சனி, 29 நவம்பர், 2014

SL arrests two Tamil youths for Heroes Day SMS

SL military arrests two Tamil youths in Batticaloa for Heroes Day SMS

[TamilNet, Friday, 28 November 2014, 20:48 GMT]
The occupying Sri Lankan military that was spying on SMS messages exchanged among the young generation of Eezham Tamils in Batticaloa district on Thursday instructed the SL police to arrest and detain two Tamil youths at Vaazhaich-cheanai police division of Batticaloa district, news sources in Batticaloa said. The SL military had intensified deployment of military intelligence operatives in all places, from places of worship to private tuition centres in the Batticaloa district.

Sri Lankan soldiers were on bicycle patrol on all the streets of Batticaloa amidst pouring rain. They were chasing Tamil youth who were on the roads on Thursday.

Sinhala soldiers were deployed in all junctions in the Tamil areas of Ampaa'rai dsitrict.

On Tuesday, a group of Sri Lankan military intelligence personnel chased away the devotees who had gathered for a pooja at the Pi'l'laiyaar temple at Munnam-poadi-veddai in Moothoor West in Trincomalee district.

The Sinhala military personnel were alleging that the Tamil devotees had gathered to pay tribute to Tamil Heroes and the soldiers smashed the pot in which the Saiva devotees were preparing ritual milk rice (Pongkal), news sources in Trincomalee said.

மந்தை இல்லை! திருமணமும் இல்லை! – வைகை அனிசு


மந்தை இல்லை! திருமணமும் இல்லை! – வைகை அனிசு

54thirumanapanthal

தேனிப் பகுதியில் மந்தை இல்லாமல்

தடைப்படும் திருமணங்கள்

  தேனிமாவட்டம் அருகே உள்ள கதிரப்பன்பட்டி, தண்ணீர்ப்பந்தல், அ.வாடிப்பட்டி, கோட்டார்பட்டி முதலான சில சிற்றூர்களில் இன்றும் பழமை மாறாமல் ஊர்மந்தையில் வைத்து திருமணங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  தற்பொழுது மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப மந்தைகள் பிற பயன்பாடுகளுக்கு வலிந்து உள்ளாக்கப்பட்டமையினாலும் மந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையாலும் திருமணங்கள் தடைப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 எந்தச் சமூகமாக இருந்தாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்றளவும் உள்ளது. வசதிபடைத்தவர்கள் திருமணம், மண்டபத்தில் நடத்தினாலும் பந்தல்கால்/கொட்டகைக்கால் நடும் பழக்கம் இன்று வரை வழக்கத்தில் உள்ளது.
  திருமணம் நடைபெறும் குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னர் மணமனையின் முற்றத்தில் கன்னி மூலையில் தரையில் குழி ஒன்று தோண்டி அதைச்சுற்றி மாப்பொடி மஞ்சள் பொடிகொண்டு சதுரவடிவில் கோலமிடுவார்கள். அதன் அருகில் பெரிய வாழையிலை ஒன்றின் மீது சிறிய பூசை விளக்கு, மஞ்சள் பிள்ளையார், நிறைநாழி, வழிபாட்டிற்குரிய பொருள்களுடன் பால்கிண்ணம் ஒன்றும் வைத்து ஒரு கிளையுடன் கூடிய தேக்கு மரக்கால் 9 அடி அளவில் ஒன்றில் அடுத்தடுத்து செம்மண் காவிப்பட்டையும் சுண்ணாம்புப் பட்டையும் தீட்டுவார்கள். காலின் உச்சியில் மாங்குலை, சிவப்பு நிறத்துணி, மஞ்சள் தேய்த்த சிறிய நுனியில் ஒன்பான்கூலம்(நவதானியம்) இட்டுப் பொதிந்த சிறிய மூட்டை ஆகியவற்றை மஞ்சள் கயிற்றால் கட்டிவிடுவார்கள். முகூர்த்தக்காலிற்கு மஞ்சள் குங்குமப்பொட்டிட்டு குடும்பப் பெரியவர்கள் தலைமையில் குழியின் அருகே ஒன்பான்கூலம்(நவதானியம்), சந்தனம், மாழை(உலோக) நாணயம் ஆகியவற்றை இட்டுப் பாலூற்றி வழிபாட்டுத் திருவுருவங்களுக்குத் தூபதீபம் காட்டிய பின் பந்தல்காரருக்குச் சந்தனம், குங்குமம், நன்கொடை வழங்கிவிட்டு குடும்பப்பெரியவர்கள் ஒன்று சேர்ந்து முகூர்த்தக்காலினை தூக்கிக் குழியில் நடுவது வழக்கமாகவும் மரபாகவும் வைத்துள்ளார்கள்.
  ஆனால் கதிரப்பன்பட்டிப் பகுதியில் யார்வீட்டில் திருமணம் நடைபெற்றாலும் அவர்கள் மந்தையில்தான் திருமணம் நடத்தவேண்டும். மேலும் முகூர்த்தக் கால் நடுதல் போன்ற பழக்கம் இல்லாமல் மந்தையில் பாலக்கம்பு நான்கு புறமும் நட்டு அதன் மேல் உசிலக்குலை, பாலக்குலை ஆகியவற்றைப் பரப்பித் திருணத்தை மூன்று நாள்கள் நடத்துவர். திருமணத்தின்போது மணமகனைக் குதிரையில் அழைத்து வந்து குடைபிடித்து அழைத்து வரும் வழக்கமும் உள்ளது.
54thirumanam
  தற்பொழுது கதிரப்பன்பட்டியில் மந்தையைச் சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்திக்கொண்டது. இதற்காக ஊரின் மேல்பகுதியில் 35சிறுகாணி(சென்ட்)அளவில் உள்ள நிலத்தை மந்தையாகப் பயன்படுத்தித் திருமணம் நடத்திவந்தார்கள். தற்பொழுது அந்த மந்தையையும் தனியார்கள் கவர்ந்துள்ளதால் இப்போது மந்தையில்லாமல் திருமணம் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.
இதன் தொடர்பாக இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் வரை முறையிட்டும் எந்த வகை நடவடிக்கையும் இல்லை. பல திருமணங்கள் தடைப்பட்டு இருப்பதாகவும், தங்கள் வழக்கப்படி திருமணம் நடத்த மந்தை ஒன்றை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிருவாகம் கதிரப்பன்பட்டி முதலான ஊர்களில் வன்கவர்வுகள் செய்யப்பட்ட மந்தைகளை மீட்டுத் திருமணம் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
54vaikaianesu_name


நாட்டாண்மைக்கல் – வைகை அனிசு

நாட்டாண்மைக்கல் – வைகை அனிசு

54naattaamaikkal

தேனிமாவட்டத்தில் பாதுகாக்கப்படும்

நாட்டாண்மைக்கல்

  தேனிமாவட்டத்தில் பகுதியில் நாட்டாண்மைக்கல் இன்றும் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  பண்டைய காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஓர் ஊரில் கிணறு, குளம், ஆலமரம், கோயில் போன்ற அடையாளங்கள் இருக்கும். இவ்வாறு ஆலமரம் அல்லது அரசமரத்தின் கீழ் ஒரு கல்வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கல்லில் அந்த ஊரில் குடும்பத்தகராறு, வாய்க்கால் வரப்புகள் தகராறு, திருமணத்தகராறு, பாகப்பிரிவினை முதலான அனைத்திற்கும் ஊர் நாட்டாண்மையிடம் அப்பகுதி மக்கள் முறையிடுவார்கள். முறையிட்ட பின்பு குறிப்பிட்ட நாள் குறித்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, அவர்கள் முன்னிலையில் வாதி, பிரதிவாதிகள் தங்கள் குற்றங்களை அடுக்கிவைப்பார்கள். அப்போது நாட்டாண்மை கம்பளியில் உட்கார்ந்து, பித்தளைச்செம்பை எடுத்து வைத்துக்கொண்டு தீர்ப்பு வழங்குவார். இன்றும் திரைப்படங்களில் இதனை காண்பிப்பார்கள். இவ்வாறு நாட்டாண்மை உட்கார்ந்து பஞ்சாயத்து செய்த கல் நாட்டாண்மைக்கல் அல்லது அம்பலக்கல் என்று அழைக்கப்பட்டது.
  மேலும் பண்டைய காலத்தில் நாடுகளை நிருவகிப்பதற்கு அம்பலம் என்ற அதிகார அமைப்பை உருவாக்கியிருந்தனர். தங்கள் குழுவிலேயே ஒருவரை அம்பலமாக நியமித்துக் கொண்டனர். கரை அம்பலம், ஊர் அம்பலம், தெரு அம்பலம், மாகாண அம்பலம், நாட்டுஅம்பலம் எனப் பல நிலைகளில் அம்பலங்களை நியமித்துக் கொண்டனர். அம்பலம் என்பதற்கு ஊரின் பொது அவை எனப் பொருள். ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு செய்தியை அல்லது சிக்கலை அம்பலப்படுத்தித் தீர்வு காண்கின்ற அவை என இது அழைக்கப்படும். இந்த அம்பலப்படுத்துகின்ற பொது அவைக்குத் தலைமை தாங்குபவன் அம்பலம் அல்லது அம்பலக்காரன் எனப்பட்டான். அவனே வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்கினான். அம்பலப்பதவி பெரும்பாலும் மரபுவழி அடிப்படையிலேயே அமைந்தது. . அம்பலக்காரராய் நியமிக்கப்பட்டவர்களின் மரபு வழியினர் அம்பலம் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர். அம்பலம் என்ற அமைப்பின் நினைவாக ஊர்களில் உள்ள பொது அமர்வுக் கல்லிற்கு அம்பலக்கல் என்று பெயரிட்டனர். காலங்கள் மாறிய பின்பு காவல்நிலையம், நீதிமன்றம் என மாறியபிறகு ஊர்நாட்டாண்மை என்ற பதவியும், அம்பலம் என்ற பதவியும் அதிகாரம் இழந்தது. ஆனால் காலச்சுவடாய் இன்றும் நாட்டாண்மைக்கல் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
54vaikaianesu_name


தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்


54rain-on-bus-window

தேனிப் பகுதியில்

பேணுகையின்றி இயங்கும்

அரசுப்பேருந்துகள்

  தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
  தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.
  சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய ஓட்டைகள் உள்ளன. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பேருந்திலிருந்து கீழே விழுந்து மரணத்தைத் தழுவும் நிலை உள்ளது.
  எனவே நகரப்பேருந்துகளை உரியவாறு பேணியோ மாற்றுப்பேருந்துகளை இயக்கியோ மக்களின் அல்லல்களைப் போக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
54vaikaianesu_name