திங்கள், 25 மார்ச், 2013

மத்திய அரசு தமிழர்களுக்குவஞ்சகம் இழைத்துவிட்டது: டி. இராசா

மத்திய அரசு தமிழர்களுக்குத்

துரோகம் இழைத்துவிட்டது: டி.

இராசா

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது: டி.ராஜா
வேலூர், மார்ச் 24: இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.
வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 25 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானத்தில் திருத்தம் செய்யாமல், வாய்மொழியாக மட்டுமே சில கருத்துகளை முன்வைத்தது.
எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கோரிக்கை வைத்தபோதும், நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பியபோதும், மத்திய அரசுக்கு அதை கண்டுகொள்ளாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
தமிழகத்தில் எழுச்சிமிக்க போராட்டத்தை மாணவர்கள் நடத்தி, சர்வதேச அளவில் இலங்கை பிரச்னைக்கு வலிமை சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.
இப் போராட்டத்தை ஒருமுகப்படுத்த மாணவர்கள் அடுத்தக்கட்ட யோசனை செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீக்குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போராட்டத்துக்கு தீர்வாக அமையாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக போராட வேண்டும். இலங்கை மீது இந்தியாவே தீர்மானம் முன்மொழிந்திருந்தால் அந்தத் தீர்மானம் மிக வலிமையாக இருந்திருக்கும் என்றார் ராஜா.கூறினார்.
வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 25 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானத்தில் திருத்தம் செய்யாமல், வாய்மொழியாக மட்டுமே சில கருத்துகளை முன்வைத்தது.
எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கோரிக்கை வைத்தபோதும், நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பியபோதும், மத்திய அரசுக்கு அதை கண்டுகொள்ளாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
தமிழகத்தில் எழுச்சிமிக்க போராட்டத்தை மாணவர்கள் நடத்தி, சர்வதேச அளவில் இலங்கை பிரச்னைக்கு வலிமை சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.
இப் போராட்டத்தை ஒருமுகப்படுத்த மாணவர்கள் அடுத்தக்கட்ட யோசனை செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீக்குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போராட்டத்துக்கு தீர்வாக அமையாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக போராட வேண்டும். இலங்கை மீது இந்தியாவே தீர்மானம் முன்மொழிந்திருந்தால் அந்தத் தீர்மானம் மிக வலிமையாக இருந்திருக்கும் என்றார் ராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக