mu.arunachalam01
வைணவரின் சமக்கிருத மோகம்
  வைணவர்கள் இக்காலத்தில் செய்த நூல்கள் எல்லாம் வடமொழியில் இருந்தனவேயன்றித் தமிழில் எதுவுமில்லை. இதற்கு ஒரு காரணம், வடமொழி ஒன்றுதான் தங்களுக்கு உய்வு தந்து பரமபதத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று அக்காலத்துப் பிராமண சமயத் தலைவர்கள் கொண்டிருந்த எண்ணம். வைணவர்கள், அடியாருக்குள் சாதி வேற்றுமையை இல்லை என்று சொல்லிய போதிலுங்கூட, தங்கள் ஆசாரிய பரம்பரையில் சாதி வேற்றுமையையே கடைப்பிடித்து வந்தார்கள். அவர்கள் திருக்கச்சி நம்பி, பிள்ளை உறங்கா வில்லிதாசர், விளாஞ்சோலைப் பிள்ளை முதலிய வைணவப் பெரியார்கள் பிராமணர் அல்லாதவர், பிந்திய இருவர் தீண்டாதவர் என்றும் சொல்லுவர். இவர்கள் பெயர் ஆசாரியர் பரம்பரையில் இடம்பெறவில்லை என்பதும் அறியத்தக்கது. இந்தப் பிராமண ஆதிக்கத்துக்கும் வடமொழி மோகத்துக்கும் வித்து, ஆதி சங்கரருடைய பிரசாரம். இராமானுசர் போன்றோர் இவ்வாதிக்கத்தை வீழ்ந்தச் சிறிதளவு முயன்றனர்; வெற்றி பெறவில்லை.
-பன்முக எழுத்தாளர் மு.அருணாச்சலம்:
தமிழ் இலக்கிய வரலாறு: 11-ஆம் நூற்றாண்டு : முன்னுரை