வியாழன், 19 செப்டம்பர், 2013

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம்!

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம்!


காது கேளாத, வாய் பேச முடியாத, 3,500 மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச தொழில் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்த, முரளி: நான், செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த மாற்றுத் திறனாளி. திருநெல்வேலியில் உள்ள, சிறப்பு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே, "டேபிள் டென்னிஸ்' போட்டியில், தேசிய அளவில் விளையாடி, பல வெற்றிகளை பெற்றேன். "ஸ்போட்ஸ் கோட்டா' மூலம், ஊட்டியில், "இந்துஸ்தான் போட்டோ பிலிம்' தொழிற்சாலையில், வேலை கிடைத்தது.
மாற்றுத் திறனாளியான என் மனைவிக்கும், அத்தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. நாங்கள் இருவரும், கிடைக்கும் ஓய்வு நேரங்களில், செவி மற்றும் பேச்சு திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளிடம், சைகை மொழியில், எப்படி பழக வேண்டும் என, மற்ற தொழிலாளர்களுக்கு, சொல்லி கொடுத்தோம்.செவி மற்றும் பேச்சு திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக, முழுநேரமும் உழைக்க எண்ணி, 2002ல், நானும், என் மனைவியும், விருப்ப ஓய்வு பெற்றோம். 2004ல், "டெப் லீடர்ஸ்' எனும் அமைப்பை, கோவை, சாய்பாபா காலனியில் ஆரம்பித்து, நடத்தி வருகிறேன். செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான, கல்லூரி பாடங்கள், ஆங்கிலத்தில் இருப்பதால், அவர்கள், பள்ளி படிப்போடு, வீடுகளில் முடங்கி விடுவர். அவர்களுக்கு, எளிய முறையில், ஆங்கிலம் கற்று தந்து, மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறோம். செவி மற்றும் பேச்சு திறன் இல்லாததால், தாங்கள் எங்கே இருக்கிறோம் என, மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க, மொபைலில், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கற்றுத் தருகிறோம். மேலும், தொழில் ரீதியாக, டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர், சமையல் போன்ற பயிற்சி
களையும், இலவசமாக வழங்குகிறோம். கடந்த, 10 ஆண்டுகளில், 3,500 பேருக்கு தொழிற் பயிற்சியளித்ததுடன், கோவையை சுற்றியுள்ள பல்வேறு நிறுவனங்களில், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளேன். செவிதிறன் குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவர்களுக்கும், சிறப்பு தொழிற் பயிற்சி வழங்குகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக