வியாழன், 17 அக்டோபர், 2013

ஒரே மேடையில் தோன்றிய ஒன்பது திருக்குறள் செல்வர்கள்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_828284.jpg

ஒரே மேடையில் தோன்றிய
 ஒன்பது திருக்குறள் செல்வர்கள்



காரைக்குடி:காரைக்குடியில்,வள்ளுவர் பேரவை நடத்திய நிகழ்ச்சியில், ஒன்பது திருக்குறள் செல்வர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், திருக்குறளின் 1330 குறள்களையும், எப்படி கேட்டாலும், அடி பிறழாமல், ஒப்பிப்பவர் "திருக்குறள் செல்வர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசால் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு விருது பெற்ற, 10 பேருக்கு, வள்ளுவர் பேரவை சார்பில், விருது வழங்கும் விழா, காரைக்குடி கண்ண தாசன் மணிமண்டபத்தில் நடந்தது. இதில், தற்போது லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் திலீபன், கலைவாணி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நாச்சாள், சுவாதி, சிவரஞ்சனி, ஒன்பதாம் வகுப்பு மாணவி பானுப்பிரியா,10ம் வகுப்பு ஸ்ரீவர்ஷா, ஐந்தாம் வகுப்பு மாணவி சரோஜா, ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ராம அபிராமி, மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும் மணிமேகலை ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி விருதுகளை பெற்றனர். திருச்சியில் பிளஸ் 1 படிக்கும், நிவேதினி கென்சியா மட்டும் பங்கேற்கவில்லை. எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் அய்க்கண், கிட் அண்ட் கிம் டெக்னிக்கல் இயக்குனர் ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினர். முன்னதாக அதன் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். வள்ளுவர் பேரவை கவுரவ ஆலோசகர் சேவு முத்துக்குமார், ரோட்டரி ஹெரிடேஜ் சங்க தலைவர் முத்துக்குமார், வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன்,துணை தலைவர் ஸ்டீபன் மைக்கேல்ராஜ் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக