சனி, 18 ஜூன், 2011

www.karkanirka.org இலக்கிய இணைய தளம்

www.Karka Nirka.org

நா.மோகன்ராஜ்
பதிவு செய்த நாள் : June 18, 2011

முழுக்க முழுக்க “தமிழிலக்கியம்” தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் இணைய இதழ்களில் முதன்மையானதாக கருதப்படுவதில் கற்க நிற்க டாட் ஓஆர்ஜி குறிப்பிடத்தக்கதாகும். இதில் சங்க இலக்கியப் பாடல்களை அகம், புறம் எனும் பிரிவுகளில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பாடல்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் அளித்து பொருள் புரியாத சொற்களுக்கு அகராதி மூலம் சொல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து கட்டுரைகள் (Essays)  பகுதியில் தமிழின் பெருமையை விளக்கும், ‘கமில் செவலபிள்’ போன்றோரின் ஆங்கிலக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. பழமொழிகள் (proverbs)  எனும் தலைப்பில், பயன்பாட்டில் உள்ள பழமொழிகளுக்கு ஆங்கில விளக்கத்தோடு பொருள் கூறியுள்ளனர். அடுத்து சொற்களுக்கு பொருள்கூறும் அகராதி பகுதியும், நீதிக் கருத்துக்களை போதிக்கும் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற அறநூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை எடுத்து பதிவு செய்துள்ளனர். அடுத்து ஆன்மிகம் பகுதியில், சித்தர் பாடல்கள், அருணகிரிநாதர், நம்மாழ்வார் போன்றோரின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. ‘பிற’ பகுதியில் தமிழ் சினிமா பாடல்களில் பயன்படுத்தியுள்ள இலக்கிய வரிகளை குறிப்பிட்டுள்ளனர். இறுதியில் குறிஞ்சிப் பாட்டில் உள்ள 99 மலர்களும், ஆங்கிலப் பெயர் விளக்கத்தோடு அதன் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இணையத்தின் இடது பக்கத்தில் உ.வே. சாமிநாத அய்யர் போன்ற சில தமிழறிஞர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
வாசகர் கருத்துகள் (1)
Ilakkuvnar thiruvalluvan says:
அறிமுகத்திற்குப் பாராட்டுகள். ஆனால் வலை வரி பெரிய எழுத்துகளில் இல்லாமலும் இடைவெளி இல்லாமலும்
karkanirka.org
என இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


Thamizh Eezha meeting at the parliament building of Britain : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் கூட்டம்


வெல்க உங்கள் பணி! இனப்படுகொலைகாரக் கும்பலும்  உடந்தையாளர்களும் தண்டிக்கப்படட்டும்! தமிழ்ஈழத்தனியரசு  விரைவில் அமையட்டும்! வாழ்த்துகளுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் கூட்டம்

First Published : 18 Jun 2011 01:06:08 PM IST


கொழும்பு, ஜூன் 18- பிரிட்டன் நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.இலங்கையின் போர்க்குற்றம் குறி்த்த ஐநா நிபுணர் குழு அறிக்கை, சேனல் 4 தொலைக்காட்சியின் விடியோ, தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இக்கூட்டத்தில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர் என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் கூறுகையில், "நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நாங்கள் பிரகடனப்படுத்தியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இவ்வாறு எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தமிழர்களின் அரசுக்கு கிடைத்த மறைமுக அங்கீகாரமாகவே கருதுகிறோம்." என்றார்

dinamalar photo news


Dinamani editorial about gangai : தலையங்கம்: கங்கை எங்கே போகிறாள்?

தலையங்கம்: கங்கை எங்கே போகிறாள்?

First Published : 18 Jun 2011 12:59:35 AM IST

Last Updated : 18 Jun 2011 04:45:36 AM IST

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும், ஊழல் செய்யும் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று ஜன் லோக்பால் சட்டம் கோரும் அண்ணா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்களும் பேசப்பட்ட அளவுக்கு நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பேசப்படவில்லை. தனது போராட்டத்துக்காக அவர் உயிரைவிட்ட நிலையிலும்கூட அவை வெறும் செய்தியாக மாறியதே தவிர, இந்திய மனங்களில் சிலிர்ப்பை, தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முக்திபெற சாதுக்கள் எல்லோரும் கங்கையில் உயிரைவிட வேண்டும் என்று விரும்பும்போது, அவர் மட்டும் கங்கைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தித் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.கங்கையில், கும்ப் என்ற இடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப்பணிகள் தடை செய்யப்பட வேண்டும். கங்கையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. நிகழாண்டில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கிய அவரது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏப்ரல் 27-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹிமாலயன் மருத்துவஅறநிலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மே 2-ம் தேதி கோமா நிலைக்குச் சென்றவர் ஜூன் 13-ம் தேதி உயிர் துறந்தார்.இதே காலகட்டத்தில் இப்போது பாஜகவில் இணைந்துள்ள உமாபாரதியும் கங்கையின் பொருட்டு உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டம், கங்கையின் குறுக்கே கட்டப்படும் அணையைக் கட்டாமல் நிறுத்த வேண்டும் என்பதுதான். இந்த அணை கட்டப்படுமேயானால், அணையினால் தேங்கும் நீர்பரப்பில் புராதனமான கோயில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது என்பதைக் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அவருடன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தியதும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.ஆனால், நிகமானந்தா நடத்திய போராட்டத்துக்கு இந்தக் கவனம் அல்லது அக்கறை காட்டப்படவில்லை. காரணம், அவர் அரசியல்வாதியல்ல. அவருக்குப் பின்துணை என்று எந்த அரசியல் இயக்கமும் இருக்கவில்லை.கங்கை நதி தூய்மையற்றது என்றும், அதில் எரிக்கப்பட்ட, எரிக்கப்படாத நிலையில் பிணங்கள் வீசப்படுவதாலும்தான் நதியின் தூய்மை கெட்டுப்போவதாகவும் பொதுவாகச் சொல்லப்பட்டாலும்கூட, அது உண்மையல்ல. காலம்காலமாக கங்கையில் பிணங்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்த அழுகும் பிணங்களை ஆற்றில் இருந்த நுண்ணியிர்கள் தின்று செரித்தன. மீன்களும் தின்றன. அதனால் கங்கை, புனித கங்கையாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.இன்று கங்கையில் இந்த நுண்ணுயிர்கள் இல்லை. ரசாயனக் கழிவுகளால் கங்கையின் பிரத்யேக நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டன. கங்கையில் மற்ற நதிகளைக் காட்டிலும் மேலதிகமான ஆக்ஸிஜன் இப்போதும் இருந்தாலும்கூட, ரசாயன மாசுகளால் அதன் அளவு மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் கங்கை இப்போது வெறும் சாக்கடையாக மாறிவிட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதில் முன்பு இருந்ததுபோல நுண்ணுயிர்களும், மீன்களும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான இடைப்பட்ட பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக்கழிவுகள் கங்கையில் கலக்கின்றன. ஒரு நாளைக்கு 260 மில்லியன் லிட்டர் ரசாயனக் கழிவுகள் கங்கையில் கலக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.வழியோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களின் சாக்கடை சுமார் 1.3 பில்லியன் லிட்டர் கங்கையில் கலக்கிறது. இத்தனை மாசுகளையும் மீறித்தான் இப்போதைய கங்கை இன்னமும் முற்றிலும், தனது புனிதத்தை இழக்காமல் இருக்கிறது.பக்தர்கள் கங்கை நீரை ஒரு பாத்திரத்தில் நிறைத்து வைத்து, இந்தியா முழுவதும் கொண்டுசெல்கின்றனர். இந்த நீர் ஏன் பல ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கிறது என்று ஆய்வு செய்தவர்கள், இந்த நதியின் மிகையான ஆக்ஸிஜன், கனிமம், நுண்ணுயிர்கள்தான் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டனர். ஆனால், அது பழங்கதை. இப்போது இந்த நீர் சில வாரங்களிலேயே தன்மை கெட்டுப்போய் விடுகிறது.நிகமானந்தாவின் மரணம் என்பது ஏதோ ஒரு துறவியின், வேலையற்ற சோம்பேறி சாமியாரின் மரணமல்ல. ஒரு தியாகியின் மரணம். நாளைய தலைமுறைக்கு, நா வறண்டு விடாமல் நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில், தனது உயிரை மாய்த்து, அரசுக்கு உணர்த்த முயன்ற ஒரு மகாத்மாவின் மரணம்.அண்ணா ஹசாரேவுக்காகவும், பாபா ராம்தேவுக்காகவும் குரல் கொடுக்க முன்வந்த இந்தியா ஓர் உண்மையான தேசபக்தனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூட மறந்துவிட்டதே! இந்தியாவிலுள்ள நிலத்தடி நீரெல்லாம் கங்கைதான் என்பதை நினைவில் கொள்வோமேயானால், கங்கை வற்றினால் நமது நா வறண்டுவிடும் என்கிற உண்மையைப் புரிந்துகொள்வோமேயானால், நிகமானந்தாவின் உண்ணாநோன்பின் உன்னதமும், அவரது மரணத்தின் தியாகமும் எத்தகையது என்பது நமக்குப் புரியும்.அண்மையில் இந்திய அரசு கங்கையைத் தூய்மை செய்ய சில ஆயிரம் கோடி ரூபாயில் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காக பல கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்போது இந்தத் திட்டமும் அதேபோன்று ஒதுக்கீடைக் கபளீகரம் செய்வதற்கான ஒரு திட்டமாக மாறிவிடக்கூடாது, அதுதான் நிகமானந்தாவுக்கு நாம் செய்யக்கூடிய நினைவஞ்சலி!

Revised pattern of I.A.S. Exam.: இ.ஆ.ப. தேர்வு முறையில் மாற்றம்

<ஊஹண்ற்ட் இஹய் ஙர்ஸ்ங் ஙர்ன்ய்ற்ஹண்ய்ள்’’ >
 என ஆங்கிலஎழுத்துருக்கள் எப்போதும் தமிழ் வரி வடிவில் வருகின்றனவே.  இவற்றைச் சரி பார்க்கலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


ஐ.ஏ.எஸ்.தேர்வு முறையில் மாற்றம்

First Published : 18 Jun 2011 01:59:47 AM IST


புதிய பாடத் திட்டத்தின்படி முதல்தாளில் (Paper-1) பொது அறிவு மற்றும் சமூக பிரச்சினைகள் (Sociology) அரசியல் மற்றும் ஆட்சிமுறை (Politics & Administration)  ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் தாளில் மாணவர்களின் (Aptitude) இயல்திறன் சோதிக்கப்படுகிறது. இத்தாளில் அடிப்படை எண்கணிதம், பகுத்தறிவு திறன், அடிப்படை ஆங்கில அறிவு, புத்திகூர்மை ஆகியவை சோதிக்கப்படுகிறது.IAS தேர்வை பொறுத்தவரை நிறைய படித்தல் என்பதைவிட நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அளவாக ஆழப்படித்தலே வெற்றிக்கான சிறந்த யுக்தி ஆகும். முதன்மை தேர்வை பொறுத்தவரை படிப்பதோடு மற்றும் நின்றுவிடாமல் நிறைய பயிற்சியும் மிக்க அவசியம். முதன்மைத் தேர்வில் (Negative Marks) முறை இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். முதன்மைத் தேர்வு முடிந்த உடனேயே Mains தேர்விற்கு தயாராக வேண்டும் June-September நான்கு மாதங்கள். நான்கு மாதங்களே எஞ்சி இருப்பதால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவசியம் ஆகிறது. பொதுவாக Prelims தேர்விற்கு தயாராகும்போதே விருப்பப் பாடங்களையும் தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் Prelims தேர்விற்கு பிறகு விருப்பப் பாடத்தை நன்கு படித்தல் என்பது மிகவும் கடினமாகும். Prelims தேர்வின் போதே விருப்பப் பாடங்களைப் படித்து வைத்துக்கொண்டால் Prelims தேர்விற்கு நன்கு Revision  செய்ய முடியும்.தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் பெரிதும் விரும்பி படிக்கும் விருப்பப்பாடங்கள் Political Science, Sociology, Public Administration, History, தமிழ் இலக்கியம் ஆகியவை ஆகும். புதிய பாடத் திட்டத்தின்படியும் மற்றும் பொது அறிவு கட்டுரை ஆகியவற்றுக்கு மிகவும் தொடர்புடைய பாடங்களாக Society, Political Science, Administration விளங்குகின்றன. எனவே இதுபோன்ற விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பதே சமயோசித புத்தியாகும். Mains தேர்வை பொறுத்தவரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான விடையை கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத பழகிக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் Mains தேர்வை பொறுத்தவரையில் கேட்கப்பட்ட கேள்விக்குத் தேவையான அளவான பதிலை தராமல் கேள்விக்கு தொடர்புள்ள அனைத்து விஷயங்களையும் பக்கம்பக்கமாக எழுதி நேரத்தையும் மதிப்பெண்களையும் வீணடித்துவிடுகின்றனர். ஊதாரணமாக இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிக்க ஐந்து வழிமுறைகளை 200 வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்குக? என்ற கேள்விக்கு நக்சலிசம் தோன்றியவிதம் மற்றும் நக்சலிச வரலாறு பற்றி இரண்டு பக்கங்கள் எழுதுவது என்பது தேவையற்ற செயலாகும். கேள்வியின்படி சிறந்த ஐந்து வழிமுறைகளை மட்டும் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் சுமார் 1 ணீ பக்கங்களுக்குள் விளக்கினால் போதுமானதாகும். நமக்குத் தெரிந்தவற்றை எழுதுவதைவிட கேள்விக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் எழுதுவதே போதுமானதாகும். இவ்விதம் நன்கு பயிற்சி எடுத்து சிறந்த முறையில் விடைகளை அளித்தால் Mains தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்பது எளிதான ஒன்றாகும்.எனவே IAS தேர்வை பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் சமுதாய உந்துதலின் பேரில் படிக்காமல் மாணவர்களின் மனம், சிந்தனை, செயல் ஆகிய மூன்றையும் ஒருநிலைப்படுத்தி தேர்வின் கடினத் தன்மையை முற்றிலும் உள்வாங்கி மிக்க கவனத்துடன் படித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் Final Year Degree Course படிக்கும்போதே IAS தேர்விற்கான பயிற்சியை ‘’Faith Can Move Mountains’’ போன்ற இந்திய அளவில் சிறந்து விளங்கும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று சுமார் ஒன்றரை வருடங்கள் ஒரு மனதாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ‘’ஊஹண்ற்ட் இஹய் ஙர்ஸ்ங் ஙர்ன்ய்ற்ஹண்ய்ள்’’ நம்பிக்கை இருந்தால் மலையும் நமக்கு கடுகாகும். உங்களை நம்புங்கள் உலகை வெல்லுங்கள்.ராஜா , இயக்குநர், Cracking IAS Study Circle

பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்:இராமதாசு

சரியான கருத்து. அதே நேரம் கல்வி வணிகர்களுக்கு இழப்பீடாக எதையும் தர வேண்டியதில்லை. இதை அறப்பணியாகச் செய்வதாகத்தானே கூறுகின்றனர். மேலும் ஊரார் பணத்தில்தானே நடத்துகின்றனர். அதேபோல், அனைத்துத் தரப்பாருக்கும் அனைத்து நிலையிலும் கட்டணமில்லாக் கல்வி வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்: ராமதாஸ்

First Published : 18 Jun 2011 04:25:05 AM IST


தமிழக மாணவர் சங்கம் சார்பில் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் பாமக நி
சென்னை, ஜூன் 17: கல்வி கட்டண கொள்ளையைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் அதிகப்படியான கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனைத் தொடங்கி வைத்து ராமதாஸ் பேசியது: காமராஜர் ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், வேறு பல உயரிய பொறுப்புகளுக்கும் வந்துள்ளனர்.காமராஜரின் ஆட்சிக்குப் பிறகுதான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உருவாகின. ஏழைக்கு, பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது. கல்விக் கட்டண கொள்ளைக்குத் துணைபோனவர்கள் ஆட்சியாளர்கள் தான். தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர்கூட சொல்ல முடியாத நிலை இருக்கிறது.இப்போது நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் அரசே கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பாமக நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.

இவா தாலின் இ.ஆ.ப. கழகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

First Published : 18 Jun 2011 02:12:36 AM IST


சென்னை மேற்கு தாம்பரத்தில் இயங்கிவரும் இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் IAS / IPS / TNPSC தேர்வு பயிற்சியில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்து தேர்ச்சி பெற்று பயனடைந்து வருகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமி சிறப்பான பயிற்சியை அளித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் Study Materials அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் Test Series உள்ளது. தேர்வு முடிந்த பிறகு ஒவ்வொரு கேள்வித்தாளும் மாணவர்களோடு விவாதிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வில் செய்த தவறுகள் திருத்தப்படுகிறது. General Studies, Aptitude, Logical reasoning, English Language, Interpersonal Skills, Public Administration, Geography, Political Science, Sociology, Tamil Literature, History மற்றும் பல பாடங்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் செய்தித்தாள்களில் வரும் முக்கிய நிகழ்வுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு மாணவர்களின் Current Affairs update செய்யப்படுகிறது.Library facility, result oriented training, experienced faculty, study materials ஆகியவை இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் 2012ம் ஆண்டுக்கான ஒரு வருட பயிற்சி சேர்க்கை தற்போது தாம்பரத்தில் அமைந்திருக்கின்ற நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 9176966281 / 044-32427161, 044-43159963.

வெள்ளி, 17 ஜூன், 2011

Lunar Eclipse : Photos by dinamani


Kural and kalaignar : wrong statement

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைத் தான் எழுதிய சொல் என்கிறார் கலைஞர். தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அடி அல்லவா இது? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!


வியாழன், 16 ஜூன், 2011

Veera velu nachiyar - drama: ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

''வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் பத்தொன்பது ஒற்றுமைகள்” – ஈழத்தை நினைவுபடுத்தும் ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

யூகி
பதிவு செய்த நாள் : June 15, 2011

சென்னை மையத்தில் உள்ள நாரத கானசபா.   தமிழ் உணர்வாளர்களும், பழ.நெடுமாறன்,  தமிழருவி மணியன்,  வீர.சந்தானம்,  சத்யராஜ் போன்ற பலரும் திரண்ட நிலையில் நிறைந்திருந்தது அரங்கம்.
வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் வைகோ. அவருடைய தயாரிப்பிலும், ஊக்கத்திலும் உருவாகியிருந்தது ”வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம்.
கி.பி.1730 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போட்டியிட்ட வேலுநாச்சியார் வரலாற்றின் ஒரு பகுதியைப் பின்னணியாகக் கொண்ட நாடகம். துவங்கியதில் இருந்து பல தகவல்களை விவரித்தபடி ஒரு ”வாய்ஸ் ஓவர்”
”ஆறுமொழிகளை அறிந்த நாச்சியார் தளராத ஊக்கத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தவர். தமிழ் மண்ணை மீட்டவர். சிவகங்கை பூமிக்குச் செல்வோம்” என்று குரல் ஓய்ந்ததும் துவங்குகிறது நாடகம்.
பிரிட்டிஷாருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த சிவகங்கைச் சீமையில் மன்னரான முத்துவடுக நாதரை தந்திரமாக கோவிலில் வைத்துக் கொல்கிறார்கள் ஆங்கிலேயர். அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார் மனைவியான வேலுநாச்சியார். அவருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள் மருது சகோதரர்கள்.
ஆங்கிலேயப்படை விரட்டுகிறது. கண்காணித்துத் துரத்துகிறது. வேலுநாச்சியார் தப்பித்து மக்கள் ஒத்துழைப்புடன் திண்டுக்கல் சென்று திப்புசுல்தானின் உதவியுடன் சிவகங்கையை மறுபடியும் மீட்கிறார். மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் நாடகமாக்கியிருந்தார் இயக்குநரான ஸ்ரீராம் சர்மா. எண்பதுக்கும் மேற்பட்ட நடனக் குழுவினரின் நடனங்கள்,  ரகுநாதனின் இசை, மாறும் காட்சிகள் என்றிருந்தாலும் – காட்சி மாறும்போது இடையில் ஏற்படும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
அத்துடன் வேலுநாச்சியாரை பிரிட்டிஷ்படை தேடும்போது அவருக்கு உதவியதற்காக பலியான உடையாள் என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பற்றிய காட்சியில் – அவரை ஆங்கிலேயர் வந்து விசாரிப்பதும்,  அவள் சொல்ல மறுத்ததும் கொல்லப்படுகிற காட்சியை ஏன் இணைக்காமல் விட்டுவிட்டார்கள்?
வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை சர்மாவின் நடிப்பும், விரைவான நடனமும் நாடகத்திற்கு வலுவான அம்சம். இன்னும் ராம்ஜி, பிரியதர்ஷிணி என்று பலருடைய பங்களிப்பு நாடகத்தைக் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கிறது. இஸ்லாமியப் பாடலையும் தகுந்த விதத்தில் பரத நாட்டிய மரபை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்.
எதை இழந்தாலும் கால இடைவெளியில் தகுந்த துணை, மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதைக் காட்சிமொழியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனையோ புராணங்களை முன்வைத்து நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் – தமிழகத்தின் வரலாற்றை மட்டுமல்ல ஈழம் சார்ந்த நம்பிக்கையையும் புத்துணர்வோடு சொல்கிறது நாடகம். நாடகத்தின் இறுதியில் வரும் ”ஈழ மின்னல் சூழ மின்னுதே” என்கிற வரிகள் அந்த நம்பிக்கையைத் தான் புலப்படுத்துகின்றன.
எந்த நாட்டிய மரபாக இருந்தாலும் அதை அரசியல் உள்ளடக்கத்திற்கும் பொருத்தமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம்.
”வேலுநாச்சியார் ஜான்சிராணிக்கு முன்பே வாழ்ந்து போராடியிருந்தாலும் அவரை சரித்திரப் புத்தகங்களில் காண முடியாதிருப்பது வருத்தமான விஷயம்.
அப்படி இதுவரை காட்டப்படாத சரித்திரத்தை வைகோ மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடகம் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்க
வேண்டும். பெண்மைக்குப் பெருமை தரக்கூடிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் நடத்த வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கும் போது நாட்டுக்காக நாம் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இந்த மண்ணில் பிறந்த நடன அசைவுகளை நாம் கண்டோம். நல்ல விஷயங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும்”  என்றார் பத்மா சுப்ரமணியம்.
நிறைவாகப் பேசினார் நாடகத்தைத் தயாரித்த வைகோ. ”இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கலை. இனியொரு வீர சரித்திரத்திற்குத் தயாராக வேண்டும். இளைய தலைமுறைக்கு உணர்த்துவதற்காக இந்த நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஜான்சிராணி வாழ்ந்த 77 ஆண்டுகளுக்கு முன்னால் வாளேந்திப் போராடியவர் வேலுநாச்சியார். இந்த வரலாற்றைச் சொல்லும் நாடகம் என்பதால் இதைத் தயாரிப்பதற்கான பொருட்செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றேன்.
“வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் இருக்கின்றன. இத்தகைய வீரம் பொருந்திய நாடகத்தை உயிரோட்டத்துடன் நடத்தியிருக்கிறார்கள். வீரமும், மானமும் தமிழர் மரபோடு வந்தவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். ஈழம் அமைய வேண்டும், அமையும் என்பதை இதன் மூலம் உணர்த்தியிருக்கிறோம்.” என்று பேசிய வைகோ இந்த நாடக உருவாக்கத்திற்காகச் செலவழித்த காலம் – நான்கு மாதங்கள்.

Safeguard the journalists: பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு தேவை

உண்மைதான். ஆனால், ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தும் செய்திகள் அரசின் குற்றங்களையும் குற்ற உடந்தைகளையும்  கடமைகளில் இருந்து நழுவும் செயல்பாடின்மைகளையும் உணர்த்துவதாக உள்ளமையால் அரசு அவர்களுக்கு எதிராகவே நடந்து கொள்ளும். நல்லாட்சி நடைபெறும் பொழுதுதான் அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு தேவை

First Published : 16 Jun 2011 01:44:04 AM IST


விடுதலை பெற்று நாட்டின் அரசாங்கத்தை அமைக்கத் தேவைப்படும் அரசமைப்புச் சட்டம், அந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய விதிமுறைகளைத் தெளிவுபட வரையறுப்பதுடன், அவற்றை நேர்மையாக, திறமையாக, நிறைவேற்றுவதற்கான முறையில் அந்த நாட்டின் சட்ட - நீதிமன்ற - நிர்வாக அமைப்புகள் செயல்பட வேண்டும்.அடிப்படை உரிமைகள் என்று கூறும்பொழுது, முதலாவதாக, கருத்து உரிமை, மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு தனது கருத்துகளை வெளியிடும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. மேலும் மற்றவர்களுடைய கருத்துகளை - அறிக்கைகளைச் சேகரித்து எழுத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தருவதற்கான பணியைப் பத்திரிகையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில், அடிப்படை உரிமைகள் பற்றிய தொகுப்புத் தரப்பட்டுள்ளது. அதில் 19-வது பிரிவின் கீழ், "பேச்சு - கருத்து வெளியிடும், உரிமை' என்பதற்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமைகள் பற்றிய பட்டியலில், பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய குறிப்பு வெளிப்படையாகத் தரப்படவில்லை.இதுபற்றிய கேள்வி இந்திய அரசியல் நிர்ணய சபையில் 1948 டிசம்பர் 2-ம் நாள் அன்று எழுந்தபொழுது, டாக்டர் அம்பேத்கர் பதிலளித்தார்: ""ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள "பேச்சு - கருத்து வெளியிடும், உரிமை' செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும், நிச்சயமாக இருக்கிறது. அதனால், தனிப்பட்ட பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை''.இந்த வகையில், மக்களாட்சி முறையில் உள்ள பல்வேறு நாடுகளுடன், இந்தியாவிலும், செய்தி வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது.2011, ஜூன் 11-ம் நாள் அன்று மும்பை நகரின் மத்திய வணிக வளாகம் ஒன்றில், ஜோதிர்மய தேவ் என்னும் பிரபல செய்தியாளர் பட்டப்பகலில் நான்கு தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார். "மிட்-டே' என்ற நாளிதழின் தலைமைச் செய்தியாளராகக் கடந்த 20 ஆண்டுகளாகத் திறம்படப் பணியாற்றிய இவர், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பல்வேறு பாதக வன்முறைச் செயல்களை நடத்திவரும் தீவிரவாதிகள் கூட்டம் பற்றிய விவரங்களை அவர் சேகரித்து வந்தார் என்பதால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று தெரிய வருகிறது.நாட்டின் சுதந்திரத்தையும், சட்டம் - அமைதி நிலைமைகளையும் பாதுகாக்க, தனது உயிரையே பணயம் வைக்கும் போர்வீரனைப்போல செய்தியாளர் ஜோதிர்மய தேவ், தமது உயிரையே நாட்டின் நலனுக்காகப் பணயம் வைத்த மாவீரர் ஆவார். அவருக்கு அஞ்சலி செலுத்த நாட்டு மக்களும், அரசாங்கத்தினரும் கடமைப்பட்டுள்ளனர்.செய்திகளைச் சேகரிக்கவும், வெளியிடுவதற்கும் ஆன சுதந்திரமான உரிமை இருந்தபோதிலும், அவ்வாறு சேகரிக்கும், செய்தியாளர் உயிரோடு வாழ்வதற்குமான பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்ற நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிறது.மும்பை மாநகரில், மும்முரமான வணிக வளாகத்தில், செய்தியாளர் ஜோதிர்மயதேவை நான்கு தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டு சுட்டுத் தள்ளியதுடன், உடனடியாகத் தப்பிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.அந்தப் பயங்கரவாதிகள் பற்றிய விவரங்களை மும்பைப் போலீஸôர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.சட்டத்துக்கும், அரசாங்கத்துக்கும் விரோதமாக உள்ள தீவிரவாதிகளின் செயல்பாட்டு முறைகளை ஒரு செய்தியாளர் அறிந்து வைத்திருந்தார் என்பதற்காக ஜோதிர்மய தேவ் சுடப்பட்டார் என்றால், அத்தகைய நிலைமைகளை மத்திய - மாநில அரசுகளின் காவல்துறையினரும், புலனாய்வுக் குழுவினரும் இதுவரை அறியாமல் இருக்கின்றனர் என்பது ஆச்சரியப்படத்தக்க பலவீனமாகும். தனிப்பட்ட ஒரு செய்தியாளருக்கு இருந்த திறமைகூட மத்திய - மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வெளிப்படுகிறது.பொதுவாக, மும்பை நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் படையெடுப்புகள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. 2008 நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலால், தாஜ் ஹோட்டல் உள்பட பல மையங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, மும்பை நகரம் ரணகளமாக ஆக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இன்னமும் நீதி முறைப்படி தண்டிக்கப்படவில்லை. அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது.மக்களின் குறைபாடுகளை அறிந்து அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதற்கு, செய்தித்துறை முக்கியத் தொடர்பாக இருக்கிறது.அதேபோன்று, அரசாங்கத்தில் நிகழும் குறைபாடுகளை, ஊழல் - ஊதாரித்தனங்களை மக்களுக்குத் தெரிவிக்கப் பத்திரிகைகள் முன்வருகின்றன. இதனால் ஏற்படும் சங்கடங்களை வைத்து பத்திரிகைகளே தேவையில்லை என்று ஒரு சர்வாதிகார ஆட்சி திட்டமிட்டுவிடும்.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திர அறிவிப்பை 1776-ல் எழுதிய அரசியல் மேதை தாமஸ் ஜெபர்ஸன், ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் செய்தித்தாள்கள் மிகவும் தேவை என்பதை உணர்ந்திருந்தார். அவருடைய அயராத முயற்சிகளின் விளைவாகத்தான், அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் 10 பிரிவுகளைச் சேர்ப்பதில் வெற்றிபெற்றார். அந்த உரிமைகளின் பட்டியலில் வைக்கப்பட்ட முதலாவது பிரிவு கூறுவதாவது: ""மக்களின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்கோ, தங்கள் உரிமைகளை அவர்கள் நிலைநாட்ட அமைதியாகக் கூடுவதற்கோ, சுதந்திரமான முறையில் பேசவோ - செய்திகளைத் தரவோ, தேவைப்படும் வழிமுறைகள் எதனையும் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் அரசாங்கம் முற்படக் கூடாது''.இதனை வலியுறுத்தும் வகையில் அவர் ஒருமுறை கூறினார்: ""ஒரு நாட்டில் செய்தித்தாள்கள்'' இல்லாமல் அரசாங்கம் இருக்கலாமா? அல்லது அரசாங்கம் இல்லாமல் செய்தித்தாள்கள் இருக்கலாமா? என்ற கேள்வி எழுந்தால், அரசாங்கம் இல்லாவிட்டாலும் செய்தித்தாள்கள்தான் தேவை என்ற முடிவுக்குத் தயக்கம் எதுவும் இல்லாமல் நான் வருவேன்''.இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற அமைப்பில் பிரபுக்கள் சபை, மக்கள் சபை என்ற இரு பிரிவுகள் இருக்கின்றன. பிரபுக்கள் சபையில், பாரம்பரியமாக இருக்கும் பிரபுக்கள், அவர்களுடன் மத குருமார்களாக உள்ளவர்கள் இடம்பெற்றனர்.இந்த இரு பிரிவினரைத் தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் சபையில் இருந்தனர். இந்த மூன்று பிரிவினரைத் தவிர, அந்த நாட்டின் அரசாங்கம் செம்மையாகச் செயல்பட செய்தியாளர்கள் உதவினர்.அனைவராலும் பாராட்டப்படும் அரசியல் மேதையாக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஆற்றல்மிக்க பேச்சாளராக விளங்கிய எட்மண்ட் பர்க், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒருமுறை சொன்னார்: ""அரசாங்கத்தைக் கண்காணிக்கப் பிரபுக்கள் சபையில் இருவகைப் பிரிவினரும், மக்கள் சபையில் மூன்றாவது பிரிவினரும் இருக்கின்றனர். ஆனால், இந்த மூன்று பிரிவினர்களைவிட மிகவும் முக்கியமாக நான்காவது பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள்தான், அதோ மேல் மாடத்தில் அமர்ந்திருக்கும் செய்தியாளர்கள்!'' இவ்வாறு அவர் பேசிய பிறகுதான், அரசாங்கம் செம்மையாக நடைபெற, செய்தித்துறை நான்காவது அடிப்படை என்ற தத்துவம் ஏற்பட்டது.இவ்வாறு மக்களாட்சி முறையில் சிறந்து விளங்கும், நாடுகளில் பத்திரிகையாளர்களுக்குத் தரப்படும், மதிப்பும், முக்கியத்துவமும் இந்தியாவில் ஏற்பட வேண்டும்.குற்றம் கண்டவிடத்து எடுத்துக் கூறுபவர்கள்தாம் ஆட்சியாளர்களுக்கு நல்ல நண்பர்கள். அத்தகைய நண்பர்களை ஏற்றுக்கொள்ளும் பண்புடையவர்களாக இருக்கும் ஆட்சியாளர்களை யாராலும் வென்றுவிட முடியாது! இதைத் திருவள்ளுவர் செம்மைப்பட எழுதி வைத்தார்:""இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர்'' மக்களின் உரிமைகளுக்கும், அரசாங்கத்தின் நல்லாட்சிக்கும், நாட்டின் மேலான வளர்ச்சிக்கும், அடிப்படையாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்குத் தக்க பாதுகாப்பையும், மதிப்பையும் இந்தியா தரவேண்டும்.

Brittan shocked about genocide activities of srilanga: இலங்கைப் போர்க்குற்றக் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்

அதிர்ச்சி அடைந்தாலும் குற்றஅரசையே விசாரிக்கச் சொல்லும் அறியாமை பற்றி என்ன சொல்வது? அரசிற்குத் தெரியாமல் படைத்துறையினர் செய்யும் எல்லை மீறல்களை அரசு விசாரிக்கலாம். அரசே தலைமை தாங்கி நடத்தும் இனப்படுகொலைகளை அந்த அரசையே கொண்டு விசாரிப்பது எந்த வகையில் நியாயம்? போர்க்குற்றம் என்று குறிப்பிடாமல்  இனப்படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். துயரத்துடன் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை போர்க்குற்ற காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்
First Published : 15 Jun 2011 05:11:15 PM IST

Last Updated : 15 Jun 2011 05:16:05 PM IST
லண்டன், ஜூன் 15- இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறியுள்ளார்.இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கருத்து தெரிவித்தார்.இதனிடையே, சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் "யு டியூப்" உட்பட பல்வேறு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலங்கை மீறியிருப்பதற்கு, சேனல் 4 முன்பு ஒளிபரப்பிய காட்சிகள் ஆதாரமாக உள்ளது என்று ஏற்கெனவே ஐநா நிபுணர் குழு கூறியிருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து முழுமையான விடியோ வெளியாகியுள்ளதால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்

பிரிட்டன் அமைச்சருக்கு தெரிந்தது இந்திய அமைச்சர்களுக்கும் , பிரதமர் , குடியரசுத் தலைவர் மற்றும் தமிழகத்தின் மதிப்பிற்குரியவர்கள் என்று கூறப்படும் தமிழகத்தின் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும் தெரியவில்லையே.....
By உதயம்
6/15/2011 7:07:00 PM
சோனியாவிற்க்கு காட்டுங்கள் ஐயா. புலிகள் கணவரை கொன்றதற்காக நாற்பதாயிரம் பேரின் உயிர் அவரிட்க்கு தேவைபட்டதா? குழந்தைகளுமா? இவர்களில் எத்தனை பேர் புலிகள்? பாரத நாட்டில் பிறந்திருந்தால் இந்த கொலை வெறி வந்திருக்குமா? முசோலினி பரம்பரை அல்லவா?
By Sriram
6/15/2011 7:06:00 PM
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தாக்குதலை விட 1000 மடங்கு கொடூரம் நிறைந்தது
By Raj
6/15/2011 7:05:00 PM
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு, ''போர்க் குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கைஅரசு உரிய விசாரணை நடத்தவேண்டும்'' என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறி உள்ளார். விசாரணை நடத்தப்பட வேண்டும்! ஆனால் இலங்கையோ இந்தியாவோ, பாகிஸ்தானோ, இரஷ்யாவோ, சீனாவோ போர் குற்றம் குறித்து விசாரணை நடத்தி பயன் இல்லை! இந்நாடுகள் தவிர்த்த ஒரு சர்வதேச குழு விசாரணை நடத்த வேண்டும்! அப்பொழுதுதான் உண்மைகள் வெளிவரும்! குற்றவாளிகளை தண்டிக்க முடியும்!
By பொன்மலை ராஜா
6/15/2011 7:03:00 PM
எங்க நாட்டு தலைவர்களுக்கு அதிர்ச்சியே வரமாட்டுது கொலையாளிக்கு உள்ள தண்டனை உடன்தையானவனும்க்கும் உண்டு
By raja
6/15/2011 6:57:00 PM
உலகமே கண்டனம் செய்யும் போது இந்திய இலங்கைக்கு கப்பல் விடுவது கேவலமானது ! வெட்கபவேண்டியது !!
By M.Gunasekaran
6/15/2011 6:42:00 PM
THE BUTCHERS WHO CARRIED OUT KILLINGS OF TAMIL PEOPLE SHOULD BE PUNISHED. THE INTERNATIONAL COURT OF JUSTICE SHOULD BRING ALL TO TRIAL AND PUNISH THEM. TO PREVENT TAMILS BEEING KILLED IN THE FUTUT A SEPRATE NATION TAMIL ELLAM SHOULD CREATED.
By Paris EJILAN
6/15/2011 6:24:00 PM
வேடிக்கை பாருங்கள் இந்தியரே தமிழரே நீங்கள் எந்த அளவில் அளக்கிறீர்களோ அதே அளவை உங்களுக்கு காத்திருக்கிறது
By பிரவீன்
6/15/2011 6:23:00 PM
இந்தியா திரும்பவும் ராசபக்ச அரசுக்கு முண்டு கொடுக்கும், ஏனெனில் சர்வ தேச விசாரணை நடந்தால், சிங் அரசின் உதவி தெரியவரும்.
By Suresh M
6/15/2011 6:12:00 PM
மூடர்கள்கள் ஆளும் நாட்டில் நேர்மை,ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
By வேந்தன்
6/15/2011 5:58:00 PM
sonia gandhi and karunanithi is responsible for the human rights violation
By v.sampathu
6/15/2011 5:31:00 PM

செவ்வாய், 14 ஜூன், 2011

Jaya instists to take action against singhalam : இலங்கைப் போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் செயலலிதா வலியுறுத்தல்


துடிப்பான நடவடிக்கைக்குப் பாராட்டுகள். ஆனால், அரசியல் நெறிப்படியான சமஉரிமை என்பது தமிழ் ஈழம்தான் என்பதை மறக்கக் கூடாது. இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டாலும் சிங்களத்திற்கு ஆதரவான நிலை எடுக்காமல் இருந்தாலே போதும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

இலங்கை போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்
First Published : 14 Jun 2011 02:09:38 PM IST

புதுதில்லி, ஜூன் 14- இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.இன்று பிரதமரை நேரில் சந்தித்தபோது, அவரிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய கோப்பு ஒன்றை ஜெயலலிதா அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இப்பிரச்னையை இந்திய அரசு ஐநா சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.இலங்கையில், தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது. சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பிரதமரிடம் அளித்துள்ள கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

சட்ட சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்ப் பிரச்சனை, போர்க் குற்ற விசாரணை, கச்சத் தீவு ஆகியவற்றில் அம்மையார் உறுதியாய் இருக்க வேண்டும். அங்கு அவர்கள் தனியாக செல்ல வில்லை; 7 கோடி மக்களின் உணர்வுகளை தங்களின் கைகளில் ஏந்தி செல்கின்றார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் இலங்கை தமிழர்ப் பிரச்சனை இன்னும் தீரவில்லை. கச்சத் தீவோ சுமார் 35 வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேட்டால் இலங்கை தமிழர்ப் உள்நாட்டுப் பிரச்சனை என்கின்றார்கள். அப்படிப்பார்த்தால், வங்க தேசமும் அன்று 1971 -ல் உள்நாட்டுப் பிரச்சனைத் தானே. பின்பு ஏன் தலையிட்டார்கள்? ஏனென்றால் பாகிஸ்தான் எதிரி நாடு; அடக்க வேண்டும்; இலங்கையோ நட்பு நாடு. அவர்களிடம் நல்லுறவு வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் சீனாவோடு சேர்ந்து விடுவார்கள். இதுதான் உண்மை; அதனால்தான் ஈழத் தமிழர்ப் பிரச்னை உள்நாட்டுப் பிரச்சனை என்கின்றார்கள். அம்மையாரின் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பெற வேண்டிப் பிரார்த்திக்- கின்றேன்.
By பழனிசாமி T
6/14/2011 2:55:00 PM
நடிகர்.சோ மற்றும் சு.சாமி கூறியது போல் ஜெயா முதலமைச்சர் ஆனவுடன் இலங்கை பிரச்சனையை பிரதம மந்த்ரியிடம் துணிவாக எடுத்து வைத்துள்ளார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெற நல வாழ்த்துக்கள்
By Gangadharan
6/14/2011 2:27:00 PM
Good thing Jeyalalitha has done. Gooodoos to Jeyalalitha. If Jeyallitha brings relief and freedom for Ellam peoples, she will be in history books for ever. I wish jeyalalitha saves Tamilnadu from Karunanidhi and his family, I also wish JJ saves Ellam peoples from sinhalese. Both sinhalese and Karunanidhi are one and the same. Friends, Support our JJ.
By Ravi
6/14/2011 2:20:00 PM
கிழடு இப்போ என்ன சொலபோகின்றதூ? ஜெயலலிதா தந்தி அனுப்பவில்லை........
By KOOPU
6/14/2011 2:18:00 PM