மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு

  அகில உலக ஆன்மிகமாநாடு 2017, மலேசியா நாட்டில் பத்துமலையில் வைகாசி 26 – 28, 2048 / 09.06.2017முதல்11.06.2017 வரை 3 நாள் நடைபெற்றது.
  வைகாசி  26, 2048  / 09.06.2017 அன்று நடைபெற்ற தொடக்க விழா,வில், பவானி சத்தியத்தின் சக்திநிலை சங்கத்தின் தலைவர் ஞான இராசாம்பாள்,   சித்தர் செம்மல் இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன் இணையர் எழுதிய ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்‘ என்ற நூலை,  வெளியிட்டார். சிங்கப்பூர் இராமகிருட்டிணா மடத்தின் தலைவர் தவத்திரு சுவாமி விமோசா நந்தபுரி பெற்றுக்கொண்டார்.
  அப்பொழுது மாநாட்டினை ஏற்பாடு செய்த மலேசியா அகத்தியர், ஞான பீடத்தின் தலைவர் திருமிகுதிரு வாலை சித்தர் உடனிருந்தார்.