திங்கள், 22 ஏப்ரல், 2013

காந்தியடிகளுக்குத் தமிழ் கற்பித்தவர் வேதியன்

காந்தியடிகளுக்குத் தமிழ் கற்பித்தவர் வேதியன் பிள்ளை-முதுபெரும் புலவர் தென்மொழிஞானபண்டிதர் தகவல்-தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுக்குத் தமிழ் கற்பித்தவர் யார் எனும் செய்தி இந்நாள்வரை அறியப்படாமல் இருந்தது.அவர் வேதியன் பிள்ளை என்பதனையும் அவர்தம் புதல்வர் தெட்சிணாமூர்த்தி கோவையில் வாழ்ந்துவரும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்(தமது நண்பர்) என்பதையும் முதுபெரும் புலவர் தென்மொழிஞானபண்டிதர், நேற்று அய்யாவைச் சந்தித்தபோது தெரிவித்தார்.அடிகளாரோடு வேதியன் பிள்ளை எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தையும் காட்டினார்.வேதியன் பிள்ளைக்கு மற்றொரு சிறப்பு அவர் தாயுமானவ அடிகளின் ஏழாம் தலைமுறைப் பேரன் என்பதாகும்.மேலும் பல செய்திகளை உடனே நாளிதழ்களுக்குத் தெரியப்படுத்தும் பொறுப்பைப் புலவர் அய்யாவின் புதல்வர்,மனிதம் வெளியீட்டக உரிமையாளர் திரு.அக்னி சுப்பிரமணியம் அவர்கள் மேற்கொள்வார்.
Like · ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக