ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகசுட் 30 கடைசி

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகசுட் 30 கடைசி

சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறையில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைகளில் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வகையிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
போட்டிக்குரிய நூல்களின் விண்ணப்பங்களை நிறைவு செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 30-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2 கருத்துகள்:

  1. அன்பார்ந்த அய்யா, இந்த செய்திக் குறிப்பின் நகல் அல்லது எண் கிடைக்குமா?
    நண்பர் ஒருவருக்குத் தகவல் தெரிவித்த போது என்னிடம் கேட்டார். உதவ முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்
    http://govt-tn-tdd.s3.amazonaws.com/files/press-releases/sirantha-nool-vinnappam.pdf இணைப்பைக் காண வேண்டுகிறேன்.

    http://thiru2050.blogspot.in/2013/08/blog-post_1661.html வலை ப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு