புதன், 2 ஜனவரி, 2013

சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி

 சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி


சென்னை: சூரியனுக்கு அருகே பூமி செல்லும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதன் காரணமாக, அவை சூரியனுக்கு மிக அருகிலும், மிக தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுற்றி வரும். இதன்படி, சூரியனை, பூமி நெருங்கும் நிகழ்வு நாளை (ஜனவரி 2) நடக்கவுள்ளது. அப்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 14.7 கோடி கி.மீ., ஆக இருக்கும். எனினும் இதன் காரணமாக பூமியின் தட்பவெப்ப நிலையில், எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக