்து கிடைப்பது நடக்காது. கருணாநிதி குடும்பத்தின் வீழ்ச்சி தமிழனின் எழுச்சி. அதே நேரம், ஜெயலலிதா ஆட்சியும் தமிழன் வாழ்வுக்கு உதவாது. தேசிய கட்சிகள் தமிழனை எழுவதை விரும்பாது. தேவை தமிழனுக்காக ஒரு புதிய எழுச்சி, புதிய கட்சி, சொல்கிறது இந்த பட்சி.
By பட்சி
12/3/2010 9:09:00 PM
மனித நேயமற்ற காட்டுமிராண்டி இராஜபக் க்ஷேவிற்கு ஆதரவு கொடுத்துவரும் முசோலினியின் வாரிசுகள் காந்தி தேசத்தை ஆட்சி செய்வதா ? தமிழினமே சிந்திப்பாயாக.
By திராவிடன்
12/3/2010 8:57:00 PM
lankasri com or மனிதன்.com parunkal
By vava
12/3/2010 5:27:00 PM
போர்க்குற்றவாளிகளுக்கு உதவி செய்தவர்கள்?
By sbala
12/3/2010 4:33:00 PM
உலகில் எங்கு சென்றாலும் அங்கு தமிழன் இருப்பான் அரக்கன் ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டுவான்..கேடுகெட்ட இந்தியாவில்தான் இவனுக்கு பட்டு கம்பளம் ஏனென்றால் கழுகுகளுக்கு பிணம்தான் பிடிக்கும்.. வேறு எங்கு சென்றாலும் துடப்பம்தான் .. விதைத்ததை யாராக இருந்தாலும் அறுவடை செய்தாக வேண்டும்.. .
By tamilwin
12/3/2010 4:21:00 PM
RAJABHASHEY AND HIS FAMILY MEMBERS ARE UTTER CRIMINALS. THEY SHOULD BE PUNISHED AS PER THE LAW.
By PERUNCHITRANAR, PERAIYUR
12/3/2010 4:11:00 PM
இலங்கையின் நெருன்கியநண்பன் இந்தியா வையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
By Ran
12/3/2010 3:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 3 டிசம்பர், 2010

எல்லைச் சிக்கல் இருதரப்பு உறவைப் பாதிக்காது: சீனா

ஏனெனில் இந்தியா எப்பொழுதும் தன் நாட்டு நிலம் பறிபோவதைப்பற்றிக் கவலைப்படாது. அதை மீட்கவும் முயலாது. அடுத்த நாட்டின் பாதுகாப்பு குறித்துத்தான் கவலைப்பட்டுப் பாதுகாப்பு வழங்கும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லைப் பிரச்னை இருதரப்பு உறவை பாதிக்காது: சீனா


பெய்ஜிங், டிச. 2: இந்தியாவுடன் நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக இரு தரப்பு உறவுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கடந்த 7 ஆண்டுகளில் 13 சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது.இதில் இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனும் சீன தரப்பில் அந்நாட்டு பிரதிநிதி தாய் பிங்குவோவும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நியாயமான, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு விரைவில் ஏற்படும்' என கூறப்பட்டது.

பிகார் தேர்தல் தோல்வியால் துவண்டுவிடவில்லை:இராகுல் காந்தி

பீகாரில் காங். தோல்வி முழுக்க முழுக்க இராகுலின் அணுகுமுறையாலும் மக்களையும் காங்.ஒரு கழிசடைக்கட்சி  என்பதையும் புரிந்து கொள்ளாத மனமுதிர்ச்சியற்ற தன்மையாலும் மூத்தவர்களை மதிக்காத போக்காலும்  ஏற்பட்டது என்பது உண்மைதான். என்றாலும் வெற்றி மேடையில் ஏறிய எல்லாருமே தோல்விப் படிகளைக் கடந்தவர்கள்தாம். எனவே, செய்தியாளரிடம் கீழே விழுந்தும்  மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சமாளிப்பது போல் அல்லாமல் அவர் தன் செயல்பாடுகளையும் தேசிய இனங்களுக்கு எதிராகச் செயல்படும் ஊழலின் ஒட்டு மொத்த உருவம் காங்.கின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தோல்வியை எதிர் கொள்ளும் துணிவு  பெற வேண்டும். வெற்றியும் தோல்வியும் முயற்சியுடையோருக்கு அழகே. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பிகார் தேர்தல் தோல்வியால் துவண்டுவிடவில்லை: ராகுல் காந்தி

புது தில்லி, டிச. 2: பிகார் தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட படுதோல்வியால் துவண்டுவிடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வியாழக்கிழமை பதிலளித்த அவர் மிகச் சுருக்கமாக இந்த ஒரு வரியை மட்டுமே கூறினார். பிகாரில் 243 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸôல் வெற்றி பெற முடிந்தது. இது அக்கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் ஏற்பட்ட பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் பிகார் தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நேரடியாக ராகுல் காந்தியே எடுத்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன சக்தி போன்ற கட்சிகள் காங்கிரஸýடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள முன்வந்த போதும் அவற்றை உதாசீனப்படுத்திவிட்டு தனித்து போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தார் ராகுல்.மேலும் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார் அவர். ராகுல் காந்தி பிரசாரம் செய்த தொகுதி ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் குறித்து கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. கட்சித் தலைவர் சோனியா காந்தி பிகார் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில், "பிகாரில் கட்சியை மறு கட்டமைப்புக்கு உள்படுத்த வேண்டும் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன' என்றார்.  எனினும் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலத்துக்கு மேலாகியும் ராகுல் எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு முதல் முறையாக வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராசபட்ச மீது போர்க்குற்றம்: விக்கிலீக்சு அம்பலம்

உலகறிந்த செய்தியைச் சொல்வது கமுக்கப்பொருளை அம்பலப்படுத்துவது ஆகாது. போர்க்குற்றவாளிகளுக்குத் துணை நின்ற பிற நாட்டுத் தலைவர்கள், பிற நாட்டு அதிகாரிகள், நடைபெற்ற ஊழல், பேரங்கள் முதலானவற்றையும் விக்கிலீக்சு வெளியிட வேண்டும். வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ராஜபட்ச மீது போர்க்குற்றம்: விக்கிலீக்ஸ் அம்பலம்



வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள்

கருணாநிதி செய்த பாவத்திற்கு எந்த காலத்திலும் மன்னிப்பு கிடையாது .
By செந்தில்
12/2/2010 11:09:00 PM
இலங்கையின் ஜனாதிபதி போர்குற்றவாளி என்று சொல்வது யார்? அவர் மனிதகுலத்தின் துயர் துடைக்க வந்த புத்தரின் வாரிசு தமிழ்மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய் ஆடுமாடுகளாய் கிடந்து துன்பத்தில் உழலுகிறார்களே என்ற பச்சாதாபத்தில் அவர்களை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்த உத்தமர் அவரை குற்றவாளி என்றால் பூமி தாங்காது இப்படித்தான் இந்திய அரசாங்கம் நினைக்கிறது இந்த எண்ணம் மாறுகின்றவரை யார் என்ன சொல்லியும் எதுவும் ஆகாது இதுதான் தமிழனின் தலைவிதி !
By யோகி ஸ்ரீ ராமானந்த குரு
12/2/2010 10:54:00 PM
இவனுக்கும் முசோலினி போல வளமான வாழ்வுகாத்துள்ளது... இலண்டனில் உள்ள எதிர்ப்பு கூட இங்கு இல்லையே... எந்த மொழியில் இவனை திட்ட மிக கேவலமான இழிசொற்கள் உள்ளது யாரவது சொல்லுங்களேன்... என்ன செய்வது வேறு எதுவும் செய்யமுடியவிள்ளையே....
By arun
12/2/2010 9:50:00 PM
இந்த செய்தியை தினமணியில் பார்த்துவிட்டு "மக்கள் தொலைகாட்சி" பார்த்தேன். "அங்காடி தெரு" என்ற நிகழ்ச்சி. அவர்களுக்கு தேவை திமுக உறவு. தேவையற்றது தொப்புள் கொடி உறவு. நன்கு கவனியுங்கள் இனி அவர்கள் இலங்கை அரசை மட்டுமே குறை கூறுவார்கள். தமிழக மற்றும் மத்திய உறவு தேர்தல் வரை இனிக்கும். அம்மையார் கட்சி வென்றால் "நான் ரசிகன்" என்று கூவிக்கொண்டே அங்கே ஓடி விடுவார்கள்.
By நல்லவன்
12/2/2010 9:16:00 PM
ஓட்டுக்கு பணம், அண்ணா சமாதியில் நான்கு மணி நேர உண்ணாவிரதம் இது போதும் தமிழக மக்களுக்கு தமிழின படுகொலையை மறைக்க என்று நிருபித்தவர் நம் தலைவர். விக்கி லீக்ஸ் என்ன உலக மக்களையே திசை திருப்புவார் நம் தலைவர்.
By தமிழன்
12/2/2010 9:15:00 PM
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டையில் இருந்தாலும் சரியே!(அல் குரான் -4;78)
By ilyas
12/2/2010 8:30:00 PM
தமிழக முதல்வருக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! உங்கள் தமிழினப் பற்று குறித்து கவிதையிலும் இலக்கியத்திலும் பார்த்து மகிழ்ந்தவன். ஆனால் இலங்கை தமிழன் கொல்லப்பட்ட பொது நீங்கள் நடந்து கொண்ட முறைகள் வெறும் கேலிக்கூத்து என்பதை நெஞ்சுக்கு நீதி எழுதிய உங்களுக்கே நன்றாகத் தெரியும். இன்று விக்கி லீக்ஸ் ராஜபக்ச ஒரு கொலைகாரன் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டது. இதற்கு துணையாக நின்ற உங்கள் டில்லித் தோழிகளும் தோழர்களும் குற்றவாளிகள் தான். அவர்களுடைய தயவில் வாழும் நீங்களும் குற்றவாளிகள் தான். நீங்கள் பார்க்காத பதவி, புகழ் இல்லை. இனிமேலாவது மனச்சாட்சியைத் தொட்டு நேர்மையாக இலங்கைத் தமிழனுக்கு எதையாவது செய்ய முடியுமா? பாவம் அவர்களை வைத்து ஏமாற்றி வாழ்வது ஒரு வாழ்க்கையா? மிகுதி நாட்களையாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் பயன்படுத்துவீர்களா? வேண்டாம் இந்த ஊழல் வாழ்க்கை. சோனியாவை திருப்திப்படுத்த பல ஆயிரம் தமிழர்களை காவு கொடுக்க உடந்தையாக இருந்தீர்கள். அதை நாமும் மறக்கின்றோம். மாறுவீர்களா?
By VIJI
12/2/2010 8:12:00 PM
எங்கள் தொப்புள்கொடி உறவே எங்களை கொடியவர்களிடம் இருந்து காப்பாத்து
By sasikumaran
12/2/2010 7:47:00 PM
இப்படி புலம்புவதால் என்ன பயன், ஒரு உயிருக்கு 10௦ உயிர் எடுக்க ஏன் இந்த ஈழத் தமிழர்க்கு தோன்ற வில்லை?
By thamizhan
12/2/2010 7:29:00 PM
RAJAPAKSE IS A WAE CRIMINAL MAN AMERICA IMMEDIATELY TAKE SERIOUS ACTION AGAINST RAJAPAKSE AND IMPOSE ECNOMIC BAN AND TAKE FAIR ENQUIERY IN WARCRIMES TO WORLD COURT KARUNANITHI MANMOHAN SONIA CHIDAMBARAM ALSO INVOLVE AND INDIRECT SUPPORT TO RAJAPAKSE TAMILNADU PEOPLE GIVE REPLY SHORTLY, NITHYANADHAM MUMBAI
By nithyanandham
12/2/2010 7:14:00 PM
வெட்கம் கெட்ட தமிழர்கள் நாம் , நமக்கு ஒரு தட்டுகெட்ட தமிழ் தலைவர்கள் , இந்த அரசியல் நாய்கள் காசு காசு என்று தமிழனையே கூறு போட்டு விற்கும் கூட்டம் , தரம் கெட்ட முதல்வர் அவரின் வாரிசுகள் ... தமிழனை பிச்சை காரனாகவே மாற்றி , வசியம் செய்து நாட்டையே சூறை ஆடி கொண்டிருக்கும் இவர்கள் காட்டில் aடை மழை பெய்கின்றது .. எப்போது நமக்கு சொரணை வரும் என்று தெரியவில்லை. தமிழனை தமிழன் தான் கெடுக்கின்றான் ..
By veera
12/2/2010 7:11:00 PM
THE SINGALAVA CRIMINALS SHOULD BE PUNISHED FOR THE TAMIL GENOCIDE. TAMIL ELLAM SHOULD BE LIBERATED FROM SINGALAVA DOGS. UNION INDIAN GOVT SHOULD BE ALSO ASHAMED FOR WELCOMING THESE MAN EATERS. LONG LIVE TAMIL ELLAM. LONG LIVE TAMIL.
By Paris EJILAN
12/2/2010 7:08:00 PM
இது அனைவருக்கும் தெரியும். தமிழக முதல்வருக்கும் தெரியும். புதியது அல்ல. இந்தியாவின் பெயர் வெளிவராமல் இருக்க இந்திய அரசும் ஊடகங்களும், முனைகின்றன. தமிழக் முதல்வர் ஜால்ரா அடிக்கின்றார். எந்த இலங்கைத் தமிழனும் கருணாநிதியின் பாவத்தை மன்னிக்கமாட்டான். கேவலமான வாழ்க்கை. காங்கிரஸ் - மு.க குட்டனி பற்றி செய்தி வரும். வெட்கம் இல்லாதவர்களுக்கு மானம் கெட்ட பிறவிகளுக்கு அரசியல் ஒரு கேடா?
By kannan
12/2/2010 6:58:00 PM
இனி யார் இனத்தைச் சொன்னாலும் என்ன பயன்? கருணா,இராசபட்ச,கருணாநிதி,சோனியா கூட்டணியால் மூன்று இலச்சத்திற்கும் மேற்பட்ட ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உலகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது? மனித உரிமை பேசும் அறிஞர்கள் முடிவு கூறுவார்களா?
By VENDHAN
12/2/2010 6:50:00 PM
Rajapakse should resign on moral grounds for killing thousands of innocent Tamil people.
By ssk
12/2/2010 6:38:00 PM
இனி யார் என்னத்தைச் சொன்னால்தான் என்ன?கருணா,கருணாநிதி,சோனியா,இராசபட்ச கும்பல் திட்டம் போட்டு தமிழர்களைக் கொன்றுபோட்டுவிட்டதே! மனித நேயம்,மனித உரிமை என்பதெல்லாம் தான் செய்த தவறுகளை மறைப்பதற்குத்தான் போலும்!
By vendhan
12/2/2010 6:28:00 PM
ஐயோ! ராஜபக்ச அப்படியான மனிதன் அல்ல. அவர் குற்றவாளி என்றால் கலைஞ்சர் , சோனியா, முகர்ஜி, அவங்களுமா? ஐயோ. 40 000 தமிழர்கள் கொல்லப்பாட்டால் என்ன? அதுக்காக சோனியாஜி, மகிந்த அரசைக் கண்டிப்பதா? என்ன அநியாயமா இருக்கு? யாருமே கேக்கமாட்டிங்க்களா?
By kannan
12/2/2010 6:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *