புதன், 20 மார்ச், 2013

நாய் கழுத்தில் இராசபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராகப் புதுமைப் போராட்டம்

நாய் கழுத்தில் ராஜபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராக நூதன போராட்டம்





நாய் கழுத்தில் இராசபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராக நூதன ப் போராட்டம்
 
 
குசிலியம்பாறை, மார்ச்.20-

குஜிலியம்பாறை அருகே இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு எதிராக வர்த்தகர்கள் நூதன எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அதிபரை கண்டித்தும் பல்வேறு தரப்பினர், தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம், பேரணி, மறியல் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையம் பகுதியில் அனைத்து கடைகள் முன்பும் தமிழீன துரோகி ராஜபச்சே ஒழிக என்ற வாசகங்களும் மேலும் ராஜபச்சேவுக்கு எதிரான வாசகங்களும் அதற்கு துணை போகும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மற்றொரு சுவாரசிய போராட்டமாக சாலைகளில் சுற்றி திரியும் நாய்களின் கழுத்துகளில் ராஜபச்சேவுக்கு எதிரான வாசகங்களை தொங்க விட்டுள்ளனர்.

சாலையை கடந்து செல்பவர்களும், பஸ்சில் பயணம் செய்பவர்களும் ஒரு நிமிடம் இறங்கி இந்த வினோத போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து செல்கின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக