வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இறைச்சி உணவு இறைவனுக்கு இசைவா?

இறைச்சி உணவு இறைவனுக்கு  இசைவா?


வள்ளலாரின் போதனைக்கு ஏற்ப, இறைச்சி உணவை த் தவிர்க்க, அரசை எதிர்த்து ச் சட்ட ப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற,இராமலட்சுமி: நான், நெல்லை, புளியங்குடியை ச் சேர்ந்தவள். திருமணமாகி, மதுரையில் வசிக்கிறேன். கணவர், வள்ளலாரை பின்பற்றுபவர். வள்ளலாரின் ஆன்மிக தத்துவங்கள் மற்றும் கருத்துகளை, தினமும் என்னிடம் பேசுவார். மனைவிக்கு, கணவன் மாத ஊதியம் தரவேண்டும் என்ற, உச்ச நீதிமன்றத்தின் பொது உத்தரவை கூடமதித்து, ஒவ்வொரு மாதமும், 5,000 சம்பளம் தரும், நல்ல பண்பாளர். இதனால், நானும் வள்ளலாரை பின்பற்றி, அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். வள்ளலாரின் கருத்துகளை மக்களிடம் எடுத்துரைக்க, "கருணை சபை சாலை' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தேன். "எல்லா மதங்களும், உயிர்களிடத்தில் அன்பு செலுத்தவே போதிக்கின்றன. எனவே, பொது மக்கள் இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்' என, போதித்தேன். இதற்காக, "இறைச்சி உணவு இறைவனுக்கு சம்மதமா?' என்ற நூலை, 2011ம் ஆண்டு வெளியிட்டேன். தனி மனித உணவு பழக்கத்தில் தலையிடும் உரிமை, எனக்கு இல்லாததால், அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தேன். ஏனெனில், 2010ம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டிற்கு வந்தவர்களின் விருந்துக்காக, ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டன. "மக்கள் வரி பணத்தில் செயல்படும் அரசு, அசைவ உணவுகளை வழங்குவது தவறு. இனி, சைவ உணவுகளை மட்டுமே வழங்க உத்தரவிட வேண்டும்' என, மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். இதற்கு நீதிபதி பாராட்டினாலும், தகுந்த பலன் கிடைக்காததால், மதுரையில் உண்ணாவிரதம் இருந்தேன். என் கோரிக்கை அடங்கிய மனுவை, தற்போதைய முதல்வரின் தனிப்பிரிவிற்கு, தொடர்ந்து அனுப்பினேன். இதன் பயனாக, தமிழ் வளர்ச்சி துறையில் இருந்து, "உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. அரசு விழாக்களில் சைவ உணவுகளே வழங்கப்படும்' என, பதில் கடிதம் கிடைத்ததால், வெற்றியடைந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக