தலைப்பு-புறநானூறு, அறிவுச்சுரங்கம், புலியூர்க்கேசிகன் : thalaippu_puranaanuuru_arivuchurangam_puliyurkesikan

புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம்

  பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள், புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும்.
  அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும் அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும்.
  தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். தென்னகத்தின் பண்டைய வரலாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ் செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு எனில், அது சாலவே பொருந்தும்.
 புலியூர்க் கேசிகன் : முன்னுரை, புறநானூறு மூலமும் உரையும்