வெள்ளி, 3 ஏப்ரல், 2015

தேவதானப்பட்டியில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படாமை

fan,mixy,grinder

தேவதானப்பட்டிப் பகுதியில்

பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு

விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படாமையால்

ஏமாற்றம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் விலையில்லாக் கலவை, மின்னுரல், மின்விசிறி வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கெ.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டிப் பகுதிகளில் ஒருசார் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை.
  கடந்த தி.மு.க.ஆட்சியில் இலவச வண்ணத்தொலைக்காட்சி, இலவச வளியடுப்பு வாங்கியவர்களின் பெயர்களை மட்டும் வட்ட வழங்கல் அதிகாரிகள் கணக்கு எடுத்துப் பட்டியலை அனுப்பி உள்ளார்கள். அதன்படி விலையில்லாக் கலவை, மின்னுரல், மின்விசிறி ஆகியவை வந்துள்ளன. புதியதாகக் குடும்ப அட்டை பெற்றவர்கள், வெண்மை நிற அட்டை உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவில்லை. இதன் தொடர்பாக அனைத்துக் குடும்ப அட்டைதார்களும் வட்ட வழங்கல் அதிகாரிகள், மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். விரைவில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து அனுப்பி விட்டார்கள். ஆனால் இதுவரை விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிருவாகம் மீண்டும் கணக்கு எடுத்து விடுபட்ட குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.
72vaikaianeesu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக