புதன், 8 ஜூலை, 2015

“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது – க.அன்பழகன்


attai_tholkaappiyapuunga
பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது
. . . .மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணீனீயமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; “பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும் முதல்நூல் ஆக வழியில்லை. மேலும், பிறமொழி இலக்கண நூலார் எவரும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் காண்பர். பிற்காலத்தில்தான் செய்யுள் யாப்பும் (கட்டும்), கருத்துக்கு அழகு செய்யும் அணியும் குறித்து இலக்கணம் செய்வாராயினர். ஆனால், தொல்காப்பியனார் விவரித்த “பொருள்” இலக்கணம் குறித்த சிந்தனையே வடமொழியாளரிடத்தில், என்றும் எழவில்லை. “பொருள் என்றது சொல்லின் பொருள் விளக்கம் கருதியது அன்று. அது வாழ்க்கை விளக்கம். அதுவும் இலக்கியத்தில் இடம்பெறும் முறையையும் வகையையும் விளக்குவது. அகமும் புறமுமாய்ப் பகுக்கப் பெற்ற இலக்கிய உலகில் அகத்திணை, புறத்திணை எனவும், களவுகற்பு எனவும், பிறவாறும் வகை செய்யப்பட்டு உலகியல் வாழ்வியல் இணையும் ஆடவரும் மகளிரும் ஆன இரு சாராரும் எய்தும் உணர்வுகளைப் புறலப்படுத்தும் காட்சிகளைச் செய்யுளாக்குவதற்கு உரிய இலக்கணத்தை விவரிக்கும் தனிச் சிறப்புடையதாகும்.
– பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின்) தொல்காப்பியர் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13
anbazhagan.k.01
 அகரமுதல 86, ஆனி 20, 2046 / சூலை 05, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக