திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மாற்றுத்திறனாளியின் 2,467 அ.கோ./கி.மீ., மிதிவண்டிப் பரப்புரை

விவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளியின் 2,467  அ.கோ./கி.மீ., மிதிவண்டிப் பயணம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_788754.jpg 

கும்மிடிப்பூண்டி:விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு, இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தும் நோக்கில், கோல்கட்டா முதல் கன்னியாகுமரி வரை, மூன்று சக்கர கைவண்டியில் 2467 கி.மீ., பயணத்தை மேற்கொண்டு வரும் மாற்று திறனாளிக்கு வழி எங்கும்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த இரத்தினம், பூதங்கம் தம்பதியரின் மகன் தங்க இராசா, 32; மாற்றுத்திறனாளியான இவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கேந்திர தகவல் மையத்தின், ஊழியராக பணியாற்றி வருகிறார்.விவேகானந்தரின் சிந்தனைகள் மீது இருந்த உன்னத ஈடுபாட்டின் வெளிப்பாடாக, அதை இந்திய இளைஞர்களிடம் கொண்டு சென்று எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பது, அவரின் தீராத வேட்கையாக இருந்தது.அதன் எதிரொலியாக கோல்கட்டாவில் இருந்து, கன்னியாகுமரி வரை, தன் மூன்று சக்கர கைவண்டியில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தில் விவேகானந்தர் பிறப்பிடமான பெல்லுார்முட் பகுதியில் இருந்து, ஒடிசா, ஆந்திரா வழியாக கன்னியாகுமரி வரையிலான 2467 கி.மீ., தூர பயணத்தை, வருகிற செப்டம்பர் மாதம், 11ம் தேதி அன்று முடிக்க திட்டமிட்டுள்ளார்.பயணத்தின் முக்கிய நோக்கமாக, மேற்கண்ட மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விவேகானந்தரின் சிந்தனைகள் குறித்து, அந்தந்த இடத்திற்கு ஏற்றபடி ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர மாநில பயணங்களை முடித்து, நேற்று காலை, தமிழக எல்லைப் பகுதியான, கும்மிடிப்பூண்டிக்குள் நுழைந்தபோது, அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயணத்தின் அனுபவம் குறித்து, தங்கராஜா கூறுகையில், பயணத்தின் களைப்பு தெரியாதபடி மேற்கு வங்கம், ஓடிசா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றைய இளைஞர் சமுதாயம் கட்டாயம், விவேகானந்தரின் வழியை பின்பற்ற வேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகள் செழிக்க, என் பயணம் மேலும் தொடரும் என, தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக