சனி, 21 மே, 2011

thamizh kadamaigal - perumaiyai meetpo'm : Dr.S.Ilakkuvanar

தமிழ்க்கடமைகள் 5

பெருமையை மீட்போம்
அமுதம் ஊறும் அன்பு கொண்டு
        அரசு செய்த நாட்டிலே
அடிமை என்று பிறர் நகைக்க
        முடிவணங்கி நிற்பதோ
இமயம் தொட்டு குமரிம ட்டும்
        இசைபரந்த மக்கள் நாம்
இனியும் அந்தப் பெருமை கொள்ள
        ஏற்ற யாவும் செய்குவோம்.
-செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்
(1942)

புதன், 18 மே, 2011

தமிழ்க்கடமைகள் 4 *விடிவுக்கு முடிவெடுப்போம்*

ஆலயத்தில் வழிபாடு தமிழில் இல்லை

          அங்காடிப் பெயர்ப்பலகை தமிழில் இல்லை

ஞாலமதில் தமிழனுக்கு நாடு இல்லை

          நாடின்றிப் போனதனால் நாதியில்லை

சீலமிகு தமிழ் மழலைப் பெயர்களெல்லாம்

          சீர்மேவும் செந்தமிழில் இல்லை இல்லை

ஓலமிடல் நன்றல்ல; ஒன்று சேர்ப்போம்

          ஒருமுறைதான் பிறப்புண்டு; நின்று பார்ப்போம்

திரைஇசையில் தூயதமிழ்ப் பாடல் இல்லை

          திரைப்படங்கள் பெயர்கூடத் தமிழில் இல்லை

கரைபுரளும் காவிரிக்கு உறுதி இல்லை

          கன்னடத்துத் தேசியத்தில் தமிழ்நாடில்லை

திரைகடல் சூழ் ஈழத்தில் அமைதி இல்லை

          தீர்த்துவைக்கப் பாரதமும் விரும்பவில்லை

விரைந்தொன்று சேருங்கள் தமிழர்களே

          விடிவுக்கு முடிவெடுப்போம் வெற்றி காண்போம்

அன்னைத் தமிழ்படிக்க ஆணையிட்டால்

          அடுக்குமா என்கின்றார் தமிழ்ப்பகைவர்

கன்னலின் சாறுதனை ஒதுக்கிவிட்டுக்

          கள்ளினைப் பருகிடுதல் நன்றோ சொல்வீர்

தன்னையே தந்தேனும் தமிழகத்தில்

          தாய்மொழியில் கல்விபெறத் துணையிருப்போம்

என்னவிலை தந்திடவும் தயங்கமாட்டோம்

          என்னதான் விளைவெனினும் துணிந்து நிற்போம்

- த.மாசிலாமணி: *நின்று பார்ப்போம்*: நந்தன் இதழ் சனவரி 16-31“. 2000

--

பெருந்துயர நாளும் நினைவேந்தல் நாளும்

 பெருந்துயர நாளும் நினைவேந்தல் நாளும்
 
*இலங்கை ஒரே  நாடு என்றால் தன் நாட்டுத் தமிழ் மக்களையே  கொன்றொழித்த /- தமிழ் ஈழம் தனி நாடு எனில், அண்டை நாட்டுத் தமிழர்களை அழித்தொழித்த மிகப் பெரும் அவலத் துயரத் திங்கள் மேத் திங்கள்! துயரம தந்தவர்கள் துரத்தப்படுவது எப்போது?
**பல்லாயிரக்கணக்கானவர்களின் உடைகளைக் கிழித்தெறிந்து கொடூரமாகச் சிதைத்துக்
கொன்ற துயரத் திங்கள் மேத்திங்கள்!*
*சிதைத்தவர்கள் அழுகிச் சாவது எப்போது?*

*பெண்களைக் கொடூரமாகக் கொன்ற பின்பும் சிங்களர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து
கொண்டு கயமைக்கு இரையாக்கிய துயரத் திங்கள் மேத்திங்கள்.கயவர்கள் எமனுக்கு
இரையாவது எப்போது?*

*உலகத்தில் எங்கே துன்பம்  நேர்ந்தாலும் குரல்   கொடுத்து உதவும் தமிழ்
நாட்டினர் எல்லையில் ‌ சொந்தங்கள் கொடுமைக்கு ஆளானாலும் ஊமை ஆனதால் 200,000
தமிழர்கள் படுகொலையான பெரும் துயர நாள்  இன்று (18/5).
இறந்தவரை வணங்கி, இனி இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி இடச் செய்வோம்!

தமிழ் ஈழம் மலரட்டும்!*

போர்நிலத்திலும் வாழ்நிலத்திலும் களப்பலியானவர்களுக்கான
நினைவேந்தலுடனும்
துயரத்துடனும்
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

--

pesum padam, dinamalar

http://img.dinamalar.com/data/uploads/WR_625201.jpeg

இலங்கைத் தமிழர் விவகாரம்: செயலலிதாவுடன் இணைந்து செயல்பட விருப்பம்- இலங்கை வெளியுறவு அமைச்சர்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தமிழர் விவகாரம்: ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட விருப்பம்- இலங்கை வெளியுறவு அமைச்சர்

First Published : 18 May 2011 03:21:22 AM IST


தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ். நாள்: செவ்வாய்க்கிழமை.
புது தில்லி, மே 17: இலங்கைத் தமிழர் விஷயத்தில் தமிழகத்தின் புதிய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்தார்.  மூன்று நாள் பயணமாகத் தில்லி வந்திருக்கும் அவர், பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோரைச் சந்தித்தார்.  பின்னர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பெரிஸ் பேசினார். அவரது பேட்டி:  இந்தியத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கையில் போருக்குப் பிந்தைய அரசியல் நிலைமை, முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள் குடியமர்த்தும் பணிகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. மீள் குடியேற்றம் என்பது மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றும் பணியல்ல. மக்களுக்கு வாழ்வாதாரம், வசிக்கத் தேவையான கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கவேண்டும்.  இலங்கை போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை சர்வதேச நெறிகளுக்கு எதிரானது. மோசடியாகத் தயாரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், இந்தியாவின் விருப்பப்படி இலங்கை வட கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் அரசியல் உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.  ஆட்சிப் பகிர்வுக்கு வகை செய்யும் விதத்தில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களது வசிப்பிடங்களில் குடியமர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மறுவாழ்வுக்கான பணிகள் இந்தியாவின் உதவியுடன் நடைபெறுகின்றன.  யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புப் பயிற்சி, கலாசார மையங்களை நிறுவுதல், ரயில் வழித் தடங்களை உருவாக்குதல், திரிகோணமலை சம்பூர் என்ற இடத்தில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சர்வதேச கடல் எல்லையில் பிடிபடும் இரு நாட்டு மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்துதல், தூத்துக்குடி - கொழும்பு, ராமேஸ்வரம் - தலைமன்னார் ஆகிய வழிகளில் கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்குவது உள்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரையும், நன் மதிப்பையும் சீர் குலைக்கும் வகையில் செயல்படும் சில சக்திகளின் செல்வாக்குக்கு ஐக்கிய நாடுகள் சபை அடிபணியக்கூடாது. இந்த உண்மை இலங்கையில் கள ஆய்வில் ஈடுபட்டு நேரில் உண்மைகளை கண்டறியும்போது தெளிவாகும்.  ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்த விதம், வெளிப்படையாக செயல்பட்ட இலங்கை அரசின் நடவடிக்கைக்கு நேர் எதிரானது. சர்வதேச நீதிக்குப் புறம்பானது. எனவேதான் நிபுணர் குழு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.  இலங்கை அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. திட்டமிட்டபடி அனைத்து மக்களையும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்வதுடன், அவர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்கவும் இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  ஐ.நா. நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையில், இலங்கை அரசைக் குற்றவாளிகளாகவும், அதே சமயம், புலிகளை ஒழுக்க சீலர்களைப் போலவும் போர் வீர்களைப் போலவும் ஐ.நா. குழு சித்திரித்துள்ளது  இலங்கை தமிழர் நலன் விவகாரத்தில், தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுபேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். அவரது அரசின் உதவிகளைப் பெற்று செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார் பெரிஸ்.  தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து தினமணி நிருபர் கேட்டதற்கு, சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது என இலங்கை கடல் படையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.  கடல் ரோந்துக்காக கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படும் தானியங்கி துப்பாக்கிகளில் உள்ள குண்டுகளின் எண்ணிக்கை, அவற்றைப் பயன்படுத்தினால், அது குறித்த விளக்க அறிக்கை தர வேண்டும் என்பன போன்ற கெடுபிடிகளை இலங்கை கடல்படைக்கு விதித்துள்ளோம்.  தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு வன்முறை மூலமாக தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இதன் அடிப்படையில் இரண்டு நாட்டு மீனவர்களின் கூட்டு குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என்றார் ஜி.எல் பெரிஸ். 

Seeman demands for the resolution against ilangai: இலங்கை மீது பொருளாதாரத் தடையை வலியுறுத்திப் பேரவையில் முதல் தீர்மானம்: சீமான் கோரிக்கை

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை மீது பொருளாதாரத் தடையை வலியுறுத்தி 
பேரவையில் முதல் தீர்மானம்: சீமான் கோரிக்கை

First Published : 18 May 2011 03:32:57 AM IST

Last Updated : 18 May 2011 05:04:53 AM IST

வேலூர், மே 17: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல் தீர்மானத்தை ஜெயலலிதா நிறைவேற்றவேண்டும் என்றார் சீமான்.  நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வேலூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:  2009 மே 18-ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் துயரத்தை லண்டன், அமெரிக்கா, இலங்கை உள்பட உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தேசிய துக்க நாளாக நினைவு கூறுகின்றனர்.  நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் புதன்கிழமை மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்.  மலர்ந்திருக்கும் புதிய அரசு அதிமுக அரசு அல்ல. அது தமிழர் அரசு. ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் வாடும் நளினி உள்ளிட்டவர்களை புதிய அரசு விடுதலை செய்யவேண்டும்.  யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்று தமிழக மக்கள் தெளிவாக முடிவுஎடுத்துள்ளனர்.  இலங்கை இனப்படுகொலை செய்த நாடு, அந்த நாட்டின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும். இதன்மூலம் தமிழ் இனத்திற்கு மறுவாழ்வு கிடைக்க அழுத்தம் கிடைத்ததுபோல் அமையும் என்று முதல்வர் ஜெயலலிதா இரு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.  எனவே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவும் இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மலர்ந்திருக்கும் தமிழர் அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.  புதுக்கோட்டையில் கொலைசெய்யப்பட்ட தோழர் முத்துக்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து புதிய அரசு கைதுசெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

fertilizer corruption :செயலலிதாவால் வெளிவந்த உர ஊழல் விவகாரம்


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



ஜெயலலிதாவால் வெளிவந்த உர ஊழல் விவகாரம்

First Published : 18 May 2011 01:00:45 AM IST


கரூர், மே 17: தமிழக அரசுக்கு சுமார் ரூ. 1.34 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய உர ஊழல் விவகாரம் வெளியுலகுக்கு தெரியவர தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் காரணமாக இருந்துள்ளார்.  கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் (அக்ரோ சர்வீஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி 31.01.2007 அன்று ஓய்வு பெற்றவரான கரூரைச் சேர்ந்த அ. அர்ச்சுனன், தனது ஓய்வூதியப் பணப் பலன்களைத் தருமாறு கோரினாராம். ஆனால், கூட்டுறவு மையத்தில் போதுமான பணம் இல்லை என்று அதன் தனி அலுவலர் பி. செல்லமுத்து கூறினாராம்.  இதையடுத்து, தனக்கு ஓய்வூதியப் பலன்களை பெற்றுத் தருமாறு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு செல்லமுத்து மனு அளித்தார்.  அந்த மனுக்களில், "அரசிடமிருந்து மானிய விலையில் பெறும் உரங்களை, தனியார், அரசு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் தனக்குச் சேர வேண்டிய ஓய்வூதியப் பலன்களை விரைவாக வழங்க வேண்டும்' என்று உர ஊழல் விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தாராம்.  இதையடுத்து, மானிய விலையில் பெறும் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து வேளாண்மைத் துறை அலுவலர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.  இதனிடையே, கடந்தாண்டு திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்- பொதுக்கூட்டத்தில் அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா, கரூரில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான அளவுக்கு உர ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். அதன்பிறகே, உர ஊழல் விவகாரம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.  அதைத்தொடர்ந்து, தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் தனி அலுவலர் பி. செல்லமுத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், உர ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த, கூட்டுறவு சார் பதிவாளர் (தேர்வு நிலை) ஜி. பால்ராஜ் வில்லியம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

செவ்வாய், 17 மே, 2011

we lost because of our allies - kovan: தோல்விக்குக் காரணம் "சகவாசம்': இளங்கோவன் குமுறல்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தோல்விக்கு காரணம் "சகவாசம்': இளங்கோவன் குமுறல்

மதுரை: ""சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முக்கிய காரணம் சகவாச தோஷம்,'' என, காங்., முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குமுறினார்.

மதுரையில் அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி: முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர். நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.

தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்., வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்., தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்.,க்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார். சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு "சகவாச தோஷம்' தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.

திங்கள், 16 மே, 2011

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்குப் பணிய மாட்டோம்: பசில் இராசபட்ச

எங்கள் கூட்டாளி இந்தியா இருக்கும் வரை நாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும் என்கிறார் பக்சே. போர்க்குற்றம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லாமல் இனப்படுகொலை என்றே குறிப்பிட வேண்டும். படுகொலை புரிந்த, துணை  புரிந்த அனைத்து நாட்டுத்தலைவர்களுக்கும் தண்டனை கொடுத்தால்தான்  இனி உலகில் எங்கும் இனப்படுகொலை நிகழாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம்: பசில் ராஜபட்ச

First Published : 16 May 2011 03:18:36 PM IST


கொழும்பு, மே 16- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபட்ச கூறியுள்ளார்.பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது."இலங்கையின் உறுதி நிலையை சீர்குலைக்க மேற்கத்திய நாடுகள் சதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே, நார்வே நீதிமன்றத்தில் அதிபர் ராஜபட்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எத்தகைய நெருக்கடிக்கும் அதிபர் ராஜபட்ச பணிய மாட்டார்." என்று அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபட்ச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்

கொலைகாரன் ராஜபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனைக்கு உட்படத்த வேண்டும் .
By suresh
5/16/2011 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

20 Kilo rice to poor : ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர்செயலலிதா

பாராட்டுகள். இருப்பினும் இவற்றிற்குத்தேவையில்லா வளமான சூழலை உருவாக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி: கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா

First Published : 16 May 2011 07:51:26 PM IST


சென்னை, மே 16- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் உட்பட 7 கோப்புகளில் அவர் இன்று கையெழுத்திட்டார்.ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி, அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு, பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் இலவசத் தங்கம், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 2000 ஆக உயர்வு, முதியோர் உதவித்தொகை ரூ. 1000 ஆக உயர்வு ஆகிய 7 உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்தார்.

Inscription found at thiruvannaamalai: திருவண்ணாமலையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு
 
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த 4 மாதங்களாக தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளை கண்டெடுத்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் அருகே தரையில் கல்வெட்டு ஒன்று புதைந்திருந்ததை, தோண்டி எடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்தனர்.அந்த கல்வெட்டு, முதலாம் ராஜேந்திர சோழனால், கி.பி., 1012-1044ல் உருவாக்கப்பட்டது என்றும், ராஜேந்திர சோழன் வெற்றிகள் அதில் குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்தது. ராஜேந்திர சோழன், ஈழ அரசனை வென்று, அவனது மணி மகுடத்தையும், ஈழ மன்னனின் தேவியரின் மணி மகுடத்தையும் பறித்து வந்ததுடன், முதல் பராந்தக சோழன், பாண்டியர் மீது படையெடுத்து வெற்றி கண்ட போது, சுந்தரபாண்டியனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் மணிமகுடத்தை மீட்டு வந்த செய்தியையும், சிங்கள அரசனையும், இரட்டபாடி மன்னனையும், கோசல நாட்øயும், மலை நாடு(கேரளம்) மற்றும் கலிங்க நாட்டையும் வெற்றி பெற்ற செய்திகளும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது, என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

reasons for the defeats of Pa.Ma.K.a and Vi.cgi.Ka. : பா.ம.க., வி. சி. க. தோற்றது ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு நிலையில்  இரு்நது திசை மாறி, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்யக் காரணமாக  இருந்த கட்சியுடன் உறவு  கொண்டதாலேயே  மக்கள நம்பிக்கையை  இழந்து  இவர்கள் தோல்வியுற்றனர். இருப்பினும் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டால் மீண்டும் வெற்றி வாகை சூடுவர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


பா.ம.க., வி. சி. க. தோற்றது ஏன்?

First Published : 16 May 2011 01:57:20 AM IST


சிதம்பரம், மே 15: சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து தொண்டர்களின் கருத்துகளுக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் படுதோல்வியை தழுவியதாக தெரியவந்துள்ளது.
 ÷ இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் பிரசாரக் கூட்டங்களில் ஒரே மேடையில் பேசினர். அப்போது "நாம் இதுநாள் வரை சண்டை போட்டது போதும். இது சமூக நல்லிணக்க கூட்டணி. ஆதலால் அனைவரும் பகைமையை மறந்து ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி மிகப்பெரிய கூட்ட ணி. இக் கூட்டணி வெற்றிபெறவில்லை என்றால் பாமகவுக்கும், வி.சி.க.வுக்கும் எதிர்காலம் போய்விடும்' என்றும் முழங்கினர். ஆனால் இத் தேர்தலில் தலைவர்களின் கூட்டணியை அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
 தேர்தலுக்கு முன்பு விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், ஆளும் அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய காரணங்களால் திமுகவுக்கு மக்கள் எதிராக உள்ளனர் என அறிந்த விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்பினர்.
 ÷பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே அதிமுகவுடனான கூட்டணியையே விரும்பினர். ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் படுதோல்வியை தழுவியது என்பதை அக்கட்சி தலைவர்களுக்கு இத்தேர்தலில் தொண்டர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
 ÷திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி ஏற்படுத்தியதற்கு துரை.ரவிக்குமார்தான் காரணம் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், தனது தலைவர் திருமாவளவனையும் திமுகவிடம் அடமானம் வைத்து விட்டார் ரவிக்குமார் என அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.
 40 தொகுதிகள்: வட மாவட்டங்களில் பா.ம.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். இதனாலேயே இக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் 30, 10 என 40 தொகுதிகள் இந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டன.
 இதில், பா.ம.க. மட்டும் ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
 கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ம.க. 18 இடங்களில் வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களை பெற்றிருந்தது .


T.N.Ministers with portfolios: தமிழக அமைச்சர்கள் விவரம்

அனைவருக்கும் வாழ்த்துகள். செந்தமிழன் முதல் எழுத்துக்கூடத் தமிழில் இல்லை. அனைவரின் பெயரகளும் தமிழ் முதலெழுத்திலேயே குறிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை கிடைக்கும் வண்ணம் செயல்பட வேண்டும். மத்திய அரசின் போக்கை மாற்றித்தமிழ் ஈழம் மலரப் பாடுபட வேண்டும். உலகத்தமிழர்கள் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மை பெறஉண்மையாயும் நேர்மையாயும் உழைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழக அமைச்சர்கள் விவரம்

First Published : 15 May 2011 08:22:35 PM IST

Last Updated : 15 May 2011 08:23:51 PM IST

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்
கருத்துகள்

முன்னால இருந்தவரு ஆற்காடு வீராசாமி ..இப்ப நத்தம் விசுவநாதன் பெயருக்கு பின்னால ஊரு இருந்தாலே ஷாக் அடிச்சா மாதிரி இருக்குப்பா..விசுவநாதன் கமான் கரண்ட் வேணும்னு பாட மட்டும் வட்சிறாதிக.. குட் லக் விசு!
By A. MURUGESAN
5/15/2011 10:44:00 PM
ONE THING TO KINDLY BE NOTED.. THIS IS SUBJECT TO CHANGE FORTNIGHTLY. அது சரி ராயபுரம் ஜெயக்குமார் என்ன ஆனார்..? சபாநாயகரா?
By A. MURUGESAN
5/15/2011 10:37:00 PM
புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.. நல்ல விஷயம்
By தனபால்
5/15/2011 10:30:00 PM
ஜெயலலிதா மேடம் அவர்களுக்கும் அவரது தலைமையில் பதவியேற்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் காலம் தங்களுடைய காலத்தில் எல்லா வளர்ச்சியும் பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாக விளங்கவேண்டும். அதன் மூலம் கருணாதியை மறந்து அடுத்த முறையும் தாங்களே முதல்வர் ஆக வரவேண்டும் என்று மக்கள் நினைக்க வேண்டும். மொத்தத்தில் தங்களின் ஆட்சி தங்களுடைய இரண்டாவது டெர்ம் போல் இருக்கவேண்டும். தங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை தர நாங்கள் வேண்டுகிறோம்.
By lakshmi
5/15/2011 10:21:00 PM
புதிய அமைச்சர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இலங்கை வாழ் தமிழர் பக்கமும் தமிழக அரசு கருணை காட்ட வேண்டும். -ஈழத்தமிழன்
By -ஈழத்தமிழன்
5/15/2011 10:13:00 PM
Before sworn-in as Ministers, let them declare what is their assets - movable/immovable properties including in binami names. AIADMK is no less or inferior to DMK or Congress. In DMK government, each and every minister has one college/school/industries but poor the then telecom minister healing cool in Tihar. Though Ministers of DMK lost or defeated but properties amassed will come for generation. More or less, his political career is totally collapsed. Time will speak. Hence, let AIADMK should give answer what made them to abandon new Secretariat which was constructed at public money and not by the then CM from his own money. May be wrong or right, it is the duty of successor should act on new Secretariat.
By V Gopalan
5/15/2011 10:10:00 PM
எப்படி ஒரு இஸ்லாமியரும் இல்லாது போனார்கள். பனிரண்டு விழுக்காடு முஸ்லிம்கள் வாழும் நாடில்.
By thiru
5/15/2011 9:57:00 PM
ஜெயலலிதாவிற்கும் அதன் அமைச்சரவைக்கும் நல்வாழ்த்துக்கள். முதல் கையெழுத்து தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றவேண்டும். இது நல்ல சகுனமாக இருக்கும்.
By மு.நாட்ராயன்
5/15/2011 9:41:00 PM
பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயகுமார்,பழ Karuppiah Ivargal kettikarargal
By Mahalingam
5/15/2011 9:37:00 PM
நாளைக்கும் இந்த லிஸ்டே இருக்குமா ?
By கீரை விமரிசகன்
5/15/2011 9:37:00 PM
புதுமுக்கங்கள் நிறைந்த பட்டியல் வாழ்த்துக்கள்,
By chellapandi
5/15/2011 9:23:00 PM
congratulation
By selva
5/15/2011 9:19:00 PM
ஆல் தி பெஸ்ட்
By RAJ
5/15/2011 8:53:00 PM
அமைச்சர் பட்டியல் அதிகமாக உள்ளது. பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். நன்றாக செயல்பட வேண்டும். மக்களை மதிக்கவில்லை என்றால் என்ன ஆகும் எனபதை 19 தி.மு.க அமைச்சர்களின் தோல்வி உணர்த்தும். பணத்தைக் கொடுத்து எதையும் இனி சாதிக்க முடியாது. மக்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்பட வாழ்த்துக்கள்.
By தமிழன்
5/15/2011 8:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 15 மே, 2011

அமைச்சர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும்: இளைஞர் காங்கிரசு மாநிலத் தலைவர் யுவராசா

திரு இராசன் கருத்தே சரி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


அமைச்சர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா

First Published : 15 May 2011 06:03:11 AM IST


சென்னை, மே 14: புதிதாக பதவியேற்கும் அமைச்சர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம். யுவராஜா கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள்

இது தேவை இல்லாதது என்றே நினைக்கிறேன். இவர்கள் எம் எல் ஏ போட்டிக்குக்கு மனுதாக்கல் செய்த பொழுது, சொத்து கணக்கை தெரிவித்துள்ளனர். இது தமிழ் நாடு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உள்ளது. இதையே இவர்களின் சொத்து கணக்காக எடுத்துக் கொள்ளலாம்.
By K.Rajan
5/15/2011 6:09:00 AM

Sonia invites jaya for tea party: தேநீர் விருந்து: ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட அழைப்பு. எங்கே  இவர் தலைமையில் காங்.எதிர்ப்பு அணி மத்தியில் வலுப்பெறுமோ என்ற அச்சமும் காரணம். ஆனால், அணி மாறினால்  தமிழக நலனுக்கும் தமிழர் நலனுக்கும்  அ.தி..மு.க. கட்சிக்கும் நல்லதல்ல. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தேநீர் விருந்து: ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு

First Published : 15 May 2011 10:51:46 AM IST


புதுதில்லி, மே.15: தமிழக முதல்வராக நாளை பதவியேற்க உள்ள அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்காக தில்லி வருமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.இது திமுகவிடம் இருந்து விலகிச் செல்வதற்கான காங்கிரஸின் புதிய வியூகமாகக் கருதப்படுகிறது.வெற்றிபெற்ற தலைவர்களை சோனியா இதுபோன்று தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுப்பதில்லை என்பதால் இந்த அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து முடிவு: விசயகாந்த்

அழைத்தால் என்ற ஐயப்பாடு ஏன் வருகின்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்றாகிவிடக்கூடாது.  அதேபோல் தி.மு.க. ஆட்சியை ஒட்டு மொத்தமாகக் குறை கூறாமலும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தாங்களே   ' உத்தம புத்திரர்கள்  'என்று எண்ணாமலும் கடந்த ஆட்சியின்  நிறைகளை உணர்ந்து பெருக்கிக் கொள்ளவும் குறைகளை அறிந்து வராமல் தடுத்துக் கொள்ளவும் வேண்டும். தமிழ் நாட்டில் தலைமையிடம் பெறவும் உலகத்தமிழர்கள் சிக்கல் எதுவுமின்றி உரிமையுடன்வாழவும் பாடுபட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால்
பங்கேற்பது குறித்து முடிவு: விஜயகாந்த்

First Published : 15 May 2011 03:26:09 AM IST


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசுகிறார் விஜயகாந்த்.
சென்னை, மே 14: புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்தால், பங்கேற்பது குறித்து முடிவு செய்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.  தேமுதிக எம்.எல்.ஏ.-க்களின் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னர் அவர் அளித்த பேட்டி:  சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதிக் கட்சிக்கும் பண பலத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பணத்தைப் பார்த்து மாறவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் தான் தேமுதிக-வின் வெற்றி. எனவே, மக்களின் குறைகளைப் போக்கவும், ஊழலை ஒழிக்கவும், கல்வி, சாலை வசதி, வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும் சட்டப் பேரவையில் தேமுதிக குரல் கொடுக்கும். பதவி ஏற்கப்போகும் தேமுதிக எம்.எல்.ஏ.-க்கள் இதை நன்கு உணர்ந்து பணியாற்றி, முன்மாதிரி சட்டப் பேரவை உறுப்பினர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்றார்.  திமுக தோல்விக்கு காரணம்? கருணாநிதி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித்துப் போட்டியிடாமல், கூட்டணியின் கீழ் தேர்தலை சந்தித்தோம். இதற்காக எப்படிப்பட்ட தியாகத்தையும் நான் சந்திப்பேன். திமுகவின் படுதோல்விக்கு அவர்களேதான் காரணம்.  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால், தேர்தலுக்குப் பின் அவர் முதலில், அவருடைய கட்சியினருடன் ஆலோசனை நடத்த வேண்டும். அதன் பிறகுதான் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். அதே நேரம் அவரைச் சந்திக்கிறோம் என்றால், மக்களுக்கான திட்டங்களுடன் வெளிவரவேண்டும்.  பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் என்னை எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறுகின்றன. அதை நானும் நம்பிக்கொண்டு இருக்கிறேன். ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவுக்கு, அவர்கள் எங்களை அழைக்கிறார்களா என்று முதலில் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த விழாவுக்கு செல்வதா என்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்றார் விஜயகாந்த். வாழ்க வசை பாடல்கள்தேர்தல் பிரசாரத்தின் போது தனக்கு எதிராக பேச்சுகள் குறித்து பேசுகையில் "வாழ்க வசை பாடல்கள்' என்று கூறினார் விஜயகாந்த்.சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் வடிவேலு கடுமையாகத் தாக்கிப் பேசியது  குறித்த, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு விஜயகாந்த் அளித்த பதில்:எதிர்க்கட்சினர் எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டதுதான் எங்களுக்கு எழுச்சியைக் கொடுத்துள்ளது. எனவே, சட்டப்பேரவையில் அண்ணா சொன்னதுபோல், "வாழ்க வசை பாடல்கள்' என்று விஜயகாந்த் கூறினார்.முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரையே அடித்தார் என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.


தோல்விக்கு விளக்கம் கேட்டுக் காங்கிரசு மேலிடம் கேள்வி

௧. தங்கபாலுவைக் காரணம் கூறினால் பயனில்லை. ௨. மிகுதியான உட்குழுக்கள் உள்ளமை காங்.கின் பண்பாடு.எனவே,இவற்றைக் காரணம் கூறியும் பயனில்லை. ௩. தமிழர்களால் மிகுதியும் பயனடைந்து கொண்டே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்களத்திற்குத்துணைபோவதும் மொழியாயினும்  இனமாயினும் தமிழுக்கு எதிரான  நிலை எடுப்பதும்தான் உண்மைக்காரணங்கள் என்பதை அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும். இதனைக் காங். தலைமை அறிந்திருந்தாலும் தனக்கு மிகுதியான செல்வாக்கு இருப்பதாகவும்  தங்களால்தான்  தமிழ்நாட்டில் பிற கட்சிகள் ஆட்சியில் இருப்பதாகவும் தவறான தலைக்கனம் இருப்பதால் உண்மையைக் கருத்தி்ல் கொள்வதில்லை. எனவே, காங். தன்னைத்திருத்திக் கொள்ள தமிழின மக்களின் பெருந்துயர வாரத்தில் நல்ல  வாய்ப்பு அமைந்துள்ளது. தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு சிங்களத் தலைவர்களுக்குத் தண்டனை வழங்கவும்  தமிழ் ஈழம் ஏற்கவும் அணியமாக இருந்தால் வளரலாம்; இல்லையேல் மேலும் தளர்ச்சியும் அழிவும்தான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
தோல்விக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்

First Published : 15 May 2011 03:39:48 AM IST


புது தில்லி, மே 14 : தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர்களிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.  நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது தலைமைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியின் உயர்நிலைக் குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஐந்து மாநில சட்டப் பேரவையின் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சி காங்கிரஸ் என்ற நிலைமை தற்போது தலைகீழாக மாறி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸின் தற்போதைய நிலை பிகார் மாநிலத்தைப் போல் ஆகிவிட்டது. இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசலே. இது போன்ற பூசலுக்கு இடம் கொடுக்க எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது என்ற முடிவை காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.  குறிப்பாகத் தமிழகத்தைச் சார்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், தேசிய அளவில் பிரபலமானவருமான ஒருவரின் மகன், கட்சியின் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, கட்சியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  அடுத்த ஐந்து ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்க முடியாத நிலைமை கட்சித் தலைமைக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.  தேர்தலுக்காக கட்சியால் வழங்கப்பட்ட நிதி சரிவர வேட்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமைக்கு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் யார் காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரும் 22 ஆம் தேதி தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதற்குப் பிறகு கட்சியிலும், மத்திய அமைச்சரவையிலும் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய பொறுப்பாளர், மாநிலத் தலைவர் ஆகியோரை நியமிக்க இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.