சனி, 9 பிப்ரவரி, 2013

மாமதுரை போற்றுவோம் - மதுரை நாள்


மாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா? இன்று மாமதுரை போற்றுவோம்
இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
"பதியெழுவறியா பழங்குடி மூதூர்' என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? தற்போதைய பழமொழியில் கூறப்படும் "மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், "அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.

மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், "அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் "நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், "அல்லங்காடி' எனப்பட்டன. "மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.

மதுரையும், நிகழ்வுகளும்...


* தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, உயரதிகாரிகள் சிலர், "வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நகரமைப்பை அறிந்து வரவேண்டும்,' என்றனர். அதற்கு அவரோ,"மதுரைக்கு சென்று பாருங்கள். அதைவிட சிறந்த நகரமைப்பு எங்குள்ளது,' என்றார்.
*சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை தான். கடைசியாக தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கம் (1906), மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் இன்றும் செயல்பட்டு வருகிறது.


*நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என சிவபெருமானை எதிர்த்து போரிட்ட நக்கீரருக்கு காட்சி தந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான்.


* அவ்வையாரின் அறிவை சோதிக்க, "சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா' என முருகப்பெருமான் கேட்டதும், மதுரையில் தான்.


*"கணவனை கள்வன் என நினைத்து கொன்ற' பாண்டிய மன்னனையும், மதுரையையும் சபித்து தீக்கிரையாக்கினார், கண்ணகி.


*முருகன் அருளால் குமரகுருபரர் பேசும் திறன் பெற்று, பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார்.


* திருவாதவூரார் மாணிக்கவாசகர் என பெயர் பெற்றதும், இங்கே தான்.

மதுரை அடடே!


பழமையும், புதுமையும் கலந்த நகரான நம்ம மதுரையில், நாம் அறிந்த, கண்ட எத்தனையோ வரலாற்று அடையாளங்களும், நினைவிடங்களும் இக்கால தலைமுறையினருக்கு தெரியப்படுத்தப்படாமலேயே புதைந்து கிடக்கின்றன. கண் முன் தெரியும் அடையாளங்களை தவிர, பல அடையாளங்கள் இன்னும் அடையாளப்படுத்தப்படாமலேயே உள்ளன. மாமதுரையை போற்றும் இத்தருணத்தில், இந்த "அடடே...' அடையாளங்களையும் போற்றுவோம்.
முதல் விமான நிலையம்


1942ல்"ராயல் ஏர்போர்ஸ்' எனும் பிரிட்டிஷ் விமானப்படையினர், மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் விமான தளத்தை உருவாக்கினர். இந்திய விமான கார்ப்பரேஷன் சட்டம் 1953ல் அமலான போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1956ல் முதல் விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது மதுரையில்தான்.

பழமையான அலுவலகம்

மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகேயுள்ள, பத்திரப்பதிவு அலுவலகம், ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. 1862ல், தென்மாவட்டங்களுக்கென முதல் பத்திரப்பதிவு அலுவலகமாக இது உருவாக்கப்பட்டது. கட்டடத்தின் ஒருபுறம் சிவில் கோர்ட்டும், மறுபுறம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டது. காலையில் பத்திரப்பதிவு அலுவலகமும், மதியத்திற்கு மேல் கோர்ட்டாகவும் செயல்பட்டதாகவும் சிலர் கூறுவது உண்டு.

ரயிலை காண திருவிழா கூட்டம்

மதுரையில் முதன் முதலாக திருச்சிக்கு 1875 செப்.,1ல் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளும், நீராவி என்ஜினும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. புகையை கக்கிக் கொண்டு, பெரும் குரலெடுத்து ஓடியதை பார்க்க மக்கள் திருவிழா கூட்டமாக கூடினர். சிலர், "பேய் வருகிறது' என பயந்து, வீட்டினுள் பதுங்கினர். இரண்டாவது ரயில், மதுரை - தூத்துக்குடி இடையே 1876 ஜன.,1ல் ஓடியது.
முதல் பள்ளி

ஆங்கிலேயர் காலத்தில், மதுரையில் துவங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி கீழக்குயில்குடியில் உள்ளது. 1924ல் இப்பள்ளி "பிறந்தது'. இதுகுறித்த கல்வெட்டை இன்றும் அந்த பள்ளி தாங்கிக் கொண்டிருக்கிறது.
ஆலன்துரை கல்லறை

"வரி...வட்டி... கிஸ்தி... உனக்கேன் தரவேண்டும்' என வீரபாண்டிய கட்டபொம்மனை "டென்ஷனாக்கிய', நெல்லை அதிகாரி ஆலன்துரையின் கல்லறை மதுரையில் 240 ஆண்டுகளாக நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி - சம்பந்தமூர்த்தி தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஐரோப்பியர்களின் கல்லறை தோட்டத்தில்தான் ஆலன்துரை கல்லறை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகளும் இங்குதான் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இது நம்ம மதுரை

* மதுரையில் ஆங்கிலேயர்களின் கட்டுமான திறமைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது ஏ.வி.பாலம். மதுரையின் தென்கரையையும், வடகரையையும் இணைக்கும் பிரதான பாலமான இது, 1889 டிச.,6ல் திறக்கப்பட்டது. இதை திறக்க வருவதாக இருந்த ஆல்பர்ட் விக்டர், மதுரையில் அப்போது காலரா நோய் இருந்ததால், வரவில்லை. இருப்பினும் அவரது நினைவாக பாலத்திற்கு "ஏ.வி.' என்ற பெயர் சூட்டப்பட்டது.
* தமிழகத்தின் முதல் ஊராட்சி ஒன்றியம் மதுரையில்தான் துவக்கப்பட்டது 1957ல் "மதுரை வடக்கு பஞ்., யூனியன்' என்ற பெயரில் துவங்கப்பட்டது.


* மதுரையில் தபால் பை முறை அறிமுகமான போது, முதன்முதலாக தபால் பை எண் வாங்கியவர் கருமுத்து தியாகராஜன் செட்டியார். டெலிபோனை பயன்படுத்திய முதல் மதுரைக்காரரும் இவர்தான். அவரது போன் எண் ஒன்று.


* தமிழகத்தின் முதல் வேலைவாய்ப்பு நிறுவனம், 1946ல், முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக மதுரையில் ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது.


* இதுதவிர, 1998ல் தமிழகத்தின் முதல் சமத்துவபுரமும், 1999ல் முதல் உழவர் சந்தையும் திறக்கப்பட்டது மதுரையில்தான்.


* திருவிழா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில், மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.


* தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் அமைந்துள்ள ஒரே நகரம் நம்ம மதுரைதான்.


* ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமை பெற்றது மதுரையில் உள்ள தங்கம் தியேட்டர். தற்போது செயல்படவில்லை.

முதல் சினிமா தியேட்டர்!


மதுரையின் முதல் சினிமா தியேட்டர் என்ற பெருமை, தெற்குமாசிவீதியில் உள்ள சிடிசினிமா. 1921ல் இத்தியேட்டர் கட்டப்பட்டது. திரைக்கு முன் ஒருவர் குச்சியுடன் நின்றுக் கொண்டு, உருவங்களை குறிப்பிட்டு திரைக்கதையை விளக்குவார். 1933ல் "டாக்கி' என்ற பேசும்படம் வந்தது. இத்தியேட்டரில் அந்த கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்' படம் ஒன்றரை ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் தந்த "ஹிட்'டால், திக்குமுக்காடிய நிர்வாகி வெங்கடகிருஷ்ணய்யர், கீழவெளிவீதியில் சிந்தாமணி தியேட்டரை கட்டினார். "டிவி'க்களின் ஆதிக்கத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல், 1999ல் சிடிசினிமா மூடுவிழா கண்டு, இப்போது "பார்க்கிங்' இடமாக பார்க்க பரிதாபமாக உள்ளது.
தாகம் தீர்க்கும் கிணறு!



மதுரை யானைக்கல் பாலத்தில், வைகையாற்றை கடப்பவர்கள் இடதுபக்கம் பார்த்தால், ஆற்றில் ராட்சத கிணறு ஒன்று இருக்கும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் 1804ல் இதுபோன்ற கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து பீப்பாய்களில் நீரை நிரப்பி, குதிரை, மாட்டு வண்டிகளில் வினியோகித்தனர். அந்த ஆண்டிலேயே, வெள்ளப்பெருக்கால், கிணறு காணாமல் போனது. இதனால் இதன் அருகிலேயே இப்போதுள்ள கிணறு உருவாக்கப்பட்டது. அதேபோல், 1888ல் ஆற்றின் கல்மண்டபம் அருகே மூன்றாவது கிணறு அமைக்கப்பட்டது.
கடிகாரத்திற்கு வயது 145

மதுரையில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1873ல் அமைக்கப்பட்டதுதான் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள கடிகாரம். கடிகார சுழற்சிக்காக இழுவைக் குண்டு 60 கிலோ மணியடிக்க உதவும். அழுத்தக் குண்டு 80 கிலோ மற்றும் உதிரிபாகங்களை சேர்த்து மொத்த எடை 200 கிலோ. இக்கடிகாரம் இங்கிலாந்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு, இன்று பழுதாகி, அதற்கு நேரம் சரியில்லாததால் "நினைவுச் சின்னமாக' இருக்கிறது. இன்று இந்த கடிகாரத்திற்கு வயது 145.
காந்திஜியை அடையாளப்படுத்திய மதுரை

காந்திஜி "அடையாளமாக' மாறிவிட்ட, அரை நிர்வாண விரதத்திற்கு வித்திட்டது மதுரைதான். அந்த தீர்க்க முடிவு எடுத்த இடம் இன்றும் அவரது பெருமையை சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த இடம் 251ஏ, மேலமாசி வீதியில் உள்ள தற்போதைய காதிகிராப்ட் அங்காடி. 1921 செப்.,21ல் மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது, பாமர மக்கள் வறுமையில் வாடுவதை நினைத்து அந்த விரதத்தை காந்திஜி மேற்கொண்டார்.
மதுரையை தாங்கும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்

மதுரையை வடக்கு - தெற்கு என வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. 18ம் நூற்றாண்டில் ஆற்றை கடந்து வடக்கு - தெற்கு என இருபுறமும் செல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் வைகையில் எப்போதுமே தண்ணீர் கரைபுரண்டு ஓடும். தற்போது போல் வறண்டு இருக்காது. சுமையை தலையிலும், குழந்தையை கக்கத்தில் இடுக்கி கொண்டும் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து வைகையின் குறுக்கே மேம்பாலம் கட்ட, பொறியாளர்களை தேர்வு செய்யும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டது. இதற்காக, இங்கிலாந்து பொறியாளர்களுக்கு இடையே போட்டி ஒன்றை நடத்தியது. இதில், பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் தேர்வானார். பாலம் கட்டுவதற்காக அவரை, மதுரைக்கு வரவழைத்தது பிரிட்டிஷ் அரசு. 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 தூண்களுடன் மேம்பாலம் கட்ட பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் வரைபடம் தயாரித்தார். பின், வைஸ்ராய் டிபெரின் 1886 டிச.,8ல் அடிக்கல் நாட்டினார். மேம்பாலம் கட்டுவதற்கு முன், கோச்சடை பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு கால்வாய் வழியாக தண்ணீர் வயல்களுக்கு திருப்பி விடப்பட்டன. 12 மீட்டர் அகலம், 240 மீட்டர் நீளத்தில் 16 தூண்களுடன் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணி 1889ல் துரிதமாக துவங்கியது. சுட்ட செங்கல், சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு, கருப்பட்டி கலவையில் மிகுந்த சிரமத்தின் பேரிலேயே பாலப்பணிகளை கச்சிதமாக முடித்தார் பொறியாளர் ஆல்பர்ட் விக்டர். பின், போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இப்பாலம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக கட்டியதால், இப்பாலத்திற்கு பொறியாளர் "ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்' (ஏ.வி. பாலம்) என பெயரிடப்பட்டது. அக்காலகட்டத்தில் பாலத்தின் நடுவே "பஸ் ஸ்டாப்' இருந்தது. காரணம், வைகையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில் மலையின் அழகை ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக பாலத்தில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் மக்களின் பிரதான வாகனங்களாக மாட்டு வண்டி, குதிரை வண்டி மட்டுமே இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மட்டுமே கார்களில் வலம் வந்தனர். பாலத்தில் மோதி வாகனம் விபத்தில் சிக்கியதாக சரித்திரம் இல்லை. 124 ஆண்டுகளை கடந்து, மதுரை மக்களை தாங்கி, கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆல்பர்ட் விக்டர் பாலம்.
விழாக்கள் நிறைந்த விழுமிய நகர் மதுரை

மதுரை கோயில் நகரம் மட்டுமல்ல. திருவிழாக்கள் நிறைந்து இருந்ததால், "விழவுமலி மூதூர்' என்று இலக்கியங்களால் பாராட்டப்பட்ட அற்புத நகரம். ஆண்டின் 365 நாட்களில் 294 நாட்கள் திருவிழாக் கோலம்தான். மதுரை விழாக்கள் குறித்து பேராசிரியர் இரா.மோகன் கூறியதாவது: ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும், நிறைவு நாளை முடிவு செய்து, உற்சவத்தை துவங்கும். அதன்படி சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், கார்த்திகை நட்சத்திரத்தில் துவங்கி 12 நாட்கள் நடைபெறும். நிறைவு நாளான சித்ரா பவுர்ணமியன்று, கள்ளழகர், வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின், வைகை கரையில் உள்ள மண்டபங்களில் 5நாட்கள் தங்குவார். இதில் ஒருநாளில் அவர் பத்து அவதார திருமேனிகளால் அலங்கரிக்கப்படுவது, "தசாவதார விழா'. வைகையின் வடகரையில் வைணவர்களும், தென்கரையில் சைவர்களும் மதுரையில் திரண்டு இருப்பது, சைவமும், வைணவமும் சமயத்தின் இருகரைகள் என்பது போல விளங்கும். இவ்விழாக்களே "சித்திரைப் பெருவிழா'.
* வைகாசி மாதம் திருவாதிரை துவங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில், சந்நிதி தெருவில் புதுமண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், இருபுறமும் நீராழி மண்டபம், கிழக்கே வசந்த விழா நீர்த்தொட்டியை, திருமலை நாயக்கர் அமைத்தார். அன்று முதல் அங்கு வைகாசி விழா நடந்து வருகிறது.


* இளவேனில் விழா குறித்து கலித்தொகையில் உள்ளது. சித்திரை, வைகாசி ஆகிய இளவேனிற் பருவத்தில், காதல் தெய்வமான காமவேளுக்கு, "வில்லவன் விழா' கொண்டாடப் பட்டது.


* ஆனி மாதம் மகநட்சத்திரம் முதல் மூல நட்சத்திரம் முடிய 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும். சுவாமியும், அம்பாளும் ஊஞ்சல் மண் டபத்தில் எழுந்தருள்வர்.


* ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி கேட்டை முடிய 10 நாட்கள், "முளைக்கொட்டு' திருவிழா நடைபெறும். அக்காலத்தில் இவ்விழாவுக்குப் பின்பே, விவசாயிகள் பணிகளை துவங்குவர்.


* ஆவணி மாதம், "ஆவணி மூலத் திருவிழா' எனப்படும், புட்டுத் திருவிழா, 18 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும், மதுரையில் சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.


* புரட்டாசியில் 9 நாட்கள் "நவராத்திரி விழா'. அனைத்து கோயில்களிலும் "கொலு' அமைத்து கொண்டாடும் இவ்விழா முக்கியமான ஒன்று.


* ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை. இம்மாதத்தில், முருகனுக்கு உகந்த "கந்த சஷ்டி' நடைபெறும். மீனாட்சி கோயில் எதிரே புதுமண்டபத்தில், 6நாட்களும் கன்னிப் பெண்கள் கூடி, "கோலாட்ட திருவிழா' கொண்டாடுவர். இம்மாதத்தில் பவுர்ணமி அன்று முடிவுபெறும் 5 நாட்கள், "பவித்ர உற்ஸவம்' கொண்டாடுவர்.


* கார்த்திகையில் "தீபத் திருவிழா' சதய நட்சத்திரத்தில் துவங்கி, திருவாதிரை நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். வீடுகளில் தீபம், வீதிகளில் "சொக்கர் பனை' ஏற்றி மகிழ்வர். கார்த்திகை விண்மீனை, "அறுமீன்' என நற்றிணையில், "அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி' எனக் கூறப்பட்டுள்ளது.


* மார்கழியில் அஷ்டமி நாளில், சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும், மதுரை வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க தேரில் உலா வருவர். பெண்கள் பாவை நோன்பு இருப்பர்.


* தை மாதத்தில் பொங்கல் விழா, அறுவடை விழாவாக துவங்கி பின், வளத்தை குறித்த விழாவாக மாறியது. திருவாதிரை நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவில், தெப்பத்திருவிழா நடைபெறும். அன்று சுவாமி, அம்மன், தெப்பத்தில் சுற்றி, மைய மண்டபத்தில் எழுந்தருள்வர்.


* மாசி மாதம், மாசிமக விழா 48நாட்கள் நடைபெறும். இதில், அமாவாசை நாளில் கொண்டாடும் மகாசிவராத்திரி முக்கியமானது.


* பங்குனி மாதம் கோடை வசந்தவிழா 10 நாள் நடைபெறும். பாண்டியர் காலத்தில், சுவாமியும், அம்மனும், திருப்புவனத்தில் எழுந்தருள்வர். தற்போது 10ம் நாளில், திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.

பண்டைய நாட்களில் பெருவழக்காக இருந்த விழா, "வெறியாட்டு விழா'. முருகனுக்காக எடுக்கப்படும் இவ்விழா குறித்து திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இதுபோல இந்திரனுக்கு எடுக்கப்படும் இந்திர விழா, பூம்புகாரில் நடந்ததாக கூறப்பட்டாலும், மதுரையிலும் கொண்டாடியதாக சின்னமனூர் செப்பேடு கூறுகிறது. இதுபோல பலவிழாக்கள் மதுரையில் சமயம் சார்ந்ததாகவே நடந்தன. விழாக்களின் போது, பாட்டும், கூத்தும், விருந்துகளும் நிறைந்து மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதையும் அறியமுடிகிறது.

மதுரையை போற்றிய மனோகர் தேவதாஸ்: விழியின்றி எழிலோவியம்

மதுரையின் மாட்சியை, ஏட்டில் எழுதிய புலவர்கள் ஏராளம். பாட்டில் பாட கவிஞர்கள் காட்டியதும் தாராளம். கதையில் களம் கண்ட எழுத்தாளரும் அதிகம் உண்டு. ஆடல், பாடலாக பதிவு செய்த அற்புத கலைஞர்களும் தேடினால் நிறையவே உண்டு. ஓவியமாகவும் உருவம் தந்தவர்கள் பலர் என்றாலும், அதில் உன்னதமானவர் மனோகர் தேவதாஸ்,76.
நீங்கள் கண்ணால் காணும் காட்சி தத்ரூபமாக இருக்கும். மனதில் தோன்றும் காட்சிகளோ மணித் துளிகளில் மறைந்துவிடும். ஆனால் மனோகர் தேவதாஸ், பாலனாக, பக்குவப்பட்ட இளைஞனாக மதுரையில் வலம் வந்தபோது, கண்ட காட்சிகளை, தூரிகையால், துல்லிய ஓவியமாக்கியுள்ளார். இளம்வயதில் பார்வை கொஞ்சம், கொஞ்சமாக பழுதாகி வந்தபோதும், அவர் ஓவியம் உருவாக்கியது விந்தையான விஷயமே.

நெல்லையே பூர்வீகம் என்றாலும், மதுரையில் பிறந்து, வளர்ந்த அவர், இங்குள்ள காடு கண்மாய் சுற்றி, கழனி வயல்களில் திரிந்தார். அவர் கண்ட காட்சிகள் மதுரையின் இயற்கை வளத்தை எடுத்துக் கூறுகின்றன. போய் வந்த ஆன்மிக தலங்கள்... அது மீனாட்சி ஆலயமோ, செயின்ட் மேரீஸ் சர்ச்சோ, கோரிப்பாளையம் தர்காவோ... காமிரா கண்களுக்குக் கூட சிக்காத அற்புத காட்சியாக அவரது தூரிகையால் அவதரித்ததே, அவரது திறனுக்கு அழியா சான்று.
கலந்து கொண்ட விழாக்களை எந்தக் காமிரா கவிஞனும் இப்படி காட்சிப்படுத்தவோ, மாட்சிமைப்படுத்தவோ முடியாது. தெப்பக்குளம் என்றாலும், திருக்கல்யாண காட்சியானாலும், திரளான கூட்டமுள்ள தேரோட்டம் என்றாலும், அணுஅணுவாய் ரசித்து, நுட்பமாக, வரிவரியாக வ(ரை)ரிந்தது, வாய்பிளக்க வைக்கிறது. கட்டிப் பிடிக்க முடியாத தூண்களுடன் கட்டப்பட்ட நாயக்கர் மகால், கோயிலில் சிற்பங்கள், வாயிலில் யாழிகள், அம்மன், சுவாமியின் அழகு வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த இடம்; பார்க்காத விஷயம் என பலவற்றையும், விழியின்றியே, விரும்பிப் படித்துள்ளார் அந்த அதிசய மனிதர். படித்த அமெரிக்கன் கல்லூரி, பார்த்த மாசிவீதி மாடங்கள், நான்மாடக் கூடலில் வான் பார்க்கும் கட்டடங்கள், அதில் வாசல், நிலைகள், ஜன்னல்கள், மாடிகள், கைப்பிடிச் சுவர்கள், ஓவியங்கள் என அத்தனை நுணுக்கங்களையும் வரைந்தவிதம், அற்புதம் என்னும் ஓர்சொல்லில் அடக்கிவிட முடியாது.

பார்க்க பார்க்க பரவசம் காட்டும் இந்தப் படங்களை வரைந்தது குறித்து மனோகர் தேவதாஸ் கூறியதாவது: ஓவியத்தை நான் முறைப்படி கற்றதில்லை. அது இறைவன் எனக்குத் தந்தவரம். எனக்கு 30 வயதுக்குப் பின்னர்தான் ஒரு கண் முழுமையாக பாதித்தது. பின் மற்றொரு கண்ணும் கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்புக்குள்ளானது. எனது ஆர்வத்தால் பார்த்த காட்சிகளை நுணுக்கமாக வரையத் துவங்கினேன். கண்கோளாறுகளுக்கு அதிகமாக, பிளஸ்5 என்ற அளவில் கண்ணாடி அணிவர். ஆனால் எனது கண்குறைபாடுக்கு டாக்டர்கள், பிளஸ்27 என்ற அளவில் கண்ணாடியை தந்தனர். அதை வைத்து நுணுக்கமாக பார்த்து வரைந்தேன். அதுவும் குறுகிய வட்டமாக, நுண்ணோக்கியில் பார்ப்பது போல தெரியும். அதைவைத்து நான் பார்த்த காட்சிகளை வரைந்தேன். இதற்கு, பக்கவாதத்தால் படுக்கையாக இருந்த, எனது மனைவி பெரிதும் உதவினார். எனது முதல் நூல் "கிரீன் வெல் இயர்ஸ்'. அதைத் தொடர்ந்து "மல்டிபிள் பேசெட்ஸ் ஆப் மை மதுரை' என்ற நூலை, படங்களுடன் உருவாக்கினேன், என்றார்.

திருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு

திருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்கு க் கட்டுப்பாடு

திருப்பதி : இலங்கை அதிபர் இராசபக்சே, திருப்பதி வந்துள்ளதையடுத்து, அங்கு தமிழ் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கடும எதிர்ப்புகளுக்கிடையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். பீகார் பயணத்தை முடித்து விட்டு, அவர் தற்போது திருப்பதி வந்துள்ளார். இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் பத்திரிகை மற்றும் ஊடக ஊழியர்கள் திருப்பதி விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமிழ் ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது போலீஸ் உயர்அதிகாரிகள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு தெலுங்கு ஊடக நண்பர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கடும் சோதனைகளுக்கு பிறகு தமிழ் ஊடகங்கள், திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டது. இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாடியில் காய்கறித் தோட்டம்!


மாடியில் காய்கறி த் தோட்டம்!

அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும், என்.மாதவன்: நான், சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில், வெங்கடேஸ்வரா நர்சரி எனும், நாற்றங்கால் பண்ணை வைத்திருக்கிறேன்.அடுக்கு மாடி குடியிருப்புகளில், பூமியில் பயிரிடும் வாய்ப்பில்லை. ரோஜா, சாமந்தி, செம்பருத்தி என, பூச்செடியையும், சிலர் துளசி செடியை மட்டுமே, மண் தொட்டியில் செடிகளாக வளர்ப்பர்.வீட்டின் மொட்டை மாடியில், 200 சதுர அடி இடம் இருந்தால், பூமியில் விவசாயம் செய்வதை போல், காய்கறி தோட்டம் அமைத்து, நன்கு அறுவடை செய்யலாம். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் தேங்கி, மாடியின் உறுதி குறைவதை தடுக்க, மாடியில், "வாட்டர் புரூப் ஷீட்' ஒட்டி, காய்கறி தோட்டம் அமைப்பது அவசியம்.கூழாங்கற்களை, மூன்றங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். அதன் மேல் தேங்காய் நாரை பரப்பி, செம்மண், எரு உரம், ஆற்று மண் கலந்த, தோட்ட மண் கலவையை பரப்பி, எல்லாம் சேர்த்து, 1 அடி உயரம் வரை இருக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் பண்ணைகளில் கிடைக்கும், அனைத்து காய்கறி விதைகளையும் பயிரிடலாம்.விதையூன்றிய மூன்று வாரங்களில், பயிரிட்டவை பிஞ்சு விடத் துவங்கி விடும். கீரை வகைகளையும், மிளகாய், பூசணி, புடலங்காய் என, அனைத்தையும் பயிரிடலாம். வீட்டின் மாடி, "கான்கிரீட்' என்பதால், வெயிலின் வெப்பத்தை குறைக்க, காலையில், 8:00 மணிக்கு முன்னும், மாலையில், 6:00 மணிக்கு முன்னும், தண்ணீர் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை என, மூன்று தடவை, "ரோகர்' பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும்.மா, மாதுளை, கொய்யா, எலுமிச்சை என, மரங்களையும் வளர்க்கலாம். 1 அடி என்பதை விட, கூடுதலாக அரை அடி தோட்ட மண் இருந்தால் போதுமானது.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் முற்றுகை : படங்கள்

போராட்டம் வெற்றிப்பாதைக்குச் செல்ல வாழ்த்துகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் அண்ணா சாலை வாகனப்போக்குவரத்து 1 மணி நேரம் முடங்கியது.!.
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.இதனால் தபால் நிலையம் இழுத்து மூடப்பட்டது.மேலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ,இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஆகியோரின் கொடும்பாவிகள் அண்ணா சாலையில் கொளுத்தப்பட்டன.இத்துடன் இலங்கையின் தேசியக்கொடியும் கொளுத்தப்பட்டன.இதனை காவல் துறையினர் தடுக்க முற்ப்பட்டனர்.ஆனால் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வேலுமணி அவர்கள் எங்களின் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தால் நாங்கள் அனைவரும் தீக்குளிப்போம் என அறிவித்ததால் காவல் துறையினர் ஒதுங்கி நின்றனர்.அனைத்து அவ்வியக்க தோழர்கள் மற்றும் சட்டகல்லுரி மாணவர்கள் அண்ணா சாலையில் படுத்துக்கொண்டு ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என முழக்கங்களை எழுப்பியவண்ணம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக அண்ணா சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து அருகில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

தமிழர் எழுச்சி இயக்கம்
ப.வேலுமணி - 9710854760
வெ. குமரவேல் - 9710037465
Photo: தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் அண்ணா சாலை வாகனப்போக்குவரத்து 1 மணி நேரம் முடங்கியது.!.
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.இதனால் தபால் நிலையம் இழுத்து மூடப்பட்டது.மேலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ,இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஆகியோரின் கொடும்பாவிகள் அண்ணா சாலையில் கொளுத்தப்பட்டன.இத்துடன் இலங்கையின் தேசியக்கொடியும் கொளுத்தப்பட்டன.இதனை காவல் துறையினர் தடுக்க முற்ப்பட்டனர்.ஆனால் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வேலுமணி அவர்கள் எங்களின் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தால் நாங்கள் அனைவரும் தீக்குளிப்போம் என அறிவித்ததால் காவல் துறையினர் ஒதுங்கி நின்றனர்.அனைத்து அவ்வியக்க தோழர்கள் மற்றும் சட்டகல்லுரி மாணவர்கள் அண்ணா சாலையில் படுத்துக்கொண்டு ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என முழக்கங்களை எழுப்பியவண்ணம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக அண்ணா சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து அருகில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

தமிழர் எழுச்சி இயக்கம்
ப.வேலுமணி  - 9710854760
வெ. குமரவேல் - 9710037465
Updated 18 minutes ago

Photo: தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் அண்ணா சாலை வாகனப்போக்குவரத்து 1 மணி நேரம் முடங்கியது.!.
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.இதனால் தபால் நிலையம் இழுத்து மூடப்பட்டது.மேலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ,இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஆகியோரின் கொடும்பாவிகள் அண்ணா சாலையில் கொளுத்தப்பட்டன.இத்துடன் இலங்கையின் தேசியக்கொடியும் கொளுத்தப்பட்டன.இதனை காவல் துறையினர் தடுக்க முற்ப்பட்டனர்.ஆனால் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வேலுமணி அவர்கள் எங்களின் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தால் நாங்கள் அனைவரும் தீக்குளிப்போம் என அறிவித்ததால் காவல் துறையினர் ஒதுங்கி நின்றனர்.அனைத்து அவ்வியக்க தோழர்கள் மற்றும் சட்டகல்லுரி மாணவர்கள் அண்ணா சாலையில் படுத்துக்கொண்டு ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என முழக்கங்களை எழுப்பியவண்ணம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக அண்ணா சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து அருகில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

தமிழர் எழுச்சி இயக்கம்
ப.வேலுமணி  - 9710854760
வெ. குமரவேல் - 9710037465

Poonakari becomes another major hub of Sinhala militarisation, colonisation

Poonakari becomes another major hub of Sinhala militarisation, colonisation

[TamilNet, Friday, 08 February 2013, 07:50 GMT]
Similar to the so-called High Security Zone (HSZ) on the northern coast of Jaffna Peninsula, including KKS harbour and Palaali airport that has now become a permanent enclave for Sinhala military cantonment, colonisation and corporatism, another enclave in the Poonakari division is in the making, news sources in Vanni said. Around 31,000 Sinhala military personnel are stationed in the Poonakari division where currently only 6216 families live, which means that for every Tamil family there are 5 personnel from the genocidal military. While the SL military alone occupies 800 acres of land, the Sri Lanka President Mahinda Rajapaksa’s siblings Basil and Gotabhaya, and progeny Namal have appropriated many more acres of land. Building a Chinese assisted international airport at Poonakari is in the centre of the plans.
Poonakari, KKS & Palaali
[Satellite Image Courtesy: NASA, Visible Earth. Details & Legend: TamilNet]


The Eezham Tamil legacy of Poo-nakari (meaning the town of flowers) and the region around it is of much antiquity going back to the times of proto-history and Tamil Brahmi inscriptions.

The strategic location of Poonakari at the entrance to the Jaffna Peninsula, Jaffna Lagoon, and its location facing the Palk Bay and the opposite coast have made all the European colonial powers –the Portuguese, Dutch and the English to maintain a station there.

But unlike the Sinhala colonial military of today, the European colonial powers didn’t commit a demographic genocide, as they didn’t have the human resource for it.

Two brigades (means 20,000 soldiers) plus 11 divisions (11,000 soldiers) of the genocidal Sinhala military are now stationed in Poonakari and villages around it, such as Pa’l’lik-kudaa, Pallava-raayan-kaddu, Mud-kompan, Ponnaa-ve’li, Arasa-puram, Muzhangkaa-vil, Madduvil-naadu and 4th mile-post.
SL occupation of Poonakari


Needless to say that the SL military idea is to permanently seal off and choke Jaffna Peninsula as well as Jaffna city, besides checking the Tamil Nadu coast and the Palk Bay.

Colombo and abetting powers have larger plans behind the militarisation.

Under several names the Rajapaksa family is now appropriating large tracts of lands, especially coconut plantations in the region, with plans for new Sinhala colonial urbanisation in the region, sources in Vanni said.

A plan to build an international airport at Poonakari with Chinese assistance has already been announced.

Even the 6000 odd Tamil families who have been allowed to resettle in the Poonakari division are put to all kinds of abuses by the occupying Sinhala military, so that the families would either become Sinhalicized slaves or would leave.

The idea of Rajapaksa regime and the abetting powers is to create new militarised and Sinhalicised cities, corporate enclaves and townships in the whole of the conquered country of Eezham Tamils.

The causeway over the Jaffna Lagoon built by the British government close to Poonakari on the A32 highway doesn’t help the ‘development’ of Tamils but helps only the development of the military, colonisers and corporatism of the genocidal regime, local people of Poonakari said.

The British government never said anything against the misuse of its assistance or against the on-going genocide or colonisation.

On the contrary, the British minister of state from the Foreign and Commonwealth Office who visited Vanni a few days ago went to see another project of the SL military at Mullaith-theevu.

Keappaa-pulavu in Mullaiththeevu is on the eastern coast where the genocidal military is planning another enclave similar to Jaffna HSZ and Poonakari.

“The entire genocide and structural genocide committed on us, the colonisation, militarisation and annihilation of our country are actually designed and carried out by certain powers and that is why they don’t recognize the genocide committed on us, our nationhood and the on-going colonisation that is annihilating our country. The genocidal Sinhala military is the new Lascarin military of theirs. The Sinhala people will eventually understand who were the real freedom fighters and who were the Lascarins,” commented a Tamil schoolteacher in Vanni.

“No wonder the Rajapaksa regime confidently proclaims to the world that the presence of the military is being reduced, while in fact it is stabilised, and there is always the International Community of Establishments to acknowledge the ‘progress’ the regime is making. But then, we also have their cronies among us who don’t want to tell the world that the occupying military should quit,” commented a journalist in Jaffna.

Related Articles:
05.02.12   China to build airport in Poonakari to balance India’s Palaa..
29.12.11   SLA soldier shoots dead traveller on Poonakari Road
28.06.10   Sand dunes scooped at Ma'n'niththalai
13.06.10   Namal Rajapaksa’s men monopolize Jaffna-Poonakari boat servi..

எல்லோருக்கும் தலைவர் இராமச்சந்திரனார் பாதுகாவலர்

இங்கே இரு கருத்துகளைப் பதிகின்றேன்.
 1.) பாவண்ணன் போன்றவர்கள் நன்கு படித்துக் கருத்தைப் பதிய வேண்டும். 1932 இல் நடைபெற்ற நிகழ்வு. உரியவர் முன்பே இறந்து விட்டார். இப்போதைய நிகழ்வுபோல் பணி சிறக்க வாழ்த்துவோம் எனக் குறிப்பிடலாமா?

2.) தோழர் இராமசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பதை விடப் பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரனாரால் அமர்த்தப்பட்டார் என்பதே உண்மை. இது பற்றிய வே.வ.இராமசாமி அவர்களின் கட்டுரைப் பகுதி வருமாறு:
“அரசால் கோவில் ஆலோசனைக் குழு என்ற ஒன்று இராமநாதபுர மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டது. அதற்கு அழுத்தமான சுயமரியாதை வீரராகிய தலைவர் சிவகங்கை இராமச்சந்திரனார் தலைவராவார். . . . . . தலைவர் அவர்களுக்கு உடல்நலம் குறைந்ததால், 11.6.32. அன்று தன்னுடைய இல்லத்தில் குழுவின் கூட்டத்தைக் கூட்டினார்.......எனவே, “வி.வி.ஆர். அவர்களைத் தலைவராக இருக்கும்படிக்கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் சொன்னவுடனே எனக்கு ஒன்றும் புரியாமல், வியப்பில் ஆழ்ந்து விட்டேன். “இப்போது ஒன்றும்தேவையில்லையே, பின்னால் பார்க்கலாமே” என்று வாதிட்டேன். செவிசாய்க்காமல், . . . . . .உதவியாளரால் நடவடிக்கைகள் எழுதப்பட்டு, புத்தகத்தில் யாவருடைய கையொப்பமும் வாங்கப்பட்டது. ...
எஙகள் சமுதூயத்துக்கு அவர் செய்த இப்பேருதவியை யான் என்றும் மறந்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள், அரிசனங்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், அடிமைகள், பாதுகாப்பற்றவர்கள் என எல்லோருக்கும் தலைவர் இராமச்சந்திரனார் பாதுகாவலராக இருந்தார்.
எங்கள் அனைத்துச்சமுதாய மக்களுக்கும் அவர் நல்ல வழிகாட்டிய தலைவர் என்பதை நன்றியுடன் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். என்னை உயர்த்திய தலைவர் இராமச்சந்திரனார். (கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்திரனார் : பக்கம் 307-309)
(நேற்று சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களின் மனைவி திருவாட்டி கிருட்டிணம்மாள் நினைவுநாள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
## நமது இயக்கத் தோழர் விருதுநகர் திரு.வி.இராமசாமி அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அன்பர் திரு இராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவார்.நாடார் குலத்தவர் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதி எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தது நேயர்கள் அறிந்த ஒன்றாகும்.அவ்வாறிருந்தும் அத்தகைய "புனித தெய்வீகம்" பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராக தோழர் ராமசாமி தேர்ந்தெடுக்கப் பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். --- 19.06.1932 ல்குடி அரசு தலையங்கத்தில் பெரியார் எழுதியது
 +++++++++++++++++++++++++++++++++++++++
பின் வரும் கருத்துகளுக்கான பதிவு 

நமது இயக்கத் தோழர் விருதுநகர் திரு.வி.இராமசாமி அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அன்பர் திரு இராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவார்.நாடார் குலத்தவர் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதி எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தது நேயர்கள் அறிந்த ஒன்றாகும்.அவ்வாறிருந்தும் அத்தகைய "புனித தெய்வீகம்" பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராக தோழர் ராமசாமி தேர்ந்தெடுக்கப் பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். --- 19.06.1932 ல்குடி அரசு தலையங்கத்தில் பெரியார் எழுதியது
2Like · ·
  • 2 people like this.
  • Pavanan Vck அவரைப் பாராட்டக்கூடாது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை தான் பாராட்டவேண்டும்.எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தோழரின் பதவிக் காலம் முடிந்தப் பின்பு கிராம மக்கள் பாராட்டும் வண்ணம் அவரின் பணிச்சிறக்க வாழ்த்துவோம்.
 

ஈழத் தமிழர் மாநாடு :தவறுகளை ஒப்புக்கொள்ளும் கலைஞர்

1/2 <தமிழ் மக்களின் எண்ணங்களைச் சரியாகக் கணிக்க முடியாமல் நான் செய்த தவற்றின் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது> எனக் கலைஞர் கூறுவது உண்மைதான். தான் என்ன செய்தாலும் தம் பக்கம் தமிழர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்குத் துணை நின்ற தவறும் தொடர்பான தவறுகளும் அவரை வீழ்த்தியது. அதை உணர்ந்ததால்தான் இப்பொழுது ஈழத்தமிழர்கள்பால் பரிவு இருப்பதுபோல் நாடகமாடுகிறார். எனினும்  கொலைக்குற்றவாளியைச்  சொக்கத்தங்கம் என மயங்கி இருக்கும் வரை அவரை யாரும் நம்பப்போவதில்லை.  நாட்டு மக்களை மறந்து விட்டு வீட்டு மக்களைப்பற்றியே கவலைப்படும் வரை அவரைப்பற்றி யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. நூறாயிரக்கணக்கான மக்கள் எரிகுண்டுகளாலும் கொத்துக்குண்டுகளாலும் வஞ்சகத்தாலும் கொல்லப்பட்ட பொழுதும் இறப்பு இயற்கை எனப் பாடல் எழுதியவரை உலகம் என்னவாறாகக் கருதும் என அவருக்குத் தெரியாதா? தேர்தலை முன்னிட்டு நடத்தும் ஈழ நாடகத்தை நிறுத்திவிட்டுத் தான் செய்த குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாக்கு கேட்டார் எனில் தி.மு.க.வின் வாக்கு வங்கியாவது அவருக்குக் கிடைக்கும்.தொடர்ச்சி  2/2 இலக்குவனார் திருவள்ளுவன்

2/2) தம் குடும்பத்தில் ஒருவர்தான் அடுத்துக் கட்சியிலும் அதன் அடிப்படையில் ஆட்சியிலும் வரவேண்டும் எனக்  குழப்பம் விளைவிக்கும் அவரால் நாட்டுக் குழப்பத்தைத் தீர்த்து வைக்க இயலுமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஈழத் தமிழர்களுக்காக விரைவில் மாநாடு: கருணாநிதி








இலங்கைத் தமிழர்களுக்காக மீண்டும் விரைவில் மாநாடு நடத்தப்படும்; அதில் பல நாடுகள் பங்கேற்க உள்ளன என்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
திமுகவை இல்லாமல் செய்துவிட ஒரு கூட்டம் பின்னால் இருந்து இயக்குகிறது. அதன் ஆலோசனையில் இந்த ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவையில் வாய் திறக்க முடியவில்லை. திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுகிறார்கள்.
கவலைப்படாதீர்கள்; காலம் மாறும். அதற்காக நாமும் ஆட்சிக்கு வந்து அவர்களைப் பழிவாங்குவோம் என்று சொல்லமாட்டேன். நாம் பழிக்குப் பழிவாங்குபவர்கள் அல்ல.
தொடர்ந்து 50 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் கருணாநிதி என்று பேரவை வைரவிழாவில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஆனால், இதைச் சொன்னார் என்பதற்காக அவரது உரை வெளியிடப்படவில்லை.
தமிழ் மக்கள் செய்த தவறின் காரணமாக, தமிழ் மக்களின் எண்ணங்களைச் சரியாக கணிக்க முடியாமல் நான் செய்த தவறின் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ரூ. 700 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை வளாகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். பழைய சட்டப்பேரவைக் கட்டடத்துக்குள் என்னால் இந்த மூன்று சக்கர வாகனத்தில் செல்ல முடியாது. அதுவும்கூட நல்லதுதான். இவர்களின் அர்ச்சனைகளை கேட்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால் இங்கே இருக்கும் சிலர் எதிர்ப்பு காட்டுகிறார்கள். நம்மை விரோதிகள் என்று சொல்கிறார்கள். தாங்கள் தொடர்ந்து இங்கே பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்கிறார்கள்.
56 ஆண்டு காலமாக தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக கண்டனத்தைத் தெரிவித்து வந்திருக்கிறோம். இவர்கள் என்னவோ, கடற்கரையில் நின்று துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் போல நம்மீது பழி சுமத்துகிறார்கள்.
லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுவிட்டு, இப்போது அங்கே தமிழ் நிலங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறார்கள். இதுதொடர்பாக தில்லியில், பிரதமரிடம் முறையிட்டால் கவனிக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது.
இப்போது பதிலாவது வந்திருக்கிறது. கவனிப்பார்களா என்று கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் நாம் எடுத்த நிலைப்பாடுகளுக்கு காரணம் உண்டு. கட்டுப்பாடும், ஒற்றுமையும் இழந்த நிலையில் இருந்தோம்.
இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்காக விரைவில் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்க உள்ளன. ஈழத்தமிழர்கள் குரல் ஒலிக்கும் என்றார் கருணாநிதி.
திருச்சி மாவட்ட திமுக சார்பில் மக்களவைத் தேர்தல் நிதியாக ரூ. 5 கோடி கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தார்.
மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, முன்னாள் மாநில அமைச்சர்கள் என். செல்வராஜ், எ.வ. வேலு, க. பொன்முடி, வெளியீட்டுச் செயலர் திருச்சி செல்வேந்திரன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, திருச்சியில் வியாழக்கிழமை கருணாநிதி அளித்த பேட்டி: வரும் மக்களவைத் தேர்தல் குறித்து எங்களிடம் யூகமும் இல்லை. இப்பொழுது வியூகமும் கிடையாது.
கூட்டணி குறித்த பெரிய விஷயங்களில் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழுவில் பேசித்தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
தேமுதிக, திமுகவுடன் இணக்கமாக இருக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்றார். தொல்காப்பியத்தை அடுத்து இலக்கியப் பணியாற்றுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார் கருணாநிதி.


இந்த பகுதியில் மேலும்


சிங்கள வங்கி சூறையாடப்பட்டது

சிலோன் வங்கி சூறை எழும்பூரில் பரபரப்பு


சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எழும்பூரில் உள்ள அந்நாட்டு வங்கியைச் சூறையாடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மதியம், 1:45 மணிக்கு, மூன்று ஆட்டோக்களில், 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வங்கிக்கு வந்தனர். "ராஜபக்ஷேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே' என, கோஷம் எழுப்பியபடி, அங்கு காவலுக்கு இருந்த ஆயுதப்படை காவலர் முத்தையாவை தள்ளிவிட்டு, உருட்டுக் கட்டைகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள், ஜெகன், 25, மரியராஜேஷ், 25, இருவரையும் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த அவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலை முற்றுகையிட முயன்ற, தமிழர் எழுச்சி இயக்கத்தினர், 15 பேரை, போலீசார் கைது செய்தனர்

கைத் தொழில் கற்கலாம்!

கைத் தொழில் கற்கலாம்!


மாணவியர், கல்லூரியில் படிக்கும் போதே, தொழில் துவங்க ஊக்குவிக்கும், கல்லூரி முதல்வர், டாக்டர் நிர்மலா பிரசாத்: நான், சென்னையிலுள்ள, எம்.ஓ.பி., வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன், என்னிடம் படித்த மாணவியர் பலர், கலைத் திறனோடு சுட்டியாக இருந்தாலும், திருமணத்திற்கு பின், திறமைகளை ஒடுக்கி, குழந்தை, குடும்பம் என, இருந்தனர். படித்த பெண்கள் திருமணம் செய்தாலும், திறமைகளை தொடர, கல்லூரியிலேயே, ஒரு தொழிலை கற்றுக் கொடுத்தால், பிரச்னை தீரும் என்ற எண்ணத்தில், சுயவேலை வாய்ப்பு திட்டத்தை துவக்கினேன். கல்லூரி மாணவியர் என்றால், படிப்பும், வண்ணத்துப் பூச்சி போல், வண்ண உடையோடு ஜாலியாக ரீங்காரமிடுவர் என, எண்ணத் தோன்றும். ஆனால், எங்கள் கல்லூரி மாணவியர், தங்களின் ஓய்வு நேரங்களில், சில குழுக்களாக பிரிந்து, தொழிலை திட்டமிட்டு கற்று, கல்லூரியிலேயே தொழில் துவங்குகின்றனர். அதற்கு நாங்கள் உதவியும், ஊக்கமும் அளிக்கிறோம். மொத்த ஸ்டேஷனரி விற்பனையகத்தில், கல்லூரிக்குத் தேவையான ஏ4 பேப்பர், சாக்பீஸ், டஸ்டர், சார்ட்,பேனா என, ஆறு மாணவியர் கொண்ட குழு, வாங்கி வந்து விற்பனை செய்கிறது. 14 மாணவியர் ஒன்று சேர்ந்து, பூச்செண்டு, பூ அலங்காரம் தயாரிக்க, பயிற்சி வகுப்புகள் சென்று, கற்றனர். கல்லூரியின் அனைத்து விழாவிற்கும், பூச்செண்டு, பூ அலங்காரம் மற்றும் வெளியிலிருந்து வரும், "ஆர்டர்'களையும் செய்கின்றனர். ஒரு குழு டீ, காபி, வடாபாவ், பப்ஸ், முட்டை சேர்க்காத கேக் என, ஸ்நாக்ஸ் விற்பனையகமும் வைத்துள்ளது. இன்றைக்கு, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அனைத்தையும் தொழில் களங்களாக மாற்ற வேண்டும்.

SL ‘Terrorist’ squad arrests 9 Tamils in Moothoor East

SL ‘Terrorist’ squad arrests 9 Tamils in Moothoor East

[TamilNet, Thursday, 07 February 2013, 22:11 GMT]
An elite squad of the Sri Lankan ‘Terrorist’ Investigation Division (TID) that arrived in Trincomalee on Monday from Colombo has been conducting search operations in the district targeting Tamil youth. The squad has so far arrested 9 Tamils and transferred them to Colombo from Moothoor police station, news sources said. The latest rounds of harassments by the TID squad is reported following the protest by Eezham Tamils who had put up posters condemning the observation of the SL ‘independence’ day in Trincomalee.

The SL TID team, claiming it was looking for the supporters of the LTTE, has been conducting search operations in Paddiththidal, Ki'liveddi, Lingkapuram, Mallikaith-theevu and Kaddai-pa'richchaan in Moothoor East and West divisions.

SL Police sources said the operation is to nab LTTE activists who had been hiding in the Moothoor East.

The arrested Tamils would be given rehabilitation before their release, sources added.

Chronology:

கருப்புக்கொடி போராட்டம்! சி்ங்களக் கொடி அகற்றம்!

அன்புடையீர்!

வணக்கம். இன்று காலை (07-02-2013) நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியதால்
எமது இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு மாலை 5.00 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
அங்கிருந்து பாண்டிபசாரில் (தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் அருகில்) உள்ள தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர விடுதி வழியாக சென்றோம்.

அங்கு பறக்க விடப்பட்டிருந்த இலங்கை கொடியை பார்த்து அதிர்ச்சியுற்றோம்.
உடனே விடுதியில் சுமார் 40 பேர் கருப்புக் கொடியை காட்டியவாறே சென்றோம்.

அங்கு மேலாளரை சந்திக்க வேண்டும் என்று வினவியபோது... இங்கே யாரும் இல்லை என்று வரவேற்பில் கூறினர்.
அதற்கு உடனே தங்கள் விடுதி பொறுப்பாளர்கள் இங்கே வர வேண்டும், இல்லையேல் பெரும் சிக்கலை சந்திக்க நேரும் என்று
பதிலுக்கு த.எ.இ. தோழர்கள் எச்சரித்தனர்.
சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் உட்பட சில பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களிடம்:
தமிழனத்தை அழித்த இலங்கை அரசின் கொடியை தங்கள் விடுதியின் நுழைவுவாயிலில் பறக்க விட்டுள்ளீர்கள்.
தமிழ்நாட்டில் விடுதி வைத்துக்கொண்டு... தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில்
தங்கள் செயல் உள்ளது என்றும் உடனே கழற்றிவிடுங்கள் இல்லையேல் நாங்கள் கழற்ற வேண்டிய நிலை உருவாகும்
என்றும் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
விடுதியில் இருந்த வெளிநாட்டினர் மற்றும் பல வாடிக்கையாளர்கள் கூடி விட்டனர்.
செய்வதறியாத விடுதி பொறுப்பாளர்கள், தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு
உடனே இலங்கை கொடியையும் கழற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.வேலுமணி
பொதுச் செயலாளர்
தமிழர் எழுச்சி இயக்கம்
9710854760
6 attachments — Download all attachments   View all images   Share all images  
IMG_0893.JPGIMG_0893.JPG
3173K   View   Share   Download  
IMG_0895.JPGIMG_0895.JPG
2717K   View   Share   Download  
IMG_0900.JPGIMG_0900.JPG
2533K   View   Share   Download  
IMG_0903.JPGIMG_0903.JPG
2837K   View   Share   Download  
IMG_0904.JPGIMG_0904.JPG
2682K   View   Share   Download  
IMG_0905.JPGIMG_0905.JPG
2727K   View   Share   Do

வியாழன், 7 பிப்ரவரி, 2013

தனி ஈழமே தீர்வு - பாரிவேந்தர்

தனி ஈழமே தீர்வு என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கிறார் இராசபட்ச: பாரிவேந்தர்

இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை தனி ஈழமே என்ற கோரிக்கைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வலு சேர்க்கிறார் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
 இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து இலங்கையின் மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவு கொடுத்தோம்.
2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 1½  ஆண்டுகளில் வரலாறு காணாத படுகொலைகளும், சித்ரவதைகளும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் குழுக்களுடனான மோதல் என்றில்லாமல், இலங்கை ராணுவமே களத்தில் இறங்கி, இனப்படுகொலை செய்தது. அரச பயங்கரவாதம் என உலக நாடுகள் இதனைக் கண்டித்தன.
நாகரீக சமுதாயத்தில், எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுங்கோலராக இலங்கை அதிபர் ராஜபட்ச விளங்கினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொடூரமாக நசுக்கியும், அதன் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் கூறி தமிழ் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
இத்தனைக்குப் பிறகு நடந்த அதிபர் தேர்தலில், பிரச்சாரம் செய்த ராஜபட்ச, தமிழர்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். ஏற்கனவே ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும், ஏதோ ஒரு வகையில் அமைதி ஏற்பட்டால் சரி என்கிற அளவிற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை கூர்ந்து கவனித்தன.
ஆட்சிக்கு வந்த ராஜபட்ச ஐ.நா. சபையின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க நல்ல பிள்ளை மாதிரி நடித்தார்.  இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்த எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும், தமிழா்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரம் அளிப்பதாக உறுதி கூறினார். இதற்காக இலங்கையின் அரசியில் கூட்டத்தை திருத்தி, உரிய முறையில் ஆட்சி கட்டமைப்பு வகுக்கப்படும் என்று கூறினார். இதை எல்லாம் ஒரே நொடியில் தூக்கி எறிந்துவிட்டு, தன் கொடூர சுய ரூபத்தை மீண்டும் உலகிற்கு காட்டி விட்டார் ராஜபட்ச.
தனி ஈழம் தான் தீர்வு என்று தமிழ் நாட்டிலும், உலகின் பல பகுதிகளிலும் எழுப்பி வந்த கோரிக்கைகளை பலர் ஏற்காத நிலை இருந்தது. ஒரு நாட்டின் இறையாண்மையை சீர்குலைத்து, அந்த நாட்டை பிரிக்கக் கூடாது என்பதற்காகவே பலர் தனி ஈழ கோரிக்கையை ஆதரிக்காமல் இருந்தனர்.
தற்போது ராஜபட்ச நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் தனி ஈழம் தான் இலங்கைத் தமிழா் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என்கிற எண்ணத்தை பலரின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நாளை (8.2.13) டெல்லி வரும் ராஜப‌ட்சவிடம்,  மத்திய அரசு இதனை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இதில் உண்மையிலேயே அக்கறை செலுத்தி, எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு, சுயமரியாதையுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை வழங்க பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- என்று  அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இராசபட்ச வருகை : திருவில்லி. வழக்குரைஞர்கள் நீதிமன்றப்புறக்கணிப்பு

இராசபட்ச வருகையை க் கண்டித்து த் திருவில்லி. வழக்குரைஞர்கள் சங்கம் இருநாட்கள் நீதிமன்ற ப் புறக்கணிப்பு

First Published : 07 February 2013 03:32 PM IST
மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்ச இந்தியாவில் கால் வைக்கக் கூடாது என்றும், அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் த.கதிரேசன் தலைமையில், செயலாளர் ஆர்.ராஜையா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் பேசுகையில் கூறியதாவது:
சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1.50 லட்டத்திற்கு மேலான தமிழர்களின் உயிர்கள்.
தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் ராஜபட்ச, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் ராஜபட்ச வருகையைக் கண்டித்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பது என்று பேசினர். பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தில் 330 வழக்குரைஞர்கள் உள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

Attacks on media escalate in Jaffna

2ND LEAD

Attacks on media escalate in Jaffna, newspapers burnt by alleged SL military squad

[TamilNet, Thursday, 07 February 2013, 04:26 GMT]
A newspaper distributor who was on his way to Vadamaraadchi through Jaffna - Point Pedro Road to distribute the copies of the Jaffna edition of Tamil daily Thinakkural was attacked and all the newspapers in his possession and his motorbike were put to fire by an alleged Sri Lankan military intelligence squad that intercepted the distributor at Puththoor Junction at 5:00 a.m. on Thursday. In the meantime, Uthayan paper distributor to Vadamaraadchi narrowly escaped from another attack around the same time. The latest attacks come within three weeks of a similar attack on Uthayan paper distributor.

The newspaper distributor of Yaazh Thinakkural, who was attacked and thrown at the roadside, was rescued by the villagers and was rushed to hospital.

Media organizations in Jaffna blamed Sri Lankan military intelligence run squads for the attacks and threats on independent Tamil journalists and media in Jaffna.

Threats and intimidations against the journalists and media workers in Jaffna has been escalating in the recent days, the representatives of media organizations in Jaffna said.

In the meantime, purchase and control of Tamil media has taken place on a larger scale in Colombo by local and outside forces in complicity with the genocidal State and regime in the island, informed circles said, citing the changes in the editorial line of some leading Tamil dailies.

Chronology:

Civil Society insists on pre-constitutional recognition of Tamil nation

Feature Article
3RD LEAD (Adds TCS document)

Civil Society insists on pre-constitutional recognition of Tamil nation, self-determination

[TamilNet, Thursday, 07 February 2013, 01:41 GMT]
In a set of preliminary points submitted at a conference held in Berlin, 26-27 January, facilitated by the Berghof Foundation, the Tamil Civil Society (TCS) from the island insisted on “pre-constitutional recognition of Tamil nationhood and self-determination” before Tamils could sit down and debate institutional proposals for a constitutional design within a united Sri Lanka. Such recognition “does not mean a separate state,” the TCS added. The Tamil Civil Society or any other party or group based in the island are not free bodies to comprehensively or authentically talk on the issue as they are bound by the 6th Amendment of the constitution of the genocidal State of Sri Lanka. Such organisations should first insist on the IC and its outfits to create conditions going beyond the 6th Amendment to have honest discussion on the issue, commented new generation Tamil activists in the island.

The Berghof Foundation was facilitating the conference convened by the Global Tamil Forum (GTF) on “Exploring Peaceful Options,” and the January meet was Part 2 of the deliberations.

The TCS functioning in the island sent its points in absentia to the conference.

After designing and executing demolition of the military balance of Eezham Tamils, complete occupation of their country by the Sinhala military, ever increasing permanent militarisation in every sphere of life in the occupied land and the actively on-going colonisation to annihilate Tamil territoriality, the International Community of Establishments, through outfits run by them, expecting Tamil representatives from the island bound by the 6th Amendment of the SL constitution to come out with proposals, is nothing but drilling them or prodding them through pre-meditated avenues, the new generation Tamil activists said.

* * *


The Tamil Civil Society in the island, with its constrains, has nevertheless touched certain points such as the need of a “new social contract drawn between the different constituent nations” in the island, and the Tamil polity’s right to be an equal partner in the contract.

The TCS, in arguing for such a new social contract to keep the island together, has also deconstructed the aura behind certain formulas as not suitable to the context. Having the 13th Amendment even as a starting point or reference point under the unitary constitution, or a Federal constitution under the hierarchical state of Sinhala-Buddhist domination, would not work, the points submitted by the TCS expounded.

While acknowledging the distinct politics of Muslims and Up-Country Tamils, and the need to leave their political decisions to them, the TCS called upon the Tamil side to think of solidarity, responses to concerns and to come out with a white paper on its stand.

The TCS, citing the example of the constitutional processes leading to the Scotland Act of 1998, urged the Tamil political parties to come out with a wider forum to facilitate the empowerment of people, articulation of aspirations for political solutions and democratic legitimacy to the aspirations.

As a gradual follow up, TCS advocated a referendum, saying that the Tamil political parties should ‘slowly start building a discourse asking for the Tamils to be given an opportunity’ for a referendum.

* * *

When there is no international mechanism to restore and protect the balance in ground reality and in thought process, models and roadmaps explored within parameters set by a genocidal State and by an abetting International Community of Establishments (ICE), are as futile as the 13th Amendment under a unitary state and a Federal model under an ethno-hierarchical state, the new generation political activists in the island commented.

Further comments from the activists:

Even when there was a military balance, exploration exercises undertaken by outfits such as Berghof Foundation served only a smokescreen for processes leading to the genocidal war and demolition of that balance by the ICE.

The very milieu now directly imposed on Tamils living in the island and indirectly imposed on Tamils in the diaspora tagged behind the outfits of the ICE that Tamils should think only within limits set by the 6th Amendment of the SL constitution, does in no way bring in “equal partner” status to them to freely think of entering into a “social contract.”

Equal partnership, nationhood and self-determination cannot be presented as mere words, having only symbolic values that don't exist in practice, just to satisfy the Tamil elite ego and to help them to lure the collective ego.

The nation of Eezham Tamils may eventually think of fitting into a EU model in South Asia, but by its legacy and context it cannot end up like the First Nations in Canada or like Scotland, Northern Ireland etc., in the UK.

On the question of Muslims and Up-Country Tamils, the white paper of the nation of Eezham Tamils has to convince them on not only its secular and inclusive outlook, but also on the point that how its status in the island would ensure the existence of self-respect to all the Tamil-speaking peoples wherever they live in the island, like the status of Chinese in Singapore ensuring the status of Chinese in Malaysia.

If all the international forces envisage only a united island, the appropriate process in a post-genocidal war and occupation context is not social contract under compulsion and slow preparation for referendum, but separation first and space cum time for unification contract of nations. Putting oxen behind the cart is acceptance of the colonial process and pre-emption of options in a referendum, if at all it takes place.

Knowing very well the genocidal intent and mechanism of the Sinhala State and the orientation of the powers in complicity, any carelessness on the part of Tamil parties would unknowingly lead them into the lure of long drawn-out ‘non-descript’ processes now being engineered by the ICE.

Making Tamil parties to denounce the separation option and to make them commit on accepting Sri Lanka is the one and only obsession of all the outfits operated by the ICE. Besides that, there is no real interest in ‘exploring options.’ If there was any, by now they should have worked for protection of status quo and provision of ground realities. In other words, the outfits are in their second round facilitating the structural genocide war.

Tamil political parties, activists and civil movements in the island, Tamil Nadu and in the diaspora have to take extra care in committing on anything especially at junctures of engineering such as the Geneva sessions in March.

The demands have to concentrate more on matters practically facilitating ground realities such as an interim international takeover of the situation, complete removal of occupying Sinhala ethnic military and other SL security forces as the SL military now functions in police uniform, ban on colonisation and guarantee to the territorial integrity of Eezham Tamils, and free access to the diaspora to reach out to its people in the island, the new generation activists in the island commented.

Related Articles:
16.06.12   Declare for referendum in any unity meeting