திங்கள், 25 மார்ச், 2013

திமுக செயற்குழு: அழகிரி புறக்கணிப்பு

திமுக செயற்குழு: அழகிரி புறக்கணிப்பு

திமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் சூழ்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தென்மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
நேற்று இரவு வரை சென்னையில் இருந்த அவர் இன்று காலை மதுரைக்கு கிளம்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் மு.கருணாநிதி அறிவித்ததில், அதிருப்தியில் இருந்தார் அழகிரி. தன்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறியிருந்த அழகிரி, மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் சற்று நெருக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் செயற்குழுவில் பங்கேற்பாரா, மாட்டாரா என்று பல்வேறு யூகங்கள் உலவி வந்த நிலையில், இன்று காலை அவர் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு மதுரைக்குச் சென்றார்.
அதே நேரம் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மன்னன், தளபதி உள்ளிட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக