வியாழன், 18 டிசம்பர், 2014

துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் :திருச்சி.


     14 திசம்பர் 2014      கருத்திற்காக..

திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி

 தமிழாய்வுத்துறை

தை 22, 23. 2046 – 2015 பிப்.5,6

 துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்

இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆத்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சி பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம்.
கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதவர்கள் கருத்தரங்க நாளில் இந்திய நேரப்படி பகல் 1.30 முதல் 4.30 வரை இணையப்பேசி(skype_யில் உரையாற்றலாம். அதற்கான அனைத்து வசதிகளும் எம் கல்லூரியில் உள்ளன என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  இது தொடர்பான மேலதிகமான தகவல்களுக்கு என்னுடையஇணையப்பேசி/skype ID : sjcnedu1960 (e-mail:tamilthinai@gmail.com) தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். skypeயில் இந்திய நேரப்படி மாலை 5 – 6 இரவு 8 – 9 மற்றும் 10 – 11 மணிக்குத் தொடர்பில் அழைக்கலாம்.
பதிவுப்படிவம், பதிவுக் கட்டணம், ஆய்வுக்கட்டுரை அனுப்பி வைக்கவேண்டிய இறுதி நாள் : 10.01.2015
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sjctamilseminar2015@gmail.com
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
கருத்தரங்கச் செயலர், தமிழ் இணைப்பேராசிரியர்
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002.
அலைபேசி – 91+9443214142
 th.nedunchezhiyan01


அகரமுதல 57

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக