ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

குறள் வழிச் சென்றால் பெருமையை அடையலாம் – ஈ. வே. இராமசாமி


தலைப்பு-குறள்வழி-நன்னெறி- பெரியார் - thalaippu_kural_nanneri_periyaar

குறள் வழிச் சென்றால்

உலகிற்கு நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை அடையலாம்.

  தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் தமிழ்ப் பகைவர்கள். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச்சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும், உலகத்துக்கும்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடையலாம்.
  திருவள்ளுவர் இன்றைக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவர் என்பது இன்று பலரும் ஒப்புக்கொண்டுள்ள செய்தி, ஆதலின் அவர்தம் காலத்தில் கிறித்தவம், இசுலாமியம், சீக்கியம் எனும் மதங்கள் இருந்தில என்பது தெளிவு. யூதம், பார்சியம், கன்பூசியம், என்பன, திருவள்ளுவரின் காலத்திற்குச் சிறிது முற்பட்டனவேயாயினும், அவை அப்போது தமிழ் நாட்டிற்கு வந்தில. இன்று நம்மிடையே பெரிதும் பரவியுள்ள சைவம், வைணவம், முதலிய சமயங்களும், மிகவும் பழமை வாய்ந்தனவேயாயினும், இப்போதுள்ள நிலையில், திருவள்ளுவர் காலத்திற் சிறிதும் இருந்தில. திருவள்ளுவர்க்குப் பின்னரே நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, இந்நாளில் நிலவும் நிலையில், சைவ வைணவ சமயங்களைப் பல்லாற்றாலும் பரப்பி வளர்த்தருளினார். திருவள்ளுவர் காலத்தில் உலகாயதம், வைதிகம், சமணம், பௌத்தம் என்னும் சமயங்கள் மட்டும், தமிழகத்திற் பரவியிருந்தன எனத் தெரிகின்றது.
  • தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக