சனி, 13 ஜூலை, 2013

பெண்களின் ஆட்சி!

பெண்களின் ஆட்சி!

ஊராட்சி மன்ற ப் பணியை ச் சிறப்பாக ச் செய்ததற்காக, மன்மோகன் சிங் மற்றும் ஜெயலலிதாவிடம் பரிசு பெற்ற, சுதா மணிரத்தினம்: நான், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள நாட்டார்மங்கலத்தின், ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறேன். பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றியதால், ஊருக்கு, பல தொண்டுகள் செய்து வந்தேன். ஊர் மக்களின் வற்புறுத்தலால், ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து, 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவியாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். எங்கள் ஊராட்சியில், 100 சதவீதமும் பெண் உறுப்பினர்களே என்பது, கூடுதல் சிறப்பு. பெண்களை உள்ளாட்சி பொறுப்புகளில் அமர்த்திவிட்டு, "பெண்களுக்கு எதுவும் தெரியாது' என்று தாங்களாகவே, "தலைவர்' என, தம்பட்டம் அடிக்கும் அகம்பாவ ஆண்களின் தலையில், குட்டுகிற வகையில் செயல்பட வேண்டும் என, தீர்மானித்து செயல்பட்டேன்.மக்கும் குப்பை, மக்காத குப்பை என, மக்களை வீடுகளிலேயே பிரிக்க வைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தேன். அரசு உதவியுடன் குடிசைகளை அகற்றி, "கான்கிரீட்' வீடு மற்றும் கழிப்பறைகளை கட்டித் தந்தேன். சுய உதவி குழு மூலம், பெண்களை ஒன்றிணைத்து, நிரந்தர வேலைவாய்ப்பிற்கான பயிற்சி தந்து, சுயதொழில் துவங்கவும் உதவினேன். இதனால், பெண்களின் திறன் வளர்ந்ததோடு, அவர்களின் குடும்ப வருமானத்தையும், அதிகரிக்கச் செய்தேன். நான் எடுக்கும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும், ஊர் மக்கள், நன்கு ஒத்துழைத்தனர். இதனால், கிராம நிர்வாகம் மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்காக, "பஞ்சாயத் சஷாக்திகரன் புரஸ்கார்' என்ற விருதை, பிரதமர் மன்மோகன் சிங்கிடமும்; சமீபத்தில், சிறந்த ஊராட்சிக்கான விருதை, ஜெயலலிதாவிடமும் பெற்றேன். டில்லியில் செயல்படும், "இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்' நிறுவனத்தின், "சிறந்த பெண் ஊராட்சித் தலைவர்' விருதும்; மாநில அளவில் வழங்கப்படும், "கிராமிய ரத்னா விருது'ம் பெற்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக