சனி, 27 ஜூலை, 2013

Another link to North and East sieged by Sinhala Buddhists

Another link to North and East sieged by Sinhala Buddhists

[TamilNet, Friday, 26 July 2013, 23:40 GMT]
A place called Kanthasaami-malai in Thennai-maravadi village, along the narrow border of the Trincomalee and Mullaiththeevu districts of the North and East provinces of the country of Eezham Tamils, is under siege by the Sinhala-Buddhist monks, who have arrived from the South. They claim that Kanthasaami-malai area belongs to a historic Buddhist Vihara and want about one hundred acres of land to be handed over to them. They have made ‘representations’ to the occupying Sri Lanka Army to get these lands for a new construction of the so-called Purana (ancient) Buddhist Vihara. While such claims are made for the interior landward link at Thennaimaravadi, a Buddhist monk from the South has already appropriated 500 acres of land at the coastal link at Pul-moaddai for a Buddhist enclave. The land was surveyed for him by the genocidal State’s Survey Department.
Shown within the box is the target area of Colombo discussed in the feature
What is significant is that such a delinking demographic and cultural genocide taking place with a hitherto unseen intensity at the border of the North and East, while there is an ‘elected’ provincial council in the East. It shows how the provincial council system under a unitary constitution will be a smokescreen for the completion of structural genocide, political observers said.

When 95 per cent of the local population is Tamil-speaking Muslim, the demographic genocide of Pul-moaddai takes place while there is a Muslim Chief Minister in the East.

For wedging the Tamils and Tamil-speaking Muslims who make the majority of the province, and to engineer an intimidated alliance of the Muslims and Sinhalese in the PC to smoothly carryout the structural genocide, the space and time were provided to the genocidal State especially by the USA and India, said Tamil activists for alternative politics in the island.

The policy of deliberately suppressing the recognition of the territoriality of the Tamil-speaking people in the island, followed by the USA and India, is the root cause of all the evils. The talk of New Delhi Establishment’s PM, Dr Manmohan Singh and the State Dept. officials of the Washington Establishment, on meeting the aspirations of ‘all people in a united island’ in an explicitly genocidal context, set the paradigm. As far as the evidences and ground realities go, they serve only the insatiable aspiration of the Sinhala Buddhist nation in seeing the annihilation of the Eezham Tamil nation. The ‘all people’ talk is actually the synonym for the genocide they carryout, but refuse to acknowledge by that term, the activists commented.
Kokku'laay
Note the location of Thennai-maravadi in the interior and Pulmoaddai in the coast along the border of the Northern and Eastern provinces. [Satellite Image Courtesy - Google Earth. Legend by TamilNet]


Thennaimaravadi was the seat of a Tamil Vanni chieftaincy until the Dutch times. The Thennaimaravadi chieftain was appointed and conferred with his title by the administration of Jaffna Patnam.

The traditional Tamil village was the scene of intense pogroms against the local population in 1958, 1977 and in 1983, and Sinhala colonization activities in 1984 conducted by the Sri Lanka Army (SLA) in a planned attempt to drive a wedge in the contiguity of the Tamil demography of the North and East.

The present Pi’l’laiyaar Koayil in Thennai-maravadi village was earlier located in Kanthasaami-malai. Later, it was shifted to the present site. However, the remnants of a Saiva temple are seen in Kanthasaami-malai area, sources said.

With the appropriation of Kanthasaami-malai area, the entire Thennaimaravadi village is in the danger of being swallowed by Sinhala chauvinist elements with the backing of the occupying Sri Lanka Army, the sources said.

Thennaimaravadi was the first Tamil village where people were completely displaced in the Trincomalee district following the SL state-sponsored anti-Tamil pogrom in 1983, which is known as Black July.

At that time more than two hundred Tamil families were living in the village, divisional secretariat sources said.

Several new Sinhala settlements, Padavi Siripura, Sri Tissapura, Samanpura, Gemunupura and Sinhapura, were established in public lands in the north of Trincomalee district close to Thennaimaravadi village, thus making the Tamil population a minority in the area.

Hundreds of families fled when soldiers of the Sinhala dominated Sri Lanka Army assisted by Sinhala home guards entered into Thennaimaravadi on 1st of December 1984, from the nearby Sinhapura, one of the new Sinhala settlements which is located close to the Thennaimaravadi village under the SL-state aided colonization scheme after the island gained ‘independence’ from the British.

On the first day of the attack, on 01.12.1984, five Tamil villagers were shot dead by Sri Lankan army soldiers and home guards. Immediately, rest of the village fled into the jungles to save their lives.

When the Tamil villagers returned to their homes, the Sinhala soldiers had again rounded them up and shot them. Altogether at least thirteen Tamil villagers were shot dead by the army and home guards.

On December 4, hundreds of families who fled to the jungle second time had started their journey with available belongings leaving their cattle and other valuable articles in their homes towards Mullaiththeevu district.

First they reached Akkaraive’li, Kottaik-kea’ni Pi’l’laiyaar-koyil, Kokkuth-thoduvaay and finally arrived at Mu’l’liya-va’lai, where they put up huts and named it “Pon-nakar”.

Even now, Thennaimaravadi displaced families live at “Ponnakar” in Mu’l’liyava’lai, awaiting resettlement in their own village, according to the representatives of the uprooted Tamils in Mullaiththeevu.

Chronology:

‘US-British imperialism helps Sinhala colonization

‘US-British imperialism helps Sinhala colonization of Tamil homeland’

[TamilNet, Friday, 26 July 2013, 21:32 GMT]
The help of US and British imperialism assists the Sinhala state’s colonization of Tamil areas, observes a solidarity statement by Europe based Kurdish and Turkish diaspora youth organizations. Released on the occasion of Black July, the statement in German language, signed by 4 Left-leaning youth organizations and published on the official website of the German based Kurdish youth organization the Union of Students from Kurdistan (YXK), besides condemning the massacre in July 1983 also traced the continuity of genocide to May 2009 and after, stating that the rulers “had no interest in the scheduled peace process and negotiations”.

The statement was signed by Union of Students from Kurdistan (YXK), Democratic Youth Movement Europe (ADGH), Young Struggle (YS) and Union of Students from Kurdistan (YXK).

“On 30 Anniversary of the massacre of the Tamils, we remember all the victims of Black July. Organized youth from Turkey and Kurdistan who have come together to stand up together against all forms of oppression, exploitation and repression, we will continue to go in this sense to the streets and stand up for freedom and justice. As youth organizations in Europe, we have joined us to focus our efforts in the future, together, in solidarity and determination to build international solidarity and to take our organization to the streets,” the statement said.

Welcoming this gesture of solidarity, Balakrishnan Koculan, representative of the youth wing of the German Die Linke party, told TamilNet “From 1983 to 2009 and to now, world establishments assisted and abetted the genocidal war on the Eezham Tamil nation. Our real friends in the international community are oppressed nations and progressive forces who have been persecuted by the same establishments. Only when the Tamil youth join hands with such forces and conduct a resolute struggle, will our calls for justice be heeded.”

External Links:
YXK: Wir werden das Massaker an die TamilInnen nicht vergessen

அரைத்த மாவையே அரைக்க கூடாது!

அரைத்த மாவையே அரைக்க கூடாது!

இலட்சத்தில் சம்பளம் வாங்கும் ஐ.டி., வேலையை ராஜினாமா செய்து, மனதிற்கு பிடித்த கேக் செய்யும் தொழிலில் வெற்றி பெற்ற, திவ்யா: நான், வட இந்தியாவில் உள்ள, குர்கானை சேர்ந்தவள். ஐ.டி., துறையில் பிரபலமான மல்டிநேஷனல் நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் வேலை பார்த்தேன். நிறுவனத்தின் புராஜெக்ட் காரணமாக, இங்கிலாந்து மற்றும் ஹாலந்து நாடுகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினேன். ஐரோப்பிய மக்கள், எல்லாவிதமான மகிழ்ச்சியான உணர்வையும், கேக் வெட்டி தான் கொண்டாடுவர். அதிலும், மகிழ்ச்சியான காரணங்களுக்கு ஏற்ப, கேக்கை விதவிதமான வடிவங்களில் தயாரிப்பதே அவர்களின் வழக்கம். பள்ளி செல்லும் குழந்தை முதல் மதிப்பெண் பெற்றால், ஒரு குட்டி பையன் மெடல் வாங்குவது போல், கேக்கை வடிவமைப்பர். இந்த, "கேக் ஆர்ட்' கலை, எனக்கு மிகவும் பிடித்து போனதால், கிடைக்கும் ஓய்வு நேரங்களில், கேக் செய்வதை ஒரு பொழுது போக்காக கற்றுக் கொண்டேன். புராஜெக்ட் முடித்து நாடு திரும்பியதும், பழையபடி அரைத்த மாவையே அரைக்க வேண்டி இருந்ததால், வேலையில் வெறுப்பு ஏற்பட்டது. கேக் செய்வது, என் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அதை ஒரு தொழிலாக ஏன் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஐரோப்பிய முறையிலான கேக் ஆர்ட் தொழிலை ஆரம்பிக்க, ஐ.டி., வேலையை ராஜினாமா செய்தேன். "டி கேக்கரி' என்ற பெயரில், குர்கானில் கேக் தயாரிக்கும் யூனிட் ஆரம்பித்தேன். பேஸ்புக்கில் அக்கவுன்ட் ஆரம்பித்து, நான் தயாரித்த வித விதமான கேக்குகளை, "அப்லோட்' செய்ததால், குர்கான் மற்றும் டில்லியிலும் விற்பனை சூடுபிடித்தது. தற்போது வாரத்திற்கு, 30 கேக்குகள் நவீன முறையில் டிசைன் செய்து விற்கிறேன்.நீச்சல் குளம், அதை சுற்றிலும் ரிலாக்ஸ் செய்ய குடைகள், அமைதியான இடத்தில் பேசிக் கொண்டிருக்கும் கணவன், மனைவி என, தற்போது வாடிக்கையாளர்களே கேக் வடிவமைக்கும் சூழ்நிலையை சொல்கின்றனர். நானும் அதற்கு ஏற்ப தயாரித்து, வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில், மிகுந்த மகிழ்ச்சி.

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர் பரமேசுவரன்

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர் பரமேசுவரன்






கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுற்றுலா சென்ற மதுரை திருநகர் பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்த துயரச் சம்பவம் இப் பகுதி மக்களின் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை.
 கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சென்று, சக மாணவர்களைக் காப்பாற்றிய அந்த மாணவர், அலையின் சீற்றத்தில் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
 திருநகர் சி.எஸ். ராமாச்சாரியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 113 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு ஜூலை 12 ஆம் தேதி சுற்றுலா சென்றனர்.
 தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரைக்குச் சென்றபோதுதான் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு மாணவ, மாணவிகள் கடலில் கால்களை நனைத்தபடி நின்று கொண்டிருந்த வேளையில், ஒருசில மாணவர்கள் அலைகளில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் சிலரை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றபோது, அவர்களை உயரமான மாணவர்கள் காப்பாற்றச் சென்றுள்ளனர்.
 அதில் திருநகர் காந்திஜி தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் பரமேஸ்வரன் (17)தண்ணீரில் தத்தளித்த தன் சக நண்பர்களைக் காப்பாற்றச் சென்றுள்ளார். நீச்சல் தெரிந்த பரமேஸ்வரனின் முயற்சியில் பாலாஜிராஜன், பாலமுருகன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த விஷ்ணுதரனையும் கரை சேர்த்த பரமேஸ்வரன், மீண்டும் கடலுக்குச் சென்றபோது திரும்பவில்லை. ஆனால், விஷ்ணுதரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கரையில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் மூழ்கிய சதீஷ்குமார், தேவ் ஆனந்த் ஆகியோரது உடல்களை மீட்டனர்.
 மூன்று மாணவர்களை மீட்ட பரமேஸ்வரன், நண்பர்களுடன் இருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்தே அவர் காணவில்லை என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களும் தள்ளப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு பரமேஸ்வரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர் அவரது பெற்றோர் சரவணன் - ராஜேஸ்வரி. நீச்சல் பயிற்சி பெற்ற பரமேஸ்வரனை, கடலில் மூழ்கி இறந்த நிலையில் பார்த்த அதிர்ச்சி இன்னும் எங்களைவிட்டு நீங்கவில்லை. தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்தபோதுதான், சக மாணவர்களை கடலில் சென்று காப்பாற்றியது தெரியவந்தது என்றனர்.
 சக மாணவர்களை மீட்ட பரமேஸ்வரனின் வயிற்றில் கடல் நீர் இல்லை. பிரேதப் பரிசோதனையின்போது இது தெரியவந்திருக்கிறது. கரைக்குத் திரும்ப முயற்சி செய்தும் அவரால் முடியாமல் நீரில் மூழ்கியிருக்கிறார். நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள் என்று தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்ததாக பரமேஸ்வரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 மற்ற மாணவர்களைப் போல கடலில் விளையாடச் சென்றபோது இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரது வீரச் செயல் தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது. பரமேஸ்வரன் மறைந்தாலும், அவரது நினைவலைகள் திருநகர் வாசிகளின் மனதில் நிழலாடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது

தமிழ் ஈழப் பொதுவாக்கெடுப்பு - கலைஞரின் அடுத்த வாய்வீச்சு!



பாவம் கலைஞர்! இதுவரை தங்கள் கோரிக்கைகளுக்காகத்தான் போராடுபவர்களைப் பார்த்துள்ளோம்! ஆனால், இவரோ,  தமிழ் ஈழப் பொதுவாக்கெடுப்புதான் தீர்வு எனக் கூறிக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத 13ஆவது அரசமைப்புச் சட்டத்தீர்மானத்திற்காகப் போராட்டம் நடத்துவாராம்! அவர் என்ன செய்வார்? எப்படியும் காங்.உடனான கள்ளக்காதலை வெளிப்படையாகக் கூட்டணியாக்கிச் சில இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும். அதே நேரம் ஈழத்தமிழர் படுகொலைகளின் கூட்டாளியான அதனுடன் மறைமுகக் கூட்டாளியான தான் உறவு வைப்பதால் மேலும் கரைந்து போகும் தன் குடும்பக் கட்சியைக் காப்பாற்றிக் கரை சேர வேண்டும். ஆகவே,  தடுமாறுகிறார். தற்காலிகத் தீர்விற்காகப் போராடலாம் எனில், அதற்காக முதல்வர் மடல் எழுதக் கூடாதா?  
  உண்மையில் கலைஞருக்குத் தம் வீட்டு மக்கள் நலனை விட உலகத் தமிழ் மக்கள்மீது பரிவு இருக்குமெனில்,  தேர்தல் அடிப்படையில் சிந்திக்காமல், தமிழ் ஈழம் மலரவும் கொலையாளிகள் தண்டிக்கப் பெறவும் உலகத்தமிழர்கள் எங்கிருந்தாலும் உரிமையுணர்வுடன் வாழவும் போராடி வெற்றி காண வேண்டும். ஆனால், அப்படிச் செய்யமாட்டார். அதே நேரம் தன்கட்சியின் பக்கம் உள்ள 30 % மக்களை ஏமாற்றுவதற்காக நடிப்பார். எல்லாக் கட்சிகளையும் தூக்கி எறியும் மனப்பான்மை மக்களுக்கு வந்தது எனில், யார் நடிப்பும் எடுபடாது. அந்த நாள் விரைவில் வருவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கலைஞரின் நாடக உரை வருமாறு : -

13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் சிக்கலுக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது: கருணாநிதி

13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுக்குத் தன்னாட்சி கிடைக்கும் வரை மத்திய அரசின் பணி தொடரும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
எனக்கு (கருணாநிதி), மற்றும் சீத்தாராம் யெச்சூரிக்கு முன்பு எழுதிய கடிதத்திலும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று, நல்லணிக்கத்தோடு வாழ வேண்டுமென்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கைக்கு இடையே இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் நிறைவேறியது.இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தற்போது இலங்கை அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு முழுமையானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு காண வேண்டும்.ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் அழுத்தம் தர வேண்டும்.குரல் கொடுத்தவர்கள் எங்கே?... இலங்கையின் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தைத் ரத்து செய்யக்கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதி,அதற்கு பிரதமர் உடனடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
இதிலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.சட்டப்பேரவையில் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தபோது, சிலர் தமிழ் ஈழமே கிடைத்துவிட்டது என்பதைப் போல மகிழ்ந்தனர்.தற்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியக் கூடிய நிலைதான் உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னை என்றாலே தாங்கள்தான் என்பது போல எல்லாவற்றுக்கும்  முந்திக் கொண்டு வந்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டிய நிலை இருக்கிறது.ஆர்ப்பாட்டம்: 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்னைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது.
இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா.மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதுதான் நல்ல தீர்வாக அமையும்.எனினும் தாற்காலிக தீர்வாவது ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் இதை வலியுறுத்தியே டெசோ சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் "தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்' நடைபெற உள்ளது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.




இலங்கையில் பொது ஓட்டெடுப்பு: கருணாநிதி அடுத்தகட்ட யோசனை
 
சென்னை:"அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை த் தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே, தற்போது, அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, "இலங்கையிலே, 13 து சட்டத் திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்' என, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி, அதற்கு பிரதமரும் பதில் எழுதியிருக்கிறார்.சட்டசபையில், இலங்கை பிரச்னைக்காக, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழ் ஈழமே கிடைத்து விட்டது என்பதைப் போல, மகிழ்ச்சி அடைந்து, வானத்திற்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்தனர்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், முழு அரசியல் தீர்வாக அமையாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும், இலங்கை தமிழர்களிடையே பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பது தான், "டெசோ' அமைப்பின் நிலைப்பாடு.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
 

வெள்ளி, 26 ஜூலை, 2013

இலக்குவனார் திருவள்ளுவன் - இந்த வார வல்லமையாளர்!



இந்த வார வல்லமையாளர் 

பேரா. நாகராசன்

தமிழகத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.  வேற்றுமையில் ஒற்றுமை ஒற்றுமையில் வேற்றுமை என்று இரட்டைக் குதிரைச் சவாரி செய்வதில் தமிழர்களுக்கு நாட்டம் அதிகம்.  ஒரே நேரத்தில் இந்த இரண்டு சிந்தனைகளும் வெளிப்படும்போது தமிழன் ஒரு குழப்ப வாதியாகக் காட்சியளிப்பது இயல்பு.
உலகத் தமிழன் என்று ஒரு புறமும் தனித் தமிழன் என்று இன்னொரு புறமும் ஒருவரே ஒரே நேரத்தில் குரல் எழுப்பி மற்றவர்கள் குழப்பம் அடைவதுபோல் எழுதுவதும் பேசுவதும் சில குறிப்பிட்ட தமிழ்ப் படைப்பாளர்களுக்குக் கை வந்த கலை.  தனித்தமிழ், தனித்தமிழன், தமிழன் பெருமை என்று கண்ணைக் கட்டிக்கொண்டு வேகமாகப் பின்னோக்கி நடப்பதும் மேலைநாட்டு நாகரிகப் பண்புக்கூறுகளைக் கண்ணை மூடிக்கொண்டு முன்னெடுப்பதிலும் ஒரு இரட்டை நிலை தமிழ்ப் படைப்பாளர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது
தமிழ் அறிஞர்கள் பழம்பெருமை பேசுவதையும் ஒரு சிறு வட்டத்தில் தங்களை நிறுத்திக்கொண்டு தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்யும் புதியத் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு தங்கள் சிந்தனையைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியச் செய்யும் ஆர்வமும் திறனும் இல்லாதவர்களாக இருப்பது உண்மை
புதிய சிந்தனை புதிய படைப்புகள் புதிய வடிவமைப்பு என்று தமிழின் சிறப்புக்கு அணி சேர்க்கும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய தலைமுறைத் தமிழ் இளைஞர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளார்ந்த உந்துதலுடன் செயல்படும் தமிழறிஞர்கள் வெகு சிலரே.  இணையத் தமிழ்த் தளத்தில் தரமான தமிழில் தற்காலத்துக்குத் தேவையான சிந்தனைகளை எண்ணிம வடிவில் தொடர்ந்து எழுதுவது என்பது எளிதல்ல
தன் சொந்தக் கருத்துகளையும் இணையத்தில் பரவிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய தகவல்களையும் தினம் ஒரு மாலையாக மஞ்சரியாகத் தொகுத்துத் தருவதை ஒரு வேள்வியாக நடத்தும் ஒரு கணித் தமிழ் இணையத் தமிழ் அறிஞர் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு பெறுகிறார்

ஈழத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பவர், தனித் தமிழ் வளர்ச்சிக்கு வழி கோலுபவர், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பவர், வல்லமை இதழுக்குத் தொடர்ந்து வளம் சேர்ப்பவர் என்று பல வல்லமைகளை நாள்தோறும் வெளியிடும் வல்லமையாளர் திரு. திருவள்ளுவன் இலக்குவனார்


நெருக்கத்தில் இருப்பவர்கள் பெருமையை அறிந்து பாராட்டுவதைச் சில நேரங்களில் மறந்து விடுவது இயல்பே.  எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் உள்ளூரில் உள்ளவர்கள் அவர் பெருமையை எடுத்தியம்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை
வல்லமை இந்தத் தடையைக் கடந்து இணையத்தில் வல்லமை மின் தளத்தில் தொடர்ந்து தமிழன் சிறப்பு பெருமை உரிமை பற்றி மட்டுமன்றி உலக அளவில் தமிழன் மற்ற இன மொழி மரபுப் பெருமைகளை அறிய வேண்டும் என்ற உணர்வுடன் தன் படைப்புகளைத் தயங்காமல் தளர்வில்லாமல் வெளியிடும் திருவள்ளுவன் இலக்குவனாரை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்
20-ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழிக் காவலராகத் தமிழனின் சிறப்பை இந்திய அரங்கில் நிலை நிறுத்த மாணவர்களுக்கு ஊக்கமும் உரமும் ஊட்டிய எங்கள் பேராசிரியர் திரு.இலக்குவனார் அவர்களின் புதல்வன் இந்த வார வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்
வாழ்த்துகள் திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே!

+++++++++++++++++++++++++

பேரா. நாகராசன்
சென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.
 
++++++++++++++++++++++++++++

 திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

 
தேமொழி wrote on 26 July, 2013, 10:31
வல்லமையாளர் திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
அன்புடன்
…..
தேமொழி 
++++++++++++++++++++++++++++++++++


வல்லமையாளர்களுக்கும் அமைப்பினருக்கும் வணக்கமும் நன்றியும். வல்லமையாளர்கள விருதுகள் குறித்துப் படித்து வந்தாலும் விண்ணப்பித்ததில்லை. இப்பொழுதுதான் தெரிகிறது, தக்காரை அடையாளம் கண்டுகொண்டு விருது வழங்குகின்றீர்கள் என்று. தங்களின் தொண்டிற்கும் பாராட்டும் உள்ளத்திற்கும் நனி நன்றி.


நல்வாழ்த்து வழங்கிய திருவாளர்கள் பார்வதி இராமச்சந்திரன், தேமொழி ஆகியோருக்கும் நன்றி.


என அவ்வப்பொழுது இணையப்பதிவிலும் தொலை பேசி வழியாகவும் நேரிலும் பாராட்டுவோர் உண்டு. என்றாலும் இணையத்தை மிகுதியாகப் பயன்படுத்துவோர் சிலர் இவற்றை எலலாம் பகிர வேண்டிய தேவை ஏன் என்று குறைகூறியதும் உண்டு. வைகறைக்கு முன்னரே எழுந்து பணியாற்றினாலும் நேரம் போதாதபொழுது இவற்றைத் தொடர வேண்டுமா என்ற எண்ணம் வரும் பொழுதெல்லாம் எங்கிருந்தோ அறிமுகம் இல்லாதவர்கள் பேசி இப்பகிர்வுகளாலும் கட்டுரைகளாலும் உணர்வு பெறுவதாகக் கூறிப் பாராட்டி அந்த எண்ணத்தை மறக்கடிப்பர். அதுபோல் இனி அப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாது என்பதற்காக இவ்விருது வழங்கப்பட்டதாக நம்புகின்றேன். இப்பணியை வேள்வியாக ஏற்றுப் பாராட்டியமைக்கும் தந்தையார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களை நினைவு கூர்ந்ததற்கும் பெரு மகிழ்வைத் தெரிவிக்கின்றேன. தங்களுக்கும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/