ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்



கவிஞர் நா.முத்துக்குமார்02 : kavignar_naa.muthukumar02

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்

தமிழ்த் திரைவானில் புகழ்மிகுப்பாடலாசிரியராக ஒளிவிட்டவர் கவிஞர் நா.முத்துக்குமார்(அகவை 41),  மஞ்சள்காமாலையால் தாக்குண்டு  பண்டுவம் பயனளிக்காமல் இன்று காலமானார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார்.  இயக்குநராகப் பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கடந்த 2012- ஆம் ஆண்டில் மட்டும் 103 பாடல்கள் எழுதியவர் என்ற பெருமை இவரையே சாரும். மேலும், ‘தங்கமீன்கள்’, ‘சைவம்’ ஆகிய படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
  நா.முத்துக்குமார் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல்கள் என்றும் தமிழ்த்திரையுலகில் மனதில் என்றும் நிலையாய் நிற்கும் என்பது மட்டும் உறுதி.
நன்றி : மாலைமலர்
காண்க  விக்கிபீடியா:  நா. முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக