திங்கள், 11 மார்ச், 2013

மீன்வள ப் பல்கலையின் முதல் துணைவேந்தராக ப் பாசுகரன் நியமனம்

மீன்வள ப் பல்கலையின் முதல் துணைவேந்தராக ப்  பாசுகரன் நியமனம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பாஸ்கரன் மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
சென்னையில் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் இயக்குநராக (தொழில்நுட்பம்) பொறுப்பில் உள்ளார், பாஸ்கரன் மணிமாறன். அவர் மூன்று ஆண்டுகள் அல்லது எழுபது வயதை எட்டும் வரையில் துணைவேந்தர் பொறுப்பில் இருப்பார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக