சனி, 17 நவம்பர், 2012

request to thamizha arasu தமிழக அரசியல் இதழில் கட்டுரை தெரிவிப்பு

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி!

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி!

2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும் நார்வே நாட்டுப் பிரதிநிதிகள், மஹிந்த ராஜபட்ச அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதர் எலின் சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த பரிந்துரைகளை ராஜபட்ச அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.
ராஜபட்ச அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.
சீனா, ரஷியா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமைக் குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின. இந்தியா, ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன. மேலும், இலங்கையில் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தின. ஆனால், போரின்போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.
அதே வேளையில் 1987-ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 13-வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என்பது இந்தியாவின் கனவு.
ஆனால், இலங்கையில் சிங்களத் தீவிரவாதக் கட்சிகள் 13-வது சட்டத் திருத்தத்தை அடியோடு ரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள் ராஜபட்ச அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்குத் தெரியாதா என்ன? கூட்டணிக் கட்சிகளை மீறி ராஜபட்ச ஒருபோதும் செயல்படமாட்டார் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால், இந்த நாடகம் பயன்படுமே தவிர, அதை யாரும் நம்பப் போவதில்லை.
சுதந்திரமான அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த முயன்றபோதும் அவற்றைத் தனது நாட்டிற்குள் நுழையவோ, விசாரணை நடத்தவோ அனுமதிக்க ராஜபட்ச பிடிவாதமாக மறுத்துவிட்டார். மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும் இழைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தன.
2010-ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம்போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம் வந்து குவிந்தன. மிகக் கொடுமையாக நடைபெற்ற அட்டூழியங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை விசாரணை செய்ய 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.
போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்துப் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளன. அவற்றைக் கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
போரில் இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907-ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி லண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.
இந்த சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2-ஆம் உலகப் போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், படைத்தளபதிகள் ஆகியோர் மீது விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
பிற்காலத்தில் யூகோஸ்லாவியா அதிபரான மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த கொசவோ மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.
1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்னையில் தலையிட்டு யூகோஸ்லாவியாவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய ராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா. சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன.
இதன் விளைவாக செர்பிய இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ தனி நாடானது.
யூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக், நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க் குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே அவர் மரணம் அடைந்தார்.
போஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
மேலே கண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக்கொடிய போர்க் குற்றவாளி ராஜபட்ச ஆவார். மனித குலத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர். ஆனால், அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத் துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் தனக்குத் துணையாக இருக்கும்வரை எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத் துணிந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இலங்கையில் ஜனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழித்துக் கட்டுகிறார். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித் தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் ஜனநாயகத்தை வேரோடு பறித்து எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி நிறுத்தியிருக்கிறார்.
எடுத்துக் காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட
79 துறைகளை வைத்திருக்கிறார். அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும்தான் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள ராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையிலும் அங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.
அண்மையில் பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜபட்ச கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் ராணுவம் ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த ராஜபட்ச இப்போது அந்நாட்டின் நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.
மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல் ஒழிப்பு குழு, அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவற்றின் தலைவர்கள் சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் அதிபராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல் வர முடியாது என்ற அரசியல் சட்டப் பிரிவைத் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக் கொண்டுள்ளார்.
அவரது சொந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் சந்திரிகாவே கூட உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் ராஜபட்ச தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.
ஜெர்மானிய இட்லர் தனது நாட்டிலிருந்த யூதர்களை முதலில் இனப்படுகொலை செய்தான். இதில் தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கை பார்த்தன.
சர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவில் இருந்த மற்ற நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாகக் கைப்பற்றினான். வேடிக்கை பார்த்த வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணி சேர்ந்தன. 2-ஆம் உலகப் போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.
வரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்குப் புதிய இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிற ராஜபட்சவுக்கு எல்லா வகையிலும் தோள்கொடுத்து துணை நிற்கும் நாடுகள், தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.
ஆனால், மகாத்மா காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக இருக்கிறதே என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.

Tamil activists take different view of Canada’s support to UN’s internal report

Tamil activists take different view of Canada’s support to UN’s internal report

[TamilNet, Saturday, 17 November 2012, 00:16 GMT]
Canada’s Foreign Affairs Minister John Baird issued a statement on Thursday regarding the UN Secretary General’s Internal Review Panel Report on Sri Lanka. Offering support to the report, the statement laid stress on the failure of the Sri Lankan government to make progress on ‘reconciliation, accountability and respect for human rights in Sri Lanka’. Responding to this, Tamil activists in Canada told TamilNet “ if the Canadian government is genuinely concerned about ensuring that mistakes made in Sri Lanka are not repeated, then they must acknowledge that addressing the fundamental national question of Eezham Tamils and providing justice for the genocide they suffered should be a prerequisite to any ‘work’ of the international community.”

The statement by the Canadian government’s Foreign Affairs department comes after the release of the UN Secretary General’s Internal Review Panel Report that has determined a ‘systemic failure’ of the UN in its handling of the last stages of the war in the island.

In the statement, Baird acknowledges that the “Sri Lankan government continues to fail victims and survivors alike” and that “the measures it has taken to date simply do not go far enough.”

The statement further says, “The Prime Minister and I take every opportunity to raise Canada’s concerns with respect to the need for progress on reconciliation, accountability and respect for human rights in Sri Lanka.” “Canada also notes the Secretary General’s comments and will work with the international community to ensure mistakes made in Sri Lanka are not repeated.”

The statement remains silent on the issue of ‘UN systemic failure’ and on any clear action plan despite a hollow commitment to ensure that the mistakes made should not be repeated.

“The statement reflects the limitations of the Canadian government to stay within the parameters of a unitary state structure and imposition of a Sri Lankan identity as the basis for any solution. These limitations must be challenged by community activists,” Eezham Tamil activists in Canada commented.

They further said that, “One should be cautious in the optimism being shown by some on the latest UN report. The report commends the Secretary General for his. The acknowledgement by the UN of its internal failure is meaningless to Eezham Tamils without the political will of the international community to rectify the wrongs. That political will must address the fundamental national question of Eezham Tamils as a prerequisite to any ‘work’ of the international community including the acknowledgment of the protracted genocide endured by Eezham Tamils. This should be the goal of Eezham Tamil activists using the UN report as a tool to move the interests of the Tamil Nation forward.”

Separately, in a press release dated 16 November, the British Tamils’ Forum criticized the UN that “Publishing reports after reports will not stop the continuing structural genocide of Tamils in Sri Lanka.”

“However critical this UN internal review report is, it has come too late for the tens of thousands who were massacred under the UN watch despite the loudest and continuous alarm bells rung across the world capitals, by the relatives of those who perished. However, what is more alarming presently is the continuing inaction by the international community to arrest the deteriorating situation faced by the Tamil people,” the BTF statement said.

“What is of utmost importance is an immediate establishment of an international investigative mechanism to send a very clear signal to the Sri Lankan regime that the international community will not stand by any longer allowing the State to continue its programme of Tamil Genocide. Another report in another six months time will be too late for those who would have perished in the hands of the Sri Lankan regime or while trying to flee the island,” the statement further said.

Chronology:

இலங்கை வன்னிப் போரில் 1 ,46,000 தமிழர்கள் மாயம்:ஐ.நா

இலங்கை வன்னிப் போரில் 1 இலட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ த் தகவல்
இலங்கை வன்னிப் போரில் 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ தகவல்
நியூயார்க், நவ. 17-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தன. இதுகுறித்து ஆராய ஐ.நா.சபையின் ஆய்வு குழுவை பொது செயலாளர் பான் கி மூன் நியமித்தார். அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வன்னிப் போரில் காணாமல் போன 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களின் கதி குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது. இலங்கை அரசு எழுத்து மூலம் சமர்பித்துள்ள புள்ளி விவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்னியில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 தமிழர்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போரின்போது வன்னியில் இருந்து வவுனியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களுடன் ஒப்பிடும்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? ஒரு வேளை அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது மாயமாகியோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Colombo accelerates demographic genocide in Trincomalee

Colombo accelerates demographic genocide in Trincomalee

[TamilNet, Friday, 16 November 2012, 18:33 GMT]
The Colombo government led by President Mahinda Rajapakse has been implementing a land appropriation policy to reduce the parliamentary strength of Tamils in Trincomalee district with the support of occupying Sri Lanka Army, say Tamil politicians in the district. While landless residents of the district have to fight for the allocation of half an acre per family, the outsiders brought down from south are allowed to clear forest lands 2 to 3 per acres per family. More than three hundred Sinhala families have been brought down from southern districts of the island and are allowed to clear forest area in Suriyawewa situated in Seruwila DS division at the rate of two to three acres per family.

These families are currently clearing the forest lands with the support of the SL military.

There was no Seruwila electorate in Trincomalee district when the country gained independence. Seruwila electorate in the Trincomalee district was carved out in 1970 after the state aided Sinhala colonization scheme carried out by the United National Party government since the British left the island in 1948.

Earlier, there were two electorates, Trincomalee and Moothoor. Tamils and Muslims were elected to Ceylon parliament. Later a Sinhalese was elected to parliament from the Seruwila electorate.

The land appropriation policy of the Colombo government with the backing of the occupying Sri Lanka Army has also a clear agenda to reduce strength of the Tamil population in the district, weakening Tamils electoral strength in the future elections, Tamil politicians lamented.

ஆந்திர, கேரள மீனவர்களால் தமிழக மீனவர்களுக்குச் சிக்கல் - முதல்வர்


சென்னை:"ஆந்திர மீனவர்கள், அவ்வப்போது, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கின்றனர். இப்படி, தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை, ஆந்திர மீனவர்கள் கைவிட வேண்டும்' என, தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெ., வலியுறுத்தி உள்ளதை, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் வாசித்தார்.’

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, பெங்களூருவில், நேற்று நடந்தது.இதில், தமிழக முதல்வர் சார்பில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் சார்பில், அமைச்சர் மணி மற்றும், நான்கு மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாநிலங்களின் மேம்பாடு, தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னை, சுற்றுலா வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட, பல்வேறு பல விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டன.கூட்டத்தில், தமிழக முதல்வரின் உரையை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்தார். முதல்வர் கூறியிருப்பதை, பன்னீர் செல்வம் வாசித்ததாவது:

தமிழக மீனவர்கள், ஆந்திர ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்தால், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்படுகின்றனர். பின், தமிழக மீனவர்களிடம், கணிசமான தொகையை பெற்று விடுவிக்கின்றனர்.கடந்த, 2007ல், அமைச்சர் அளவில் நடந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கு வசதியாக, மீன்பிடி உரிமம் வழங்க வேண்டும் என, விவாதிக்கப் பட்டது.ஆனால், இந்த விஷயத்தில், ஆந்திர அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது. ஆந்திர மீனவர்கள், சட்டத்தை, தாங்களே கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை கைவிட வேண்டும்.

இதேபோல், கன்னியாகுமரி மீனவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்தால், கேரள மீனவர்களால் தாக்குதல் நடத்தப்படுகிறது; படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. எனவே, மீனவர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத அளவிற்கு, மீன்பிடி உரிமம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், மின் தேவை மற்றும் மின் உற்பத்திக்கு இடையே, பெரிய இடைவெளி உள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2012-17), தமிழகத்தின் மின் தேவை, 18 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். ஆனால், தற்போது, 8,500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதை கருத்தில்கொண்டு, மின்தேவையை பெருக்க, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வரும், 2015க்குள், சூரிய ஒளி மின் உற்பத்தி வழியாக, 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும், 1,000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உரையை பன்னீர்செல்வம் வாசித்தார்.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது

 
படில் ிில் இர்குடிாது என ிய ரசு ்லமா?
 
பெங்களூரு: ""தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்."நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை.கர்நாடகா அணைகளில், எட்டு அடிக்கு மேல் சகதியாகக் காணப்படுகிறது. தற்போது அணைகளிலுள்ள தண்ணீரை கணக்கெடுக்கும் போது, எட்டு அடியை, "மைனஸ்' செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டத்தை அளவிடும் போது, எப்போதுமே உண்மை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.விவசாயம், குடிநீருக்கான தண்ணீர், கர்நாடக அணைகளில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உள்ளது; எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். மீண்டும், கர்நாடகா தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி, கர்நாடகா சார்பில், மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பொம்மை கூறினார்.
 

அணைகள் கட்டுப்பாட்டு அறைகளைப்பூட்டுவோம் - இந்தியா சிதையப் போகிறதா?

பெங்களூரு:""மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.

தமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம், கர்நாடகாவில், காவிரி பாயும் பகுதிகளில் உள்ள, விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்துவது வழக்கம்.அதேபோல், இந்த ஆண்டும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி, காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது, தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, கர்நாடகா திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து முடிவு செய்ய, காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்குப் பின், "தமிழகத்துக்கு வரும், 30ம் தேதி வரை, 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

இதையறிந்த, கர்நாடகா மாண்டியா விவசாயிகள், மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், தங்கள் போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர், மாதே கவுடா கூறியதாவது:கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவே இல்லை. 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் மற்றும் கரும்பு பயிரிட தேவையான தண்ணீர், கர்நாடக அணைகளில் இல்லை. அதனால், சில பகுதிகளில், நெல், கரும்புக்கு பதிலாக, தினை விதைக்கப்பட்டுள்ளது.

மேலும், மைசூரு, பெங்களூரு நகரங்களுக்கு, குடி தண்ணீர் சப்ளை குறையும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடிதம் எழுத உள்ளேன்.காவிரி நதி நீர் அடிப்படை பிரச்னை பற்றி, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியைச் சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள, 28 எம்.பி.,க்களுக்கும் விவரித்து கடிதம் எழுத உள்ளேன். கர்நாடக அணைகளில் உள்ள, தண்ணீர் இருப்பை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், தமிழகத்தில் பெய்த மழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன; பலர் உயிரிழந்தனர். வெள்ளப் பெருக்கால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. 55 தடுப்பு அணைகள் மற்றும் முக்கிய அணைகளில் விளிம்பு வரை தண்ணீர் நிரம்பியுள்ளது; பாசன கால்வாய்களும் நிரம்பியுள்ளன.இதில், உண்மை என்னவென்றால், தற்போது, அதிகமாக உள்ள தண்ணீரை, தமிழகம் கடலில் விடுகிறது.மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், இங்குள்ள, கே.ஆர். எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்.இவ்வாறு மாதே கவுடா கூறினார்.

ஒரே குவளையில் மூவகைத் தேநீர்

திருப்பூர்: ஒரே டம்ளரில், மூன்று வித தேநீரை தயாரித்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார், திருப்பூரில் உள்ள டீ மாஸ்டர் ஒருவர். டீ அருந்துவதில், பலருக்கும், பல ரசனைகள் உள்ளன. பால் கலக்காத பிளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ என, பல ருசிகளில் டீ தயாரிக்கப்படுகிறது.கடைகளில் டீ அருந்தும்போது பிளாக் டீ, பால் டீ, லைட் டீ, ஸ்ட்ராங் டீ; இதிலும் சர்க்கரை அதிகம், குறைவு, மீடியம், சர்க்கரை இல்லாமல் என, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கேற்ப டீ பருகுகின்றனர்.திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் டீ மாஸ்டர் பாலு, எதற்கும் அசரும் ஆள் இல்லை. ஒரே டம்ளரில் பிளாக் டீ, பால் டீ மற்றும் டீ என மூன்று வகைகளையும், ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு, வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். தஞ்சாவூரை சேர்ந்த, 24 வயதான பாலு, எட்டு ஆண்டுகளாக, திருப்பூரில் டீ மாஸ்டராக உள்ளார். சிறு வயது முதலே, டீக்கடையில் பணியாற்றி வரும் இவர், ஆர்வத்தில், மூன்று ரக டீயையும், ஒரே டம்ளரில் போட்டு பழகியுள்ளார். அதைக் காணவும், ருசிக்கவும், கடையிலும் கூட்டம் மொய்க்கிறது.

சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் மிதியூர்திஉருவாக்கல்




சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் ஆட்டோ உருவாக்கல்

திண்டுக்கல்: சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்க கூடிய வகையில் ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான், மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்த ஆட்டோ இயங்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்கு தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்க முடியும்
என்கின்றனர். நமது நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ""எஸ்ஆர்எம்'' மோட்டார் மூலம் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால் பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.பேராசிரியர், மாணவர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் மேலைநாடுகளை போல நம் நாட்டிலும் மின் சார்ஜர் நிலையங்கள் உருவாகிவிடும். இதை சிறு திட்டமாக துவங்கினோம். நாட்டுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வடிவமைத்து இருக்கிறோம். மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர்.
 

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

பதிவு செய்த நாள் : 16/11/2012

நட்பு இணைய இதழ்
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன் என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும்,  சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,  இதழுரைகள், நூல்கள் எழுதும் பொழுதும் தமிழ்க்காப்பு பற்றியும் தமிழ் மீட்பு பற்றியும் தமிழர் எழுச்சி பற்றியும் பேராசிரியர் உணர்த்திடத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டிற்காக  சில இலக்கியக் குறிப்புகளை மட்டும் நாம் பார்ப்போம்.
பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தொல்காப்பிய விளக்கம், சங்க இலக்கியப் பாடல்கள் விளக்கம், திருக்குறள் விளக்கம் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்து எளிமையாக விளக்கி உள்ளார். இவற்றுள் சங்க இலக்கியத்தில் அகநானூற்றுப்பாடல் பற்றிய அவரது விளக்கத்தில் சிலவற்றை மட்டும் காண்போம்.
பேராசிரியர் இலக்குவனாரின் அரும் பெரும் முயற்சிகளால் சங்க இலக்கியங்கள், வாழும் மக்கள் இலக்கியங்களாக நிலைத்துள்ளன. சங்கத்தமிழை வங்கக்கடலில் தூக்கி எறிவோம் எனத் தமிழ்உணர்வும் தமிழக வரலாறும் அறியாத் தமிழர்கள் சிலர் முனைந்த பொழுது  வீறு கொண்டு எழுந்து சங்க இலக்கியங்களைப் பரப்புவதன் மூலமே இக்கெடுநினைவை அழிக்க முடியும் என உணர்ந்து அவ்வாறு பரப்பிய இலக்கியச் செம்மல் அல்லவா பேராசிரியர் இலக்குவனார். அவ்வாறு அவர்  சங்க இலக்கியத்தின் கேடயமாகப் பயன்படுத்தியதுதான் அவர் நடத்திய சங்க இலக்கியம் (1945-1947)என்னும் வார  இதழ். இவ்விதழில் தொடர்ந்து சங்கப் பாடல்கள்பற்றி எழுதி உள்ளார். புலவர் மாமூலனார் பாடல்கள் மூலம் சங்கத்தமிழின் தெவிட்டாச் சுவையையும் பழந்தமிழ்ச் சிறப்பையும் உணர்த்தியதுடன் தமிழ் எழுச்சி உணர்வையும் பேராசிரியர் இலக்குவனார் கிளர்ந்தெழச் செய்துள்ளார். இப்பாடல்கள் மூலம் நாம் இழந்துள்ள தமிழக நிலப்பரப்புகளைப்பற்றி அவர் சுட்டிக்காட்டும் சிலவற்றைப் பார்ப்போம். அகநானூற்றுப் பாடல் 61 இல், விழுச்சீர்  வேங்கடம் பெறினும்  என்னும் அடியை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர் தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பு மன்றத்தினர் மொழி வகையாக நாடுகளை வகுக்கும்போது தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்வார்களாக.
மொழி வழியாக நாடுகள் வகுக்கப்படும் எனப் பேராசிரியர் தொலை நோக்கு உணர்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் விழைந்தவாறான மொழிவழித் தேசிய நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் அமையவில்லை. என்றாலும் இந்தியநாடு என்னும் அமைப்பில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கும் பொழுது வேங்கடம் பறிபோகும் என்பதை உணர்ந்துதான் பேராசிரியர்  தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மொழி வழி மாநிலங்கள்அமைக்கும்பொழுது ஆண்ட தலைவர்கள் வரலாற்று உணர்வு இல்லாதர்களாகவும் தமிழ்த் தேசிய உணர்வு அற்றவர்களாகவும் இருந்தமையால் நாம் வேங்கடமாகிய திருப்பதியை இழந்தோம். என்றபோதும் தமிழக  அகஎல்லையாகத் திருப்பதி அமைய நாம் முயன்று வெற்றி காண வேண்டும்.
அகநானூற்றுப் பாடல் 91 இல், குடநாடு பெறினும் தவிரலர் என்னும் பாடலடியை விளக்கும் பொழுது மொழிக்கலப்பின் தீமையைப் பின்வருமாறு உணர்த்துகிறார்.
குடநாடு: இன்று ‘மலையாளம்’ என்று வழங்கப்படும் இடம் தான் அன்று தமிழ் வழங்கும் குடநாடாக இருந்தது. இன்று தமிழரின்றும் வேறுபட்டதாகவும், தமிழர்க்கும் தமக்கும் தொடர்பு இல்லையென்றும் நினைக்கும் மக்கள் மிகுந்த நாடாக விளங்குகின்றது. இதுவும் காலத்தின் கோலம்! இவ்வேறுபாடு எதனால் ஏற்பட்டது எனின், பாண்டியநாட்டுத் தமிழரினின்றும் சேரநாட்டுத் தமிழரை மலைகளும் காடுகளும் இடைநின்று பிரித்தன. சேரநாட்டை ஆண்ட பிற்கால அரசர்கள் தமிழையும் தமிழ்ப் புலவரையும் போற்றாது புறக்கணித்தனர். ஆரியம்  அங்குச் செல்வாக்குப் பெற்றது. ஆரியமொழியை ஒட்டி இலக்கணம் வகுத்தனர். ஆரிய மொழிச் சொற்களைத் தம்மொழியிற் கலந்து வழங்கினர். ஆகவே தமிழ்மொழி வேற்று மொழியாக உருவடைந்து ‘மலையாளம்’ என்ற புதுப்பெயரையும் பெற்றது. அதனால்தான் தமிழில் வேற்று மொழிச் சொற்களைக் கலந்து எழுதுதலும் பேசுதலும் கூடாது என்கின்றோம்.
இன்று ஊடகங்கள் வாயிலாக மொழிக்கலப்பு மூலம் தமிழ்க்கொலை விரைவாக நடைபெற்றுவருகிறது. மக்களும் மொழிக்கலப்பின் தீமையை உணராமல் பிற மொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசியும் எழுதியும் வருகின்றனர்.  தமிழ்  மலைநிலம் மலையாளநாடு என்னும் வேற்ற நிலமாக மாறிய வரலாற்றை உணர்ந்தாவது நல்ல தமிழே பேசுவார்களாக! நல்ல தமிழிலேயே எழுதுவார்களாக!
தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும்  அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார்.

எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால்  ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேற்றுமொழியில் இத்தகைய பெயர்களை இடுகின்றோம். ‘காமதேனு’ (பசு) ‘கற்பகம்’ (மரம்) ‘மாணிக்கம்’ (கல்) ‘கமலம்’ (தாமரை) என்ற பெயர்களை இன்றும் இடுகின்றாக்ள். தமிழில் கூறினால்தான் அதை இழிவாகக் கருதுகின்றார்கள். இன்னும் ஆங்கிலேயர்களிடையே  Stone,Thorn,Wood முதலிய பெயர்கள் வழங்கக் காண்கின்றோம். ஆகவே அன்று அப் பழங்காலத்தில் இட்ட ‘எருமை’ என்ற பெயரைக் கண்டுவியப்படைய ஒன்றுமில்லை, இவ் எருமை என்பவன், இன்று மைசூர் என வழங்கும் நாட்டையும் ஆண்டிருத்தல் வேண்டும். மைசூரும் குடநாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடாகத்தான் அன்று இருந்தது. அதற்கு எருமையூர் (எருமை என்பவன் ஆண்ட ஊர்) என்ற பெயர் வழங்கிற்று. அப்பெயரே பின்னர் ஆரியத்தில் ‘மகிசாபுரி’ என மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் மகிசாசுரன் ஆண்டதாகப் புராணமும் எழுதப்பட்டது. ‘மயிலாடு துறையை’ ‘மாயூரம்’ எனவும் ‘பழமலையை’ விருத்தாசலம் எனவும் மறைக்காட்டை ‘வேதராணியம்’ எனவும், மொழிபெயர்த்தது போலவே எருமையூரையும் மகிசாபுரியாக்கினார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள் பெயர்கள் பிறமொழி வயமாவதால் உரிமை நிலமும் உறவற்றுப் போவதை உணர வேண்டும் என்பதற்காகவே பாடல் விளக்கங்களிலும் தமிழ் மீட்பு உணர்வைப் பதிக்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.
முப்புற எல்லைகளையும் முற்றிலும் இழந்துள்ள நாம், இருக்கின்ற நிலத்தையவாது தமிழ்நிலமாக உரிமையுடன் ஆள மறைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்பதற்குப்பேராசிரியரின் பின்வரும் விளக்கம் உந்துதலாக அமையும். அகநானூற்றுப் பாடல் 197இல் வரும்  முதுகுன்றம் என்பதற்கு அவர் தரும் விளக்கம் வருமாறு :-
முதுகுன்றம்: இது இப்பொழுது விருத்தாசலம் என்று வழங்கும் இடத்தின் பெயர்போலும். முந்தைய வெளியிட்டில் குறிப்பிட்டதுபோல் வடமொழியாளர் ஊர்களின் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மொழிபெயர்த்து வழங்கினர். முதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்று மாற்றி அப்பெயரை நிலைக்கச் செய்துவிட்டனர் தமிழர்கள். இனித் தமிழ்ப்பெயர்களையும் வழங்குமாறு செய்து, தமிழ்ப்பெயரால் அழைக்க வேண்டும். இவ்விதம் கூறுவது வடமொழி மீது கொண்ட வெறுப்பினால் அன்று. தமிழ்நாட்டில் ஊர்ப் பெயர்கள் தமிழில் இல்லாது வேற்றுமொழியில் இருப்பின், தமிழர் தம் ஊரைப்பற்றியோ, தம் மொழியைப் பற்றியோ கவலைப்படாதவர்கள் என்ற பழிதான் சாரும். ‘திருநெல்வேலி’ யை ஒரு ஆங்கிலேயன் Beautiful paddy fence, என்றும் Cumberland என்ற ஆங்கில ஊரை நாம் ‘கம்பர் நாடு’ என்றும் அழைத்தால் எப்படியோ அப்படித்தான் முதுகுன்றத்தை விருத்தாசலம் என்பதும். ஆகவே இம்மாதிரி மொழிபெயர்க்கப்பட்ட பெயர்களைத் தமிழிலேயே வழங்குவதற்கு ஆவனசெய்வார்களாக.
 கேரளா முதலான பிற நாட்டவர் அவரவர் மொழித்திருத்திற்கேற்பவே ஊர்ப்பெயர்களை ஆங்கிலம்  முலான பிற மொழிகளில் குறிப்பிடுகின்றனர். பேராசிரியரின் விழைவிற்கேற்ப தமிழ்ப்பெயர் மீளுரிமை பெறும் வகையில் சில ஊர்ப்பெயர்கள் மாற்றப்பட்டாலும் முழுமையான அளவில் நடைபெறவில்லை. இடையிலே வந்த சிரீ நீக்கப்பட்டு பல்பொருள் சிறப்பு கொண்ட திரு மீண்டும் அணி செய்ய வேண்டும் என ஊர்களில் அரசு மாற்றம் கொண்டு வந்தாலும் இன்றும் திருவரங்கம் இல்லை! சிரீரங்கம்தான் கோலோச்சுகிறது! திரு விழந்த ஊர்கள் அனைத்தும் பெயரில் திருவைப் பெறுவதன் மூலமே திருவளர் ஊர்களாக மலரும் என்பதை உணர்ந்து நாம் தமிழ்ப்  பெயர் மீட்பினை மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும்  பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.
வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப் பற்றி விரிவாக அறிவரேயன்றி, நம் நாட்டுப் போரைப்பற்றி நன்கு அறியார். அது அவர்கள் குற்றமும் அன்று. தமிழ் நாட்டு வரலாறு நன்கு அறிந்து கொள்வதற்குரிய முறையில் கல்வித் திட்டம் அமைந்திலது. வருங்காலக் கல்வித்திட்டமாவது தமிழர்கள் தம் முன்னோர்களை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம்  தமிழக  நில வரலாற்று அறிவையும்  தமிழ்ப்பெயர் வரலாற்று அறிவையும் படிப்பவர்களுக்கு ஊட்டுவதையே பேராசிரியர் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்.
சொற்பொருள் விளக்கங்களின் பொழுது மட்டும் அல்லாமல் தொடர் விளக்கங்களிலும் தமிழ் உணர்வை ஊட்டப்பேராசிரியர் தவறியதில்லை. சங்க இலக்கியப் பாடல்களை நாடக வடிவில் விளக்கும் பேராசிரியர் தலைவியும் தோழியும்  உரையாடும் பொழுது பிறமொழி கலந்து பேசுவதால் ஏற்படும் தீமையை விளக்குகிறார்; இதன் மூலம் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என  வலியுறுத்துகிறார். அகநானூற்றறுப் பாடல் 211 இல் வரும் மொழிபெயர் தேஎத்தர் என்னும் தொடரைப் பின்வரும்வகையில் விளக்குகிறார். (தலைவி, தோழி ஆகியோரின் உரையாடலில் இடைப்பகுதி)
தலைவி : (தலைவர்) எங்குப் போவதாகக் கூறினார்.
தோழி : தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகட்குச் செல்வதாகக் கூறினார்.
தலைவி : இப்பொழுது தமிழ்நாட்டின் வட எல்லை எது?
தோழி : ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வட எல்லை இமயமலையாக இருந்தது. இப்பொழுது திருவேங்கடமலைதான் வட எல்லை.
தலைவி : திருவேங்கட மலைக்கு வடக்கேயுள்ள நாடு?
தோழி : அம்மலைக்கு வடக்கேயுள்ள நாடு இப்பொழுது வேறு மொழி வழங்கும் நாடாகக் கருதப்படுகிறது.
தலைவி : அதன் காரணம் என்ன?
தோழி : என்ன? அதற்கு வடக்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் தெற்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமல் போய்விட்டது. தெற்கேயாண்ட தமிழ் அரசர்கள் வடக்கேயுள்ள தமிழ் மக்கட்கு நல்ல செந்தமிழ்க்கல்வியை அளிக்கத் தவறிவிட்டனர். வடபகுதிகளில் தமிழ்ப்புலவர்கள் தோன்றித் தமிழை வளர்க்கப் பாடுபடவில்லை. இச்சமயத்தில் ஆரியமொழி பேசும் இனத்தார் அப்பகுதிகளில் குடியேறினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தம் மொழியையும் வழக்க ஒழுக்கங்களையும் நிலை நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்து தொண்டாற்றினர். அப் பகுதியிலிருந்த  தமிழர்கள், தம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டதோடு, தம் மொழியையும் சிதைத்து வழங்கினர். பின்னர் ஆரிய மொழியைப்படித்து அதன் இலக்கணத்தை ஏற்றுக் கொண்டனர். ஆகவே இன்று, அவர்கள் பேசும்தமிழ் நம் தமிழினின்றும் வேறுபடுகின்றது.
தலைவி : பிற மொழிச் சொற்களைக் கலந்து பிற மொழி இலக்கணத்தை ஏற்றுக் கொண்டதனால் அல்லவா இந்நிலைமை ஏற்பட்டுவிட்டது?
தோழி : ஆம் அம்ம! அப்பகுதியில் வழங்கும் மொழி நம் மொழியினின்றும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
தலைவி : இப்பொழுதுஎன்ன பெயர் பெற்றுள்ளது?
தோழி : என்ன பெயரி? ஒரு பெயரும் கிடையாது. தமிழ் என்று சொல்வதற்கும் தகுதியுடையதில்லை. வேறு மொழியாயும் இல்லை.
தலைவன்-தலைவி காதல் செய்தியிலும் தமிழ்க்காதலை இணைக்கும் பேராசிரியரின் தமிழ்க்காதலும் வரலாற்றை உணர்த்தியாவது நம்மை விழிப்படையச் செய்ய எண்ணும் அவரின் நுண்மாண் திறனும் போற்றுதற்கு  உரியன அல்லவா?
அகநானூற்றுப் பாடல் 31 இல் வரும் தமிழ்கெழுமூவர் காக்கும் என்னும் அடியை விளக்கித் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததாகத் திரித்துக் கூறுவோருக்குத் தமிழ் என்னும் சொல்லே நம் மொழியின் மூல முதன்மைச் சொல் என்பதைப் பின்வருமாறு  விளக்குகிறார்.
தமிழ் : இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காண்ப்படுகின்றதால், கி.பி.5ஆம் நூற்றாண்டில் தோன்றிய திராவிட என்ற சொல்லே தமிழ் என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப் பொய் என்று அறியலாம்.

தமிழ் என்பதே தமிழர்கள் தம் மொழிக்கு இட்ட பெயர்  என இனியேனும் பகைமுக ஆராய்ச்சியாளர்கள் உணர்வார்களாக!
இலக்கியச் சுவையில் மயங்கி விடாமல் இலக்கியச் சுவை வாயிலாகவும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு தொடர்பான காப்பு உணர்வையும் மீட்பு உணர்வையும் படிப்பவர்களிடையே  விதைத்தமையால்தான்  பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்க்காப்புத் தலைவராகத் தமிழர் உள்ளங்களில் வாழ்கிறார்.
பேராசிரியர் இலக்குவனார் வழி நின்று நாம்
தமிழிலேயே பேசுவோம்! தமிழிலேயே எழுதுவோம்!
தமிழ்வழிக்கல்வியே பெறுவோம்!
தமிழால் உலகாளுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
(இந் நவம்பர் 17 ஆம் நாள் தமிழ்ப்போராளி பேராசிரியரின் 103 ஆவது பிறந்த நாள்)

பேராசான் இலக்குவனாரே !

பேராசான் இலக்குவனாரே !

பதிவு செய்த நாள் : 17/11/2012
நட்பு இணைய இதழ்

அய்யா.வணக்கம்.
” நம் செந்தமிழைச் சிறை பிடிப்பதை விடுத்து
என்னைச் சிறை பிடியுங்கள் ; அதுவே நான் பெறும்
பேறு ஆகும் ” எனக்கூறி சிறைஏகிய மொழிப் போராளி
டாக்டர் இலக்குவனாரின் பிறந்தநாள் நாளை (17)அவர்
பற்றிய கவிதை ஒன்று தங்களுக்கும் நண்பர்களுக்கும்
அனுப்பியுள்ளேன்.
அவரைச் சிறை பிடித்தபோது புலவர் மணி
இளங்குமரனார் ” கன்னித் தமிழ் காக்க கால்நடைப்
பயணம் செய்தால் தமிழ்ப் புலவர் காலை வெயில் சுட்டு
விடும். பட்டுப் போகும் ஆட்சி எனச்சிறை பிடித்து
விட்டனரோ?” என்னும் பொருளில் எழுதியது என்
நினைவுக்கு வருகிறது.
பெ. ஆ. 134 தொ. ஆ. 2877 தி. ஆ. 2043
நளி ( கார்த்திகை ) 02 ( 17 – 11 – ‘ 12 )
நெஞ்சம் நினைக்கிறது !
சீர்பெற் றிலங்கும்நம் செந்தமிழ் வளர்ச்சிக்கு
வேர்ஆக இருந்தபன் னூறு அறிஞர்களில்
தூர்ஆக விருந்து துலங்கச் செய்தாரில்ஆணி
வேர்ஆக விளங்கிமொழிப் போராளி ஆனார்!
வாய்மை மேடு வளர்ந்த தூய்மையாளர்
காய்(மை )க் கருத்தைக் கனவிலும் நினையார்
பொய்மை மனத்தாரை புறமொதுக்கும் மெய்மையாளர்
தாய்மை குணம் தாங்கும் தகைமையாளர்!
வாழும்தம் வாழ்க்கை கீழ்ஆயினும் தாழார்
சூழும்புகழ்த் தமிழுக்கு சூழும் தாழ்வையோ
ஆழக்குழி புதைக்க வேழமென விளங்குவார்
தாழாத் தமிழ்க்குருதி பாலாகப் பாய்வதால்!
தொங்கிச் சுழலுமிப் பூ நிலத்தில்
தங்கி வாழும் மங்காத் தமிழர்பேசிய
இங்கித மானமுதன் இன்மொழி தமிழேஎன
மங்கிய அறிவுடையோர் மனதில் பதியவைத்தார்!
காசுக்காக இத்ழ்நடத்தும் காரிகை மனத்தாரிடையே
கூசாமல் நடத்தினாரே குறள் நெறியிதழ்
ஏசாமல் ஏசினர் ஏத்திபபிழைப் போர்சிலர்
காசு பெரிதல்ல கனித்தமிழே பெரிதென்றாரே !
இருநான்கு ஆண்டுகள்அப் பெருமகனுடன் நெருக்கம்
இருக்க மாயிருந்த இன்தமிழ் உணர்வைப்
பெருக்க வைத்தார்: பெருக்கிடச் சொன்னார்
உருக்கமுடன் அன்னார் உரைத்ததை மறவேன் !
எத்தனையோ அறிஞர்கள் சத்தனைய புத்தகங்கள்
மொத்தமாக எழுதினும் சித்தம் ஈர்க்கும்
சத்தானதொல் காப்பியத்தை சரிமொழி யாக்கம்
முத்தமிழ்ப் பேராசான் முழுதாய்ந்து எழுதினாரே !
” ஏல்”பல்கலைக் கழகத்திற்கே ஒல்காப்புகழ் நம்அண்ணா
தொல்கிழவன் காப்பியத்தை இல்கிழவன் படைத்தையே
நல்கி அவர்தம் நல்லறிவு பெருக்கவும்நம்
நந்தமிழ் வரலாற்றை நன்குணர வைத்தாரே !
நூறோடு ஈராண்டு நிறைவுற்ற பிறந்தநாள்
வேர்ஆக விருந்து விளங்குகின்றார் யார்?தமிழ்ப்
போராளி யாகவாழ்ந்து சீராகததமிழ் நெஞ்சக்குருதி
நீராகஇலங்கி ஓடும் பேராசான் இலக்குவனாரே !
என்றும் நினைக்கும் நெஞ்சம்
மா. கந்தையா – செயம்
மதுரை .

வெள்ளி, 16 நவம்பர், 2012

Israel airstrikes kill Hamas military commander

Israel airstrikes kill Hamas military commander

[TamilNet, Friday, 16 November 2012, 09:33 GMT]
The Israeli Defence Force (IDF) began on Wednesday a heavy bombardment of the Gaza strip with a targeted airstrike, killing Hamas military commander Ahmad al-Jabari and a passenger in his vehicle. The IDF cited his involvement in the hostage-taking of Gilad Shalit, an episode in the 2006 war on Lebanon, as its justification. Israel's "Operation Pillar of Cloud" signals the largest escalation in the conflict since 2008-9 Gaza invasions. “This name invokes the Hebrew nation's biblical pre-history - much as Sinhala-Buddhist nationalism conjures the Mahavamsa as an ideological tool in it’s very modern state military strategy,” comments Lorenzo Fiorito, an activist working with solidarity groups in Canada. “The present Gaza offensive has little to do with the individuals it has killed or with millenia-old founding myths - it has to do with the Palestinian claim to statehood,” he adds.

Within the range of Israeli public opinion, there are many explanations for the heavy assault. Israeli authorities point to a personal "revenge" motive in assassinating al-Jabari. The army lists Hamas rocket fire as deserving of retaliation. The Yeshiva World News blog reports, however, that Minister of Public Security Yitzchak Aharonovich stated Gazan rocket fire following the assassination was within the expected range of response.

For its part, Israeli daily Ha'aretz describes "another showy military action initiated by an outgoing government on the eve of an election....The external conflict helps a government strengthen its standing domestically because the public unites behind the army, and social and economic problems are edged off the national agenda." Economic questions have mobilized Israelis in mass civil disobedience against the present government over the last year.

The Ha'aretz column also pronounces the end of Ehud Olmert's electoral aspirations; he had been expected to announce his candidacy to supporters yesterday evening. Olmert presided over the last invasion of Gaza; that move presaged his electoral defeat.

Yet even this "left" interpretation of the Gaza bombings falls short. Though Operation Pillar of Cloud was synchronized to these domestic considerations, the relevant issue is that one week ago, the Palestinian Authority circulated a draft resolution at the United Nations General Assembly to consider Palestine an "observer state."

Palestinian officials considered the likely outcome to be 115 "Yes" votes against approximately 22 "No" votes, with 56 abstentions. Such a vote would implicitly recognize Palestinian statehood. The US and Israel then implied that retaliatory measures might be taken.

With the present military operation underway against Gaza, Israel has publicly mused over the likelihood of overthrowing West Bank-based Palestinian Authority President Mahmoud Abbas, if he continues with his plan to present the resolution to the UN General Assembly. According to Reuters, Finance Minister Yuval Steinitz told Israel Radio that "the diplomatic onslaught by (Abbas) is a strategic threat no less severe than (Hamas's) rockets. I am not in favor of crushing the Palestinian Authority but if there is no choice and it could unilaterally turn into a state that threatens Israel, we should not be afraid of tough steps."

Ironically, Israel's current threats might reinforce Abbas' public standing, while weakening his ability to act at the UN. Hamas official Salah Al-Bardaweel has also called for the overthrow of Abbas as a traitor to nationalist objectives. Abbas recently took a severe blow to his credibility among Palestinians by abdicating his own "right to return."

Commenting on this situation, Mr. Fiorito argues that “Tamils will find all of this painfully familiar - the blindness of ruling-nation progressives to their plight, the indiscriminate targeting of civilians as military authorities advise them to stay away from possible bombardment targets, the behind-the-scenes machinations among power brokers.”

“There is an important distinction, however. As the neighbouring Syrian conflict has become a focus for world powers, Russia's recent interest in the investigation into Palestinian leader Yasser Arafat's death may signal a possible geo-political realignment, of the kind absent for Tamils in 2009.”

“Palestinian self-determination is the key ingredient in Middle East politics today. The strategies employed against it, and the successes it may find at the UN, will both determine a great deal for the future of the Middle East and the course of world history,” he told TamilNet.

துப்பாக்கிக் குண்டுபுகாத் தாள் :வல்லுநர்கள் உருவாக்கம்

துப்பாக்கி க் குண்டுகளை த் தடுக்கும் பேப்பர் புல்லட் புரூப்: நிபுணர்கள் தயாரிப்பு
துப்பாக்கி குண்டுகளை தடுக்கும் பேப்பர் புல்லட் புரூப்: நிபுணர்கள் தயாரிப்பு
வாஷிங்டன், நவ. 16-
 
துப்பாக்கி குண்டுகளை துளைக்காத புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் உள்ளன. அவற்றை அணிந்து கொள்பவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாலும் துளைக்காது. தற்போது பேப்பர் போன்று மிகவும் மெலிதான புல்லட் புரூப் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இதை அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் மெட்டீரியல்ஸ் விஞ்ஞானிகளும், மசாசூசெட் தொழில்நுட்ப நிபுணர்களும் இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள மிக மெல்லிய புல்லட் புரூப் ரப்பர் போன்று வளைய கூடியதும், கண்ணாடி போல பளபளப்பாகவும் இருக்கும். உலோக கலவையாகும்.
 
இதே உலோக கலவைதான் செயற்கை கோள்கள் மற்றும் ஜெட் விமானங்களின் உட்புற சுவர்களில் பூசப்பட்டுள்ளது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது புதிய வகை புல்லட் புரூப் உருவாக்கப்பட்டுள்ளது. 

போர்க்குற்றம்: இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும்

போர்க்குற்றம்: இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும்

First Published : 16 November 2012 06:11 PM IST
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி மக்களை காக்க ஐ.நா. தவறி விட்டதாக அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், போர்க்குற்றம் குறித்து இலங்கையிடம் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டணி வியாழக்கிழமை கோரி உள்ளது.
கடந்த 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுடனான இலங்கை ராணுவத்தின் இறுதிக்கட்டப் போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் கடமையில் ஐ.நா. தோல்வியடைந்து விட்டதாக இலங்கைப் போர் குறித்து ஆய்வு நடத்திய ஐ.நா. நிபுணர்களின் அறிக்கை தெரிவித்தது. இதனை ஐ.நா.வும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையிடம் போர்க்குற்றம் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன், வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "நிபுணர்களின் ஆய்வறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போர் குறித்து சர்வதேச அளவில் விசாரணை தேவை. இலங்கை அரசே முக்கிய குற்றவாளியாக இருப்பதால், விசாரணையில் அந்நாடு ஈடுபடக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, இழப்பீடு, மறுகுடியமர்வு தேவை. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கப்படக்கூடாது என்று ஒருவரும் கூற மாட்டார்கள்' என்றார் சுமந்திரன்.

வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா. கூட்டத்தில் தமிழில் பேசிய கோ.க.மணி

வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா. அவை  கூட்டத்தில் தமிழில் பேசிய கோ.க.மணி
வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா.சபை கூட்டத்தில் தமிழில் பேசிய ஜி.கே.மணி
சென்னை, நவ.16-

ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், லண்டனில் நடைபெற்ற அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் உலகத்தமிழர் மாநாட்டிலும் கலந்து கொண்டு திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நானும், அருளும் கலந்து கொண்டோம். அதில் வேட்டி-சட்டை அணிந்து கொண்டு தமிழில் பேச வேண்டுமென்று கேட்ட போது அனுமதி அளிக்க தயங்கி பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தமிழில் பேச அனுமதி அளித்தனர். அப்போது இலங்கையின் பூர்வீக குடிமக்களாக வாழ்ந்து வந்த தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக இலங்கை அரசு நடத்தி வருகிறது.

அப்பாவி தமிழ் மக்களை இலங்கை அரசு கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் காணாமல் போய் உள்ளனர். இதை ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைய வல்லுநர் குழு அங்கு சென்று ஆய்வு செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு மனித உரிமை மீறல் நடைபெற்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது.

உலக அளவில் தன் நாட்டு மக்களையே இலங்கை அரசு அழித்து வருவது எங்கும் நடந்திராத மனித உரிமை மீறலாகும். எனவேதான் சுதந்திரமான சர்வதேச போர் குற்ற விசாரணை இலங்கையின் மீது நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று நான் வலியுறுத்தி தமிழில் பேசினேன். இதை கேட்ட வெள்ளைக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள், அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் நீங்கள் தமிழில் உணர்வுப்பூர்வமாக பேசியதும், எங்களுக்கு தெரியாத நிறைய செய்திகளை எடுத்துச் சொன்னதும் எங்களை சிந்திக்க வைத்துள்ளது.

இதில் உண்மை இருப்பதை உணர்ந்து எங்களை ஊக்கப்படுத்தி உள்ளது என்றும், அதோடு வேட்டி-சட்டை அணிந்து கொண்டு ஐ.நா.சபையில் தமிழில் பேசிய முதலாவது நபர் நீங்கள்தான். அதிலும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் தமிழில் பேசியிருப்பது எங்களை வெகுவாக ஊக்கப்படுத்தியுள்ளது என்று பாராட்டினர்.

இது தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெரும் பேராக கருதினேன். நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் எல்லா கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று உலக தமிழ் மாநாட்டுக்கு வந்தவர்கள் கூறினார்கள்.

உலக தமிழக தலைவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது பா.ம.க.வின் வேண்டுகோள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விமான நிலையத்தில் ஜி.கே.மணியை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி தலைமையில் வரவேற்றனர்.