50Madras eye

தேனிப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் சென்னைக்கண்நோய்

தேனிப்பகுதியில் வேகமாக சென்னைக்கண்நோய் (madras-eye)   வேகமாகப் பரவி வருகிறது.
தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, செயமங்கலம், போடி, கம்பம், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இதே போலத் தொழில் நகரங்களான திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைநிமிர்த்தம் காரணமாகச் சென்றுள்ளனர். பண்டிகைகளையொட்டி அனைவரும் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கண்நோய் பாதிப்படைந்தவர்கள் இப்பகுதியில் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் மூலம் சென்னைக்கண்நோய் வேகமாகப் பரவிவருகிறது. எனவே மாவட்ட நிருவாகம் கண்நோயைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
 vaigaianeesu_name03