செவ்வாய், 15 அக்டோபர், 2013

குன்னூரில் ஆனைமலை பல்லி: ஆய்வு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82668320131015004011.jpg

குன்னூரில் சிக்கிய "ஆனைமலை பல்லி': அபூர்வ உயிரினம் குறித்து ஆய்வு
 
ஊட்டி: அரிய வகை பல்லியினம் குறித்த ஆய்வில், ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில், அரிய வகை பல்லியினம், ஒருவரது வீட்டு தோட்டத்தில் இருந்துள்ளது. அதை, ஊட்டி அரசுக் கலை கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள், ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரி பேராசிரியர்கள் சனில், கண்ணன், மாணவர் மோகன் கூறியதாவது: ஊர்வன வகையை சேர்ந்த இப்பல்லியினம், "ஹெபிடெக்டைல்ஸ்' வகையை சார்ந்தது. இது, "ஆனைமலை பல்லி' எனவும் அழைக்கப்படுகிறது. "ஹெபிடெக்டைல்ஸ் ஆனைமலையன் மற்றும் ஹெபிடெக்டைல்ஸ் பிரினெட்டஸ்' என, இரு பல்லியினங்களின் சிற்றினத்தில் இருந்து, வேறுபட்டு காணப்படுகின்றன.

இதன் வால் மற்றும் உருவ அமைப்பு, சற்று வேறுபட்டு காணப்படுவதால், புதிய சிற்றினமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவில் உத்வேகத்துடன், சிலந்தி மற்றும் பல வகை பூச்சிகளை விரும்பி உட்கொள்ளும் இப்பல்லிகள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இவை பெரும்பாலும், ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா, ஆப்பரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் காணப்படுகின்றன; 7.5 முதல், 15 செ.மீ., வளரக் கூடியவை. இவற்றால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக