செவ்வாய், 30 ஜூலை, 2013

மனத்துணிவால் தற்கொலையைத் தவிர்க்கலாம்!

மனத்துணிவால் தற்கொலையை த் தவிர்க்கலாம்!

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற, எதிர்மறை மனநிலை கொண்டோருக்கு, இலவச ஆலோசனை வழங்கும், மன நல மருத்துவர் இலட்சுமி: தற்கொலைக்கு முயற்சிப்போரின் பிரச்னைக்கு தீர்வு வழங்கவும், இலவச ஆலோசனை வழங்கவும், "சினேகா' என்ற அமைப்பை, 26 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன். இங்கு, 24 மணி நேரமும், எங்கள் தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றுவதால், எப்போதும் ஆலோசனை பெறலாம். உறவுகளில் குழப்பம், தேர்வில் தோல்வி, குடும்பத்தில் பிரச்னை என, தமிழகத்தில் மட்டும், கடந்த ஆண்டு, 16,927 பேர் தற்கொலை செய்துள்ளதாக, சமீபத்தில் வெளியான, தேசிய குற்றவியல் அறிக்கை கூறுகிறது; ஆந்திராவில், 14,238 பேர், கர்நாடகாவில், 12,753 என, பட்டியல் நீழ்கிறது. தற்கொலையை, யாருமே விரும்பி செய்வதில்லை. "என் பிரச்னையை, காது கொடுத்து கேட்க, யாரும் இல்லையே' என்ற குற்ற உணர்ச்சியால் தான், தற்காலிக பிரச்னைகளுக்கு கூட, தற்கொலை தான் நிரந்தர தீர்வு என, அவசர கோலத்தில், விபரீத முடிவு எடுக்கின்றனர். பின், மரண படுக்கையில், தன் முடிவுக்கு வருத்தப்பட்டு, "நாம் பிழைக்க மாட்டோமா' என, ஏங்குவோரும் உண்டு. தீவிர மன அழுத்தத்தில், தற்கொலை செய்ய முயற்சிக்கும், 80 சதவீத பேர், தான் தற்கொலை செய்யப் போவதை, நெருங்கியவரிடம் சொல்ல முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் என்ன சொல்ல வருகிறார் என, முற்றிலும் கேட்காமல், "இது என்ன பெரிய கஷ்டம்' என, நெருங்கியவர், உதாசீனம் படுத்துவதாலே, அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன. இளைய தலைமுறையினர், வேலை, படிப்பு, சொந்த விஷயம், கேளிக்கை, காதல் என, ஆசைப்பட்ட நிமிடத்திலேயே அனைத்தும் கிடைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அப்படி நடக்காவிட்டால், உடனே தற்கொலை செய்கின்றனர். ஏமாற்றங்களை தாங்கும் மனப்பக்குவமும், தைரியமும் இருந்தால், தற்கொலையை தவிர்க்கலாம். தொடர்புக்கு: 044-2624 0050,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக