வியாழன், 4 ஏப்ரல், 2013

காற்றின் மாசினால் ஒரே ஆண்டில் 12 நூறாயிரம் சீனர்கள் பலி

காற்றின் மாசினால் ஒரே ஆண்டில் 12  நூறாயிரம் சீனர்கள் பலி
 
காற்றின் மாசினால் ஒரே ஆண்டில் 12 லட்சம் சீனர்கள் பலி
பீஜிங், ஏப். 4-

சீனாவின் தலைநகரான பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் காற்றில் பெருமளவிற்கு மாசு கலந்துள்ளது. 'பி.எம்.2.5 துகள்கள்' என அழைக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத நச்சு துகள்கள் காற்றில் கலந்திருப்பதால் பெருநகரங்களில் வசிக்கும் சீனர்களில் பலர், சுவாசிக்கும் முகமூடிகளை அணிந்தபடி தான் வெளியே செல்கின்றனர்.

எனினும், சுவாசத்தின் மூலம் இந்த துகள்கள் நுரையீரலுக்குள் ஆழ்ந்து ஊடுருவி தங்கிவிடுவதால் ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோயினால் சீனர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் சீனர்கள் காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சீனாவில் இவ்வாரம் தாக்கல் செய்யப்பட்ட வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

உணவு சார்ந்த தீமைகள், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல் ஆகியவற்றிற்கு அடுத்த 4வது இடத்தில் காற்று மாசினால் ஏற்படும் நோய்கள் சீனர்களின் இறப்புக்கு காரணமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக