வியாழன், 27 டிசம்பர், 2012

தன்னம்பிக்கைப் பெண்கள்

சொல்கிறார்கள்

"தன்னம்பிக்கை ப் பெண்கள்!'உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, புதுவலவு மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகிலுள்ள புதுவலவு தான், எங்கள் கிராமம். விவசாய கூலி போதவில்லை. எனவே, ஏதாவது தொழில் பண்ண நினைத்தோம்.தோட்ட வேலைக்கு போன, 14 பேரும் சேர்ந்து, ஒரு குழு ஆரம்பித்தோம். சில நாட்களில், திருப்பூரிலிருந்து, பனியன் கட்டிங் வேஸ்டேஜை வாங்கி, அதை வைத்து, ஜட்டி தயாரிக்கலாம் என கூறினர். எங்களில், சிலருக்கு மட்டும் தான், டெய்லரிங் தெரியும். அவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து, தைரியமாக இறங்கினோம். முதலில், மூன்று மெஷின் போட்டு துவங்கினோம். இப்போது, 10 மெஷின்கள் உள்ளன. 10 - 20 ரூபாய்க்கு திண்டாடினோம். இப்போது, ஒரு ஆளுக்கு, 160 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது.குழு துவங்கிய போது, ஐந்து பேருக்கு மட்டும் தான் தொழில் தெரியும். ஓர் ஆண்டிலேயே, எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து, 2.5 லட்சம் ரூபாய் மானியம் கடன் கொடுத்தனர். அடுத்தடுத்து, "ஆர்டர்ஸ்' வர, வெளி ஆட்களை வைத்து, வேலை பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கோம்.எல்லாரும் முல்லை, தென்றல் என்று தான், மகளிர் குழுக்களுக்கு பெயர் வைப்பர். ஆனால், ஊர் பாசத்தில், நாங்கள், ஊரின் பெயரிலேயே குழுவை துவங்கினோம்.நாங்க தயாரிக்கும் உள்ளாடைகளை, ஆட்களை வைத்து, ஈரோடு துணிச் சந்தையில் இறக்குவோம். ஆந்திரா, கர்நாடகா, கேரள வியாபாரிகள் போட்டி போட்டு, மொத்தமாக வாங்கிப் போய் விடுவர்.ஒரு கட்டத்தில், அதிகமான டிமாண்ட் வந்த போது, எங்களால், அந்த அளவுக்கு பண்ண முடியவில்லை.எந்த அளவுக்கு, "ஹை குவாலிட்டி' உள்ளாடைகளின் தேவை கூடிக் கொண்டே போகிறதோ, அதே அளவு, "சீப்' ரேட்டில் கிடைக்கிற உள்ளாடைகளுக்கும், நல்ல டிமாண்ட் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால், இதற்கு, எப்பவும் மவுசு குறையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக