சனி, 12 அக்டோபர், 2013

பாலச்சந்திரனை இலங்கைப் படை சுட்டுக் கொன்றது:இதழாளர்கள் மாநாடு

பாலச்சந்திரனை இலங்கை இராணுவம்தான் சுட்டு க் கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் சுட்டு கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
கொழும்பு, அக். 12–
சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரையாற்றும் போது கூறியதாவது:–
2009 மே மாதம் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே, படுகொலை செய்தனர்.
போர் குற்றவாளிகளான இலங்கைப் படையினர் படுகொலைகளை நிறைவேற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது.
அண்மையில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ராணுவப் புலனாய்வு பிரிவு குறித்து அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்று கருதுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலை தீவு, நேபால் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக