வியாழன், 11 ஏப்ரல், 2013

கடவுச் சொல்லை நினைத்தாலே கணிணியை இயக்கும்


கடவுச் சொல்லை  நினைத்தாலே  கணிணியை இயக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
டோக்கியோ, ஏப். 11-

ஒவ்வொரு இணையதள தொடர்பிற்கும், ஒவ்வொரு பாஸ்வேர்ட் உபயோகப்படுத்தப்படும். சிலர் பாதுகாப்பு கருதி அடிக்கடி தங்களின் பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டிருப்பார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் புதிய தொழில்நுட்பமாக பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும். 

யு.சி.பெர்க்லி ஸ்கூல் என்ற ஆராய்ச்சி மையம், இதுகுறித்த செய்முறையை நடத்தி காட்டியுள்ளது. இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள், புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.

சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது. ஆனால் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக