வெள்ளி, 11 அக்டோபர், 2013

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை

  கருவுற்ற பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை: அமெரிக்க மருத்துவர்கள் அருந்திறல்
கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
நியூயார்க், அக். 11–
கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன் செய்து அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். மேலும் உயிருக்கு ஆபத்து விளையும் நிலையும் இருந்தது.
எனவே, தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய ஆபரேசன் நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் வளரும் கருக்குழந்தைக்கு மிக மயிரிழையால் ஆன வயர் மற்றும் மிக மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் துல்லியமாக ஆபரேசன் நடத்தப்பட்டது. இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக