வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மொரீசியசில் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பள்ளி தொடக்கவிழா

மொரீசியசில் தமிழ் ப் பள்ளி திறப்பு விழா

பிப்ரவரி 14,2013  IST

Photo Gallery 
Photo Gallery 
 
போர்ட் லூயிஸ் : மொரீசியஸ் நாட்டில், தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் பிப்ரவரி 03ம் தேதி தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மொரீசியசில் வாழும் முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் தனது உரையில், பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் விரித்துரைத்துள்ளார். கேசவன் சொர்ணம், பள்ளிக்கு இலக்குவனாரின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார். செமன், தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார்.மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை இந்த நன்முயற்சியைப் பாராட்டினார்.
- தினமலர் வாசகர் மறைமலை இலக்குவனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக