சப்பான் தமிழ்ச்சங்கத்தின்

தமிழர்திருநாளாம் பொங்கல் விழா

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்,
நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 22, 2048 / பிப்பிரவரி மாதம் 4ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம்.
நம் மொழி,பண்பாடு,வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
அனைவரும் அவர்தம் உற்றார் உறவினருடனும்,சுற்றத்தாருடனும் இவ்விழாவில்கலந்துகொண்டுச்
சிறப்பிக்க வருக!வருக!! என வரவேற்கிறோம்.
இடம்:- கொமட்சுகவா சகுரா அரங்கம்
நாள்:- தை 22, 2048  / பிப்பிரவரி 4, 2017
நேரம்:-11.00 மணி முதல் 6.00  மணி வரை
சிறப்பு விருந்தினர் பற்றி மிக விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
சப்பான் தமிழ்ச்சங்கம்.
கலை – பண்பாட்டுத்துறை
தமிழ்ப் பெயர் வைப்போம் தமிழன் எனப்பெருமை கொள்வோம்!