புதன், 19 ஜூன், 2013

பெண்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்!


பெண்களுக்கு த் தன்னம்பிக்கை வேண்டும்!

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், உயர் பொறுப்புகளை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறும், ஏ.கே. சுகுமாரன்: நான், காம்பை சொல்யூஷன் நிறுவனத்தில், எச்.ஆர்., கன்சல்டன்டாக பணியாற்றுகிறேன். பெண்களும், ஆண்களும், ஒரே மாதிரி கல்வி கற்கின்றனர்; ஒரே மாதிரி வேலை தேடுகின்றனர். ஆனால், வேலை கிடைத்த பின், அந்த வேலையை தக்க வைப்பதிலோ அல்லது அந்நிறுவனத்தின் உயர் பொறுப்புகளை அடைவதிலோ, பெண்கள் குறைவாகவே உள்ளனர். சாப்ட்வேர், தகவல் தொழில்நுட்பம், மருத் துவ துறை, வங்கி மற்றும் நிதி துறை, ரீடெயில் என, பெண்கள் இன்று அனைத்து துறைகளில் சாதித்தாலும், ஏன் உயர் பதவியை எட்ட முடிய வில்லை? சமீபத்திய சர்வேயில், இந்தியாவில் உயர் அதிகாரிகளாக நிலைத்து நிற்க கூடிய பெண்கள் வெறும், 19 சதவீதம் மட்டுமே என, தெரிய வந்துள்ளது. 
படித்த துறையில் வேலை கிடைக்காத பட்சத்தில், மற்ற துறையிலும் பிரகாசிக்கும் வாய்ப்பு, இப்புதிய தலைமுறை பெண்களுக்கு, "பிளஸ்' என்றாலும், பணி செய்யும் துறை பற்றி, மேலும் அறிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதிலோ, அது பற்றிய கல்விக்கோ, பயிற்சிக்கோ, அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள், பல பெண்களிடம் இருப்பதில்லை. அத னால், பெண்கள் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, தாங்கள் விரும்பும் வேலை சார்ந்த துறை மற்றும் அதன் வளர்ச்சி குறித்த தகவல்களை, "அப்டேட்' செய்வது நல்லது. இதனால், செய்யும் பணிக்கு இன்னும் தகுதியுள்ளவர்களாக, உயர்த்திக் கொள்ள முடியும். எனக்கு தன்னம்பிக்கை இல்லை என, தன்னைத் தான் சுயபரிசோதனை செய்து, தன்னம்பிக்கையை திடீரென பெற முடி யாது. ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இருந்தால், "பாசிடிவான' விஷயங்கள் அதிகரித்து, "நெகடிவான' விஷயங்கள் குறையும். பெண்களிடம் தன்னம்பிக்கை இருந்தால், இன்னும் அதிகப்படியான உயர் பதவிகளை அடைய முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக