செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

கணித்தமிழார்வலர் மாஃபா பாண்டியராசன் பள்ளிக்கல்வித்துறை யமைச்சரானார்





கணித்தமிழார்வலர் மாஃபா பாண்டியராசன் பள்ளிக்கல்வித்துறை யமைச்சரானார்


  ஆவடிச் சட்டமன்றத்தொகுதி அஇஅதிமுக உறுப்பினரும்  மாஃபாய் நிறுவனத் தலைவருமான கணித்தமிழார்வலர் மாஃபா பாண்டியராசன் மாண்புமிகு முதல்வர் பரிந்துரையின்படிப் பள்ளிக்கல்வி யமைச்சராக  அமர்த்தப்படுகிறார்.
  மாண்புமிகு அமைச்சர் பெருமானுக்குத் தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு,  அகரமுதல மின்னிதழ் சார்பில்   பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 தமிழ்வழிக்கல்விக்கும் தமிழ்மொழிக் கல்விக்கும்  ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் களைந்து  தமிழ்வழிப்பள்ளிகளுக்கு நடத்தப்படும் மூடுவிழாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து தாய்த்தமிழ்ப்பள்ளிகளை ஊக்கப்படுத்திச் சிறப்பாகச்செயல்பட வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக