தலைப்பு-ஆட்சிமாற்றம் : thalaippu_aatchimaattram_thamizhsiva

ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்?
  1. கல்வித்துறையைச் சீரழித்தது.
  2. மலை, மணல் போன்ற இயற்கை வளங்களைப் பேய்த்தனமாகச் சுரண்டியது.
      3.சாராய ஆலைகள் நடத்தி மக்களைச் சாகடித்தும் பெண்களைக் கையறுநிலைக்குத் (அபலைகள்) தள்ளியும் அனைவரையும் அறிவுக் குருடர்களாக்கியும் அட்டூழியம் செய்தது.
  1. இலவசங்களால் மக்களைச் செயல்படாமல் செய்த குற்றத்திற்காக மாற்றம் வேண்டும்.
   5.பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயல்களால் தமிழகத்தையே பாலைவனமாக்கிய குற்றங்களுக்காகத் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்தவித மன்னிப்பும் வழங்கக் கூடாது . மீண்டும் அவர்களிடத்தில் ஆட்சியை வழங்குவதென்பது நமக்கு நாமே விரைவில் உயிர் பறிக்கும் நஞ்சு (சயனைடு).உண்பதற்கு இணையானது.
 தி.மு.க.வின் சாதனைகள்!:
   தன் குடும்ப நலனுக்காக ஓர் இனத்தையே அடகுவைத்த கொடுங்குற்றத்திற்காக என்றைக்கும் மன்னிப்பே வழங்கக் கூடாது.
   தன் பெயரன் மலை முழுங்கி மகாதேவனாகச் செயல்பட்டுத் தலைமறைவானபோது, அது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்ற மு.க.வின் இரண்டகம் – துரோகம் – மன்னிக்கவே கூடாத செயல்.
  கட்சியின் சொத்துகள் அனைத்தையும் தன் குடும்பம் மட்டுமே துய்க்க – அனுபவிக்க- தன் மகனைப் பொருளாளராக நியமனம் செய்த வஞ்சகத்திற்காக மன்னிக்கக் கூடாது.
  எத்தனையோ தொண்டர்கள் உயிரைக் கொடுத்துக் கட்சியை வளர்க்கும்போது, “தன் மகன் என்னைக் காட்டிலும் 100மடங்கு உழைக்கிறார்“ என்று தன் மகனை மட்டும் பாராட்டும் அயோக்கியத்தனத்திற்காக மன்னிக்கக் கூடாது.
 “ 67அகவையில் காமராசருக்குப் பதவி ஆசை போகவில்லையா?” என்று கேட்ட, மு.க. அவர்கள் 93அகவையிலும் பதவி நாற்காலியை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாரே அந்தக் கயமைத்தனத்திற்காகத் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. காமராசரைவிட மக்கள்நலம் பேணும் மகானா மு.க.?
 அ.தி.மு.க.வின் சாதனைகள்!:
உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அயோக்கியத்தனங்களையும் குத்தகைக்கு எடுத்தாற்போலச் செயல்படும் சாதனைகளுக்காகப் புறக்கணிக்க வேண்டும்.
 பா.ச.க. – நச்சை விதைத்து நச்சை அறுவடை செய்ய வல்லது.
பேராயக்கட்சி (காங்கிரசு) – இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இன்பம் கண்ட கட்சி. பல்வேறு ஊழல்களை நேர்த்தியாகச் செய்து பேர்பெற்றது.
  நண்பர்களே! தாய்மார்களே! தோழர்களே! மாற்றம் வேண்டுமென்று நினைப்பவர்களே! நம் நாட்டை-மொழியை-பண்பாட்டை- இனத்தைக் காக்கவும் மீட்கவும் கடைசி ஆயுதம் தற்போது நம் கையில் உள்ளது. சரியாகப் பயன்படுத்தத் தவறினால் இம்மண் சுடுகாடு ஆகும். நம் வருங்காலப் பிள்ளைகளுக்கு மன்னிக்கவே முடியாத குற்றம் இழைத்தவர்கள் ஆவோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்! நன்றி.
                                                  தமிழ்சிவா